வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 08, 2010

வெட்கமில்லை, இந்த ஊடகங்களுக்கு

அநியாயத்துக்காக சானியா என்ற பெண்-மணியின் திருமணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இடம்-பிடித்து ஆட்டுகின்றன. தனிப்பட்ட ஒரு பெண்-மணியின் வாழ்க்கையை இப்படியெல்லாம் சர்ச்-சைக்கு ஆளாக்குவது நாகரிகமானதுதானா?


முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் எளிதில் புக முடியாத டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் அடி வைத்த நாள் முதற்-கொண்டு எதையாவது அந்தப் பெண்ணின்மீது வீசி எறிவதையே தொழி-லாகக் கொண்ட ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்கவே செய்கிறது.

அவர் குட்டை உள்-ளாடை அணிந்து ஆடு-கிறார் என்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில அடிப்படைவாதிகளும் கடுமையாக விமர்சித்த-துண்டு. அது மறைந்த நிலையில் அந்தப் பெண்ணுக்குத் திரு-மணம் முடிவு செய்யப்-பட்ட நிலையில், மண-மகனாக வந்தவர் அந்தப் பெண்ணின் மீது தன் ஆண் ஆதிக்க எண்ணச் சுமையைத் திணிக்க ஆரம்பித்தார்.

அங்கே போகாதே! இங்கே போகாதே! அந்த ஆணுடன் சேர்ந்து விளையாடாதே! என்-றெல்லாம் திருமணத்-துக்கு முன்னதாகவே ஆண்களுக்கே உரிய அகம்பாவ விளையாட்டு-களை ஆரம்பித்து-விட்-டார்.

புத்திசாலியான அந்தப் பெண் அதனை அடையாளம் கண்டு, திருமணத்திற்கு முன்னதாகவே அவரை வெட்டிக் கொண்டது ஒரு சரியான நிலைப்-பாடே!

அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்-டுக்-காரருக்கும்_ சானியா-வுக்கும் திருமணம் என்றவுடன், இந்தியா-வில் உள்ள இந்துத் தாலிபான்களான சங்பரி-வார்க் கும்பலும், சிவ-சேனா கூட்டமும் மிகக்-கேவலமான முறை-யில் சானியாவை விமர்-சித்தன. அவர் உருவப்-படத்தைத் தீயிட்டுக் கொளுத்தின. அசிங்கங்-களை வாரியிறைத்தன.

இதற்கிடையே சானி-யாவின் மணவாளர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற ஒரு புயல் வெடித்துக் கிளம்-பியது. அதுபற்றி பக்கம் பக்கமாகச் செய்திகள்.

வெட்கமில்லை, இந்த ஊடகங்களுக்குத்தான் கிஞ்சிற்றும் வெட்கம் இல்லை. ஓர் ஆணும்_ பெண்ணும் இணைந்து வாழ்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை! அதில் மூக்கை நுழைக்க மூன்றாவது ஆளுக்கு உரிமை ஏது? அது பச்சையான அதிகப் பிரசங்கித்தனமே!
- விடுதலை (08.04.2010) மயிலாடன்

1 comment:

மதுரை சரவணன் said...

i too join with u for support. v should not enter in others privates.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]