வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 12, 2013

பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!!



மகாகவி பாரதியாரின் 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து அவரது இல்லம் வரை ஜதி பல்லக்கில் தூக்கி வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வழக்குரைஞர் சுமதி. உடன் (இடமிருந்து) காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொற்றாமரை பொதுச்செயலாளர் கி.சங்கரன், பாஜக தேசிய செயலர் தமிழிசை செüந்தரராஜன், மாநில செயலர் வானதி ஸ்ரீநிவாசன்./////////

இந்த செய்தியை இன்றைய (12-12-2013) தினமணியில் படித்துவிட்டு தான்  இந்த பதிவு எழுதினேன்...சும்மா பாரதியை எதிர்க்க வேண்டும் என்று எழுதவில்லை என்பதை தோழர்களுக்கு அறிவித்து கொள்கிறேன்

வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.

நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’

இப்படி நால் வருணம் வேண்டும்..குலக்கல்வி வேண்டும் என்று பாடியவன் மகாகவி என்று அழைக்கப்படும் பாரதி.


முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே
இடையில் பிறப்பார் உண்டோ எருமையே
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவை எலாம் போக்கிலியே!

இப்படி நால் வருணத்தை உருவாக்கியவனை சாட்டையால் அடிப்பது போன்று கேள்வி கேட்டு  பாடியவர்  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எங்கே பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் எங்கள் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!! அப்படி செய்தால் அவர்கள் தான் ஓரிஜினலா கவி நடை ரசிப்பவர்கள்.




Wednesday, June 12, 2013

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்??????

அர்த்த்தமுள்ள (????) இந்து மததத்தின் மனுநீதியின் ஒன்பதாவது அத்தியாயத்தின் 3 வது ஸ்லோகம் 

பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்தரம்

 அதாவது, பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன்  சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். என்று முதல் மூன்று வரிகளுக்கு அர்த்தம்.

நான்காவது வரி இன்னும் தெளிவாக சொல்லுகிறது, அதாவது, "பெண்ணே உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள் - ஆகவே ஆண் சொல்படி கேள்.” (ஆதாரம் நூல் : "சாதி மதம் வர்க்கம்", ஆசிரியர் கே வரதராசன்,வெளியீடு: பாரதி புத்தகாலயம் )

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்...எப்படி இருக்குது பார்த்தீர்களா? பெண்களே உங்களை பெற்றுடுத்த பெற்றோர்கள் இப்படி கூறினால் கூட பொறுத்துக்கொள்ள முடியாதுதானே....இதனை எதிர்த்து பெண்கள் போராட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? சரி குறைந்தபட்சம் இப்படி மனுநீதி  கூறும் இந்து மத கடவுளுக்கு அர்ச்சனை கூடை தூக்காமல் இருந்தால் போதுமே? இப்படி மனு நீதியை கூறும் கடவுளை ஒழிக்க பெண்கள் தான் தீர்வு காணவேண்டும். 


Monday, May 27, 2013

எவ்வளவு மகா அயோக்கியத்தனம்!

சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார் என்று  ஒரு பத்திரிகை எழுதுது. இந்த பத்திரிகை தான் தமிழ், வெங்காயம் என்று கதை அளந்து ஊரை ஏமாற்றும் பத்திரிகை.

கலைஞர் அவர்களை கருணாநிதி என்று எழுதும் சூரியன் பத்திரிக்கைக்கு இதனை பார்த்தாவது உணர்வு வருமா?????

எவ்வளவு மகா அயோக்கியத்தனம் ; பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு; ரியல் எஸ்டேட் கேப்புமாரி தனம், சங்கரராமன் கொலை வழக்கில் 60 நாள் போலிஸ் காவல் என்று அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட ஜெயேந்திரனை...ஏதோ பெரிய யோகியன் போல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று ஒரு பத்திரிக்கைகாரன் எழுதுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மகா மகா அயோக்கியன். 

இந்த அக்கிரமத்தை படிக்கும் போது மனுதர்மம் பற்றி அறிவு ஆசான் தந்தை பெரியார் சொன்ன கருத்து தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

மனுதர்மம் என்பது என்ன? பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் மேலானவன்; வணகதக்கவன். பார்ப்பானல்லாதவன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் வெறுக்கத் தக்கவன் என்பதுதானே? இராமாயணம் தரும் படிப்பினையும் இதுதானே?


Tamil 10 top sites [www.tamil10 .com ]