வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 30, 2014

பார்ப்பனர்கள் தயவில் பதவி பட்டம் கிடைத்தால்....

கேள்வி: பிரதமர் மோடி நல்ல சிந்தனைகளை தானே பேசுகிறார், அவரை ஏன் மாணவர் முன்னிலையில் பேச கூடாது என்று விமர்சிக்கிறீர்கள்?
பதில்: மோடி நன்றாகத்தான் பேசுகிறார். தன் சுதந்திர தின உரையில் கூட ஆன் பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களை போன்றே ஆண்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பது போன்று சில சிந்தனை முத்துகளை வீசினார். ஆனால் அவரால் அந்த எல்லையை மீறி அதற்கு மேல் முற்போக்கு பேச முடியாது. தன் ஆர்.எஸ்.எஸ் காவி கொள்கைகளை தளர்த்தி முற்போக்காக நடக்க வேண்டும் என்று அவரே நினைத்தாலும் முடியாது. ஏன் என்றால் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். பார்ப்பனர்கள் தயவினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இதோ பார்ப்பனர் தயவினால் உயர்ந்து பிறகு அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை தருகிறேன்,
காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.
நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. [விடுதலை, 13.04.1971]
பெரியாரின் கூற்றை படித்தீர்களா? இப்போ புரிகிறதா? மோடி என்ன முற்போக்கு பேசினாலும் அது செயல் வடிவம் பெறவே பெறாது. அதற்கு மாறாக அதற்குள் காவி சங்கபரிவார் சிந்தனை தான் அதிகம் இருக்கும். அதை மறைக்கவே இடை இடையே மோடி சில முற்போக்கு கருத்துகளை பேசி வருகிறார். அந்த முற்போக்கு அவருக்கு பிடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அது செயல் வடிவம் பெறாது. இதை புரிந்துகொள்ள வேண்டும்


Tamil 10 top sites [www.tamil10 .com ]