வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 19, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறை..இனியாவது குறையுமா?


நமது சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அவை அத்துனையும் அனைத்து சமுகத்து பெண்களும் அனுபவிக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கூறி இருக்கிறார்....பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இந்த சமுகம் இன்னமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. அது மதத்தின் பேரால், சாதியின் பெயரால், குடும்ப கவுரவத்தின் பெயரால், பாலியல் வக்கிர சம்பவத்தினால் என்று அடுக்கி கொண்டே போகலாம். ரெண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த சம்பவம் மட்டும் காட்டு தீ போன்று எங்கும் பரவியுள்ளது.அது பற்றி ஒரு பார்வை.

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் ஞாயிறு இரவு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்தவ மாணவி டெல்லி சரப்தர்ஜங்
பற்றிய செய்தி பாராளுமன்றம் வரை எதிரொலித்து உள்ளது. மிகப்பெரிய ஆச்சரியம் தான் என்றாலும் மறுபுறம் இதனை வரவேற்க வேண்டியது பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இது நாள் வரை எவ்வளவோ பெண்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்...உயிரை பறிகொடுத்துள்ளனர்....அப்பொழுதெல்லாம் இது இப்படி பூதாகரமாக எதிரொலிக்கவில்லை...இப்பொழுது அந்த மாணவிக்கு நடந்துள்ள இந்த கோர சம்பவம் இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி யில் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. அதுவும் ஊடகங்கள் அதிகமாக ஒப்பாரி வைக்கின்றன...இப்பொழுது வைத்து என்ன பயன்? பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் இப்படி ஒப்பாரிவைத்து இருந்தால் எதாவது பலன் கிடைத்து இது போன்ற சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும். ஆனால் நமது ஊடங்கள் தலைகீழ்...எது அதிகமாக மக்களால் பேசப்படுகிறதோ அதனை சார்ந்து செய்தி வெளியிட்டு தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளவதே முதல் வேலையாக கொண்டுள்ளன.

இதனை தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மறைமுகமாக கூறியுள்ளார்..."மாணவிக்கு நடந்திருப்பது மிகப் பயங்கர கொடுமைதான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே சம்பவம் இந்திய கிராமங்களில் நடந்திருந்தால் இதே அளவுக்கு கண்டன அலை எழுந்திருக்குமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேட்பது மிகச்சரி என்றாலும் அனைவரின் இந்த கண்டனத்தை புறந்தள்ளி விடமுடியாது..ஏதோ இந்த மாணவிக்கு நடந்திருக்கும் இந்த சம்பவத்தின் மூலமாவாது ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்யவேண்டும் என்ற நோக்கில் நாம் இதனை அணுக வேண்டும்.....அதுவும் நமது இந்திய பாராளுமன்றமும் மற்றும் ஊடகங்களின் ஆதரவும் ஒன்றுசேரும்போது அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்ற ஆநீதிகள் பெண்களுக்கு இனிமேலும் நடக்காமல் பாதுகாக்க ஆவணம் செய்யவேண்டும். செய்வார்களா? இல்லை பெண்களுக்கு எதிரான பல லட்சம் சம்பவங்களில் இதுவும் கலந்து காணமல் போய்விடுமா...பொறுந்திருந்து பார்ப்போம்.


Tuesday, December 18, 2012

சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே..

பார்ப்பனரல்லாத பெண்களை கோயிலில் விபசாரம் செய்ய வைத்த...தேவதாசி மசோதா ஒழிப்பின் ஒரு முக்கிய நிகழ்வுவை பல இடத்தில் கூறி இருந்தாலும்...மீண்டும் அது பற்றி ஒரு மீள் பதிவு.


நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.


கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் - தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம்

வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.


நன்றி: விடுதலை, 09-12-2007



ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?


ஒருத்தர் என்னிடம் கேட்டார்...நீங்க பார்ப்பனர்களை மட்டுமே திட்டுரின்களே...இந்த ஊர்ல சாதி கலவரங்கள் ஏற்ப்படுவது யாரால் என்று கேட்டார்? நான் திரும்ப கேட்டேன்; அக்கிரகாரத்தில் அமைதியாக, தனியாக, அனைத்து வசதிகளையும் காலம் காலமாக அனுபவித்து கொண்டு உட்கார்திருக்கும் பார்ப்பான் எதுக்கு நம்ம கிட்ட வந்து சண்டை போட வேண்டும்? நம்ம ஆட்களை சாதி மூலம் பிரித்து வைத்து அடிச்சுக்க வைத்தது அவன்தானே....பிறகு அவன் எதுக்கு நேரடியாக சண்டை போடவேண்டும்....எருதுகளின் ஒற்றுமையை பிரித்து சிங்கம் வேட்டையாடும் தந்திரம் தான் பார்ப்பான் தந்திரம் என்று கூறினேன்.....சரி அந்த தோழர்க்கு மட்டுமல்ல..மற்ற சிலரும் இதே போல் நினைக்கிறார்கள்...இதோ அவர்களுக்காக மேலும் சில விளக்கங்கள்....ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கோள் காட்டிய "ஏணிப் படிக்கட்டு ஜாதி அமைப்பு முறையில் ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?" என்ற கீழ்க்கண்ட விளக்கத்தையும் தருகிறேன்.
அம்பேத்கர் மிக அழகாக, சொன்னார்; தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் மாறுபட்ட கருத்தல்ல; இரண்டு கருத்துகளும் ஒரே மாதிரி. Graded inequality.
அடுக்குமுறை - ஏணிப் படிக்கட்டில், மேலே ஒருவன் நிற்கிறான்; அடுத்தபடிக்கட்டில் இன்னொருவனை நிற்க வைத்துவிட்டான்; அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொருவன் நாலாவது படிக்கட்டில் கீழே ஒருவன் நிற்கிறான்; அய்ந்தாவது படிக் கட்டில் பஞ்சமர் என்று சொன்னான்.
மேல் படிக்கட்டில் நிற்கின்றவன் மிக சாமர்த் தியமாக கீழே உள்ளவர்களை எல்லோரையும் பிரித்து வைத்துவிட்டு, ஏணியை லேசாக ஆட்டி விட்டான். அப்படி ஆட்டினால் என்னாகும்? இரண்டாவது ஆளு, கீழே உள்ள மூணாவது ஆள்மீது வேகமாக விழுந்தான்;
மூணாவது ஆள் நான்காவது ஆள்மீது மிக வேகமாக விழுந்தான்; நான்காவது ஆள் கீழே உள்ள அய்ந்தாவது ஆள்மீது இன்னும் வேகமாக விழுந்தான். கீழே உள்ள அய்ந்தாவது ஆள் கீழே விழுந்து அடி பட்டவுடன், அய்ந்தாவது ஆளும், நான்காவது ஆளும் சண்டை போட்டுக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
ஏணியில் முதல் படிக்கட்டில் இருக்கிறானே ஒன்றாவது ஆள் - ஏணியை லேசாக அசைத்தவன் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொழியில் சொல்ல வேண்டுமானால் மேற்படியான் அவன் என்ன கேட்கிறான் என்றால், என்னங்க உங்களுக்குள் தகராறு என்று. கீழே விழுந்தவன் கேட்கிறான், எங்களுக்கும், முதல் படிக்கட்டில் இருக்கிறவனுக்கும் எப் பொழுதும் சண்டை வருவதில்லையே என்று!
எப்படி சண்டை வரும்? பக்கத்தில் எவன் நெருங்குகிறானோ அவனோடுதானே சண்டை வரும். இதுதான் நாட்டில் நடைபெறக்கூடிய ஜாதிக் கலவரங்கள், ஜாதி மோதல்கள், இந்தப் பிரிவுகள் இப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.இதனைப் புரிந்துகொள்வதற்கே பெரியாரு டைய கண்ணாடி தேவை; இதனைப் புரிந்து கொள்வதற்கே பெரியாருடைய சிந்தனை தேவை.
இதற்க்கு மேலும் புரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல்....பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு...பார்ப்பானுக்கு அடிமையாக இருந்துகொண்டு....சாதி வெறியர்கள் செய்யும் தவறை பயன்படுத்தி பார்ப்பானுக்கு சப்பைக்கட்டு கட்டினால்...உங்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.


Saturday, December 15, 2012

சும்மா ஆடுமா 'சோ' வின் குடுமி? ஜாதிக்கு உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?


பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  திரு. ச. இராமதாசு அவர்கள் தலித் - தலித் அல்லாதார் என்ற அமைப்பினை உருவாக்கி வரும் இந்தக் கால கட்டத்தில் அவருக்கு ஒரு வக்கில் கிடைத்துள்ளார். அவர்தான் திருவாளர் துக்ளக் சோ ராமசாமி அய்யர்வாள்!
அதுதானே பார்த்தோம். ஜாதிக்கு எள் மூக்கு அளவுக்கு எங்கேனும் உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?
இந்த வார துக்ளக் இதழில் (19.12.2012) நினைத்தேன் என்று எழுதுகிறாராம். திருவாளர் சோ.
எடுத்த எடுப்பிலேயே பொய்யான தகவல் ஒன்றை முதலாகப் போட்டு அதற்கு மேல் அடுக்கடுக்காக தனக்கே உரித்தான பித்தலாட்ட பின்னல் கணக்குகளைப் போட்டுக் கொண்டே போகிறார்!
சில ஜாதி அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு தலித்களுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வாருங்கள் _ தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு எதிராக ஒரு அணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் பல ஜாதிகளை இணைத்து, ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முன்வந் துள்ளது இந்த எண்ணத்தில் தான் என்பது எல்லோருக்கும் புரிகிறது!  அந்த அடிப் படையில் பல கட்சிகளைச் சார்ந்த தலை வர்கள் அவருடைய முயற்சிகளைக் கண் டித்துள்ளனர். ஆனால் ராமதாஸ் செய்கிற முயற்சிக்கு ஒரு பின்னணி இருக்கிறது. இவ்வாறு திருவாளர் சோ எழுதி யுள்ளார்.
மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னதைக் கூட சொல்லாததாக ஆக்க வேண்டும் என்பதிலே இந்த சோவுக்கு அப்படி என்ன அக்கறை!
12.11.2012 அன்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன? சென்றவர்களுக்கு நன்கு தெரியும்.
அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி சொன்னது தலித் அல்லாதார்கள் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமைக்கப்படும் என்று கூறியிருக்க, சோ அதனை ஏன் இருட்டடிக்க முயற்சிக்கிறார்?
இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் மருத்துவரை ஒரு துருப்பாகப் பயன்படுத்தி தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் உரச முடியாதே!
அதுவும் திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி மருத்துவர் புறப்பட்டுள்ள இந்த நேரம் _ அவரைப் பயன்படுத்திக் கொண்டால் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் தமிழ் நிலத்தின் புயல் காற்றைப் புறந் தள்ளிவிட முடியாதா என்ற நப்பாசை!
சும்மா ஆடுமா சோவின் குடுமி என்று ஒரு நூலை எழுதினார் தோழர் தினகரன் சின்னராசு.
அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து , டாக்டராக வேலை பார்த்த தில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னி யர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்குக் காதல் - வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக் கும்போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஒட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஒட்டுப் போடுங்கள்.
ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வர வேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி  பறக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டு நடக்கும் சட்ட மன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் அப்படியே வெற்றி பெறு வோம். எல்லோரும் விழிப்பாக இருங் கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்று பேசியதுகூட சோ வாளுக்குத் தெரியாதா?
ஜாதிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முனைந்துள்ளதாக சோ சொல்லுகிறாரே. அதுகூட அந்தரங்க சுத்தியல்ல என்பது இந்தப் பேச்சு வெளிப்படுத்திடவில்லையா? புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதை யல்லவா இது! நியாயமாக துக்ளக் எப்படி விமர்சித்திருக்க வேண்டும்? இதே துக்ளக் (15.10.2003 பக்கம் 21) பா.ம.க. பற்றி எப்படி விமர்சித்து இருந்தது?
இதோ: வன்னியர் கட்சியா, வித்தியாச மான கட்சியா - எனும் தலைப்பில் இதே துக்ளக் (15.10.2003 - பக்கம் 21) என்ன எழுதிற்று?
வன்னியர் சங்கமாக சுமார் ஒன்பது ஆண்டுகள் செயல்பட்டு வந்த அமைப்பு 1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சீரணி அரங்க கூட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்தது. தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மதவழிச் சிறுபான்மையினர் ஆகியோ ருக்காக - பாடுபடுவதே கட்சியின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. அப் போது எழுப்பப்பட்ட சமூக நல்லிணக்கம் என்ற பா.ம.க.வின் கோஷம் பல தரப்பிலும் வரவேற்கப் பெற்றது. என்று எழுதப்பட்டு இருந்ததே துக்ளக்கில்
தாழ்த்தப்பட்டோரையும் பிற்படுத்தப் பட்டோரையும் சிறுபான்மையினரையும் இணைத்து அரசியல் நடத்தப் போவதாகச் சொன்னவர்கள், இப்பொழுது அதற்கு முரண்பாடாக தாழ்த்தப்பட்டோரைத் தவிர்த்து வெறும் ஜாதிக் கட்சிகளோடு கூட்டு அமைப்பது பற்றி துக்ளக் தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்யாதது ஏன்?
மாறாக அதனை நியாயப்படுத்தி எழுத வேண்டிய அவசியம் ஏன்? தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவர் கைவிட்டு விட்டாரே என்ற ஆனந்தத்தில் மருத்துவரைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கூட்டணி இந்துத்து வாவுக்கு எதிரானதாயிற்றே! பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களே!
எப்படியோ அந்த முயற்சியைக் கைவிட்டு வெறும் ஜாதி டப்பாவுக்குள் மருத்துவர் அடங்கி விட்டால் அக்கிரகார ஏட்டுக்கு ஆனந்தம் புடைத்துக் கொண்டு கிளம்பாதா?
வெகு தூரம் போக வேண்டாம். இந்த ஆண்டு துவக்கத்திலேயே கூட (22.1.2012) சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறு பான்மை சமுதாய மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி இந்த அணியை பலப்படுத்துவோம் என்று கூறவில்லையா?
(தமிழ் ஓசை  23.1.2012 பக்கம் 4)
இந்த 11 மாத இடைவெளியில்தான் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் போட்டு கூலிங் கிளாஸ் போட்டு வன்னிய சமூகப் பெண்களை மயக்குகிறார்களா?
சகோதரர் திருமாவளவன் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என்று சொன்னதெல்லாம் ஏமாற்று வேலையா? ஏன் இதைப்பற்றி எல்லாம் துக்ளக் விமர்சிக்கவில்லை?
இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட ஷெட்யூல்டு சிறுபான்மை இன மக்கள் ஆதிக்க சக்தியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு எதிராக மதசார்பற்ற தன்மை, சமூக நீதி சனநாயகம், சமத்துவம் இவைகளைப் பெறுவதற்கு ஓரணியில் திரளுவது அவர்களது தலையாய கடமையாகும்.
இதே எண்ணம் கொண்ட தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று தீய சக்திகளை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்! -
இதையும் சொன்னவர் சாட்சாத் மருத்துவர்தான். (தினப்புரட்சி 9.11.1990 பக்கம் 1)
தேர்தலின் போது 3 தொகுதி ஒதுக்குவ தாக வாங்கிய ரூ.2½ கோடியை டாக்டர் ராமதாஸ் திருப்பித் தர வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி பேட்டி அளித்தாரே (தினத்தந்தி 11.10.2010).
கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னைத் தோற்கடித்தவர் ராமதாஸ்தான் என்னுடைய தோல்விக்கு முழு முதற் காரணமான இருந்தது மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம் பெற்ற எங்களுக்கு மூன்று தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்து என்னிடம் 2½ கோடி ரூபாய் வாங்கினார்.
3 சீட்டுக்காக எங்கள் கட்சிப் பணத்தை ராமதாசிடம் கொடுத்தோம். உறுதியளித்தபடி  சீட்டுத் தரவில்லை. என் தோல்விக்குக் காரணமான ராமதாஸ் தேசிய ஜனநாயக முன்னணி தலைவர்களான பிரதமர் வாஜ்பாய், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.
ராமதாஸ்மீது வன்னிய சமுதாய மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று அதே பேட்டியில் கூறியனாரே வாழப்பாடி ராமமூர்த்தி (தினத்தந்தி 11.10.2000) இதெல்லாம் சோவுக்குத் தெரியா?
22.2.1991 நாளிட்ட தினப்புரட்சி நாள் ஏட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எழுதிய கடிதம்.
எங்களை கூடத்தான் கேட்கிறார்கள் பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு என்று தீர்மானம் போடுகிறீர்களே அதனால் ஓட்டு உங்களுக்குப் பாதிக்காதா? என்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லையா?
பார்ப்பனர்களுக்குப் மற்ற உயர் சாதியினருக்கும் தமிழகத்தில் 8%(அ)10% ஒதுக்கீடு கேட்பதே பாட்டாளி மக்கள் கட்சிதான் என்றார்.
இது யாருடைய அறிக்கை?
இடஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 ஜாதிகள் பலனடைந்திருக்கின்றன. ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த ஜாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன. அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் போர் முரசாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு இந்த இரு இயக்கங்களும் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கி தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றன. உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும், பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சக்திகள் கடந்த காலங்களில் ஜாதி எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன. துருப்பிடித்துப் போன அந்த ஆயுதத்தை வீசி எங்களை அழிக்க முயன்று அவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்.
- _ பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை இது (25.2.2008) இந்த அறிக்கைக்கு என்ன பதில்? மருத்துவர் கூறுவாரா -_ அவரின் வக்கில் சோதான் கூறுவாரா?

இதோ மருத்துவர் மேலும் பேசுகிறார்: பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு, சிறுபான்மை வெகு மக்களின் (90%) முன்னேற்றத்தை எதிர்ப்பதால் தான் நாங்களும் அந்த ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எங்கள் தயவில் வாழ வேண்டிய பார்ப்பனர்கள் எங்களுக்கே குழி பறிக்க நினைத்தால், ஆபத்து அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கல்ல.
இதனால் பார்ப்பனர் ஒட்டுப் போட மாட்டார்கள் என்றால் அதிலும் எங்களுக்கு நட்டம் இல்லை. 3% பார்ப்பனர் ஒட்டைவிட 97% மற்ற சாதியினர் முன்னேற்றமும் அவர்களின் வாக்குகளுமே எங்களுக்கு முக்கியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு தம் கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
அதில் ஒன்று பார்ப்பனர்களை எக்காரணம் கொண்டும் உறுப்பினராகக் கட்சியில் சேர்ப்பதில்லை.
இன்னொன்று பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு இன மொழி வாரி, மதவாரிச் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளாரே.
அந்த மருத்துவர் இராமதாசை சோ கூட்டத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது.
தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, சிறுபான்மை மக்களையும் கை விட்டு, வெறும் ஜாதிக் கட்சியாகப் பலகீனப்பட்டு பா.ம.க. நிற்கும்போது சபாஷ் போடுவது - பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியும் _- தந்திரமும் தவிர வேறு என்ன?
ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் ஜாதி அமைப்புகள் பல தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒருஅமைப்புக்கு ஜாதி விரோதம் தான் அடிப்படை எனும்போது இன் னொரு அமைப்புக்கு ஜாதிப்பற்றுதான் அடிப்படை என்று அமைவதில் வியப் பில்லை அல்லவா! என்று மருத்துவரின் ஜாதிக்கட்சிக்கு வக்காலத்துப் போட்டுப் பேசுகிறார் சோ.
எவ்வளவுப் பெரிய திரிபு வேலை! ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதாம்!
பார்ப்பனர்கள் என்பவர்கள் ஒரு ஜாதியா? இனமா? வருணமா? முதலில் அதில் தெளிவு இருக்க வேண்டும்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத்துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் கூறுவதைத்தான் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனர்கள் தங்களைப் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்பார்கள் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காகப் பிர்மா படைத்தான் என்பார்கள்.
கடவுளுக்கு மேலே பிராமணன் என்று இவர்களின் சங்கராச்சாரியார்கள் கூறுவார்கள்.
பெரும்பான்மையான சமூக மக்களைப் பார்த்து சூத்திரர்கள் என்பார்கள். தங்களின் வேசி மக்கள் என்று எழுதி வைப்பார்கள்.
இதனைக் கேட்டுக் கொண்டு எருமை மாடு மாதிரி இருந்தால் துவேஷ மற்றவர்கள்; - எதிர்த்துக் கேட்டால் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று குரல் கொடுத்தால் ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டது திராவிடர் கழகம் -தலைவர் ஈ.வெ.ரா. என்று இந்த 2012லும் எழுதக் கூடிய துணிவு மருத்துவர் இராமதாசு போன்றவர்களால் வந்தது என்று கருதுவதற்கு இடம் உண்டு.
In Fact in one Occasion Rajaji proudly said he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan Appril (1) 1978.
முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று சொன்ன ராஜாஜி துவேஷியல்லவாம் ;- இப்படி சொல்லுகின்றவரை எதிர்த்தால் அது ஒரு ஜாதி மீதான விரோதமாம்.
இதே துக்ளக் சோ ராமசாமி, திராவிடர் கழகத் தலைவரிடம் பேட்டி கண்டபோது திராவிடர் கழகத் தலைவர் ஒரு கேள்வி கேட்டு மடக்கினாரே!
நீங்கள் உங்கள் சட்டையைக் கழற்றுங்கள்; நான் என் சட்டையைக் கழற்றுகிறேன் யார் முதுகில் ஜாதி சின்னம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற வினாவை எழுப்பியபோது விழி பிதுங்கி நின்றவர்தானே இந்த சோ ராமசாமி
எங்கள் வீட்டுப் பெரியவர்களை நான் அதிர்ச்சிக்கு ஆளாக்க விரும்பவில்லை என்று கூறித் தானே சமாளித்தார். இவர்கள் வீட்டுப் பெரியவர்கள் மகிழ வேண்டும் என்றால் நாம் எல்லோரும் வேசி மக்கள் ஆக வேண்டுமாம்.
இந்த லட்சணத்தில் பெரியார் ஒரு ஜாதிமீது வெறுப்புக் கொண்டார். என் றெல்லாம் எழுதுவது அசல் போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
ஒரு சமூக அமைப்பில், அந்தச் சூத்திர, பஞ்ச மக்களுக்காக கல்வி வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் மற்றவர் களுக்கு உள்ளது போன்ற அனைத்து உரிமைகளும் சட்டப்படி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போராடினால் அது எப்படி துவேஷமாகும்?
அது மனித உரிமையாகும்.
இதனை எதிர்ப்பவர்கள்தான் துவேஷத்தின் ஊற்றுக் கண்ணாவார்; இன்னும் அந்த  விடாப்பிடி வர்ண திமிரோடு இருக்கக் கூடியவர்கள் என்று பொருள்.
அதன் வடிவமாகத் தான் இன்று வரை சோ ராமசாமிகள் உருவங்களில் நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.
மற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாம். ஆனால் நிராதரவாக பிராமணப் பசங்கதான் இருக்கிறார்களாம். ரிட்டையரான பிராமண பென்ஷன்னர்கள் உதவ வேண்டும் என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரகேசரேந்திர சரஸ்வதி இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கம் யூனல் பேஸிஸில் பேசியாக வேண்டி யிருக்கிறது என்று சொல்லுகிறாரே! (தெய்வத்தின் குரல் - 3ஆம் பகுதி)
எல்லாவற்றையும் துறந்த ஒரு லோகக் குரு கம்யூனலாகப் பேசுகின்றேன் என்று ஒப்புக் கொள்கிறாரே _ இதற்கு சோவின் பதில் என்ன?
எல்லாவற்றையும் கடந்தவர்தானாம் -_ தான் ஒரு பிராமணன்  என்பதைத்தவிர; இப்படிப்பட்ட யோக்கிதையில் உள்ளவர்கள்தான் பெரியாரைப் பார்த்துக் கம்யூனல் என்கிறார்கள்.
வாயால் சிரிக்க முடிகிறதா?
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்டீன் என்ற பாடிய திருமூலர் இனத் துவேஷியா?
இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் நாராயணகுரு, மகாத்மா பாபூலே, அண் ணல் அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தனரே!
ஏன் - இவர்களின் விவேகானந்தர் பார்ப்பனர்கள்மீது வீசாத வெடி குண்டா?
சித்தர்கள் எப்படி?
சித்தர்கள் சுளுக்கு எடுக்கவில்லையா? மறைமலை அடிகள் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கவில்லையா? அவ்வையார் நூலெனிலோ கோல் சாயும் என்று கூற வில்லையா?
கல் மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்? என்று விவேக சிந்தாமணி (பாடல் எண் 82) பாடவில்லையா?
வேமன்னா தோலுரிக்கவில்லையா? புத்தர் புரட்டி எடுக்க வில்லையா?
இவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் வைக்கப் போவதாக துக்ளக் கூட்டத்துக்கு உத்தேசம்?
நீங்கள் ஏன் ஆன்டிபிராமின் (Anti Brahmin) என்று திருவாளர் சோ கேட்ட கேள்விக்கு வீஆர் புரோ ஹீயுமன் (Pro Human) அதனால் ஆண்டி பிராமின் என்று பதில் சொன்னாரே தமிழர் தலைவர் கி.வீரமணி அதனை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
மின்சாரம், விடுதலை (15-12-2012) http://www.viduthalai.in/page-1/50808.html


Saturday, March 31, 2012

எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்



அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத் தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.
பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை  ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.
மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பன ரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர் களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக்  கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மான மும் தோற்றுப் போனது.
(குடிஅரசு 13.10.1929)
நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!
1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(ச)ட்சியாகப் பார்க்க முடிகிறது.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.
வி.பி. இராமன் போன்ற பார்ப் பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.
என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.
ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.
அதன் அப்பட்டமான அடை யாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.
இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).
அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?
அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?
இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?
தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?
டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர் களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும்  இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும்  கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?
அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?
புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல,  தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!
இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.
சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?
ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.
கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!
அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?
இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் அறிவு நாணயம் என்பது.
இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.
அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
--- நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 31-03-2012


Thursday, March 22, 2012

ஆ.ராசா மாதிரி யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லையா?

இன்றைய (22-03-2012) தி(இ)னமணி தலையங்கம் படிச்சேன்....."புத்தி கொள்முதல்..." என்ற தலைப்பில் இந்திய அரசின் தாராளமயக் கொள்கையின் தவறினால் அரசுக்கு ஏற்ப்பட்ட வரி இழப்பு பற்றி எழுதியுள்ளது....அதாவது, பன்னாட்டு நிறுவனமாகிய ஹட்ச் நிறுவனம் தனது பங்குகளை வோடபோன் நிறுவனத்துக்கு 1,100 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ததில், அந்த பங்கு பரிவர்த்தனைக்கு வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை....காரணம் என்ன என்றால் இந்தப் பங்குப் பரிவர்த்தனை கேமேன் தீவில் நடைபெற்றதாம்....இப்படி வெளிநாட்டில் நடைபெற்றதால், வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோடபோன்....ஆனால், இந்தியாவில் செயல்பட்ட ஹட்ச் எஸ்ஸர் நிறுவனத்தில் 67% பங்குகள் வைத்திருந்ததால்......ஹட்ச்எஸ்ஸர் நிறுவனம் வோடபோன் நிறுவனத்துக்கு மாறியதால் கிடைத்த லாபத்துக்கேற்ற வரியைக் கேட்டது இந்திய வருமான வரித்துறை...இப்படி தவறான ஒரு கொள்கையை அரசு வைத்துகொண்டு வோடபோன் நிறுவனத்திடம் வரி கேட்பது நியாயம் அல்ல என்று சொல்லி உச்சநீதி மன்றம் தீர்பளித்துள்ளது....இதனால்இந்திய நடுவண் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 11000 கோடி.

சரி விசயத்துக்கு வரேன்........இந்த இழப்பீட்டுக்கு ஆ.ராசா மாதிரி யாரையாவது கைய காமிச்சுட்டு எஸ்கேப் ஆக மத்திய அரசுக்கு யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லை போலும்....அதனால் வேறு வழியில்லாமல் உச்சநீதி மன்றத்திடம் குட்டு வாங்கி கொண்டுள்ளது......இப்படி 11000 கோடி இழந்து தான் ....தவறான தாராளமயக் கொள்கையினை இந்திய அரசு "புத்தி கொள்முதல்" செய்துள்ளதாக இனமணி சொல்லுகிறது.......நமது கேள்வி என்ன என்றால், 2 - ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் 'முதலில் வந்தவருக்கு முதலில் முன்னுரிமை' என்ற தவறனா தொலைதொடர்பு கொள்கையினால் தானே 22000 கோடி (அதுலயும் பீலா 1750000 கோடி என்று....நான் குறிபிட்டுள்ளது சி.எ.ஜி இறுதியாக உச்சநீதி மன்றத்தில் கொடுத்த தொகை ) இழப்பு ஏற்பட்டு பல பணமுதலைகள் பணம் பார்த்தார்கள்.....அப்போ வோடபோன் நிறுவனம் மாறி அவர்களும் அரசு பணத்தை அனுபவித்திருக்கிறார்கள்......தவறு நிறுவனங்கள் மீதோ அந்த துறையின் அமைச்சர்கள் மீதோ அல்ல...தவறு நடுவண் அரசின் தவறான தொலை தொடர்பு கொள்கையில்தான்.........இதற்க்கு எதுக்கு எங்க ஆ.ராசாவை குற்றம் சொல்லுரிங்க?....அப்போ மட்டும் இந்த இனமணி "இழப்பு" என்று சொல்லமால் "ஊழல்" என்று தம்பட்டம் அடித்தது......இப்போ "புத்தி கொள்முதல்..." என்று அரசுக்கு அறிவுரை சொல்லுது.......தோழர்களே, ஒருகுலத்துக்கு ஒரு நீதி எழுதும் இது போன்ற பார்ப்பன பத்திரிகைகள் மூலம் நாம் புத்தி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.
 


Wednesday, March 21, 2012

உன் சாதி பற்றி கேட்டால் ஏன் பொத்துக்கொண்டு வருது?


ஒரு நண்பர் ஒருவர் சொன்னார்...என்னாங்க வீடு வாடகைக்கு கேட்டு போனா...நீங்க என்ன சாதி என்று கேட்கிறாங்க.....நான் சொல்ல மறுத்த போது...நாங்க 'பிராமின்ஸ்' (பார்ப்பான்) க்கு மட்டும்தான் வீடு கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.....இன்னமும் இப்படி இருக்கா என்று சொல்லிகிட்டே தன் பர்சை திறந்து யாருக்கோ பணம் எடுத்து கொடுத்தார்........அப்படி பர்சை திறக்கும் போது, ஒரு பக்கம் கீதை கிருஷ்ணன் போட்டாவை வச்சு இருந்தார்........நான் கேட்டேன் இப்படி கிருஷ்ணன் போட்டவா நீங்க வச்சுகிட்டு அவர்களை தவறு என்று சொல்லுரிங்க என்று கேட்டேன்....சாதிக்கும், கிருஷ்ணனுக்கும் என்னாங்க தொடர்பு.....சும்மா போங்க என்று என்னிடம் விவாதம் செய்து சண்டைக்கு வருகிறார்.....இப்படித்தான் நிறைய பேரு திரிகிறார்கள்........சரி கீதை கிருஷ்ணன் யோகிதை என்ன? அவனின் கீதை உபதேசன் என்ன".....கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம் என்ன:

"நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 )

இப்படி பட்ட கிருஷ்ணனுக்கு ஒரு பக்கம் பக்த்தனாக இருந்துகொண்டு...சாதி பற்றி இவரிடம் பார்ப்பான் கேட்டால் பொத்துக்கொண்டு வருதாம்...பார்ப்பான் அவனுடைய வருணாசிரமத்தை பாதுகாத்து கொண்டுதான் நம்மிடம் பேசுகிறான்....பார்ப்பான் கிருஷ்ணன் போட்டவ வச்சு இருக்கான் என்றால் அவனுக்கு சாதகமா பேசினவன் கிருஷ்ணன்.....நீ என்ன___க்கு அது வச்சுகிட்டு...உன் சாதி பற்றி கேட்ட கோபப்படுரே?...கிருஷ்ணன் கும்புடுற நீ உன் சாதிய சொல்லு.....சாதிய ஏற்றுக்கொண்டு உன் குலத்தொழிலை செய்....ஏன் பொத்துக்கொண்டு வருது?..நீங்கள் ஒழுங்கா இருந்த அவன் உன்னை இப்படி கேட்பான? பார்ப்பன பாரதி கூட கிருஷ்ணனை நம்பியவர் தானே.....ஆனா மறுபக்கம் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடுவது எந்த அர்த்தத்தில்? யாரை ஏமாற்ற? இப்படி சாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள் மரியாதையாக சாதி ஒழிப்பு பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.


Monday, March 19, 2012

தமிழன் யார்?


பார்ப்பான் தமிழன் இல்லை என்றால் நம்மிடம் சண்டைக்கு வரும் மரமண்டைகள் ஏராளம்.....இதோ அவர்களுக்காக "தமிழன் யார்?" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன விளக்கத்தை பதிவு செய்கிறேன்....

தமிழை தாய் மொழியாக கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பெசுகின்றவனாகலாம், தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாக இருக்கலாம்.இக்காரணங்களை கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உன் தாய்
மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனை தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு.

தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப்போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வடநாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டு பார்ப்பனர்கள் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினார்.

நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப் பண்ணை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகி விடாது.


மேலே சொன்ன கருத்து நான் சொன்னது இல்லீங்க தோழர்களே......"தமிழன் யார்?" என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கட்டுரையில் (குயில், 1-06-1958) இருந்துதான் மேற்கண்ட பகுதி......தமிழர்களே, இப்பொழுதாவது உணருகின்றீர்களா யார் தமிழன் என்று?

பார்ப்பான் தமிழன் இல்லை என்று என்னுடைய விளக்கத்தையும் தருகிறேன்.....

பார்ப்பானை தமிழன் என்று சொல்லாதீர்கள்.......எந்த பார்ப்பானாவது 'தமிழ்ச்செல்வன்', 'தமிழரசு', 'கனிமொழி','கயல்விழி' என்று தன் வீட்டுப் பிள்ளைக்கு பெயர் வைத்து இருக்கிறனா? (நம்ம ஆளு சொறன இல்லமா சம்ஸ்கிருத பேரு வைப்பான்..அது வேற விஷயம்..) அப்படி வைத்து இருந்தால் அந்த பார்ப்பானை என்னிடம் காண்பியுங்கள்......எந்த பார்ப்பனாவது "வீடு" என்று சொல்கிறானா? ஆத்துல....சூ....என்றுதானே பேசுறான்....அப்புறம் எப்படி பார்ப்பானை தமிழன் என்று சொல்லுரிங்க?.....நாலு பார்ப்பான் சேர்ந்துகிட்டு தமிழ்ல கட்டுரை எழுதினா அவன் தமிழன் ஆயிடுவான? தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் இல்லை..தமிழை தாய்மொழியாக கொண்டவனே தமிழன்...நன்றாக சிந்தியுங்கள் தோழர்களே....இனியும் பார்ப்பனக் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்!!!!

மேலும் "தமிழன் யார்" என்பதற்கு பாவேந்தர் சொல்லுகிறார் பாருங்கள்...
தமிழ்நாடு தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேரும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே!


Saturday, March 17, 2012

பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர் பாரதிதாசன்



சிலர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பற்றி நாம் எதாவது சொன்னால்....ஏங்க, அவரே பாரதியின் மீது பற்று வைத்து தானே தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று நம்மிடம் வினா எழுப்புகிறார்கள்...அவர் பாரதியின் கவிதை நடை மீது பற்றுகொண்டு தன் பேரைத்தான் மாற்றிக்கொண்டாரே ஒழிய....மற்றபடி பாரதியின் கருத்துக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.....புரசிக்கவிஞர் பெரியாரின் மேடை பேச்சுகளை அப்படியே கவியாக வடித்த திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதியாவார்.....1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.....இதோ அவர் சுத்த அக்கமார்க் திராவிடர் கழகக்காரர் என்பதற்கு இதோ ஒரு மிக மிக மிக சிறிய சான்று....

கடவுள் இல்லை என்பான் யாரடா?
தில்லை கண்டு பாரடா!


என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக

இல்லை என்பேன் நானடா - அத்
தில்லை கண்டு தானடா!


என்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதிதாசன்.

எனவே பாரதி போல ஒரு இடத்தில் தான் "காளி" பக்தன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர்......சாதி ஒழிய கவிதை மட்டும் போதாது....சமுக களத்தில் நின்று களமாட வேண்டும்...அதனை பெரியார் வழியில் நின்று செம்மையாக செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


Wednesday, March 14, 2012

தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது?

அமெரிக்க கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான போர் குற்ற தீர்மானத்தை ஆதரிக்க...ஒரு முடிவு எடுக்காமல் மத்திய அரசு டிமிக்கி கொடுத்து வருகிறது...பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை கைகழுவிட்டு....கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு நேசக்கரம் நீட்டி அந்த கொடுங்கோலனை போற்குற்றவாளி என்ற போர்வையில் இருந்து காப்பாற்ற தலைகீழ் நிற்கிறது ஆளும் காங்கிரஸ்...இதும் மிகவும் கண்டிக்கத்தக்க மனிதநேயமற்ற கொடுரமான செயல்......

ஈழத்தமிழர் விவகாரத்திலும் சரி...தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள மீனவர்களால் தாக்கப்படும் போதும் சரி......காங்கிரஸ் நடுவண் அரசு தமிழகத்துக்கும்,தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் இது நாள் வரை கொஞ்சம் கூட மதிப்பளிப்பதில்லை.....அறிஞர் அண்ணா கூறியது போல "திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டோமே ஒழிய அதற்க்கான காரணங்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது" என்ற கூற்று இன்றைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது........அன்று அண்ணா சூடிய தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் இந்த தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது என்று மத்திய அரசு நினைக்கிறது போலும்....அப்படி நினைத்தால் அதற்க்கு நாம் பொறுப்பல்ல.....கூடிய சீக்கிரம் அதற்க்கான தீர்வு கொடுக்கட்டும்....நாமும் டெல்லியிடம் கையேந்த தேவை இல்லை.
 


Tuesday, March 13, 2012

திராவிடர், திராவிடம், திராவிட நாடு


திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவி டர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
நன்றி: விடுதலை,13-03-2012


Tamil 10 top sites [www.tamil10 .com ]