வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, March 22, 2012

ஆ.ராசா மாதிரி யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லையா?

இன்றைய (22-03-2012) தி(இ)னமணி தலையங்கம் படிச்சேன்....."புத்தி கொள்முதல்..." என்ற தலைப்பில் இந்திய அரசின் தாராளமயக் கொள்கையின் தவறினால் அரசுக்கு ஏற்ப்பட்ட வரி இழப்பு பற்றி எழுதியுள்ளது....அதாவது, பன்னாட்டு நிறுவனமாகிய ஹட்ச் நிறுவனம் தனது பங்குகளை வோடபோன் நிறுவனத்துக்கு 1,100 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ததில், அந்த பங்கு பரிவர்த்தனைக்கு வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை....காரணம் என்ன என்றால் இந்தப் பங்குப் பரிவர்த்தனை கேமேன் தீவில் நடைபெற்றதாம்....இப்படி வெளிநாட்டில் நடைபெற்றதால், வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோடபோன்....ஆனால், இந்தியாவில் செயல்பட்ட ஹட்ச் எஸ்ஸர் நிறுவனத்தில் 67% பங்குகள் வைத்திருந்ததால்......ஹட்ச்எஸ்ஸர் நிறுவனம் வோடபோன் நிறுவனத்துக்கு மாறியதால் கிடைத்த லாபத்துக்கேற்ற வரியைக் கேட்டது இந்திய வருமான வரித்துறை...இப்படி தவறான ஒரு கொள்கையை அரசு வைத்துகொண்டு வோடபோன் நிறுவனத்திடம் வரி கேட்பது நியாயம் அல்ல என்று சொல்லி உச்சநீதி மன்றம் தீர்பளித்துள்ளது....இதனால்இந்திய நடுவண் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 11000 கோடி.

சரி விசயத்துக்கு வரேன்........இந்த இழப்பீட்டுக்கு ஆ.ராசா மாதிரி யாரையாவது கைய காமிச்சுட்டு எஸ்கேப் ஆக மத்திய அரசுக்கு யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லை போலும்....அதனால் வேறு வழியில்லாமல் உச்சநீதி மன்றத்திடம் குட்டு வாங்கி கொண்டுள்ளது......இப்படி 11000 கோடி இழந்து தான் ....தவறான தாராளமயக் கொள்கையினை இந்திய அரசு "புத்தி கொள்முதல்" செய்துள்ளதாக இனமணி சொல்லுகிறது.......நமது கேள்வி என்ன என்றால், 2 - ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் 'முதலில் வந்தவருக்கு முதலில் முன்னுரிமை' என்ற தவறனா தொலைதொடர்பு கொள்கையினால் தானே 22000 கோடி (அதுலயும் பீலா 1750000 கோடி என்று....நான் குறிபிட்டுள்ளது சி.எ.ஜி இறுதியாக உச்சநீதி மன்றத்தில் கொடுத்த தொகை ) இழப்பு ஏற்பட்டு பல பணமுதலைகள் பணம் பார்த்தார்கள்.....அப்போ வோடபோன் நிறுவனம் மாறி அவர்களும் அரசு பணத்தை அனுபவித்திருக்கிறார்கள்......தவறு நிறுவனங்கள் மீதோ அந்த துறையின் அமைச்சர்கள் மீதோ அல்ல...தவறு நடுவண் அரசின் தவறான தொலை தொடர்பு கொள்கையில்தான்.........இதற்க்கு எதுக்கு எங்க ஆ.ராசாவை குற்றம் சொல்லுரிங்க?....அப்போ மட்டும் இந்த இனமணி "இழப்பு" என்று சொல்லமால் "ஊழல்" என்று தம்பட்டம் அடித்தது......இப்போ "புத்தி கொள்முதல்..." என்று அரசுக்கு அறிவுரை சொல்லுது.......தோழர்களே, ஒருகுலத்துக்கு ஒரு நீதி எழுதும் இது போன்ற பார்ப்பன பத்திரிகைகள் மூலம் நாம் புத்தி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.
 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]