வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, March 19, 2012

தமிழன் யார்?


பார்ப்பான் தமிழன் இல்லை என்றால் நம்மிடம் சண்டைக்கு வரும் மரமண்டைகள் ஏராளம்.....இதோ அவர்களுக்காக "தமிழன் யார்?" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன விளக்கத்தை பதிவு செய்கிறேன்....

தமிழை தாய் மொழியாக கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பெசுகின்றவனாகலாம், தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாக இருக்கலாம்.இக்காரணங்களை கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உன் தாய்
மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனை தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு.

தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப்போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வடநாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டு பார்ப்பனர்கள் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினார்.

நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப் பண்ணை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகி விடாது.


மேலே சொன்ன கருத்து நான் சொன்னது இல்லீங்க தோழர்களே......"தமிழன் யார்?" என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கட்டுரையில் (குயில், 1-06-1958) இருந்துதான் மேற்கண்ட பகுதி......தமிழர்களே, இப்பொழுதாவது உணருகின்றீர்களா யார் தமிழன் என்று?

பார்ப்பான் தமிழன் இல்லை என்று என்னுடைய விளக்கத்தையும் தருகிறேன்.....

பார்ப்பானை தமிழன் என்று சொல்லாதீர்கள்.......எந்த பார்ப்பானாவது 'தமிழ்ச்செல்வன்', 'தமிழரசு', 'கனிமொழி','கயல்விழி' என்று தன் வீட்டுப் பிள்ளைக்கு பெயர் வைத்து இருக்கிறனா? (நம்ம ஆளு சொறன இல்லமா சம்ஸ்கிருத பேரு வைப்பான்..அது வேற விஷயம்..) அப்படி வைத்து இருந்தால் அந்த பார்ப்பானை என்னிடம் காண்பியுங்கள்......எந்த பார்ப்பனாவது "வீடு" என்று சொல்கிறானா? ஆத்துல....சூ....என்றுதானே பேசுறான்....அப்புறம் எப்படி பார்ப்பானை தமிழன் என்று சொல்லுரிங்க?.....நாலு பார்ப்பான் சேர்ந்துகிட்டு தமிழ்ல கட்டுரை எழுதினா அவன் தமிழன் ஆயிடுவான? தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் இல்லை..தமிழை தாய்மொழியாக கொண்டவனே தமிழன்...நன்றாக சிந்தியுங்கள் தோழர்களே....இனியும் பார்ப்பனக் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்!!!!

மேலும் "தமிழன் யார்" என்பதற்கு பாவேந்தர் சொல்லுகிறார் பாருங்கள்...
தமிழ்நாடு தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேரும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே!


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]