வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 14, 2012

தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது?

அமெரிக்க கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான போர் குற்ற தீர்மானத்தை ஆதரிக்க...ஒரு முடிவு எடுக்காமல் மத்திய அரசு டிமிக்கி கொடுத்து வருகிறது...பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை கைகழுவிட்டு....கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு நேசக்கரம் நீட்டி அந்த கொடுங்கோலனை போற்குற்றவாளி என்ற போர்வையில் இருந்து காப்பாற்ற தலைகீழ் நிற்கிறது ஆளும் காங்கிரஸ்...இதும் மிகவும் கண்டிக்கத்தக்க மனிதநேயமற்ற கொடுரமான செயல்......

ஈழத்தமிழர் விவகாரத்திலும் சரி...தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள மீனவர்களால் தாக்கப்படும் போதும் சரி......காங்கிரஸ் நடுவண் அரசு தமிழகத்துக்கும்,தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் இது நாள் வரை கொஞ்சம் கூட மதிப்பளிப்பதில்லை.....அறிஞர் அண்ணா கூறியது போல "திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டோமே ஒழிய அதற்க்கான காரணங்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது" என்ற கூற்று இன்றைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது........அன்று அண்ணா சூடிய தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் இந்த தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது என்று மத்திய அரசு நினைக்கிறது போலும்....அப்படி நினைத்தால் அதற்க்கு நாம் பொறுப்பல்ல.....கூடிய சீக்கிரம் அதற்க்கான தீர்வு கொடுக்கட்டும்....நாமும் டெல்லியிடம் கையேந்த தேவை இல்லை.
 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]