வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 30, 2014

பார்ப்பனர்கள் தயவில் பதவி பட்டம் கிடைத்தால்....

கேள்வி: பிரதமர் மோடி நல்ல சிந்தனைகளை தானே பேசுகிறார், அவரை ஏன் மாணவர் முன்னிலையில் பேச கூடாது என்று விமர்சிக்கிறீர்கள்?
பதில்: மோடி நன்றாகத்தான் பேசுகிறார். தன் சுதந்திர தின உரையில் கூட ஆன் பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களை போன்றே ஆண்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பது போன்று சில சிந்தனை முத்துகளை வீசினார். ஆனால் அவரால் அந்த எல்லையை மீறி அதற்கு மேல் முற்போக்கு பேச முடியாது. தன் ஆர்.எஸ்.எஸ் காவி கொள்கைகளை தளர்த்தி முற்போக்காக நடக்க வேண்டும் என்று அவரே நினைத்தாலும் முடியாது. ஏன் என்றால் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். பார்ப்பனர்கள் தயவினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இதோ பார்ப்பனர் தயவினால் உயர்ந்து பிறகு அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை தருகிறேன்,
காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.
நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. [விடுதலை, 13.04.1971]
பெரியாரின் கூற்றை படித்தீர்களா? இப்போ புரிகிறதா? மோடி என்ன முற்போக்கு பேசினாலும் அது செயல் வடிவம் பெறவே பெறாது. அதற்கு மாறாக அதற்குள் காவி சங்கபரிவார் சிந்தனை தான் அதிகம் இருக்கும். அதை மறைக்கவே இடை இடையே மோடி சில முற்போக்கு கருத்துகளை பேசி வருகிறார். அந்த முற்போக்கு அவருக்கு பிடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அது செயல் வடிவம் பெறாது. இதை புரிந்துகொள்ள வேண்டும்


Saturday, July 19, 2014

'னூல்' அறுக்கும் நூல்கள் - அடிமை


அடிமை 
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர் 
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 41 -பி, 
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், 
சென்னை - 600 098 
பக் : 32 விலை ரூ. 20 /- 

இந்தியாவில் அடிமைத்தனம் எப்போதும் இருந்ததில்லை. இந்து மதத்தின் பெருமையது என இப்போது சங்பரிவார் பீற்றித்திரிகிறது. அதேபோல் இந்து மதத்தை சகிப்புத்தன்மையின் மாதிரிபோல் சிலர் செப்பித்திரிகிறார்கள். இந்த இரண்டும் மிக மிக தவறான கண்ணோட்டம். இந்தியாவில் அடிமைத்தனம் இருந்ததையும், அடிமைத்தனத்தை விட மோசமான தீண்டாமை இருப்பதையும் மிகத் தெளிவாக வரையறை செய்து காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். சாதியஒடுக்குமுறை குறித்து மிக ஆழமான மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு வலுவான ஆதாரங்களோடு தீண்டாமையை தோலுரித்து காட்டிய அம்பேத்கரின் கட்டுரைகளில் இது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரைந்துகாட்டி தீண்டாமையே ஆகப்பெருங்கொடுமை என்பதை இந்நூலில் நன்கு வாதிட்டுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.

நன்றி: தீக்கதிர், 20-07-2014


Saturday, June 07, 2014

நூல் விமர்சனம் - அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்



அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு
மணற்கேணி
முதல் தளம், பு/எண்:10, ப/எண்:288, டாக்டர் நடேசன் சாலை, சென்னை-05
விலை : ரூ.95
கைப்பேசி : 9443033305

திருத்தி எழுதிய தீர்ப்புகள்...

அது கல்லறையானாலும் சரி, கழிப்பறையானாலும் சரி, பாதையை மறித்து நிற்கும் தீண்டாமைச் சுவரானாலும் சரி, பொதுப் பேருந்துகளில் அமர்ந்து பயணம் செய்யும் உரிமையானாலும் சரி, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள தலித்-பழங்குடி இனத்தவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அதிகார வர்க்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையே இன்னும் நீடிக்கிறது.பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், கோயிலில் நுழையவும் அண்ணல் அம்பேத்கர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்றால் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவதற்கே நீதிமன்றங்களின் உதவியை நாட வேண்டிய அவல நிலையில் தான் அவர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ஆதிக்க வர்க்கத்தினரின், சாதியினரின் எதிர்ப்புகளை தினந்தோறும் சந்தித்து, ஒவ்வொரு படியாக ஏறி வரும் அவர்கள் இறுதியாகத் தஞ்சம் புகும் நீதிமன்ற வளாகத்தில் அவர்களது உரிமைக் குரல்கள் எதிரொலிப்பது என்பதோ அரிதிலும் அரிது என்றே கூறி விடலாம். சாதிய ஆதிக்க வெறி நிறைந்த வட மாநிலங்கள் மட்டுமல்ல; திராவிடர்களின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழ் மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை ஆதி திராவிடர்கள் என்று பட்டம் சூட்டப்பட்ட தலித்துகள் ஒவ்வொரு கணமும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். 44 தலித் மக்களை வெண்மணி கிராமத்தில் உயிரோடு எரிக்கும் அளவிற்குத் தஞ்சை நிலப்பிரபுக்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல என்று சான்றிதழ் வழங்கிய, வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்களை மாட்சிமை பொருந்திய அரசு ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்க மாட்டார்கள் என்று நற்சான்றிதழ் வழங்கிய அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்த வறியவர்களுக்கு ஆதரவான குரல் ஒன்றும் எழுந்தது.

நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்தான் அந்தக் குரலுக்கு உரியவர். கல்லூரிப் பருவத்தில் தலித்-பழங்குடி மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடியதைப் போலவே, வழக்குரை ஞராக, மூத்த வழக்குரைஞராக செயல்பட்ட நேரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நீதிமன்ற வளாகத்தில் ஓங்கி ஒலித்தவர் அவர். 2006ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட போது, அவரது இந்த சமூக நீதிப் பணி தொடருமா? என்ற தயக்கம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டதும் உண்மைதான். எனினும் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யமுடியும் என்று பதவி ஏற்ற நாளிலேயே அறிவித்த அவர் அதை வெற்றிகரமாக நிரூபித்தும் காட்டினார்.

அவர் நீதிநாயகமாக இருந்த ஏழு ஆண்டுகளில் 96,000 வழக்குகளில் இறுதித் தீர்ப்பை வழங்கியது மட்டுமே ஒரு சாதனை அல்ல. அவர் முன்னே வந்த வழக்குகளில் பலவும் ஆதிக்க சக்திகளின், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கண்ணோட்டத்தை, தலித் எதிர்ப்பு நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், சமூக நீதியின் வெளிச்சத்தின் துணை கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் வீரிய எழுத்துக்களின் வெளிச்சத்திலிருந்து அவர் வழங் கிய தீர்ப்புகள் காலத்தை வென்றவையாக நீடிக்கும். நீதிநாயகம் கே. சந்துரு வழங்கிய குறிப்பிட்ட சில தீர்ப்புகளை உள்ளடக்கிய வகையில் “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிட் டுள்ளது. அவர் வழக்குரைஞராக இருந்தபோது நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி ஒரு வார இதழில் தொடராக எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “ஆர்டர்! ஆர்டர்” என்ற நூல் நீதி கோரி வருவோர் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து மிக எளிமையாக விளக்கி யது எனில் தலித்-பழங்குடிப் பிரிவினருக்கு ஆதரவாக அவர் வழங்கிய தீர்ப்புகளின் பின்னணியையும் தீர்ப்பு வழங்க அவர் எடுத்துக் கொண்ட வரலாற்று, அரசியல், இலக்கிய ஆதாரங்களையும் விரிவாக விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினருக்கு சமூகநீதி கிடைக்கும் வகையில் அவர் வழங்கிய தீர்ப்புகளில் அம்பேத்கரின் அறிவார்ந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும், அமெரிக்காவின் நிறவெறியைப் போன்றே சாதி-ஆதிக்க வெறி இங்கே தலைவிரித்து ஆடுவதைச் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

கல்லறை உரிமைக்கான தலித்துகளின் கோரிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கையில்(கல்லறைதான்) சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமேஎன்ற சினிமாப் பாடலை மேற்கோளாகக் காட்டியும் நீதிநாயகம் சந்துரு வழங்கிய தீர்ப்பைப் போன்று பல தீர்ப்புகளின் பின்னணியை விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது.இத்தகைய தீர்ப்புகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட மற்றொரு காரணமும் உண்டு என்று அவர் கூறியுள்ளது அனைவரும் கவனிக்கத்தக்க, கவலை கொள்ளத் தக்க ஒன்றாகும். “தமிழகம் முழுவ தும் பரவலான பாராட்டுக்களை எனது தீர்ப்புகள் பெற்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக, (பின்னா ளில் வழக்குரைஞர்கள் வாதம் புரியவோ, தீர்ப்புகளில் மேற்கோளாக, முன் உதாரணமாகக் காட்டு வதற்கு உதவும் வகையில்) தீர்ப்புகளை தொகுத்து வெளிவரும் சட்ட இதழ்களில் அந்தத் தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை. அதற்கு அந்த இதழ்களின் நவீன தீண்டாமையும் ஒருவேளை காரணமாக இருக்கலாம்” என்ற வரிகள் 66 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவை இன்றும் நீடிக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1970களின் இறுதியில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி இனத்தவருக்கு ரயில்வே துறையில் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஓ. சின்னப்ப ரெட்டி ஆகிய இருவரும் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று அப்போது வழக்குரைஞராக இருந்த சந்துரு ஆர்வமாக இருந்தார். அப்போது சிறையில் இருந்த தியாகு இந்தத் தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.

அதனை சரிபார்த்து கொடுத்ததோடு, சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பற்றி என்ற அந்த நூலுக்கு சந்துரு முன்னுரை வழங்கியதோடு அந்த நூல் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாகச் செல்லவும் உதவி புரிந்தார் என்பதையும் இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இச்சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நீதித்துறையின் படிக்கட்டுகளில் ஏறி சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது அளப்பரியதொரு போராட்டமாகும். அப் போராட்டத்தில் கிடைக்கும் தீர்ப்பு என்பது மற்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போ ராட அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதோடு, மற்ற நீதிமன்றங்களும், நீதிநாயகங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்க உதவி புரியும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய வரலாற்றைத் திருத்தி எழுதிய தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய அவசியம் உள்ளது.

அத்தகைய முயற்சிகள் தொடர, இவ்வகையான நூல்கள் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கே அவர் மறைந்து 34 ஆண்டு களுக்குப் பிறகே அவரது நூற்றாண்டு விழாவின்போது திடீரென்று நினைவிற்கு வந்ததுபோல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கையில், ஆதிக்க சக்திகளின் இரும்புக் கண்ணிகளை உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த நூல் விளங்குகிறது என்றே கூறலாம். சமூகநீதிக்காகப் போராடுவோருக்கு ஊக்கம் தரும் வகையிலான இந்த நூலை போராளிகள் அனைவரும் வாங்கிப் படித்து, பரவலாக அறியச் செய்வது அவசரமானதொரு சமூகக் கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர்,08-06-2014


நூல் அறிமுகம் - சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்


சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்
ஆசிரியர்: தி.சு. நடராசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098
பக்: 32 விலை ரூ. 20/-

மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து வைக்கப்பட்டனர். அரசு அதிகாரமும், பிராமணியமும், வைதிகமும், மனுவும், கீதையும் இணைந்து மண், உழைப்பு , உற்பத்தி, வியர்வை இவற்றை எப்படி அடிமைப்படுத்தின என் பதை குறைந்த பக்கங்களில் இந்நூல் சொல்ல முயற்சிக்கிறது.சாதிக் கலவர கூத்துகளை அதற்கு பின்னால் இருந்து இயக்கும் பெரிய மனிதர்களை இந்நூல் பட்டியலிடுகிறது. சாதியை வேரோடும், வேரடிமண்ணோடும் வீழ்த்த இந்நூலும் ஒரு ஆயுதமாகும். சாதி அமைப்பு உயர் சாதியால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஆனால் சாதிச் சண்டைகள், பெரும்பாலும் அடித்தளத்தில் தான் நடக்கிறது. ஏன் இந்தச் சூழல்? இந்நூல் அது குறித்து பேசுகிறது. சாதிக்கு எதிராக பல கோணங்களில் நாம் சிந்தித்தாக வேண்டும்; செயல்பட்டாக வேண்டும். இந்நூல் ஒரு பாதையில் பயணிக்கிறது.

நன்றி: தீக்கதிர், 08-06-2014


Friday, March 21, 2014

மோடியின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்.இவர்களுடைய சித்தாந்தம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் முன்னிறுத் தப்பட்டுள்ள பிரதம மந்திரி வேட்பாளர் நரேந் திர மோடி முகமூடி அணிந்துகொண்டு நாடு முழுவதும் வலம் வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குக்கூட தனி விமானத்தில் பறந்து செல்கிறார். இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பயிற்சி பெற்று இளம் வயதி லிருந்து ஆர்எஸ்எஸ் இட்ட பணிகளை மிக விசுவாசமாக செய்து வருபவர். இப்பொழுது கூட ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த காரணத்தால் அதையே இந்தியா முழுமையாக செயல்படுத்திட ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளது. இவர்களுடைய சித்தாந்தம் என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன, குஜராத்தில் எப்படிசெயல்படுத்தி வருகிறது என்ற உண் மைகளை முழுமையாக திரைபோட்டு மறைத்து சுய உருவம் தெரியாமல் முக மூடி அணிந்து பிரச்சாரம் செய்து மக்களைஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்களை முதலில் பார்ப் போம். இவை எப்படி குஜராத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னால் பார்க்கலாம்.

நேருவின் எச்சரிக்கை

ஜவஹர்லால் அவர் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினார். தனது சுய சரிதையில் ‘பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் மற் றும் பணக்கார வர்க்கத்தினர் ஆதரவுடன் பாசிசம் வேகமாக வளர்ந்தாலும் வளரலாம்’ என்றார் நேரு. “சிறுபான்மையினரின் வகுப்பு வாதத்தைவிட மிக மிக அபாயகரமானது பெரும்பான்மையினரின் வகுப்புவாதம்” (1948, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு உரை). “சிறுபான்மையினர் வகுப்புவாதத்தை நாம் சுலபமாக கண்டுகொள்ள இயலும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பெரும் பான்மையினரின் வகுப்புவாதம் தேசியவாதம் எனக்கொள்ள வைக்க முடியும்” (1961ல் நேரு சுட்டிக்காட்டியது). “நான் இந்து தேசியவாதி” என்கிறார் மோடி. “இந்தியாவிற்கு வாக்களியுங்கள்” என்கிறது மோடியின் விளம்பரம். இந்து தேசிய வாதம், இந்திய தேசியவாதமல்ல இதுதான் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முழு வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆக்கப்பட்டுவிடும். அங்கு இஸ் லாமிய தேசியவாதம் என்றால் இங்கு இந்து தேசியவாதம்.

பாசிசத்தின் இந்திய வடிவம்

ஆர்எஸ்எஸ் 1925ல் துவக்கப்பட்டது. இதை துவக்கிய முதல் சர்சங்சாலக் ஹெட் கேவாரின் குருநாதர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே 1931ல் இத்தாலிக்கு சென்று பாசிச ஆட்சித் தலைவர் முசோலினியை சந்தித்து பாசிச அமைப்பு முறைகளைப் பற்றி 13 பக்க குறிப்புவெளியிட்டார். (நேரு மியூசியம் நூலகத்தி லுள்ளது). பாசிஸ்ட் கட்சி பாணியில் சிறு வர்கள் பயிற்சி (6-18 வயது) இளைஞர்கள் உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி (இதற்காக நாக்பூரிலும் நாசிக்கிலும் இரண்டு ராணுவப் பயிற்சி பள்ளிகள் துவங்கி இன்றும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன) அணி வகுப்புகள், டிரில்கள் ஆகியவை விலக்கப் பட்டுள்ளன. “எதிரி மக்கள் கூட்டத்தைத் தாக்கிஅதிகபட்சம் கொலை செய்து காயமடைய வைத்து வெற்றிகாணும் திறன் கொள்ள இந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது” மூஞ்சே தனது திட்டக் குறிப்பில் முன்வைக்கிறார்.

“இந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் பாசிசம் தெளிவான வழிகாட்டுகின்றது ஹெட் கேவார் தலைமையிலுள்ள ஆர்எஸ்எஸ் இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும் இதர மாநிலங் களுக்கு பரப்பவும் எனது எஞ்சியுள்ள வாழ் நாளை கழிப்பேன்” என்றும் எழுதினார் மூஞ்சே.இவர் ஜெர்மனிக்கும் சென்று ஹிட்லரின் நாஜிக் கட்சி அமைப்பை பற்றியும் தெரிந்து கொண்டார். (இறுதியில் 1943ல் இந்த முசோலினி மக்களால் தெருக்களில் அடித்துக்கொல்லப்பட்டதும் ஹிட்லர் விஷம் குடித்தும் செத்ததும் வேறு கதை).

1934 ஜனவரி 31ம் தேதி “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் பம்பாயில் நடந்தகூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் முதல் சர்சங் சாலக் (1925-1940) ஹெட்கேவார் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் கட்டுவதற்கு நான் திட்டத்தை தயாரித்துள்ளேன். இத் தாலியின் முசோலினி ஜெர்மனியின் ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இய லாது” என்றார். இத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை தற்காலத்திற்கேற்றவாறு உருவாக்கு வதற்கான முதல் முயற்சியில் இன்று ஆர்எஸ்எஸ் ஈடு பட்டிருக்கின்றது.

இந்து தேசியமா, இந்திய தேசியமா?

இந்திய தேசியத்தை ஒரு “விசித்திரமான மிருகம்”, ஒரு “பூதாகரமான பிரமை” என்று ஆர்எஸ்எஸ்சின் இரண்டாம் சர்சங்காலக் கோல் வார்க்கர் விளக்கினார். இது ஒரு ஹம்பக் தேசியம் என்றார்.“இப்படிப்பட்டஒரு மோசடி தேசியத்திற்கு உயிருண்டாக்க முயற்சிக்கின்றனர். ஒரு காளையின் கால்களையும், ஒரு கழுதையின் தலையையும், ஒரு யானையின் துதிக்கையும் இணைத்து ஒரு விசித்திரமான மிருகத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்பாகும். இதன் விளைவு ஒரு பூதாகரமான பிணம்தான். இது ஒரு உயிருள்ள உயிரினமாக இருக்க முடியாது. இதில் சில அசைவுகள் தென்பட்டால் அதை அழுகிவரும் சடலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளின் செயல்பாடுதான்” .

(குரு கோல்வார்க்கர் - ஞானகங்கை பக்.239)மேலும் நமக்கு முன்னால் உள்ள கேள்வி யாதெனில் “இஸ்லாத்திற்கோ, கிறிஸ்து வத்திற்கோ மதம் மாற்றப்பட்டவர்களின் போக்கு என்ன என்பதை அவர்கள் இந்தநாட்டில்தான் பிறந்திருக்கிறார்கள் சந்தேக மில்லை. ஆனால் இதனிடம் பக்தி விசுவாசத்துடன் வாழ்கின்றார்களா? இந்தநாட்டிடம் நன்றி விசுவாசம் பாராட்டு கின்றார்களா?... மதம் மாறுவதுடன் கூட இந்து ராஷ்ட்ரியத்திடம் உள்ள அன்பு நெகிழ்ச்சியும் பக்தி பாவனையும் அழிந்துவிட்டது” (ஞான கங்கை பக்கம் 193)“ஆகவே நாம் கூறுவதெல்லாம் இதுதான்.

இவர்கள் தமது மன அமைப்பு நிலையை கைவிட்டுவிட்டு இந்து தேசிய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடவேண்டும். தங்களு டைய மூதாதையருக்கு சொந்தமான பக்திமுறைகளையும் பின்பற்றட்டும்.... மீண்டும் திரும்பி வந்து உடையிலும், பழக்க வழக்கங்களிலும் திருமண சடங்குகளையும் இறுதிச்சடங்குகளையும் நடத்துவதிலும் அதுபோன்ற மற்றெல்லா நிகழ்ச்சிகளிலும் தங்கள் முன்னோர்களான ஹிந்துக்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலக்கவேண்டும். வழிதவறிய சகோதரர்களைப் போல் மீண்டும் நமது தர்மத்திடம் இரண்டற கலந்துவிட வேண்டும்” (ஞா.க.பக்.197, 200).

அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டுமாம்!

“நமது நாட்டின் கூட்டாட்சித்தன்மை பேச்செல்லாம் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் என்ற ஒரே ராஜ்யம் தானிருக்க வேண்டும். பூரண சுயாட் சியோ அரைகுறை சுயாட்சியோ உள்ள எல்லாமாநிலங்களையும் துடைத்தெறிய வேண்டும்”“ஒரே தேசம், ஒரே ராஜ்யம், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்று பிரகடனப்படுத்த வேண்டும்... மாநிலவாதம், மொழிவாதம், குறுகிய கட்சிவாதம் அல்லது வேறு எவ்விதமான தற்பெருமை உணர்ச்சிகளுக்கு இடம்தரக்கூடாது”“அரசியல் சாசனத்தை மீண்டும் பரி சீலனை செய்து ஒற்றை அரசு முறையை (Unitary form of govt)நிறுவி திருத்தி எழுத வேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் தனித்தனி இனங்களைச் சார்ந்தவர்கள்.. என்பதை பொய்யாக்கவேண்டும்.” (Ph.f. g¡. 686, 687)

“நமது தேசிய மொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும்” (ஞா.க. பக். 171)வாஜ்பேயின் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (ஒய்.வெங்கடாச் சலையா தலைமையில்) ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. நால்வர் கொண்ட கமிட்டி (சுவாமிவாம தேவ், சுவாமி முக்தானந்த் சரஸ்வதி, சுவாமி நிரஞ்சன் தேவ்தீர்த், சின்மையானந்தா) அமைக்கப்பட்டு 63 பக்க அறிக் கையும் சமர்ப்பிக்கப்பட்டது. “இன்றைய அர சியல் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்” “இந்துத்துவா அரசியல் சட்டம் இடம்பெற வேண்டும்” என்றனர். இவர்கள் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை.பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றி ருந்தபொழுது விஷ்வ இந்து பரிஷத்தினர் எப்பொழுது அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும்? எப்பொழுது அரசியல் சட்டம் மாற்றம் செய்யப்படும்? என்று கேட்கப் பட்டபொழுது “நாடாளுமன்றத்தில் நமக்குத் தனி பெரும்பான்மை கிடைத்தபின் இவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.இன்று தீவிர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நரேந்திர மோடி இவைகளையெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டுகிறார்.உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம், ஏனெனில் அது மதமே அல்ல என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஏனெனில் இது அனைவரையும் அணைத்துக்கொள்ளும், நாத்தீகர்கள் உட்பட விவேகானந்தர் கூட நாத்தீகம் பேசினார்.

அவ்வளவு தாராளமானது, சகிப்புத்தன்மை கொண்டது.கேள்வி என்னவென்றால் மூஞ்சே, சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்குகள் ஹெட்கேவார் (1925-40) குருகோல்வார்க்கர் தேவ்ராஸ், இன்றைய சர்சங்காலக் மோகன்பகத் ஆகியோரின் கொள்கைகள் மாற்றப்பட் டுள்ளனவா? (இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா சித்பவன் பிராமணர்கள்!) இந்தமன அமைப்பு நிலை ( (mind set) ) கைவிடப் பட்டுள்ளதா? இதற்கு ஆர்எஸ்எஸ்ஸின் பதில் என்ன? மோடியின் தன்னிலை விளக்கம் என்ன?

நன்றி: தீக்கதிர்,21-03-2014



Thursday, January 30, 2014

பெரும்பான்மையான இந்துக்கள் என்பதால் மதசார்பின்மையா?

பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்....இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்....ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை...பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) 'இந்து' என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்...எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை பற்றி கவலை படுவதில்லை......அந்த பலியை சுமந்து கொண்டு அதனால் ஏற்படும் சூத்திர , பஞ்சம பட்ட இழிவு பற்றியும் கவலை கொள்வது கிடையாது...அப்படி 'இந்து' என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை...எனவே, அந்த பார்ப்பன மதத்தின் மீது இந்த பெரும்பான்மை மக்களுக்கு பற்றும் கிடையாது வெறுப்பும் கிடையாது...கீதையா, பாகவதமா, மனுதர்மமா...எதாவது இருந்துவிட்டு போகட்டும்...அதில் என்ன இருந்தா நமக்கென்ன..இதுதான் பார்ப்பனரல்லாத, இந்து என்று பலி சுமத்தபட்ட பெரும்பான்மை மக்களின் நிலைமை...ஏதோ இந்து ன்னு சொல்கிறார்கள்....சொல்லிட்டு போகட்டும் என்றுதான் அவர்கள் இருக்கிறாக்கள். இதுதான் உண்மை. இந்த பார்ப்பன மதத்தால் அலைகழிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மலம் அல்லும், செருப்பு தைக்கும், உழவு தொழில் செய்யும் ஒடுக்கப்ட்டவனுக்கு என்ன வெங்காயம் தெரியும்...மக்களோடு மக்களாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அவன் மனிதர்களை அரவணைத்து செல்லும் மனிதநேய மிக்க மாண்பாளன் தான்...அந்த மனிதநேயம், ஏதோ இந்த கேடுகட்ட பார்ப்பன மதத்தால் வந்தது இல்லை....எனவே திரிக்க வேண்டாம்....

இந்த பார்ப்பன இந்து மதத்தால் நல்லா பலன் அனுபவிக்கும், குண்டி வளர்க்கும் பார்ப்பனர்கள் தான் இந்து கோசம் போடுவதும்...அவர்களுக்கு எதாவது ஆபத்து வரும்பொழுது, நாங்க பெரும்பான்மை என்று மற்ற மக்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு பொது புத்தி, பொது பிரச்சனை, போன்று கூட்டம் காண்பிக்கவும் முயற்சிப்பார்கள்...இதை பார்ப்பன இந்து மதம் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் உணர்வார்கள்...ஒரிஜினல் இந்துவாகிய எந்த பார்ப்பானும் இது வரை யாரையும் அரவணைத்து சென்றதா சரித்திரம் இல்லை. இதுதான் பார்ப்பன இந்து மத உண்மை முகம்...நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமையும் ஆதிக்க ஆரியத்திடம் இருந்து போராடி பெற்ற உரிமைகள்...எனவே, பெரும்பான்மையாக இந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை கொடி கட்டி பறக்கிறது என்று பம்மாத்து செய்து உழைக்கும் மக்களிடம் உண்மையை மறைக்க வேண்டாம்.


Monday, January 27, 2014

முஸ்லீம் லீக் மதவாதமா?

முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயராலேயே கட்சி வைத்திருக்கிறார்களே...அவர்களுடன் தி.மு.க வும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே..அது மதவாதம் இல்லையா? என்று தன்னை பெரிய அரசியல் அறிவாளி என்று சொல்லும் காவியருவி மணியன் பேசியுள்ளார். இதை கேட்டு வாயால் சிரிக்க முடியவில்லை

மதவாதம் என்ன என்பது தெரிந்தே...காவிகளுக்கு தேர்தல் புரோக்கர் என்கிற போதையில் பேசியுள்ளார் காவியருவி மணியன்....தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பெறவும் ஒரு குழுவாக ஒன்று சேர்வதும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒடுக்கவும், அவர்களை அழிக்கவும், மற்றவரது அடிப்படை உரிமைகளை தட்டி பறிக்கவும் ஒரு கட்சி இருக்குமென்றால் அது புறக்கணிக்க பட வேண்டிய ஒன்று...இதில் இரண்டாவது வகை தான் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல். இந்த அடிப்படை கூட தெரியாதவரா காவியருவி மணியன்?

முஸ்லீம் லீக் என்று பெயர் வைத்துகொண்டு எந்த ராமர் கோயிலை இடித்தார்கள்? எந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்தார்கள்? சொல்ல முடியுமா மணியன். offense மற்றும் defense க்கு இயக்கம் நடத்துவது மணியனுக்கு புரியாதா?

ஆணாதிக்கத்தின் கொடுமையால் அடிமைபடுத்தபட்ட பெண்கள் ஒரு அமைப்பாக செயல் படுகிறார்கள் என்று...ஆண்களும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி வைத்து கொண்டு அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியுமா? ஆதிக்கம் செலுத்தும் பார்பனர்கள் சங்கம் வைத்து கொள்வதற்கும்...ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒரு அணியில் இணைத்து போராடுவதற்கும் வேறுபாடு இல்லையா? இதெல்லாம் தெரியாதா மணியா??? உங்களுக்கு காவி போதை தலைக்கேறிவிட்டது. கொஞ்ச நாளைக்கு பேசுவதை நிறுத்திகொள்ளுங்கள்.


Tamil 10 top sites [www.tamil10 .com ]