வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 12, 2013

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்??????

அர்த்த்தமுள்ள (????) இந்து மததத்தின் மனுநீதியின் ஒன்பதாவது அத்தியாயத்தின் 3 வது ஸ்லோகம் 

பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்தரம்

 அதாவது, பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன்  சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். என்று முதல் மூன்று வரிகளுக்கு அர்த்தம்.

நான்காவது வரி இன்னும் தெளிவாக சொல்லுகிறது, அதாவது, "பெண்ணே உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள் - ஆகவே ஆண் சொல்படி கேள்.” (ஆதாரம் நூல் : "சாதி மதம் வர்க்கம்", ஆசிரியர் கே வரதராசன்,வெளியீடு: பாரதி புத்தகாலயம் )

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்...எப்படி இருக்குது பார்த்தீர்களா? பெண்களே உங்களை பெற்றுடுத்த பெற்றோர்கள் இப்படி கூறினால் கூட பொறுத்துக்கொள்ள முடியாதுதானே....இதனை எதிர்த்து பெண்கள் போராட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? சரி குறைந்தபட்சம் இப்படி மனுநீதி  கூறும் இந்து மத கடவுளுக்கு அர்ச்சனை கூடை தூக்காமல் இருந்தால் போதுமே? இப்படி மனு நீதியை கூறும் கடவுளை ஒழிக்க பெண்கள் தான் தீர்வு காணவேண்டும். 


Tamil 10 top sites [www.tamil10 .com ]