வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 27, 2008

பெரியாரின் நூல்கள் நாட்டுடமை ஆவதும் மற்ற தலைவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆவதற்கும் உள்ள வேறுபாடு ......

பெரியாருக்கும் மற்ற சமுக சிந்தனை உள்ள தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற தலைவர்கள் தங்கள் கருத்துகளை மறைமுகமாகவும், எதிரிகளுக்கு சொல்லும் பதிலில் சில வரைமுறைகளை கடைபிடித்து தாக்க கூடியவர்கள். உதாரணத்திற்கு மார்க்ஸ், எங்கல்ஸ் அவர்கள் எல்லாம் எதிரிகளை தாக்குவதற்கு சில மறைமுக சொற்களை உபயோகிப்பவர்கள். ஏன் அண்ணா, அம்பேத்கார் மற்றும் பாரதிதாசன் கூட அப்படியே. அதனால் தான் அண்ணா அவர்கள் பிற்காலத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி பிரிந்து சென்றார். எனவே தான் சிலர் நாத்திக வேகம் குறைந்ததாக சொல்லுவார்கள். ( அனால் அண்ணா அவர்கள் அப்படியல்ல என்பது திராவிட இயக்க வரலாறு தெரிந்தவர்கள் அறிவர்) .

உதாரணத்திற்கு ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். அப்பொழுது
நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.

இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டேதான் சொல்ல முடியும்.
பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் உள்ள கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதை மேல இணைத்துள்ளேன்.


இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால், சிலர் அம்பேத்கரும் பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று நினைக்கிறார்கள் ஆனால் அதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. அய்யா அவர்கள் மதமே கூடாது என்றவர்கள் அனால் அண்ணல் அவர்கள் புத்தமதத்தில் தன்னை இனயிது கொண்டவர். இருவரின் பாதையில் சிர் சில வேறுபாடுகள் இருபினும், சேரும் இடம் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படியே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைத்துகொண்டல் கூட நாணயத்தின் ஒரு புறத்தில் பூ இருக்கும் மறுபுறம் உங்களுக்கே தெரியும் (தலை அதுவும் சற்றும் பயமுறுத்தும் படி இருக்கும்) அதுதான் அய்யா அவர்கள். எதையும் கம்பிரமாக, எதிரிகள் கூனி குறுகி மற்றும் வெட்க பட கூடிய அளவிற்கு பதில் அளிக்க கூடியவர். அவருடைய அணைத்து சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துகளும் அப்படியே.

இன்னும் சொல்ல போனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் ஒரு பார்ப்பான் ( அண்ணல் அவர்களை லண்டனில் லா படிக்க வைத்தவர் ) மூலமாக அடிமை படுத்தி அவன் இழிவாக பேசியதால் தான் பார்பன எதிர்பிற்கும் தன் இன மக்களுக்கும் போராட வந்தார். அதனை போலவே காந்தி அடிகள் தன் தாயாருக்கு மது , மாது ஆகியவற்றை விட்டுவிடுவேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதனை காப்பாற்ற தான் அதனை எதிர்த்தார் மற்றும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்தினார். அதனை போலவே தெனாபிரிக்கா பயணத்தில் தானும் அங்கெ பாதிக்கப்பட்டதால் தான் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்க வேண்டியவராக ஆகினார் காந்தி அடிகள். ஆனால் அய்யா பகுத்தறிவு பகலவன் அது போல எதுவும் தனக்கென்று தனிப்பட்ட பாதிப்பு இல்லாமல் நல்ல உயர் வகுப்பில் பிறந்து நன்றாக சொகுசு வாழ்கை வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் நம் மக்கள் இழி மக்களாக வாழ்வதை பார்த்து , திராவிட மக்கள் அனைவர்க்கும் ஒன்றாக போராட தனக்கு இருந்த பதவிகள் அனைத்தையும் இழந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். அதனால் நாம் அய்யாவை யாருடனும் ஒப்பிட தேவையில்லை தயவு செய்து யாருடன் நம் அய்யாவை இணைக்காதிர் அவர் ஒரு சுய சிந்தனையாளர் அதோடு பார்பனர் எதிர்ப்பை மிக மிக வலிமையாக எடுத்து கூறியவர்.

உதரனத்திற்க்கு அய்யாவின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அவரின் அணைத்து சிலைகளுக்கும் கீழே பொறிக்கப்பட்டிருக்கும் (அந்த வாசகங்கள் உங்களுக்கு தெரிந்ததே). அதனை முதல் முதலில் சிலையின் கீழ் பொரிக்க பட்டபோது அதனை பொரிக்க கூடாது, அது எங்களையும் மற்ற இறை நம்பிக்கை உள்ள அனைவரையும் இழிவாகவும் புண்படுத்தும் படியும் இருப்பதாக சொல்லி ஒரு கூட்டம் நீதிமன்றத்திற்கு ஓலை கொண்டுசென்று அதில் தோல்வியும் கண்டது. இப்படி அய்யாவின் ஒரு சிறிய வாசகத்திற்கே இந்த ஆட்டம் போட்ட கூட்டம் அய்யாவின் மற்ற சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் வரும் கடுன்சொர்களை எப்படி அப்படியே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். மேலும் காந்தி அடிகள் கோவிலை பற்றி கூறிய ( கோவில்கள் குச்சிகாரிகளின் விடுதி ) வாசகங்கள் கூட நான் பெரியார் பேசியதன் தொகுப்பின் வாயிலாக அறிந்தேனே ஒழிய காந்தி அடிகளின் எந்த நூலிலும் இதனை குறுப்பிட்டு எழுதியதாக எந்த பதிபகமும் வெளியிட்டதாக தெரியவில்லை.

இப்படியான அய்யாவின் எழுத்துகளை , சொற்பொழிவுகளை நம் சக தோழர்களே சில இடங்களில் பேசும்போது சென்சார் செய்து விட்டுதான் பேசுகிறார்கள். மற்றபடி எழுதும்போது எளிதிவிடுகிரர்கள். அய்யாவின் குட்டையில் ஊறி சிலரே இப்படியாக இருக்க மற்ற நய வஞ்சக கூட்டம் நடத்தி வரும் பதிபகங்கள் எப்படி இவைகளை அப்படியே மக்களிடம் கொண்டு சொல்லும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

அய்யாவின் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் வரும் சொற்கள் யாவும் அய்யாவின் சொற்பொழிவு கேட்டவர்கள் அல்லது படித்தவர்கள் அறிந்தவை அகவே நான் நெனைக்கிறேன் இருந்தும் சிலவற்றை தந்துள்ளேன் .
- உங்களை யாராவது சூத்திரன் என்றல் வாட தேவடியாள் மொவனே என்று கூர் என்றார் .

- அலங்காரம் பண்ணும் பெண்கள் என்னை பொறுத்த வரை தாசிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை என்றார்.

- ராமன் ஒரு குடிகாரன் சீதை ஒரு விபச்சாரி என்றார். மேலும் ராமன் படத்தை செருப்பால் அடித்தேன் எதற்காக என்று முழுவதும் விளக்கி உள்ளார்

இவை மிகவும் சிலவே . மேல் சொன்னவை போல எந்த ஒரு சமுக சிந்தனையாளரும் பேசியதாக இல்லை. இவற்றை இந்த நய வஞ்சக பதிப்பக கூட்டம் அப்படியே மக்களிடம் கொண்டு செல்லுமா ?

நாட்டுடமை ஆக்கினால் யார்வேண்டும் ஆனாலும் வெளியிடலாம் அதனால் எண்ணிக்கை (Quantity) அதிகமாகும் என்று நாம் நினைக்க கூடும் . ஆனால் நாம் எண்ணிக்கையை அதிக படுத்துவதை விட குறைந்த அளவில் வெளியிட்டாலும் அதில் உண்மை போய்விடாமல் (Quality ) பார்த்துக்கொள்ள வேண்டும்

அய்யாவின் எழுத்துகள், சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற எல்ல தலைவர்களின் எழுத்துக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனை மற்றவர்கள் வெளியிட்டால் தன் கருத்துகளை மாற்றி திரிதுவிடுவர்கள் என்ற என்னதிளும்தான் அய்யா அவர்களே பெரியார் சுயமரியாதை நிறுவனத்தை நிறுவி உள்ளார் என்று நான் நினைக்கிறன். அய்யா அவர்கள் பிற்காலத்தில் வருவதை முன்கூடியே சிந்திக்க கூடியவர். ( "இனி வரும் உலகம்" என்ற நூல் ஒரு உதாரணம் ). அதனால் தான் நய வஞ்சக கூட்டத்திடம் இருந்து தனுடைய கொள்கைகளை நிலைநாட்ட அன்றே இதனை செயிதுள்ளார்கள் என்பதே என் கருது.

எனவே நாட்டுடமை ஆக்கினால் , பெரியாரியம், புத்தமதம் எப்படி கடவுள் மதமாக (ஹினயானம் - உருவ வழிபாடு , மகாயானம் - உருவம் இல்லாதது. இந்த பிரிவினை செய்ததும் ஒரு பார்ப்பான் தான் அந்த கதை தேவை பட்டாள் விளக்குகிறேன் ) சித்தரிக்க பட்டு, புத்தர் என்ற பகுத்தறிவு வாதியை கடவுளாய் சித்தரிக்கப்பட்டு நம் முன் நிறுத்தியதை போல சில நூட்ரண்டுகளில் ஏன் சில வருடங்களில் நம் எதிர்கால சந்ததியினருக்கு பெரியார் சாமியார் ஆகி பூஜை போட சொல்லி கொடுத்துவிடுவார்கள். ( அதுவும் தாடி வைத்திருப்பதால் மிகவும் சில மதங்களிலே சாமியார் ஆக்கிவிடும் இந்த வஞ்சக கூட்டம்).

எனவே பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நாம் பெரியாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து அவரை பிற்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சமுக சீர்த்திருதவதியாக அடையாளம் காண்பிக்க வழிவகுப்போம்.

Thursday, December 25, 2008

தினமலத்தின் ஆவேசம்.......

ஏய் தினமல பார்பன முண்டமே நீ கருத்துப்படம் வெளியிட்டு தஞ்சாவூரில் வாங்கிகொண்டது பத்தாத இன்னும் உனக்கு வேண்டுமோ.


சம்பதமே இல்லாமல் வம்புக்கு இழுத்து உள்ளது இன்றைய(26-dec-2008) தினமலம். அதாவது கி.வீரமணி தன்னுடைய பெயரை நியூமரலாஜி பார்த்து மீ.கி வீரமணி என மாற்றி உள்ளாராம்.

யாரிடம்,எந்த சவண்டி பார்ப்பானிடம் போய் ஆசிரியர் வீரமணி அவர்கள் நியூமரலாஜ் பார்த்தார் என்பதை வெளியிட்டால் நாங்கள் எங்களுடைய பகுத்தறிவு பணியை விட்டுவிட்டு உன்னுடன் சேர்ந்து பி பொறுக்க வருகிறோம். நியூமரலாஜ் பார்த்த செய்தியை வெளியிட்ட உனக்கு நிச்சயம் எந்த மடயனிடம் பார்த்து என்பதும் திரிந்திருக்க வேண்டும்.

எப்படி சிண்டு முடியலாம், எப்படி வம்புக்கு இழுக்கலாம் என்று இருந்த உனக்கு கலைங்கரின் பேட்டி வாயில் அவல் போட்டது போல ஆயிற்று. நீ என்னதான் உன் சிண்டுமுடியும் முள்ளமாரி தனத்தை கண்பித்தலும் எங்களின் பகுத்தரிவுபணி ஒற்றுமையை பிரிக்கமுடியாது. கனவு காணாதே.

உண்மை போன்ற சவண்டி,முள்ளமரிகளுக்கு தெரியவில்லை என்றால் எங்களிடம் கேட்டால் சொல்லுகிறோம் ஆசிரியர் எப்பொழுது எங்கே எதற்க்காக பெயரை மாற்றினார் என்று. அதனை விடு விட்டு உன் பி திங்கும் புத்தியை கண்பிகிரையே ஏன். ஆமாம் அந்தந்டையும் உனக்கு பகுத்தறிவு இருந்தால் தானே சிந்திப்பதற்கு. உண்மையை சொல்லுகிறேன் கேட்டுக்கொள். சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இனி எல்லா பெண்களும் தன் குழந்தைகளுக்கு தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதுங்கள் என்று தீர்மானம் போட்டு, இனி தன் பெயருக்கு முன்னால் மீ என்று தனது தாயின் பெயரை போட்டுகொல்பதாக அறிவதேரே ஒழிய வேற என்ன வெங்காயம் வேண்டியிருக்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உன் பின் புத்திக்கு நியூமேரலாஜ் தவிர வேறு என்ன பகுத்தறிவு சிந்தனை தோன்ற போகிறது அல்லது தோன்றி இருந்திருக்கிறது.



Monday, December 15, 2008

புலிகள் இராணுவம் போர் வீடியோ



Thursday, December 11, 2008

புலிகளின் அனுபவமுள்ள படையணிகளாலேயே எமக்கு அதிக இழப்புக்கள்: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன்.
போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.
இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.
எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.


உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.
ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.
அதனைப் போலவே 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்வனவு செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.
பதவிக்கு நாம் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி சீருடைகளும், ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர் செய்தோம்.
படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பற்றலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.
முன்னர் ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.
கடந்த வருடம் 32 ஆயிரம் படையினரையும் இந்த வருடம் 34,000 ஆயிரம் படையினரையும் சேர்த்துள்ளோம்.


பதவிக்கு நான் வரும்போது இராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பற்றலியன்களை உருவாக்கியுள்ளேன்.


தற்போதைய போரில் விடுதலைப் புலிகள் தம்மை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10 ஆயிரம் பேரை கொண்டிருந்தனர்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.


எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல என்றார் அவர்.

நன்றி: புதினம்



Tuesday, December 09, 2008

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇனஇளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது. ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போதுபெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)



Tamil 10 top sites [www.tamil10 .com ]