வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 27, 2008

பெரியாரின் நூல்கள் நாட்டுடமை ஆவதும் மற்ற தலைவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆவதற்கும் உள்ள வேறுபாடு ......

பெரியாருக்கும் மற்ற சமுக சிந்தனை உள்ள தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற தலைவர்கள் தங்கள் கருத்துகளை மறைமுகமாகவும், எதிரிகளுக்கு சொல்லும் பதிலில் சில வரைமுறைகளை கடைபிடித்து தாக்க கூடியவர்கள். உதாரணத்திற்கு மார்க்ஸ், எங்கல்ஸ் அவர்கள் எல்லாம் எதிரிகளை தாக்குவதற்கு சில மறைமுக சொற்களை உபயோகிப்பவர்கள். ஏன் அண்ணா, அம்பேத்கார் மற்றும் பாரதிதாசன் கூட அப்படியே. அதனால் தான் அண்ணா அவர்கள் பிற்காலத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி பிரிந்து சென்றார். எனவே தான் சிலர் நாத்திக வேகம் குறைந்ததாக சொல்லுவார்கள். ( அனால் அண்ணா அவர்கள் அப்படியல்ல என்பது திராவிட இயக்க வரலாறு தெரிந்தவர்கள் அறிவர்) .

உதாரணத்திற்கு ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். அப்பொழுது
நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.

இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டேதான் சொல்ல முடியும்.
பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் உள்ள கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதை மேல இணைத்துள்ளேன்.


இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால், சிலர் அம்பேத்கரும் பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று நினைக்கிறார்கள் ஆனால் அதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. அய்யா அவர்கள் மதமே கூடாது என்றவர்கள் அனால் அண்ணல் அவர்கள் புத்தமதத்தில் தன்னை இனயிது கொண்டவர். இருவரின் பாதையில் சிர் சில வேறுபாடுகள் இருபினும், சேரும் இடம் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படியே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைத்துகொண்டல் கூட நாணயத்தின் ஒரு புறத்தில் பூ இருக்கும் மறுபுறம் உங்களுக்கே தெரியும் (தலை அதுவும் சற்றும் பயமுறுத்தும் படி இருக்கும்) அதுதான் அய்யா அவர்கள். எதையும் கம்பிரமாக, எதிரிகள் கூனி குறுகி மற்றும் வெட்க பட கூடிய அளவிற்கு பதில் அளிக்க கூடியவர். அவருடைய அணைத்து சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துகளும் அப்படியே.

இன்னும் சொல்ல போனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் ஒரு பார்ப்பான் ( அண்ணல் அவர்களை லண்டனில் லா படிக்க வைத்தவர் ) மூலமாக அடிமை படுத்தி அவன் இழிவாக பேசியதால் தான் பார்பன எதிர்பிற்கும் தன் இன மக்களுக்கும் போராட வந்தார். அதனை போலவே காந்தி அடிகள் தன் தாயாருக்கு மது , மாது ஆகியவற்றை விட்டுவிடுவேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதனை காப்பாற்ற தான் அதனை எதிர்த்தார் மற்றும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்தினார். அதனை போலவே தெனாபிரிக்கா பயணத்தில் தானும் அங்கெ பாதிக்கப்பட்டதால் தான் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்க வேண்டியவராக ஆகினார் காந்தி அடிகள். ஆனால் அய்யா பகுத்தறிவு பகலவன் அது போல எதுவும் தனக்கென்று தனிப்பட்ட பாதிப்பு இல்லாமல் நல்ல உயர் வகுப்பில் பிறந்து நன்றாக சொகுசு வாழ்கை வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் நம் மக்கள் இழி மக்களாக வாழ்வதை பார்த்து , திராவிட மக்கள் அனைவர்க்கும் ஒன்றாக போராட தனக்கு இருந்த பதவிகள் அனைத்தையும் இழந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். அதனால் நாம் அய்யாவை யாருடனும் ஒப்பிட தேவையில்லை தயவு செய்து யாருடன் நம் அய்யாவை இணைக்காதிர் அவர் ஒரு சுய சிந்தனையாளர் அதோடு பார்பனர் எதிர்ப்பை மிக மிக வலிமையாக எடுத்து கூறியவர்.

உதரனத்திற்க்கு அய்யாவின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அவரின் அணைத்து சிலைகளுக்கும் கீழே பொறிக்கப்பட்டிருக்கும் (அந்த வாசகங்கள் உங்களுக்கு தெரிந்ததே). அதனை முதல் முதலில் சிலையின் கீழ் பொரிக்க பட்டபோது அதனை பொரிக்க கூடாது, அது எங்களையும் மற்ற இறை நம்பிக்கை உள்ள அனைவரையும் இழிவாகவும் புண்படுத்தும் படியும் இருப்பதாக சொல்லி ஒரு கூட்டம் நீதிமன்றத்திற்கு ஓலை கொண்டுசென்று அதில் தோல்வியும் கண்டது. இப்படி அய்யாவின் ஒரு சிறிய வாசகத்திற்கே இந்த ஆட்டம் போட்ட கூட்டம் அய்யாவின் மற்ற சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் வரும் கடுன்சொர்களை எப்படி அப்படியே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். மேலும் காந்தி அடிகள் கோவிலை பற்றி கூறிய ( கோவில்கள் குச்சிகாரிகளின் விடுதி ) வாசகங்கள் கூட நான் பெரியார் பேசியதன் தொகுப்பின் வாயிலாக அறிந்தேனே ஒழிய காந்தி அடிகளின் எந்த நூலிலும் இதனை குறுப்பிட்டு எழுதியதாக எந்த பதிபகமும் வெளியிட்டதாக தெரியவில்லை.

இப்படியான அய்யாவின் எழுத்துகளை , சொற்பொழிவுகளை நம் சக தோழர்களே சில இடங்களில் பேசும்போது சென்சார் செய்து விட்டுதான் பேசுகிறார்கள். மற்றபடி எழுதும்போது எளிதிவிடுகிரர்கள். அய்யாவின் குட்டையில் ஊறி சிலரே இப்படியாக இருக்க மற்ற நய வஞ்சக கூட்டம் நடத்தி வரும் பதிபகங்கள் எப்படி இவைகளை அப்படியே மக்களிடம் கொண்டு சொல்லும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

அய்யாவின் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் வரும் சொற்கள் யாவும் அய்யாவின் சொற்பொழிவு கேட்டவர்கள் அல்லது படித்தவர்கள் அறிந்தவை அகவே நான் நெனைக்கிறேன் இருந்தும் சிலவற்றை தந்துள்ளேன் .
- உங்களை யாராவது சூத்திரன் என்றல் வாட தேவடியாள் மொவனே என்று கூர் என்றார் .

- அலங்காரம் பண்ணும் பெண்கள் என்னை பொறுத்த வரை தாசிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை என்றார்.

- ராமன் ஒரு குடிகாரன் சீதை ஒரு விபச்சாரி என்றார். மேலும் ராமன் படத்தை செருப்பால் அடித்தேன் எதற்காக என்று முழுவதும் விளக்கி உள்ளார்

இவை மிகவும் சிலவே . மேல் சொன்னவை போல எந்த ஒரு சமுக சிந்தனையாளரும் பேசியதாக இல்லை. இவற்றை இந்த நய வஞ்சக பதிப்பக கூட்டம் அப்படியே மக்களிடம் கொண்டு செல்லுமா ?

நாட்டுடமை ஆக்கினால் யார்வேண்டும் ஆனாலும் வெளியிடலாம் அதனால் எண்ணிக்கை (Quantity) அதிகமாகும் என்று நாம் நினைக்க கூடும் . ஆனால் நாம் எண்ணிக்கையை அதிக படுத்துவதை விட குறைந்த அளவில் வெளியிட்டாலும் அதில் உண்மை போய்விடாமல் (Quality ) பார்த்துக்கொள்ள வேண்டும்

அய்யாவின் எழுத்துகள், சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற எல்ல தலைவர்களின் எழுத்துக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனை மற்றவர்கள் வெளியிட்டால் தன் கருத்துகளை மாற்றி திரிதுவிடுவர்கள் என்ற என்னதிளும்தான் அய்யா அவர்களே பெரியார் சுயமரியாதை நிறுவனத்தை நிறுவி உள்ளார் என்று நான் நினைக்கிறன். அய்யா அவர்கள் பிற்காலத்தில் வருவதை முன்கூடியே சிந்திக்க கூடியவர். ( "இனி வரும் உலகம்" என்ற நூல் ஒரு உதாரணம் ). அதனால் தான் நய வஞ்சக கூட்டத்திடம் இருந்து தனுடைய கொள்கைகளை நிலைநாட்ட அன்றே இதனை செயிதுள்ளார்கள் என்பதே என் கருது.

எனவே நாட்டுடமை ஆக்கினால் , பெரியாரியம், புத்தமதம் எப்படி கடவுள் மதமாக (ஹினயானம் - உருவ வழிபாடு , மகாயானம் - உருவம் இல்லாதது. இந்த பிரிவினை செய்ததும் ஒரு பார்ப்பான் தான் அந்த கதை தேவை பட்டாள் விளக்குகிறேன் ) சித்தரிக்க பட்டு, புத்தர் என்ற பகுத்தறிவு வாதியை கடவுளாய் சித்தரிக்கப்பட்டு நம் முன் நிறுத்தியதை போல சில நூட்ரண்டுகளில் ஏன் சில வருடங்களில் நம் எதிர்கால சந்ததியினருக்கு பெரியார் சாமியார் ஆகி பூஜை போட சொல்லி கொடுத்துவிடுவார்கள். ( அதுவும் தாடி வைத்திருப்பதால் மிகவும் சில மதங்களிலே சாமியார் ஆக்கிவிடும் இந்த வஞ்சக கூட்டம்).

எனவே பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நாம் பெரியாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து அவரை பிற்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சமுக சீர்த்திருதவதியாக அடையாளம் காண்பிக்க வழிவகுப்போம்.

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]