வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, July 19, 2014

'னூல்' அறுக்கும் நூல்கள் - அடிமை


அடிமை 
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர் 
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 41 -பி, 
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், 
சென்னை - 600 098 
பக் : 32 விலை ரூ. 20 /- 

இந்தியாவில் அடிமைத்தனம் எப்போதும் இருந்ததில்லை. இந்து மதத்தின் பெருமையது என இப்போது சங்பரிவார் பீற்றித்திரிகிறது. அதேபோல் இந்து மதத்தை சகிப்புத்தன்மையின் மாதிரிபோல் சிலர் செப்பித்திரிகிறார்கள். இந்த இரண்டும் மிக மிக தவறான கண்ணோட்டம். இந்தியாவில் அடிமைத்தனம் இருந்ததையும், அடிமைத்தனத்தை விட மோசமான தீண்டாமை இருப்பதையும் மிகத் தெளிவாக வரையறை செய்து காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். சாதியஒடுக்குமுறை குறித்து மிக ஆழமான மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு வலுவான ஆதாரங்களோடு தீண்டாமையை தோலுரித்து காட்டிய அம்பேத்கரின் கட்டுரைகளில் இது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரைந்துகாட்டி தீண்டாமையே ஆகப்பெருங்கொடுமை என்பதை இந்நூலில் நன்கு வாதிட்டுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.

நன்றி: தீக்கதிர், 20-07-2014


Tamil 10 top sites [www.tamil10 .com ]