வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 30, 2014

பெரும்பான்மையான இந்துக்கள் என்பதால் மதசார்பின்மையா?

பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்....இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்....ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை...பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) 'இந்து' என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்...எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை பற்றி கவலை படுவதில்லை......அந்த பலியை சுமந்து கொண்டு அதனால் ஏற்படும் சூத்திர , பஞ்சம பட்ட இழிவு பற்றியும் கவலை கொள்வது கிடையாது...அப்படி 'இந்து' என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை...எனவே, அந்த பார்ப்பன மதத்தின் மீது இந்த பெரும்பான்மை மக்களுக்கு பற்றும் கிடையாது வெறுப்பும் கிடையாது...கீதையா, பாகவதமா, மனுதர்மமா...எதாவது இருந்துவிட்டு போகட்டும்...அதில் என்ன இருந்தா நமக்கென்ன..இதுதான் பார்ப்பனரல்லாத, இந்து என்று பலி சுமத்தபட்ட பெரும்பான்மை மக்களின் நிலைமை...ஏதோ இந்து ன்னு சொல்கிறார்கள்....சொல்லிட்டு போகட்டும் என்றுதான் அவர்கள் இருக்கிறாக்கள். இதுதான் உண்மை. இந்த பார்ப்பன மதத்தால் அலைகழிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மலம் அல்லும், செருப்பு தைக்கும், உழவு தொழில் செய்யும் ஒடுக்கப்ட்டவனுக்கு என்ன வெங்காயம் தெரியும்...மக்களோடு மக்களாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அவன் மனிதர்களை அரவணைத்து செல்லும் மனிதநேய மிக்க மாண்பாளன் தான்...அந்த மனிதநேயம், ஏதோ இந்த கேடுகட்ட பார்ப்பன மதத்தால் வந்தது இல்லை....எனவே திரிக்க வேண்டாம்....

இந்த பார்ப்பன இந்து மதத்தால் நல்லா பலன் அனுபவிக்கும், குண்டி வளர்க்கும் பார்ப்பனர்கள் தான் இந்து கோசம் போடுவதும்...அவர்களுக்கு எதாவது ஆபத்து வரும்பொழுது, நாங்க பெரும்பான்மை என்று மற்ற மக்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு பொது புத்தி, பொது பிரச்சனை, போன்று கூட்டம் காண்பிக்கவும் முயற்சிப்பார்கள்...இதை பார்ப்பன இந்து மதம் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் உணர்வார்கள்...ஒரிஜினல் இந்துவாகிய எந்த பார்ப்பானும் இது வரை யாரையும் அரவணைத்து சென்றதா சரித்திரம் இல்லை. இதுதான் பார்ப்பன இந்து மத உண்மை முகம்...நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமையும் ஆதிக்க ஆரியத்திடம் இருந்து போராடி பெற்ற உரிமைகள்...எனவே, பெரும்பான்மையாக இந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை கொடி கட்டி பறக்கிறது என்று பம்மாத்து செய்து உழைக்கும் மக்களிடம் உண்மையை மறைக்க வேண்டாம்.


Monday, January 27, 2014

முஸ்லீம் லீக் மதவாதமா?

முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயராலேயே கட்சி வைத்திருக்கிறார்களே...அவர்களுடன் தி.மு.க வும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே..அது மதவாதம் இல்லையா? என்று தன்னை பெரிய அரசியல் அறிவாளி என்று சொல்லும் காவியருவி மணியன் பேசியுள்ளார். இதை கேட்டு வாயால் சிரிக்க முடியவில்லை

மதவாதம் என்ன என்பது தெரிந்தே...காவிகளுக்கு தேர்தல் புரோக்கர் என்கிற போதையில் பேசியுள்ளார் காவியருவி மணியன்....தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பெறவும் ஒரு குழுவாக ஒன்று சேர்வதும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒடுக்கவும், அவர்களை அழிக்கவும், மற்றவரது அடிப்படை உரிமைகளை தட்டி பறிக்கவும் ஒரு கட்சி இருக்குமென்றால் அது புறக்கணிக்க பட வேண்டிய ஒன்று...இதில் இரண்டாவது வகை தான் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல். இந்த அடிப்படை கூட தெரியாதவரா காவியருவி மணியன்?

முஸ்லீம் லீக் என்று பெயர் வைத்துகொண்டு எந்த ராமர் கோயிலை இடித்தார்கள்? எந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்தார்கள்? சொல்ல முடியுமா மணியன். offense மற்றும் defense க்கு இயக்கம் நடத்துவது மணியனுக்கு புரியாதா?

ஆணாதிக்கத்தின் கொடுமையால் அடிமைபடுத்தபட்ட பெண்கள் ஒரு அமைப்பாக செயல் படுகிறார்கள் என்று...ஆண்களும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி வைத்து கொண்டு அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியுமா? ஆதிக்கம் செலுத்தும் பார்பனர்கள் சங்கம் வைத்து கொள்வதற்கும்...ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒரு அணியில் இணைத்து போராடுவதற்கும் வேறுபாடு இல்லையா? இதெல்லாம் தெரியாதா மணியா??? உங்களுக்கு காவி போதை தலைக்கேறிவிட்டது. கொஞ்ச நாளைக்கு பேசுவதை நிறுத்திகொள்ளுங்கள்.


Tamil 10 top sites [www.tamil10 .com ]