வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 25, 2010

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் நினைவு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அய்யா அவர்களின் சிந்தனைகளை, கொள்கைகளைப் பரப்பும் நாளாகவும், கூர்தீட்டிக் கொள்ளும் நாளாகவும், உறுதி எடுக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கின் றனர்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைமை இடத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவு நாளில் கொள்கை வழிப்பட்ட செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் - பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரும், திருவாளர் சோ ராமசாமியின் சீடருமான ஒருவரை ஆசிரியராகக் கொண்ட பார்ப்பன நாளேடு ஒன்று தந்தை பெரியார் நினைவு நாளைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இயக்கத்திலிருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிலரை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்றவர்கள் தமிழகத்தில் மலிவாகக் கிடைப்பார்கள் என்பதுதான் தெரிந்த செய்தியாயிற்றே!

தந்தை பெரியார் இறுதியாகப் பயன் படுத்திய வேன் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறதாம் - அடடே, பெரியாரின் வேன் மீது இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக் காரருக்கு எவ்வளவு பெரிய அக்கறை - எத்தகைய கரிசனம்!

திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் வேன் ஒன்றும் குப்பை போல கிடக்கவில்லை. அதற்கென்று ஷெட் ஏற் பாடு செய்யப்பட்டு, அதில்தான் நிறுத்தப் பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஷெட்டின் முகப்பில் தந்தை பெரியார் இறுதியாகப் பயணம் செய்த வேன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே அய்யா - அம்மா படிப்பகம் இருக்கிறது.

இதில் உள்ள பார்ப்பனத்தனம் என்ன தெரியுமா? அந்த எழுத்துகள் தெரியா மலும், பக்கத்தில் உள்ள படிப்பகத்தை மறைத்தும் நிழற்படத்தை வெளியிட் டுள்ளது.

அதேநேரத்தில் பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயர்ப் பலகை தெரியும் வகையில் அந்தப் படத்தை வெளியிட்டு பார், பார்! பெரியார் கடைசியாகப் பயன் படுத்திய வேன் எப்படி இருக்கிறது? பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் எப்படி இருக் கிறது? என்று விளையாட்டு காட்டுகிறது. இதில் என்ன பெரிய பிரச்சினை இருக் கிறது? பெரியார் வேன் பெரியார் மாளிகை யில் இருக்க வேண்டிய இடத்தில் பத்திர மாக இருக்கிறது - சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. இதில் எந்தப் புதிரைக் கண்டுபிடித்துவிட் டார் இந்தப் புதிய பூணூல் வாஸ் கோடகாமா?

பெரியார் கற்றுத் தந்த புத்தி என்று ஒன்று இருக்கிறது. பார்ப்பான் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கிறான் என்றால், அதுவும் தந்தை பெரியார் பற்றிப் பேச வருகிறான் என்றால், அதில் ஏதோ வஞ்சகம் இருக்கிறது, வன்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் சொல்லுவார் - இராமாயணத்தில் இராமனுக்கென்று இருந்த சொந்தப் படை என்ன? ஒன்றும் கிடையாது - வானரப் படையைக் கொண்டே இராவணனை எதிர்த்துச் சண்டை போட்டான்; ஒரு பார்ப்பனர் இராமாயணத்தில் செத்தான் இல்லை என்பார்கள்.

பார்ப்பனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இராமாயணத் தைப் படித்துக் கொள்ளவேண்டும் என்று சர்.சி.பி. இராமசாமி அய்யர் சொன்னது தான் இப்பொழுது நினைவிற்கு வரு கிறது.

அந்த இராமாயண யுக்தியை அனுசரித்தே இந்த மூன்று பேர்களைப் பிடித்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை வீரியத்துடனும், விவேகத்துடனும் நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்மீது சேறு வாரி இறைக்கச் செய்கிறது ஒரு பார்ப்பன ஏடு என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. ஒரு பார்ப்பன ஏடு எந்த நோக்கத்தில் தங்களைக் கையாளாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்கிற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒரு காலத்தில் எப்படித்தான் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கழகத்தில் இருந்தனர் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

எப்படியோ விளம்பரம் கிடைத்து விட்டது - போட்டோவும் வெளிவந்து விட்டது பார்ப்பன ஏட்டில் - அதுபோதும் என்கிற மலிவான நிலைக்கு ஆளான வர்களைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்யயோ பெரியார் சொத்துகளை விற்கிறார்கள், விற்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் என்ன? பெரியார் மறை விற்குப் பிறகு அவை வளர்ந்திருக்கிறதா - தேய்ந்து இருக்கிறதா என்பது கருத்துக் குருடர்களைத் தவிர மற்றவர் கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றம் எப்படி இருந்தது? இப்பொழுது அது எப்படி இருக்கிறது? விடுதலைப் பணிமனை எப்படி இருந்தது - இப்பொழுது அதன் பொலிவு என்ன?

விடுதலை அச்சுக்கூடம் எப்படி இருந்தது? இப்பொழுது எந்த அளவுக்கு நவீன மயமாகி உள்ளது? விடுதலை யின் அச்சும், வடிவமும் எப்படி இருந்தது? (விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலைதான் அன்று) இப்பொழுது அதன் எழிலும், தெளிவும் வாசகர்களை எப்படிக் கவர்ந் திருக்கிறது. உண்மை இதழும் அப்படியே!

தந்தை பெரியார் காலத்தில் வெளி வந்த இயக்க வெளியீடுகளையும், இப்பொழுது வெளிவரும் வெளியீடு களையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அறிவு நாணயம் உள்ளவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

டில்லியில் கம்பீரமாக நிற்கும் பெரியார் மய்யம் எதிரிகளையும், துரோகிகளையும் பார்த்து எள்ளி நகையாடும். டில்லியில் பெரியார் மய்யம் கொள்கிறார் என்றால், தினமணிக் கூட்டத்துக்கு நெரி கட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது; விபீடணர்களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுவானேன்?

பெரியார் படிப்பகங்கள்பற்றியெல்லாம் கிறுக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் நிரந்தரமான கான்கிரீட் கட்டடங்களாக அவை உருமாறியிருக் கின்றன என்ற உண்மையைக் கூடத் தெரியாமல், உளறுகிறார்களே, என்ன செய்ய! புதிய இடங்களில்தான் எத் தனை எத்தனை பெரியார் படிப்பகங்கள் - நூலகங்கள்!

பெரியார் திடலில் இயங்கும் நூலகம் - ஆய்வகம் உலகத் தரத்தில் ஓங்கி நிற்கிறதே! 52333 நூல்கள் அணி வகுக்கின்றனவே - தமிழர் தலைவர் அரிதில் சேர்த்து வைத்த தமது சொந்த 10,277 நூல்களை அளித்து உதவி னாரே! பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக்காக இங்கே தானே வந்து கொண்டிருக்கின்றனர்!

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று எழுதலாமா?

ஒரு பெரியார் மய்யத்தை பி.ஜே.பி. ஆட்சியில் இடித்தார்கள் என்றால், அதன் பலன் என்ன? ஒன்றுக்குப் பதில் இரண்டு பெரியார் மய்யங்கள் - புதுடில்லியில்.

பெரியார் மய்யத்தின் அருமை - அதனால் ஏற்படப் போகும் விளைவு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவார்க் கூட்டத்துக்கும் நன்கு தெரிந்திருக் கிறது. பெரியார் அங்கு சுற்றி இங்கு சுற்றி இந்தியாவின் தலைநகரான டில்லிக்கே வந்துவிட்டாரே என்கிற ஆத்திரப் புயலில் அவதிப்படுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன வந்தது? பெரியார் மய்யம் இடிக்கப்பட்டபோது ஒருக்கால் - இவர்களும் லட்டு சாப் பிட்டு இருப்பார்களோ!

நாகம்மையார் குழந்தைகள் இல் லத்தின் பழைய நிலையையும், புதிய பொலிவையும் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்; பொறாமைக்காரர்களோ புழுங்கிச் சாகிறார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தமது கவிதை (ஒரு துளி வானம் ஒரு துளி பூமி!) நூல் விற்பனை இலாபத்தை நாகம்மையார் இல்லத்திற்கு அளித்து மகிழ்ந்தார். நல்லவர்கள் பாராட்டு கிறார்கள்; நல்லவர்களாக இருக்க முடியாதவர்கள் தங்களின் அருங் குணங்களைக் காட்டிக் கொள்கி றார்கள், அவ்வளவுதான்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக் கத்தால் விளம்பரம் ஆனவர்கள். அவ்வப்போது துரோகிகள் ஆகாமல் தப்பிக்க முடியாதவர்களாகவே ஆகி யிருக்கின்றனர். தமிழர்களின் யோக் கியதை இதுதான் போலும்!

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பணிகள், தமிழர் தலைவர் தலைமையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற சாதனை கள் அளப்பரியன.

திராவிடர் கழகம் - பெரியார் திடல் விடுதலை என்ன வழிகாட்டுகிறதோ அதுதான் உண்மையான பெரியார் பாட்டை என்பது உலகம் பூராவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தத் தலைமை, அமைப்பின் மூலம் தான் தந்தை பெரியார் என்ற அங்கீ காரத்தோடு காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும்; தமிழர்களின் உரிமை களை மீட்டுக் கொடுக்க முடியும்; சமூகநீதிக் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட முடியும்; பகுத்தறிவுப் பணியை வலுவாகச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று. தினமணிகள் நற்சான்று கொடுக்கத் தேவையில்லை.

கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங் கள் முன் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், புத்தகக் கண்காட்சி, பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, பெரியாரியல் பயிற்சி முகாம்கள், குழந்தைகள் பழகு முகாம், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம், பெரியார் சமூகக் காப்பு அணி, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடுப் போட்டிகள், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி பேச்சுப் போட்டி; தலா முதல் பரிசு ஒரு லட்சம்; இரண்டாம் பரிசு 75 ஆயிரம்; மூன்றாம் பரிசு 50 ஆயிரம்; 2010 இல் மாணவ, மாணவிகள் பங்கேற்பு 20 ஆயிரம்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பெரியார் திரை குறும்படப் போட்டி, பெரியார் வலைக்காட்சி, திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக் கம், தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா (புரட்சிக்கவிஞர் விழா), முத்தமிழ் மன்ற விழா,

பெரியார் திரைப்படம் சாதாரணமா? (தெலுங்கிலும் வெளிவந்துவிட்டது). உலகப் புகழ்பெற்ற நாத்திக நெறி நூலான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (கூந ழுடின னுநடரளடி லெ சுஉயசன னுயறமளே) என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமை பெற்று வெளியிடப்பட்டது.

குடியரசுத் தொகுப்பு இதுவரை 25.

4 பக்கங்களாக வெளிவந்த விடுதலை இப்பொழுது எட்டுப் பக்கங்கள்;

சென்னையில் மட்டும் இருந்த பதிப்பு, மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பு.

தந்தை பெரியார் காலத்தில் மாதம் ஒரு முறை வெளிவந்த உண்மை இதழ் இப்பொழுது மாதம் இருமுறை.

நிறுத்தப்பட்ட தி மாடர்ன் ரேசன லிஸ்ட் மீண்டும் தொடங்கி வெளிவருதல்;

புதிதாகக் குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாதப் பத்திரிகை.

அலை அலையான மாநாடுகள்; அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை யில் மாணவர் கழக மாநாடு; மதுரையில் மாணவர் கழக மாநாடு; கரூர், வாலாஜா, சீர்காழி, திருப்பத்தூர், திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடுகள்;

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் (ஃபெரா) 7 ஆவது இந்திய மாநாடு - சென்னையில்!

ஒரு ஆறு மாத காலத்துக்குள் இத் தனை இத்தனை மாநாடுகளையும், மாநாடுகளை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளையும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பு கள் நடத்தியுள்ளன என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

போராட்டங்கள்தான் கொஞ்சமா, நஞ்சமா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் (16.2.2010).

மத்திய அரசின் புதிய கல்வி மசோ தாவை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் பேரணி (23.2.2010).

சாமியர்களின் கயமத்தனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (11.3.2010).

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் (10.5.2010).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி ரயில் மறியல் போராட்டம் (5.6.2010).

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் (30.6.2010).

தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்து

நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (14.7.2010).

நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (10.12.2010).

நுழைவுத் தேர்வை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம். இப்படி அலை அலையாகப் போராட்ட நிகழ்ச்சிகள்! சாதனைகள்தான் கொஞ்சமா?

எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அதன் விளைவாக 49 சதவிகிதமாக இருந்து வந்த இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 68 ஆக உயர்ந்ததற்குக் காரணம் யாருடைய முயற்சி?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அறவேயில்லை என்பதை மாற்றி, மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திடக் காரணமாக இருந்தது யார்?

(42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது!).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், மீண்டும் இதற்காக மசோதா நிறைவேற்றம் - உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையால் தீர்ப்பின் தாமதத்தால் நிலுவையில் நிற்கிறது).

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு.

சிதம்பரம் நடராஜன் கோயில், தீட்சதர்ப் பார்ப்பனர்கள் கையிலிருந்து இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

(பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் கழகம் நடத்தியது!).

இவ்வளவையும் தொகுத்துப் பார்த்தால், இவை நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தினருக்கே மலைப்பாகத் தோன்றுகிறது!

பார்ப்பனர்களுக்கு இதன் தன்மை நன்கு புரிந்தே இருக்கிறது. அதனால்தான் பழனியில் மாநாடு கூட்டி தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்ப்பனர்கள் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். இதுதான் முக்கியமான அளவுகோல்.

தினமணியின் பூணூல்தேள் கொடுக்கை நீட்டிக் கொண்டு அலைவதற்குக் காரணமே, தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகத்தின் இத்தகு ஓய்வறியா மலை மலையான, அலை அலையான நடவடிக்கைகளே!

இந்தக் காரணத்துக்காகப் பார்ப்பனர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் - கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்,

கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக் கொண்டோம் என்ற வெறுமையில், இயலாமையில் பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். விளம்பர சடகோபம் எத்தனை நாளைக்கு?

வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

1974 இல் மூன்று தொகுதிகளை வெளியிட்டு, அதற்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பைக் கொண்டு வந்த சாதனை சக்ரவர்த்தி ஒருவரும் சேர்ந்துகொண்டு மண்ணை வாரி இறைக்கிறார்.

அரசாங்கத்திடம் இடம் வாங்கி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளாரே - அரசிடம் எந்தக் காரணங்களைப் பணிகளைச் செய்வதற்கு இனாமாக இடம் வாங்கினாரோ அந்தப் பணிகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பினால், அந்த டிரஸ்ட் அரசாங்கத்தின் கஜானாவுக்குள் முடங்கிவிடுமே!

திருச்சி அருகில் (நாத்திகக் கல்லூரிக்காக) அரசிடம் நிலம் வாங்கி தனிச் சொத்தாக்கி விற்றுக் கடன் கட்டப்பட்டதா இல்லையா?

தோழர்களே,

1971 நிலை தமிழ்நாட்டில் மீண்டும் சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலும், 1971 தேர்தலின் மறு அச்சாக நடைபெற உள்ளது.

1971 தேர்தலில் இதே தினமணி அய்யப்பனையும், வினாயகனையும் வேண்டிக் கொள்ளவில்லையா - தி.மு.க. தோற்கவேண்டும் என்று!

அந்த நிலையை இப்பொழுதும் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சந்திக்கத் தயார் என்று தோள் தட்டிவிட்டார்!

ஆரியத்தின் படைக்கலன் வரிசையிலே தினமணி பூணூலை முறுக்கி முண்டா தட்டுகிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகத்தைக் கொச்சைப் படுத்தித் தீரவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.

யுத்த இரகசியத்தில் எப்பொழுதும் அந்தக் கால இராமாயண சுக்ரீவன், விபீஷணன்கள், இந்தக் கால கருணாக்களும் தேவைப்படுவார்கள்.

அய்ந்தாம் படைதானே ஆரியத்துக்குத் தேவை. அதில் ஒரு கட்டம்தான் தினமணி கட்டுரையின் (24.12.2010) சாரமாகும்.

தினமணி அய்யர்வாளுக்கு வால்களும் கிடைத்திருக்கின்றன.

நமது செயல்பாடு என்கிற எரிமலை வீச்சுக்கு முன்னே இந்தப் பஞ்சு மூட்டைகள் எம்மாத்திரம்!

குறிப்பு: இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்.

- தந்தை பெரியார்,(விடுதலைமலர், 17.9.1969).

---- தொகுப்பு மின்சாரம், விடுதலை (25-12-2010)

Wednesday, December 22, 2010

இராசா எங்கே - அத்வானிகள் எங்கே?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் சி.பி.அய். தனது விசா ரணையை ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சோதனை கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சம்பந் தப்பட்டவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

சோதனைகள் நடந்தபோது முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சி.பி.அய். அதிகாரிகளே கூறியிருக்கின்றனர். அதேபோல, விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.

அதே நேரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?

பாபர் மசூதி இடிப்பு வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே - போதிய ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் இந்த வழக்கு விசாரணை முடிந்து பா.ஜ.க.வின் பெரும் தலைவர்கள் சிறைக் கொட்டடியில் கிடந்திருக்கவேண்டிய நிலைகூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டே!

குற்றங்கள் என்ன சாதாரணமானவையா? இந்திய குற்றவியல் சட்டம் 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகள் ஆயிற்றே!

கலகம் விளைவித்தல் மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், பீதியை உண்டாக்குதல் என்கிற குற்றங்கள் சாதாரணமானவையா?

ஊழலை விட பன்மடங்கு அபாயகரமான குற்றங் களாயிற்றே!

இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட திருவாளர் எல்.கே. அத்வானி அதிகாரத்தில் இருந்த காரணத்தால், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரே! ஆகா, எவ்வளவுப் பெரிய யோக்கிய சிகாமணிகள்; அதிகாரத்தைச் சற்றும் துஷ்பிரயோகம் செய்யாத உத்தம சீலர்கள் இவர்கள் - அப்படித்தான் மற்றவர்களும் நம்பித் தொலைக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!

மேல்முறையீட்டின் காரணமாக அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் அத்வானியை வழக்கில் இணைக்கும்படி நேர்ந்தது.

அதேபோல, பாபர் மசூதி இடிப்புக் குறித்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் விசாரணையில் இதே அத்வானி எப்படியெல்லாம் நடந்துகொண்டார்?

அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தவர் அரசு வழக்கறிஞர் அனுபம் குப்தா என்பவர். இவரின் கேள்வி களுக்கு முன் அத்வானி நிலை குலைந்து போனார். நேர்மை இல்லாத இடத்தில், இத்தகைய இடர்ப்பாட்டைச் சந்திக்கத் தானே நேரும்?

அத்வானி நீதிபதி லிபரானிடம் சரணடைந்த நிலையில், நீதிபதியே அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லையா?

லிபரான் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பெயரும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், என்ன சொன்னார்கள் இந்த உத்தமப் புத்திரர்கள்? வாஜ்பேயியை எப்படி சேர்க்கலாம் என்று எகிறிக் குதிக்கவில்லையா?

ஒரு நீதிபதியின் தலைமையில் அமைந்த ஆணையம் சங் பரிவார்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடனம் ஆட வேண்டுமா? இதுதானே இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்பு?

இப்படி விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் ஒத்துழைக்காது அடம்பிடித்த ஆசாமிகள் எங்கே?

2ஜி அலைக்கற்றை விசாரணைக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்புக் கொடுத்துவரும் இராசாக்கள் எங்கே?

விசாரணைக்குத் தயார் - எந்தத் தேதியில் சி.பி.அய்.க்கு வசதிப்படுகிறதோ அந்தத் தேதியில் நேரில் வரத் தயார் என்று மிகவும் நேர்மையாகப் பதில் தந்துள்ள இராசாவைப் பார்த்து கைநீட்டிப் பேச அத்வானி வகையறாக்களுக்குக் கிஞ்சிற்றும் தகுதி உண்டா என்று சவால் விட்டுக் கேட்கின்றோம்.

பா.ஜ.க.வைப் போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் நடந்து கொள்கிறார். இவர்மீது சாற்றப்படாத ஊழல் குற்றச்சாற்றா?

நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்குவதிலும், கால தாமதத்துக்கு ஆளாக்குவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் இவர்.

இந்த அம்மையார் ஊழலைப்பற்றிப் பேசினால், அது கடைந்தெடுத்த நகைச்சுவைப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும்.

ஊழல் வண்ணத்தால் கறைபடிந்த மனிதர்களும், நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத பேர்வழிகளும், வெறும் யூகத்தின் அடிப்படையில் இழப்பு ஏற்பட்டது என்று கூறி ஆ.இராசாமீது சேறு வாரி இறைக்கத் தகுதி உடையவர்கள்தானா?

சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் இராசாமீது, விசாரணைகளுக்கு ஒத் துழைக்காத பேர்வழிகள் விமர்சனம் செய்யக்கூடத் தகுதி அற்றவர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களாக!

----- நன்றி விடுதலை தலையங்கம்,22-12-2010

Tuesday, December 21, 2010

ராகுல் பேசியது நூற்றுக்கு நூறு சரியே!

இந்து தீவிரவாதத்தைப்பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் இராகுல்காந்தி பேசிவிட்டா ராம். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கூட்டம் பூமிக்கும் ஆகாயத்துக்குமாகத் தாவிக் குதிக்கிறது. லஷ்கர்-இ- தொய்பாவின் பயங்கரவாதத்தைவிட இந்து தீவிரவாதத்தால்தான் இந்தியாவுக்குப் பேராபத்து என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இராகுல் காந்தி.

அவர் அவ்வாறு கூறியது தவறு என்றால், காரணா காரியத்தோடு மறுப்புக் கூற வேண்டியது தானே? அதைவிட்டுவிட்டு ஆகா, எப்படி சொல்ல லாம் அப்படி? என்று ஆத்திரப்பட்டால் அவர் களுக்குப் புத்தி மட்டு; பதில் சொல்ல அவர்களிடம் நியாயமான சரக்கு ஏதுமில்லை என்று இரு கைகளையும் உயரே உயர்த்தி ஒப்புக்கொண்ட தாகத்தான் பொருள்.

இந்துத் தீவிரவாதத்தின் காரணமாகத்தானே 450 ஆண்டு கால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் ஒரு பட்டப் பகலில் இடித்துத் தரைமட்டமாக்கினர் - இல்லை என்று மறுக்க முடியுமா?

குற்றங்கள் என்றால் சாதாரணமா? கொலைக் குற்றம், கொள்ளை அடித்தல், சதி செய்தல், மதக் கலவரத்தை உண்டுபண்ணுதல் உள்ளிட்ட குற்றங் களுக்கு அடிப்படை ஆதாரம் உண்டு என்ற அடிப் படையில்தானே வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது?

ஆமாம், அயோத்தியில் பாபர் மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று பா.ஜ.க.வின் நாடாளு மன்றக் குழுத் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் மிகமிக வெளிப்படையாக - பச்சையாகவே மக் களவையில் ஒப்புக்கொண்டாரா - இல்லையா?

இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அற்ப சப்பைகளா? இந்துத்துவா கட்சிகளின் மிகப்பெரிய பெரிய தலைவர்கள் ஆயிற்றே!

எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், உமாபாரதி, வினய் கட்டியார் போன்ற முன்னணித் தலைவர்கள் ஆயிற்றே!

குஜராத்தில் என்ன நடந்தது? பா.ஜ.க. அரசு இயந்திரத்தை முற்றாகப் பயன்படுத்தி இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம் மக்கள் கொன்று குவிக்கப்படவில்லையா? நரேந்திர மோடி தலைமை யில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி இதற்குப் பொறுப்பு இல்லையா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த நபரை நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டவில்லையா? அதனைத் தாண்டியா இராகுல் காந்தி கூறி விட்டார்?

குஜராத்தில் நடைபெற்ற மனிதவேட்டையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ் பேயி என்ன சொன்னார்? எந்த முகத்தை வைத் துக்கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அதற்கான விளக்கத்தைத் தானே இராகுல் காந்தி இப்பொழுது கூறியிருக் கிறார்?

கடந்த நாடாளுமன்ற தேர்லின்போது - நேரு குடும்பத்தைச் சேர்ந்த - இன்னொரு வகையில் இராகுல் காந்திக்குத் தம்பியான வருண் காந்தி பொதுக்கூட்டத்தில் பீலிபட்டில் என்ன பேசினார்?

இது எனது கை (தனது கையை உயர்த்தியபடி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளைத் துண்டிக்கும் ஜெய் ஸ்ரீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்கள் பலகீன மானவர்கள் என்று நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன் என்று பேசினாரே (17.3.2009) இந்தப் பேச்சுக்கு என்ன தலைப்பு?

விசுவ இந்து பரிசத் என்ற இந்துத் தீவிரவாத அமைப்பு திரிசூலங்களை பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு வழங்கி, ஒரு சூலம் கிறித்தவர் களையும், இன்னொரு சூலத்தின் முனை முசுலிம் களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மையைப் பேசும் இந்துக்களைக் குத்திக் குடலைக் கிழிக்கும் என்று மிக வெளிப்படையாகப் பேசுகிறார்களே - இது இந்துத் தீவிரத்தின் வெறிபிடித்த போக்கு அல்லவா!

இராகுல் பேசியது நூற்றுக்கு நூறு சரியே!

இராகுல் பேச்சுக்குக் காரணமான இந்துத்துவா வெறியர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி, உரிய தண்டனையை அளிக்காவிட்டால் நாடு மதவெறி யின் கொடுங்காடாக மாறிவிடும் - எச்சரிக்கை!
---- விடுதலை தலையங்கம் (21-12-2010)

Saturday, December 18, 2010

கொலை செய்யாத கடவுள் உண்டா? கற்பழிக்காத கடவுள் உண்டா?

பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தா சம்பந்தம் கிடையவே கிடையாது. பக்திக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடவுள்பக்தி இருந்தால்தான் பாவம் செய்யப் பயப்படுவார்கள்.அது இல்லாவிட்டால் அவிழ்த்து விட்ட மாதிரி மக்கள் குற்றங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று சமாதானம் கூறுவதுண்டு.

ஆனால் நடைமுறை உலகம் எப்படி இருக்கிறது? அன்றாடம் ஏடுகளில் வெளிவரும் செய்திகள் என்ன?

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் எந்த முடிவுக்கு வரவேண்டும்?

குளித்தலையில் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் சுருண்டு விழுந்து கிடந்த அய்யப்ப பக்தரை, திராவிடர் கழகத் தோழர்கள், தண்ணீரை ஊற்றி, போதையைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பினர் என்ற செய்தி விடுதலையில் வெளிவந்தது நினைவில் இருக்கலாம்.

நேற்று ஒரு செய்தி பரவலாக ஏடுகளில் வெளி வந்தது. தூத்துக்குடியில் அய்யப்ப பக்தர்கள் 12பேர் அன்னதானம் வழங்கப்போவதாகக் கடைக்குக் கடை சென்று நன்கொடை திரட்டியுள்ளளனர். சாமி விஷயம் என்றால்தான் மூட மக்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்களே!

இவர்கள் நடத்தையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இவர் கள் புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதே ஊரைச் சேர்ந்த 19 பேர் அய்யப்பன் விரத உடையில் இருவர் இருவராகப் பிரிந்து ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு தங்கும் விடுதி யில் அறை எடுத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி யுள்ளனர். காவல் துறையினரின் சோதனையின்போது வசமாகச் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே பக்தி போர்வையில் இவர்கள் இறங்கி மக்களிடம் வசூலித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பக்தி விளைவிக்கும் யோக்கியதை ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக் காட்டும் தேவையாக இருக்காது. பக்தி வந்தால் ஒழுக்கம் வளரும் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் அப்பட்டமான மாய்மாலம் என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும்.

எல்லா மதங்களிலுமே பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம், தொழுகை என்று வைத்துக் கொண்டு தானிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு எளிதாகப் பரிகாரம் வைத்திருந்தால், கொள்ளை லாபம், குறைந்த முதலீடு என்ற கண்ணோட்டத்தில்தானே மக்களின் சிந்தனையும் செயல்பாடும் அமையும்.

12 வருடங்கள் செய்த பாவம் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால், அத்தருணமே போகும், புண்ணியம் கிடைக் கும் என்றால் தவறு செய்ய யார்தான் தயங்குவார்கள்?

12 வருடங்களில் எத்தனை எத்தனைக் குற்றங்களை ஒரு மனிதன் செய்திருப்பான்? அவனுக்குத் தண்டனை ஏதுமின்றி, ஒரு முழுக்கு மூலம் தப்பிவிடுவான் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அதனால்தான் உலகத் தலைவர் தந்தை பெரியார் கூறினார் - பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார். கடவுளை மற- மனிதனை நினை என்றார்.

ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் இல்லை. (கல்கி, 8.4.1958)

சங்கராச்சாரியார் சொல்லுகின்ற அந்தக் கடவுள் கள் கூட யோக்கியமாகப் படைக்கப்பட்டுள்ளனவா? அவர் எந்த மதத்துக்குத் தலைவர் என்று கருதப்படு கிறாரோ, அந்த இந்து மதத்தில் உள்ள எந்தக் கடவுளிடத்திலாவது ஒழுக்கம் உண்டா? சண்டை போடாத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா? கற்பழிக்காத கடவுள் உண்டா?

படைத்தல் கடவுள் பிரம்மா என்று சொல்லுகிறார் களே, அவன் யோக்கியதை என்ன? பெற்ற மகள் சரஸ் வதியையே பெண்டாட்டியாகக் கொண்டவன்தானே! இதற்கு மேலாகவா எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யின் யோக்கியதை என்ன? அவர் எந்தக் குற்றத்தில் சிக்கி இப்பொழுது ஜாமீனில் நடமாடுகிறார்? அவர் ஏன் சிறைக்குச் செல்ல நேர்ந்தது?

பக்தர்கள் ஒரே ஒரு நொடி இவற்றையெல்லாம் கண்முன் நிறுத்திக் கருத்தோடு சிந்தித்தால், மதமும் அது காட்டும் வழியும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா!

--- நன்றி விடுதலை தலையங்கம் (19-12-2010)
                                                                                                               



மனு சாகவில்லை! சோ ராமசாமி உருவங்களில் இருக்கிறது....

மனுதர்மத்தை மண்டைக்குமேல் தூக்கி வைத்து ஆராதனை செய்ப-வர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களா? என்று கேட்கலாம்.

இருக்கிறார்கள், நிச்சயமாக இதோ இருக்கிறார்கள் _ சோ ராமசாமி உருவங்களில் இருக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனு போன்ற இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனை இங்கே இருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர் கள்கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான் மனுஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக் கிறோம். மனுஸ்மிருதியை இகழ முனைபவர்கள், அப்படிச் செய்வதற்கு முன்னால், அதில் என்ன கூறப்பட்டி ருக்கிறது என்பதைத் தெரிந்து கொண் டால் நல்லது!

(துக்ளக் 24.11.2010 பக்கம் 13) என்று எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி.

மேல்நாட்டு அறிஞர்கள் எல்லாம் கூடிக் கலந்து பேசி மனுவின் உத்தமத் தனம்பற்றி உச்சி மோந்து விட்டார் களாம்.

அப்படியானால் நாமும் சில வெளிநாட்டு அறிஞர்களை அறிமுகப் படுத்த வேண்டாமா? அதுவும் அந்த வெளிநாட்டு அறிஞர்கள் மனுதர்ம சாஸ்திரம்பற்றி என்ன கூறினார்கள் என்பதை சோ ராமசாமியின் அபிமானத்துக்குரிய இந்து ஏடே (8.11.1992) எடுத்துக் கூறியிருக்கும் பொழுது, அதனை எடுத்துக்காட்டி னால்தானே சோவுக்குக் குளிர் ஊட்டியது போல் இருக்கும் அது இதோ:

மனு, தன்னுடைய சட்டப் புத்தகத் தில், ஒரு சிலருக்காக -_ அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும், புனிதமானவர்-களாகக் கருதப்படவும் -_ சில நியதிகளை உருவாக்கியுள்ளார். உயர்ந்த வாழ்க்கை வாழவும் அவர்களுக்குச் சில கொள்கைகளை வகுத்திருக்கிறார். இது நிறைவேற வேண்டுமென்றால், சட்டத்தின் பிரிவுகள் மறைமுகக் கட்டளைகளாகத் தானிருக்க முடியும்; ஒவ்வொரு புனிதமான பொய்யின் நோக்கமும் இதுதான்...   - பிரடெரிக் நியட்சே

மனு, தன்னுடைய நூலில் இந்தி-யாவின் சமுதாய, ஒழுக்க நெறிகளைப் புனிதமான முறையில் தொகுத்து, மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்காகவே, தந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில், இந்த மனு தர்ம நூல் ஜாதிவெறியும், ஆண் பெண் உறவு பற்றிய தவறான கருத்துகளையும் புகுத்தவே எழுதப்பட்டுள்ளது. பிற ஜாதியினருக்குக் கொடுமையான தண்டனைகளையும், குரூரமான சித்திரவதைகளையும், சமுதாய மக்களை ஒன்று சேரவிடாமல், சிலருக்கு ஏகபோக உரிமைகளையும் பலருக்கு அடிமை-களின் வாழ்க்கையையும் தந்து, எழுதி-யுள்ளார். மற்ற ஜாதிக்காரர்களை இழிவுபடுத்தியும், கண்டித்தும் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். இந்த நூலை எழுத தன் சொந்த முடிவு-களையே எடுத்துக் கொண்டுள்ளார். இந்த முடிவுகள், உலகம் படைக்கப்பட்ட போதே கடவுள்களால் தரப்பட்ட, காலத்தால் அழியாத கட்டளைகள் என்கிறார். மனுஸ்மிருதி என்ற இந்த நூல், முதன்முதலாக மனிதர்களுக்குப் புரியும் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகவும் கூறுகிறார்.

1794இல் ஆங்கில மொழியிலும், 1797-இல் ஜெர்மன் மொழியிலும், 1833-இல் பிரெஞ்சு மொழியிலும், 1859இல் போர்ச்சுக்கீசிய மொழியிலும் இந்த மனுதர்ம சாஸ்திரம் மொழிபெயர்க்கப்-பட்டது.

1886இல் ஜார்ஜ் பக்ளர் என்பவர் மனுவின் சட்டங்கள் என்ற தலைப்பில் (ஆக்ஸ்போர்டு பிரஸ்) இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மீண்டும் 1988இல் இந்த நூல் மோதி-லால் பனார்சிதாஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. மனுஸ்மிருதி முதலில் பிரம்மாவிடமிருந்து ஆரம்-பித்து அதன் சாராம்சங்கள் மனுவிடம் கூறப்பட்டதாகவும், அதை அறிந்து-கொண்ட மனு, அவற்றை முனிவர்-களிடம் கூறியதாகவும் எழுதப்பட்டுள்-ளது. மனுவில் மூளையிலிருந்து பிறந்த பத்து மக்களில் ஒருவரான பிருகு என்பவர் -_ உலக உற்பத்தி எவ்வாறு நடைபெற்றது என்பதைப்பற்றி மனுவின் விளக்கத்தை விரிவாகக் கூறுகிறார். பக்ளர் கூறுவதைப் போல, மனு முதலில் மன்வந்தராஸ் (ஏழு மனுமுனிவர்களின் காலம்) என்பது பற்றியும், யுகங்கள் (உலகத்தின் நான்கு காலங்கள் _ கிருத, திரேதா, துவாபர, கலி)யாவை என்பதைப்பற்றியும் கூறுகிறார். மேலும், யுகங்களின் மற்ற பிரிவுகளைப் பற்றியும், அடுத்தபடியாக முக்கியமான நான்கு ஜாதிகளைப்-பற்றியும் (வர்ணங்கள்), அதற்குப்பிறகு பார்ப்பனர்களின் மகாத்மியத்தைப்-பற்றியும் மனுவின் புனித சட்டமான மனுஸ்மிருதியைப்பற்றியும், தனக்கு நேரடியாகக் கூறப்பட்டதை அப்ப-டியே கூறுவதாகவும் ஒப்புவித்துவிட்டு நூலை முடிக்கிறார்.

1991இ-ல், வெண்பிடோனிகர், பிரியன் கே.ஸ்மித் ஆகியோரால் பதிப்பிக்கப்-பட்ட மொழிபெயர்ப்பில் 2685 செய்யுட்-ப-டல்கள் தரப்பட்டுள்ளன. பல ஜாதி மக்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளைப்பற்றியும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஓர்அரசன் எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும், பல ஜாதிகளைச் சேர்ந்த மக்களிடையே உள்ள ஆண்களின் _ பெண்களின் உறவு முறைகளைப்-பற்றியும், இன்னும் அழுத்தமாகக் கணவன் _ மனைவி உறவைப்பற்றியும், பிறப்பு, மரணம், கர்மா, சடங்குகள், மறுபிறவி மற்றும் இறுதி வாழ்க்கைபற்றியும் கூறியுள்ள இந்த நூலை உலக வாழ்க்கையைப்பற்றியும், உலகத்தில் பல ஜாதியினர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதுபற்றியும் பல நெறிமுறைகளைத் தருவதாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள், தங்களுடைய மேற்கத்திய கண்ணோட்டத்தில், இதற்கு இணை-யான நூல் வேறெதுவும் இல்லையென-வும், பல நூற்றாண்டுகளாக இந்நூல் அதிகார பூர்வமான அரச கட்டளை என மதிக்கப்பட்டு வந்ததாகவும், முன்னுரையில் எழுதியுள்ளனர். மனுஸ்-மிருதி மற்ற மத நூல்களைப் போலவே, பிரெடரிக் நியட்சேவின் கண்ணோட்-டத்தில் படிக்கப்பட வேண்டும்.

ஒரு விஷயம் தெளிவாகிறது; பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்-கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்ற-வாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

மேலும் குறிப்பிடுகிறார்: கற்பனை-யான பாரம்பர்யக் கதைகளையும், ஜோடிக்கப்பட்ட கட்டுக் கதைகளையும் தன் கருத்துக்கு ஆதரவாக சில விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார், இருப்பினும், அவைகளுக்கெல்லாம் ஆதாரமோ, அதிகாரபூர்வமான பதிவேடுகளோ எதுவுமில்லாமையால், வாதங்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. இந்துக்களின் மிதக்கும் நெறிமுறைகளில் மனு பல வடிவங்களில் தோன்றுகிறார். பிரம்மாவாக, அவரு-டைய மறுபிறப்பாக, மாமுனிவராக, முதல் அரசனாக, மன்னர்களின் முதல் மன்னனாக, மனித வர்க்கத்தின் முதல் தந்தையாக, அதன் சமுதாய, ஒழுக்க போதனைகளைக் கற்பித்தவராகக், காட்சியளிக்கிறார்.

வெண்டி, ஸ்மித் ஆகியோர் குறிப்பிடுவதைப்போல இந்தியாவின் பூர்வீக கால நூல்களில் நாங்கள் கண்-டதைப் போலவே இந்த மனுஸ்-மிருதியும் முனிவர்களால் (பார்ப்-பனர்கள்) இயற்றப்பட்டது என்பதை மட்டுமின்றி, இந்த மனுதர்ம சாஸ்திரம் அந்த முனிவர்களின் (பார்ப்பனர்கள்) சுயநலத்திற்காகவே எழுதப்பட்டது என்பதையும் விளக்கமுற அறிந்தோம். இந்தியாவின் பூர்வீக மக்களின் வாழ்க்கை நெறிகளுக்கும் கல்வியறி-விற்கும் தாங்களே முன்னோடிகள் என்பதைப் போலவும் சித்திரித்து, உலகத்துக்கே புத்திமதி கூறும் அள-விற்குத் தங்களை உயர்த்திக் காட்டி இந்த முனிவர்கள் (பார்ப்பனர்கள்) இந்த மனுதர்ம சாத்திரத்தை எழுதியுள்-ளனர். உண்மையான மனிதன் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப் பற்றியும் அதற்கு இந்த முனிவர்களே வழிகாட்டிகளாக விளங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தகவல்: இந்து 8.11.1992 பி. இராதாகிருஷ்ணன்

மேனாட்டு அறிஞர்களே வியந்து பாராட்டி விட்டார்களாம். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அறிஞர்கள் பொட்டில் அறைவதுபோல ஆய்வு செய்து குவித்திருக்கிறார்களே -_ இதற்கு என்ன பதில்? எடுத்துக் கூறத் தயார்-தானா? வழக்கம் போல அய்ம்பொறி-களையும் மூடிக் கொண்டு, அடுத்த பிரச்சினைக்குத் தாவும் அனுமார் வேலைதானா?

மனுநீதி பிராமணர்களுக்குக் கூடுதல் சலுகை அளிக்கவில்லை என்பதற்காக முடியைப் பிளந்து சோ திணறுகிற திணறல் இருக்கிறதே _ நல்ல நகைச்-சுவைதான்! இதோ சோ விவாதங்களை படியுங்கள் (துக்ளக் 1.12.2010)

கேள்வி: மனு ஸ்ம்ருதியின் சில அம்சங்களைப்பற்றிச் சொல்வதற்கு ஆரம்பமாக, ஒரு விஷயத்தை விளக்குங்கள். மனு ஸ்ம்ருதியில் ஒரே குற்றத்திற்கு, வெவ்வேறு வர்ணத்த-வருக்கு வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா?

சோ: உண்மைதான். மனு ஸ்ம்ருதியில் -_ ஒரு குற்றம் _ ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்த-வனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்-டிருக்கிறது.

கேள்வி: அதாவது _ பிராமணனுக்-குச் சலுகை; ஒரு குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்குக் குறைவான தண்டனை; அல்லது தண்டனையே கிடையாது. மற்ற வர்ணத்தவர் செய்தால் கடும் தண்டனை! இது என்ன நியாயம்?

சோ: நீங்கள் அவசரப்படுகிறீர்கள். வர்ணத்தைப் பொறுத்து தண்டனை மாறுபடுகிறது என்று நான் சொன்னேனே தவிர, பிராமணனுக்குக் குறைவான தண்டனை என்று சொல்லவில்லை.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? பிராமணனுக்கும் மற்றவர்களைப் போலவே தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறதா?

சோ: இல்லை. மற்றவர்களைவிட, பிராமணனுக்கு -_ ஒரே குற்றத்திற்கு அதிக தண்டனை விதிக்கப்பட்டிருக்-கிறது.

அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்/
ஷோடசைவ து வைச்யஸ்ய
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச//
ப்ராம்மணஸ்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபி சதம் பவேத்/
த்விகுணாவா சது: ஷஷ்டி:
தத்தோஷ குணவித்தி ஸ://

என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. இதன் அர்த்தம்.

குற்றம் புரிந்த சூத்ரனுக்கு (அவன் விதி முறையை அறிந்தவனாயின்), வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவன் வைச்யனாக இருந்தால், பதினாறு மடங்கு தண்டனையும்; க்ஷத்ரியனாக இருந்தால், முப்பத்திரண்டு மடங்கு தண்டனையும் விதிக்கப்பட வேண் டும். குற்றம் புரிந்தவன் பிராமணனாக இருந்தால் -_ அவன் குற்றத்தின் தன்மையை உணர்கிற நிலையில் உள்ளத்தால் _ அவனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்-தெட்டு மடங்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மையை உணர்ந்தவனாகவும், அது செய்யத் தகாத காரியம் என்பதை முழுமை-யாக அறிந்தவனாகவும், பிராமணன் இருப்பான் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவனுக்கு மற்றவர்-களை விடப் பல மடங்கு அதிகத் தண் டனையை மனு ஸ்ம்ருதி விதிக்-கிறது.

உண்மை இப்படியிருக்க, தண்-டனை விஷயத்தில், பிராமணர்-களுக்கு மனு ஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா? ஆனால், ஒரு விஷயம். பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்-பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால், அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்-டதற்கு, பிரம்மஹத்தி _ அதாவது பிராமணனைக் கொலை செய்வது _ கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்வி: அப்படி என்றால், மற்ற தண்டனைகளில் பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை என்றாலும் _ மரண தண்டனை என்று வருகிற-போது, அவனுக்கு ஒரு சலுகை இருக்கிறதே?

சோ: உண்மைதான். ஆனால், யாருக்கு இந்தச் சலுகை? பிராம ணனுக்கு. பிராமணன் என்றால் _ பிராமண குலத்தில் பிறந்த அனைவரும் அல்ல. இப்படி நான் சொல்வதற்குக் காரணமும் மனு ஸ்ம்ருதிதான்.

பிராமணனுக்குப் பல கட்டுப்-பாடுகளை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது. அவற்றிலிருந்து தவறுகிறவனை பிராமணனாக மனு ஸ்ம்ருதி ஏற்க-வில்லை.

இப்போது, அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில உரிமை-களை அளிக்கிறது. ஆனால், யார் இந்தியக் குடிமகன்? அதையும் சட்டமே விளக்குகிறது. இந்தியாவில் குடியிருப்பதால், ஒருவர், நானும் குடிமகன்தான் என்று கூறிக் கொண்டு, அந்த உரிமைகளைக் கோர முடியாது.

அதேபோல், பிராமணன் யார் என்பதை மனு ஸ்ம்ருதி விளக்குகிறது. அந்த இலக்கணப்படி வாழாதவன், நானும் பிராமணன்தான் என்று கூறிக் கொண்டு, மரண தண்டனை-யிலிருந்து விலக்குப் பெற முடியாது. (துக்ளக் 1.12.2010)

இதில் நெளிந்தாடும் முரண்பாடு-களைக் கவனிக்க வேண்டும். உண்மை-தான். மனுஸ்ம்ருதியில் ஒரு குற்றம் _ ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டு விட்டு அதற்கு முரணாக மனு நீதியில் கொலை செய்யும்
பிராமணனுக்குத்தான் அதிகத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகக் கதையைத் தூக்கிக் கொண்டு ஆடுகிறார். ஒன்று, மனு நீதி முரண்பாட்டின் மொத்தக் கூடை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லையெனின், இவர் புரிந்து கொள்-வதில் தடுமாறுகிறவர் என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனுஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா! ஆனால் ஒரு விஷயம், பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, பிரம்மஹத்தி அதாவது பிராமணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று நழுவுகிறார் சோ.

பிராமணனுக்கு மரண தண்டனை-யிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதற்குப் பிரம்மஹத்தி _ அதாவது பிராம-ணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று ஓடித் தப்பிக்கப் பார்க்கிறார்.

அது என்ன நம்பிக்கை? அந்த நம்பிக்கை எப்படி வந்தது? பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பார்ப் பனர்களின் சாஸ்திரத்திலிருந்து வந்ததுதானே? இந்த இடத்தைத் தம் சாமர்த்தியத்தால் காப்பாற்ற முடியவில்லை என்கிறபோது நம்பிக்கை என்னும் முக்காடுபோட்டு நழுவும் நாணயமற்ற தன்மையைத் தமிழர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

திருட்டுக் குற்றத்தைச் செய்கிற பிராமணனுக்குச் சூத்திரர்களைவிட அதிக தண்டனை அளிக்கப்படுகிறதே -என்பதைப் பிடித்துக்கொண்டு வெகு காலமாகத் தப்பிக்கப் பார்ப்பது இவரது குணம்.

வெறுக்கத் தக்கதா பிராமணீயம்? எனும் தொடரில் இவர் எழுதியதுண்டு. அதற்குப் பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் உண்மை இதழில் எழுதி _ பின்னர் வெறுக்கத்தக்கதே பிராமணீயம் எனும் நூலாக வெளி வந்துள்ளது. (அக்டோபர் 2001)

அந்தப் பதிலை மீண்டும் நினைவூட்டுவோம்:

அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையைவிட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்திரியனுக்கு முப்பத்-திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்து நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பிராமணனுக்கு சலுகையை அளிக்கிற மனுநீதிதான் மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது என்று கூறி மனு தர்ம சாத்திரம் பிராமணர்களுக்குத்தான் அதிக சுமையைக் கொடுத்திருக்கிறது என்று சாதிக்க முயலுகிறார்.

இதில் எவ்வளவு பெரிய சாமர்த்தியம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். மனிதர்கள் யார் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்று கூறுவதுதான் சமதர்ம நோக்கு. இந்து மதம் கூறும் _ மனுதர்மம் வலியுறுத்தும் வர்ண தர்மத்தில்தான் கடுமையான ஏற்ற - _ தாழ்வுகள் உண்டே!

பிராமணர்களை உயர்வாக சமூக அமைப்பில் வைத்திருக்கிற காரணத்-தால்தான் _ மிக உயர்ந்த கவுரவம் அவனுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதால்தான் அவன் தவறே செய்யக் கூடாது என்கிற எதிர்-பார்ப்பும் இருக்கிறது; சூத்திரனா, அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது _ அவனுக்கு அதிக உரிமை அளிக்கப்பட்டதாகப் பொருளாகுமா? அவனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தான் இதற்குப் பொருள்.

பொன்னைப் பூட்டி வைப்ப-தற்கும், துருப்பிடித்த பழைய இரும்பை வாசலில் தூக்கி எறிந்-திருப்பதற்கும் உள்ள வேறுபாடு தான் இதிலும்.

பொன்னுக்கு உரிமை இல்லை _ அது காற்றுப் புகாத பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விட்டது; இந்த இரும்பை எடுத்துக் கொள்-ளுங்கள், எவ்வளவு காற்றோட்டமாக வெளியில் கிடக்கிறது என்று ஒருவன் சாமர்த்தியமாகப் பேசினால் எதுவோ _ அதுவேதான் சோ சொல்லும் சொல் ஜாலமும்!

இது ஒன்றும் சோவின் மூளையில் உதித்த பாணி இல்லை _ இவருக்கு வழிகாட்டி _ இவர்களின் குருநாதர் காஞ்சி காமகோடிதான்.

அவர் கூறுவதையும் கொஞ்சம் கேட்போமே!

இப்பொழுது ஏற்பட்டிருக்கிறபடி ஒரு பெரிய அபிப்பிராயம் என்ன-வென்றால் சாஸ்த்திரோத்தமான வர்ணாசிரம தர்மத்தில், பிராம-ணனுக்குத்தான் சௌகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்கிற எண்ணம், இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிராமணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானதல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஷ்-டானங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரி செய்ய பிராம்மணனுக்கு ரைட் ஏது?

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியாரின் தெய் வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 1013-_1014)

வஞ்சப் புகழ்ச்சி என்பார்களே _ அதற்கு எடுத்துக்காட்டுதான் இது.

பார்ப்பனரல்லாதாருக்கு ஜில்-லென்று பழையது சாப்பிடுகிற உரிமை இருக்கிறது _ அது பிராம்-மணர்களுக்குக் கிடையாதாம்!

ஏன் அந்த நிலை? அந்த விரத அனுஷ்டானங்கள் பார்ப்பான் அல்லாதாருக்கு ஏன் மறுக்கப்-பட்டது? அவன் பிறவியில் தாழ்ந்-தவன் _ விபச்சாரி மகன் _ நாலாஞ்-சாதி என்பதால்தானே? இந்த உணர்ச்சியை மறைப்பதற்கு சங்கராச்சாரி பார்ப்பனரிலிருந்து சோ பார்ப்பான்வரை பேசும் _ எழுதும் வஞ்சக வார்த்தைகள்தான் இந்த ஜில் ஜில் பழைய சோறு கதைகள். அறிந்து திருட்டுச் செய்கிற பிராமணனுக்கு நூற்று இருபத்-தெட்டு மடங்கு தண்டனை என்பதெல்லாம் வெறும் பகட்டுச் சொற்கள்தான் _ நடைமுறை சாத்தியம் இல்லாதது-தான். உண்மையான நடைமுறையை இதே மனுதர்மம் வேறு ஒரு இடத்தில் தெளிவுபடுத்தி விட்டது.

பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 379)

பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அய லூருக்கு அனுப்ப வேண்டும். (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 380)

இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைப்பதில் சோ கெட்டிக்காரராக இருக்கிறார்!

மனுதர்மத்தையும் பார்ப்பன சாத்திரங்களையும், இதிகாசங்-களையும் வேத, உபநிசத்துகளையும் உயர்த்திப் பிடிக்க முயலும் சோ _ கூட்டம் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பதில் கூறிவிட்டு, அடுத்த இடத்துக்கு நகரட்டும்!

மனுதர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சுலோகம்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி-யாள் மகன், ஒருவனால் கொடுக்கப்-பட்டவன், குல வழியாக தொன்று-தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்-படுவர். சுலோகம் 417 என்ன கூறுகிறது?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழி-லாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.


மனுர்வையத் கிஞ்சிதவதக்

தக் பேஷஜம் (மனு எதைச் சொன்னாரோ அது மருந்தேயாம்)

இந்த மா மருந்தான மனுவின் வாசகங்களுக்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு எதை வேண்டுமானாலும் கிறுக் கட்டும்!

சூத்திரர்களை ஏழு வகையாக பிரித்து அவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறதே மனுதர்மம். அதில் கூறப்படும் ஒவ்-வொன்றும் எவ்வளவு இழிவுபடுத்தக் கூடியது _ உச்சகட்டமாக விபசாரி மகன் என்கிற வரை நீண்டு போய் உள்ளதே என்று எழுதினார் தமிழர் தலைவர்.

எவ்வளவு துணிவும், பார்ப்பன ஆணவமும் இருந்தால் இத்தகைய ஒரு மனு தர்மத்தை இந்த 2010 ஆண்டிலும் தூக்கிப் பிடித்துக் காட்ட முயற்சி செய்வார் திருவாளர் சோ?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சுயமரியாதை இயக்கம் சொன்னதுகூட மிகவும் சொற்பமான பரிகாரம்தான் என்று எண்ணத் தோன்றவில்லையா?

ஏற்கெனவே சொல்லப்பட்ட அதே பதில்தான் இப்பொழுதும் -_ ஆனாலும் சோவிடமிருந்துதான் உருப்படியான பதில் இல்லை.

குறிப்பு: மனுநீதி சாஸ்திரத்தைப் படித்து விட்டுப் பேசட்டும் என்கிறார் திருவாளர் சோ. ஆம் படித்து விட்டுத்-தான் பேசுகிறோம். கேட்ட கேள்வி-களுக்குப் பதில் தேவை!

நன்றி  ஞாயிறு மலர், 18-12-2010


பேராசைக்காரனடா பார்ப்பான் என்று பார்ப்பன பாரதியே பொறுக்க முடியாமல்தானே பாடினார்?

2ஜி அலைக்கற்றை தொடர்பாக விசாரணை தங்கு தடையற்ற முறையில் தமிழ்நாட்டில் நடைபெற தி.மு.க. ஆட்சியை அகற்றி, ஆளுநரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறும் பூணூல் கழுகுகளை எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2ஜி (ஸ்பெக்ட்ரம்) அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம் - இதற்குமுன் எப்போதும் இல்லாத முன் மாதிரி - இல்லா முறையில், அதுவே வழக்கினைக் கண் காணிக்கும் அமைப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டு (Monitering the CBI to investigate the case) ஆணைகளை - உத்தரவிடுகின்றது! அதன் ஆணைப்படி,

ஐ (1) 2001-லிருந்தே - அதாவது வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சிக்கால முதலே விசாரணை தொடங்க வேண்டும்.

(2) பிப்ரவரி 10-க்குள் விசாரணை - ஆய்வை முடித்து அறிக்கை தரவேண்டும்.

(3) ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக வருமான வரித்துறையினர் தங்களது புலனாய்வு அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும். அவர்கள் அதனை சி.பி.அய்.யிடம் அளிக்கவேண்டும் என்றெல்லாம் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு விசாரணைகள்
ஐஐ இஃதன்றி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் சிவராஜ் பாட்டீல் தனி நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, 2001 முதலே இப்பிரச்சினையை ஆய்வு செய்து 4 வாரங்களில் அதன் விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடாகி, அதன் பணி தொடங்கிவிட்டது.

ஐஐஐ மக்களவையின் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (PAC) எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தலைமையில் தனது விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

- இவ்வளவுக்கும் பிறகும்கூட பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள், அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் ஜே.பி.சி. (J.P.C) தான் விசாரிக்கவேண்டும் என்ற கிளிப்பிள்ளை பாடத்தையே திரும்பத் திரும்பக் கூறி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கி - நடத்தவிடாமல் செய்து, மக்கள் வரிப் பணத்தை சுமார் 146 கோடி ரூபாய் கள் நட்டமேற்படுத்தி விட்டனர். ஸ்பெக்ட்ரம் தொகை போல வெறும் கற்பனைத் தொகை அல்ல இது. நடை முறையில் ஏற்பட்ட நட்டம்; காலமும், பணமும், பொது ஒழுக் கமும் விரயம் ஆக்கப்பட்ட வேதனைக் காட்சிகளாகும்!

ஜே.பி.சி.யில் உச்சநீதிமன்றத்தைவிட அதிகமாக சாதித்துவிட முடியுமா?
ஏன் இந்தப் பிடிவாதம் தெரியுமா?

பின் ஏன் இந்தப் பிடிவாதம் என்றால், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, கேரளம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.

அதற்காகவே, இந்தத் திடீர் ஆவேஷம்; தி.மு.க.வை எப்படியும் ஆட்சி பீடம் ஏறவிடக்கூடாது என்பதில் மும்முரமாக கோயபெல்ஸ் பிரச்சாரம் செய்துவரும் வாரம் இருமுறை வெளிவரும் பார்ப்பன ஏடு ஒன்றில், பிணந்தேடி அலையும் பூணூல் கழுகுகள் தங்களது இனந்தேடி ஒரு பேராசைத் திட்டத்தை வெளியிட்டு தங்களை பச்சையாக அடையாளம் காட்டிக் கொண்டுள்ளன!

தமிழர்கள் - இன உணர்வாளர்கள் மட்டுமல்ல, பொது நிலையாளர்களும்கூட; பார்ப்பன ஏடுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சைப் புளுகுணித்தனத் தைப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது இதன்மூலம்!

...இதுவரை நடந்த ரெய்டுகளில் யாரையும் கைது செய்யவில் லையே.... என்று கேட் டோம்.

ஆவணங்கள்தான் இந்த விவகாரத்தின் ஹீரோ; வி.அய்.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் எங்கே ஓடிப் போகப் போகிறார்கள் (முன்பு சு.சாமி நெருக்கடி காலத்தில் நாட்டை விட்டே ரகசியமாய் ஓடிப் போனதை மக்கள் மறந்தா விடுவார்கள்?).... என்றார்கள்.

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைக்கவேண்டுமாம்
டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு விஷயம் பர பரப்பாய்ப் பேசப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆளுங் கட்சியாக இருக்கும் நிலையில்... ஸ்பெக்ட்ரம் பற்றிய விசாரணையை தடங்கல் இல்லாமல் நடத்த முடியுமா?

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஆளுநர் வசம் ஒப்படைத்தால் மட்டுமே விசாரணையைத் தொய்வில்லாமல் நடத்த முடியும் என்று சி.பி.அய். தரப்பு தங்கள் மேலதி காரிகளிடம் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறதாம்!

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? அக்கிரகாரக் கழுகுகளின் கற்பனை வளம் - கப்சா விடும் திறமையைப் பார்த்தீர்களா?

சி.பி.அய். அதிகாரிகளை உச்சநீதிமன்றம்தான் இப்பிரச்சினையில் கண்காணித்து உத்தரவு போடுகிறது என்பது உலகறிந்த உண்மை.

இந்தப் பார்ப்பன ஊடகத்தினர் சி.பி.அய்.க்கு உத்தரவு போடும் அதிகாரத்தை எவ்வளவு நாளாக எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. எந்த அதிகாரி அவர் என்பதை பகிரங்கப்படுத்துவார்களா?

சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னர் இப்படி ஒரு வதந்தீயை கிளப்பிவிடுவது இந்த கோயபெல்சின் குருநாதர்களின் வேலை என்றாலே, அவாளுக்குத்தான் எவ்வளவு பேராசை!

பேராசைக்காரனடா பார்ப்பான் என்று பார்ப்பன பாரதியே பொறுக்க முடியாமல்தானே பாடினார்?
மீண்டும்
தி.மு.க. ஆட்சியே!

அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் எதனை செய்ய முடியும்? அட புத்தி கெட்ட பூணூல் மண்டூகங்களே, போதும் உங்கள் அறியாமைக்கு வெளிச்சம்! அப்படி உங்கள் ஆசை நிறைவேறினால், தி.மு.க.வின் மிகப்பெரிய வெற்றிக்கு அதைவிட எளிதான வழி வேறு கிட்டவே கிட்டாது! தி.மு.க. 1971 இல் வென்ற இடங்களைவிட அதிக இடங்களில் வந்து, உங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும்!



தலைவர்,
                                                                                                                                   திராவிடர் கழகம்
நன்றி விடுதலை,18-12-2010

Thursday, December 16, 2010

ஆ.இராசா செய்த குற்றமென்ன?

பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னாள் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, அவர்கள் உலகிலேயே மிகக் குறைந்த தொலைபேசிக் கட்டணம் உள்ள நாடு இந்தியா என்றும், தொலை தொடர்புத் துறையில் ஒரு புரட்சியே ஏற்படுத்தப்பட் டுள்ளது என்றும் பெருமையுடன் தெரி விக்கின்றார்.

தொலை தொடர்பு துறையில் மாதந் தோறும் 2 கோடி புதிய இணைப்புகள் கொடுத்திடவும், 2009 ஆம் ஆண்டில் 39 சதவிகிதமாக இருந்த தொலை தொடர் பின் அடர்த்தியை 53 சதவிகிதமாக மாற்றிடவும், 2012 இல் எட்ட வேண்டிய இலக்கான 60 கோடி தொலைபேசி இணைப்புகளை 2010 மார்ச்சுக்குள் முடித் திட்டதையும், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மிக குறைந்த கட்டணத் தில் தொலைபேசியை உபயோகப்படுத்த வைத்ததையும், 3ஜி சேவையை மூடி மறைத்து வைத்து இத்துணை ஆண்டுகள் பயன்படாமல் வைத்திருந்ததைக் கண்டு பிடித்து மக்களின் சேவைக்கு பயன்படுத்த வைத்ததையும் பாராட்டாமல் அவர் மீது வசைபாடுகின்றனர்.

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி!

தொலை தொடர்பு தகவல் தொழில் நுட்ப சேவைகள் இன்று மக்களுக்கு எளிய முறையில் கிடைத்திடவும் கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் பலவகையில் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு தகவல் தொழில் நுட்பமும், தொலைத் தொடர்புதுறையில் புரட்சியும் முக்கிய காரணமாகும். இன்று உலகிலேயே இரண் டாவது இடத்தில் இந்தியாவின் தொலை தொடர்பு நெட்வொர்க் உள்ளதென்றால் அதன் பெருமையை உலகுக்கு நிலை நாட்டிய பெயருக்குச் சொந்தக்காரர் முதலமைச்சர் கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசாவே ஆவார்.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் 22 ஆட்சி மொழிகளில் பல்வேறு இனங்கள் அடிப் படை கட்டமைப்பு வசதிகளால் வித்தி யாசம், கல்வி, அரசு சேவைகள் பெறுதல், தகவல்களை உடனுக்குடன் பெறுதல் என எல்லாவற்றிலுமே ஒரு பகுதிக்கும், இன் னொரு பகுதிக்கும் பெருத்த வித்தியா சங்கள் இருக்கின்றன. அவசரமான முக்கியமான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதிலும், பொது சேவைகளை விரைந்து நிறைவேற்று வதிலும், அவை மக்களை சென்றடையச் செய்வதிலும் தற்போது உள்ள நடை முறைகளை விட, தகவல் தொழில்நுட்பத் தின் உதவியுடன் செயல்படுத்துவது மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும் இருக்கும் என்றும் மின்னணு சேவை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாத நிலையில் இருக்கும் அல்லது குறைவாகப் பெறும் மக்களுக்கு இவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதற்கேற்ற திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தினார்.

இ-நிருவாகப் பணி

அரசுப் பணிகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தைப் புகுத்தியதில் தேசிய தகவல் மய்யத்தின் பங்கு மகத்தானது. நாடு முழுவதும் இந்த அமைப்பு ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்பு வசதிகள் மூலமாகவும், மற்ற நவீன வசதிகள் மூலமாகவும் இ-நிருவாகப் பணிகளும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவது விரைவாக முடிக்க முயற்சி எடுக்கப் பட்டது.

இணைய தள பயன்பாடு அதிகரித் துள்ளதால், மக்களுக்குத் தகவல்கள் சென்றடைவதும், சேவைகளை உடனுக் குடன் வழங்குவதும் இ- நிருவாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆ.இராசா அவர்கள் செய்த குற்றமென்ன?

தொழில் நுட்பத்துறை:

தேசிய அறிவுசார் இணையம் வழி யாக ஆப்டிகல் கேபிள் இணைப்பில் எல்லா பல்கலைக்கழகங்கள், நூலகங் கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய நிறுவனங்களை ஒருங்கிணைத்தது குற்றமா?

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 77,338 கிராமங்களில் நிலப்பதிவேடு கள் மற்றும் அரசு ஆவணங்களைப் பெறு தல் போன்ற 70-க்கு மேற்பட்ட சேவை களைக் கொண்டு வந்தது குற்றமா?

22 இந்திய மொழிகளுக்கான மென் பொருள் மற்றும் கணினி எழுத்துருக்கள் கொண்டு வந்தது குற்றமா?
தகவல் தொழில் நுட்பத்துறை ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வந்தது குற்றமா?

அஞ்சல் துறை:

தனியார் கொரியர்கள் வந்துவிட்ட பிறகு அஞ்சல் துறை நலிவடைந்துவிடும் என்றும், அது இழுத்து மூட வேண் டியதுதான் என்றும் இருந்த நிலையை மாற்றிட, நலிவடைந்த அஞ்சல் துறையில் பணியாற்றிடும் லட்சக்கணக்கான ஊழியர்களை காப்பாற்றிட அஞ்சல் துறையை நவீனமயமாக்கியது குற்றமா?

பெண்களையும், நலிவுற்ற பிரிவின ரையும் கருத்தில் கொண்டு இந்தியா வின் மிகப்பெரிய குறுங்காப்பீட்டுத் திட்டம் (60 லட்சம் காப்பீடுகள்) கொண்டு வந்தது குற்றமா?

3000-க்கு மேற்பட்ட அஞ்சலகங் களில் கணினி மயமாக்கவும், 8000 அஞ்சலகங்களில் மின்விசைப் பணப்பரி மாற்றம் வசதி கொண்டு வந்தது குற்றமா?

வெளிநாட்டிற்கு இணையம் மூலமாக பணம் செலுத்தும் வசதிகள் கொண்டு வந்தது குற்றமா?

இப்படி முதல்வர் கலைஞர் அவர்கள் சொல்வதை செய்வோம்- செய்வதை சொல்வோம்-சொல்லாததையும் செய்வோம் என்று செய்து வருவது போல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கலைஞர் அவர்களின் வழியைப் பின் பற்றி செய்து வருகின்றார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் சீரிய தலைமையில் தொலை தொடர்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருந்து தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பணியாற்றி வந்தார்கள்.

தொலைபேசி துறையைக் காப்பாற்றியவர்:

கிராமப் புறங்களில் பி.எஸ்.என்.எல். ரூரல் லைன் வைத்துக் கொண்டு இருப்ப தால் நிருவாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகின்றது. பி.எஸ்.என்.எல். சம்பந் தப்பட்ட கேபிள்களை வேறு தனியார் நிறுவனங்கள் (ஏர்டெல், வோடோ போன்) பயன்படுத்துகின்ற கட்ட ணத்தை பி.எஸ்.என்.எல்-லுக்குச் செலுத்த வேண்டும். இதன் மூலம் 2000 கோடி வருமானம் ஆண்டுக்கு வந்து கொண் டிருந்தது. இது 2003ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை நிவர்த்தி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் இராசா பொறுப் பேற்ற பிறகு நிதி அமைச்சர் அவர் களிடம் வாதாடி கிராமப்புற சேவைகள் நிதியில் இருந்து ரூ.2000 கோடியை வாங்கிக் கொடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் காப்பாற்றினார்கள். டெலிபோன் ஈட்டுகின்ற நிறுவனங் களிலிருந்து வருகின்ற லாபத்தில் அரசாங்கத்திற்கு 3,4 சதவிகிதம் கட்ட வேண்டும். அதைப் போல கிராமப்புற லேண்ட் லைனுக்குச் சேர்த்து கட்ட வேண்டும். ரெவின்யூ ஷேர் கொடுக்கக் கூடாது என்று யாரும் கேட்காமலேயே அமைச்சர் அவர்கள் பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் அனைத்திற்கும் ஏ.ஜி.ஆர். இனிமேல் கிடையாது என்று உத்தரவு போட்டு பி.எஸ்.என்.எல்-அய் காப்பாற்றினார்கள்.

இன்று நவீனமயமாக்கப்பட்ட தொலைத் தொடர்பு துறையின் மூலம் டி டெய்ல்டு பில், டைனமிக் லாக்கிங், கால் வெயிட்டிங், காலர் அய்டி, ஒரே செல் மூலம் பலரிடம் தொடர்பு கொள்ள கான்பிரன்ஸ் வசதி, கால் டிரான்ஸ்பர் வசதி, அதி நவீன வயர்லெஸ் கருவி, கம்பியில்லா தொலைபேசி (வில்), மிக குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு டன் பேச வசதி, நவீன பிராட்பேண்ட் வசதி, 3ஜி மூலம் நவீனமாக்கப்பட்ட இன்டர்நெட் வசதி, தொலைபேசியில் டி.வி. பார்க்க வசதி, தொலைபேசி பெற பதிவு கட்டணம் இலவசம், தனியார் துறைகளுடன் போட்டி போட்டு இன்று பி.எஸ்.என்.எல்- லின் தரம் உயர்த்த முயற்சி இப்படி பல வகையிலும் பி.எஸ். என்.எல்-அய் உலகத்தில் இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வந்த பெருமை முன்னாள் அமைச்சர் இராசாவையே சாரும்.

3ஜி ஏலம் மூலம் வருமானம்

3ஜி ஏலம் மூலமாக ரூ.67,719 கோடியை மத்திய அரசிடம் செல்போன் நிருவாகம் ஒப்படைத்தது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் 3ஜி சேவையை தொடங்கி உள்ளன.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் தனது அறிக்கையில் ஏப்ரல் மாதம் முடிவில் 2.70 சதவிகித வளர்ச்சியாக 63.80 கோடி தொலைபேசி வாடிக்கையாளர் களையும் இதே போல் ஏப்ரல் மாத முடிவில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ., உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் சந்தா தாரர் எண்ணிக்கை 2.89 சதவிகிதம் உயர்ந்து 60.12 கோடியாகவும், ஏப்ரல் மாத முடிவில் பிராட்பேண்ட் சந்தாதா ரர்கள் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

தொலை தொடர்பு அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல் போன் சேவைக்கான மூன்றாம் தலை முறையினருக்கான (3ஜி) அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67719 கோடி வருவாய் கிடைத் துள்ளது. இந்நிலையில் பி.டபில்.யூ.ஏ என்று அழைக்கப்படும் ஒயர்இணைப்பு இல்லாத அகண்ட அலைவரிசை ஒதுக் கீட்டிற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடைபெற்ற ஏலம் வாயி லாக ரூ.28,566 கோடி வருவாய் வந்துள்ளது. ஆக மொத்த வருமானம் ரூபாய் ஒரு லட்சம் கோடியாகும். நாடு முழுவதும் உள்ள 17 ஆயிரத்து 300 கிராமங்களில் தொலைபேசி சேவை அளிக்கப்பட்டுள்ளது.

2007 இல் அமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்ட போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 7.5 லட்சம் தொலைபேசி இணைப்புகள் புதியதாக பெறப்பட்டதை மாற்றி மாதம் 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதம் 2 கோடி என்று இலக்கு வைத்து 2012 மார்ச் மாதத்திற்குள் 60 கோடி என்ற இலக்கை 2010 மார்ச்சிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

நாளுக்கு நாள் நுகர் பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்று தொலைபேசிக் கட்டணம் குறைந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும் இன்று எஸ்.டி.டி. கட்டணத்தை 25 காசுக்கு கொண்டு வருவதாக அமைச்சர் 2007 இல் வாக்குறுதி கொடுத்து இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உள்ளூர் கட்டணத்தை 10 பைசா அள வுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவ் வாறு தொலை தொடர்புத்துறையை நவீன மயமாய் ஆக்கியதுடன் வருவாய் ஈட்டு கின்ற வகையில் செயல்படுத்திய முன் னாள் மத்திய அமைச்சர் ஆஇ.ராசா அவர்கள் மீது வேண்டுமென்றே காழ்ப் புணர்ச்சியால் வழக்கு தொடுத்துள்ளார் கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என்றும், நான் திறந்த புத்தகம் என்றும், என் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாற்றுக்கு எந்த மன்றத்தி லும் பதில் தர தயாராக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மனம் திறந்த பேட்டி

2001இல் நிர்ணயிக்கப்பட்ட அதே ரூ. 1650 கோடி உரிமைக் கட்டணத்துக்கே 2008 இல் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை ஒதுக்கீடு செய்வது நியாயமா? என்ற கேள்விக்கு அவரது பதில்:

உரிமைக் கட்டணமாக 1650 கோடியை 2001இல் நிர்ணயம் செய்திருந்தது டிராய் கமிட்டி, 2001-க்கு பிறகு எந்தவித பரிந்துரைகளையும் டிராய் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் சரிசெய்து கொள்ளப்பட்ட பங்கை தொடர்ந்து அது உயர்த்திக் கொண்டே இருந்தது. அதனால் ஆண்டு தோறும் ரூ.15000 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது:

இந்த கேள்விக்கு பதில் என்னவென் றால் 1999இல் அமைச்சரவை எடுத்த முடிவின் படி, ஸ்பெக்ட்ரம் அலைவரி சையை ஏலம் விடுவதில்லை என்றும், வருவாய் பங்கீட்டு முறையை பின்பற்றுவது என்றும் எடுத்த முடிவே காரணமாகும். இன்று இதை குறை கூறும் பாரதீய ஜனதா ஆட்சியில் அமைச்சராக இருந்த பிரமோத்மகாஜன், அருண்ஜெட்லி ஆகியோர் காலத்தில் பின்பற்றிய முறையே தான் இப்போதும் பின்பற்றப்பட்டது. இதை பாரதீய ஜனதா கட்சி மறுக்க முடியுமா?

3ஆவது கேள்வி

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடுத்தது குறித்தானது:

2007ஆம் ஆண்டு முதல் டிராய் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படை யிலேயே இயங்கி வந்ததற்கு மாற்றாக ஏதும் செய்யவில்லை. 1999ஆம் ஆண்டு முதல் ஏலம் இன்றி அளித்திருப்பதால் ஒரு சமமான ஆடுதளத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடுவது நியாயமற்றது என்ற டிராயின் பரிந்துரைகளை 2007இல் ஏற்றுக் கொண்டது.

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கவில்லை என்றும், தொலைபேசி கோபுரங்கள் கட்டுவது போன்ற கட்டுமான பணிகளுக்கென நிதியைப் பெறுவதற்காக நிலை வைப்புத் தொகையில் இருந்த தங்களின் பங்குகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் செயல்பாடுகள் அவர்களின் வணிகத்தைப் பெருக்குவதற்காக சட்ட வரையறைக்குட்பட்ட செயல்கள்தான் என்ற நிதி அமைச்சகத்தின் கருத்தை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொழிலாளர்கள் வாழ்வுக்கு வழிவகுத்த கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசா அவர்கள் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் ஊதிய உயர்வு வருவதற்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.

டான்சி ஊழல், சொத்துக்குவிப்பு வழக்கு, போன்ற வழக்கை சந்திக்க மறுத்து திரைமறைவில் முதலமைச்சர் ஆனவர், பார்ப்பனியம் தலைதூக்கி ஆடுகின்றவகையில் சட்டமன்றத்தில் நான் ஒரு பாப்பாத்தி என்று ஓங்காரக் குரல் கொடுத்தவர், கரசேவைக்கு இங்கிருந்து செங்கல்லை அனுப்பியவர், உடல் முழுவதும் தங்கத்தால் தன்னை அலங்காரப்படுத்தி பவனி வந்த அம்மையார், மக்களை சந்திக்க மறுத்து, கழகத் தொண்டர்களை மதிக்காது கொடநாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையார் இன்று யாரைப் பார்த்துக் கேட்கிறார்? ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா இன்று தொலை தொடர்புத் துறையை நவீனமாக்கி இன்று உலகநாடுகளுடன் போட்டி போட்டு தரம் உயர்த்தி வந்த முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார். நாட்டை ஆண்டபோது ப.ஜ.அரசு செய்த செயலை தொடர்ந்து செய்யும் அமைச்சர் இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார்கள். அவர்கள் ஸ்பெக்ட்ரமிற்குப் போட்ட கொள்கையைத்தானே அமைச்சர் கடைப்பிடித்துள்ளார். இதில் யார் ஊழல் பேர்வழி? மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்படுத்தப் பட்ட சமுதாயத்திலிருந்து இன்று தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும், கலைஞர் அவர்களாலும், தமிழர் தலைவர் அவர்களா லும் உயர்நிலைக்கு கொண்டு வரப்பட்ட சமுதாயத்தி லிருந்து உயர்வு பெற்ற ஆ.இராசா இன்று கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகவும், கலைஞர் அவர்களால் தனது இல்லத்தை மருத்துவமனைக்கு ஒப்படைத்து நிருவாகித்து வரும் அறங்காவலர் குழுவில் ஒருவராக நியமனம் செய்து பணியாற்றி வரும், மத்திய அரசில் ஒரு மதிப்பு மிக்க அமைச்சராக செயல்பட்ட ஆ.இராசா அவர்களது செயல்பாடுகளை பொறுக்காத சில ஆதிக்க சக்திகள் அவர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்மீது சுடுகணைகளை விடுகின்றது. அவர்மீது வீசுகின்ற சுடுகணைகளை சுட்டெரிப்போம்.

தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன் என்றும் ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அருமைத்தம்பி இராசா என்று கலைஞர் அவர்களும், மாண்புமிகுவை பறிக்கலாம் எவரும்; மானமிகுவை எவராலும் பறிக்கமுடியாது என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் மானமிகு. ஆ.இராசா அவர்களைப் பாராட்டி உள்ளனர். ஆரியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ஆரிய பாப்பாத்தி கொக்கரிக்கின்றார். தமிழர்களே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மண்டல் கமிஷனை அமல்படுத்தியதற்காக அன்று பிரதமராக இருந்த மனிதருள் மாணிக்கம் வி.பி.சிங் அவர்களை பலி கொடுத்தோம். இன்று உலகமே வியக்கும் வண்ணம், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மக்களையே நினைத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் கலைஞர்ஆட்சிக்குக் கேடு நினைக்கும் சில மதி கெட்டவர்கள் போடும் கூச்சலுக்கு பயந்து இன்று ஆ.இராசாவை பலி கொடுத்துள்ளோம். கூட்டணி தர்மத்தை எப்பொழுதும் காப்பாற்றிவரும் கலைஞர் இன்று ஆ.இராசாவை பதவி விலக வைத்து சரித்திரம் படைத்துள்ளார். சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த கழகம் இதைக்கண்டு சோர்வடைந்து விடாது. தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அறைகூவல் விட்டது போல் தி.மு.கவின் பிரச்சார படை கிளம்பட்டும். பொய்யர்களின் முகத்திரையைக் கிழித்திடட்டும். கலைஞர் அவர்களின் வழியிலும், தளபதி அவர்களின் வழிகாட்டுதலுடனும் புதிய சமுதாயத்தை வென்றெடுப்போம்.

----------- விடுதலை (16-12-2010)

Monday, December 13, 2010

கண்ணதாசனுக்கு கண்ணதாசன் பதில்!

மதம் மக்களுக்கு போதைதரும் அபினைப் போன்றது என்றான் மார்க்ஸ்.

மனிதனுக்கு அந்தப் போதை வந்தபோது புத்தி யில்லையே என்பதை நினைக்கும்போது நமக்கு வேடிக்கை-யாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

மதம் பிடித்த கண்ணதாசனுக்கு மதம் பிடிக்காத கண்ணதாசனின் பதில்களைக் கீழே தருகிறோம். படித்து ரசியுங்கள்.

1. பற்றற்றான் பற்றினையே பற்றிய அந்தத் துறவிகளின் எண்ணிக்கை விரல்-விட்டு எண்ணக்கூடியதே அத்தகைய துறவிகளைப் பரதகண்டம் முழுவதுமே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது.

அத்தகைய துறவிகள் இருவரைப் பெற்றிருப்பதற்காகத் தமிழ்நாடு பெருமை கொள்ளலாம்.

ஒருவர் காஞ்சிப் பெரியவர்கள்: இன்-னொருவர் புதுப் பெரியவர்கள். இவர்-கள் இருவரும் சமநிலையடைந்த ஞானத்-துறவிகள்.

அவர் (புதுப் பெரியவர்) இந்து தர்மத்தின் ஜீவசக்தி நடமாடும் தெய்வம், வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு, காஞ்சி காமாட்சியின் இன்றையத் தலைமகன். இந்தத் தர்ம பூமி மேலும் தழைத்-தோங்க இந்த ஞான குருவே வழிகாட்டி.

_ சுகமான சிந்தனைகள் பக்கம் 86 _ 88

இன்றைய தினம் சங்கராச்சாரியாரின் காலில் விழும் கண்ணதாசனுக்கு, பழைய கண்ணதாசன் பதில் கூறுகிறார்; கேளுங்கள்.

அறிவியல் வளர்ந்த பின்பும்

அணுவையும் துளைத்து மேவும்

பொறியியல் மிகுந்த பின்பும்

புதுமைகள் நிறைந்த வீர

நெறிபல கண்ட பின்பும்

நிகரிலாத் தலைவ னென்றே

துறவியைக் காட்டும் வீணர்

தொலைந்தன ரிலையே தோழா!

சங்கராச்சாரியார்தான்

தலைவராம் உலக மாந்தர்

பொங்கியாச் சாரி காலில்

போய் விழல் தரும வாழ்வாம்!

இங்குளர் இளித்த வாயர்

என்பதால் துறவி யான

சங்கராச் சாரி யாரை (த்)

தாங்குவோர் உளரே இன்னும்!

வகுத்ததோர் உலகின் வாழ்க்கை

வழியறி யாத மாந்தர்

பகுத்தறி விழந்து போனார்!

பண்பினை மறக்கலானார்!

தொகுத் தறியாத தாலே

துறவிகளானோர் பாதம்

வழித் தெறிகின்றார்! அந்தோ வாழுமோ தமிழர் பூமி!

(கண்ணதாசன் கவிதைகள் -_ முதல் இரண்டு தொகுதிகள்) பக்கம், 247 _ 248)

2. சமூக நீதிகளுக்காக பழைய சாதி முறை தேவைப்படுகின்றது என்று நான் கருதுகிறேன்.

கண்ணதாசன் மாத இதழ் டிசம்பர் 1977

இதற்கும் இதோ பதில்:

சாதியெனும் பகை உணர்ச்சி வாழு-மட்டும் தமிழ் நாட்டின் முன்னேற்றம் கானல் நீரே! நீதிமுதல் நெறிமுறைகள் பிறர்க்கும் தந்து நிலைத்திருந்த பெருமை எல்லாம் மண்ணிற் சாயும் சாதியினால் நிம்மதியும் அழிந்தே போகும். தலை-முறைகள் பலங்குன்றிச் சாயும்! அந்தச் சாதியினைத் தவிர்த்தொன்றும் வாழ்வ-தில்லை தமிழகமே! இனி உனக்கு மீட்சி இல்லை -_ கண்ணதாசன் கவிதைகள் -_ பக்கம் 259

தற்போது மொழி பற்றியும் பல அற்புத-மான கருத்துகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்தக் கருத்துகளும் அதற்கு அவருடைய பதில்களும் தந்திருக்கிறோம். படியுங்கள். வடமொழி, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப்-போலவே தோன்றிய காலம் தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன _ கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தமிழனுக்குச் சூடில்லை/சொரணை-யில்லை/ தன்முன்னோர் வகுத்த வழி நினைவு மில்லை/ அமிழ்தென்பான் தன்மொழியை! அடுத்த நேரம் அழகுமொழி சமஸ்கிருதம் அதையும் கற்றால் கமிழ்ந்திடுமே தமிழ் என்பான்! இந்தி வந்தால் தனித்தமிழே வாழ்வு பெறும் என்பான்! தானும் தமிழனுக்கே பிறந்தவ னென் றுரைப்பான்! சுற்றம்

தலைகுனிய வேறென்ன வார்த்தை வேண்டும்!!

_கண்ணதாசன் கவிதைகள் -_ பக்கம் 119

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வட மொழிப் பயிற்சியும் இருக்குமானால் மற்றவர்-களைத் திகைக்க வைக்கலாம். சபையில் நிமிர்ந்து நிற்கலாம்.

_ கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தென்னவர் இந்தி கற்கச்

செப்புவோன் தமிழ னல்லன்

அன்னையை வடவர்கூடி

ஆக்கிய கருவே அன்னான்

கண்ணதாசன் கவிதைகள் பக்கம் 237.

இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்கவேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும்.

கல்கி 5.6.77 இதழில் கண்ணதாசன் பதில்:

தமிழகத்து மக்களுக்குத்

தலை யெலும்பைத் தவிர்த்தவர்கள்

உடலிலே ஓர் எலும்பும்

உறுதியாய் இல்லை! பலர்

காட்டிக் கொடுக்கின்றார்!

காசுக்குச் செந்தமிழைக் கூட்டிக் கொடுக்கின்றார்

.................................

சாப்பாடு போட்டால்

தமிழ னெல்லாம் இப்பொழுது

என்ன செயச் சொன்னாலும்

செயகின்றான்!! எழில் நாட்டைத்

திரு வோடாய் மாற்றித் தெரு வெல்லாம் கையேந்தி

வாழ்கின்றான்.

_ கண்ணதாசன் கவிதைகள் பக்கம் 104

அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி இன்று வால்யூம், வால்யூம்களாக வரைந்து தள்ளுகின்ற கண்ணதாசன் அந்த மதம் புகுந்த வரலாறு கூறுகிறார் கேளுங்கள்:

ஆடுமாடுகள் முன் நடந்திட ஆரணங்குகள் பின் தொடர்ந்திட

காடு யாவையும் கடந்து சிற்சிலர்

கன்னித் தாயாக எல்லை தொட்டனர்:

மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்

மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்

கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்

கோட்டை வாசற் படியை மிதித்தனர்:

சொந்தமாக ஒரு நாடி லாதவர்

தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்

எந்த நாடுமதம் சொந்த நாடென ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்

தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்

வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்

விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!

நச்சரவுகள் மனித மேனியில்

நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்

அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!

அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர் அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து,

இப்படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!

பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!

மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!

எனில் உமக்கொரு தெய்வம் இல்லை-யாம் என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!

என்றதும் தமிழ் ஏறுகூறுவன்; ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!

எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்

என்று கூற அவ்வீணர்கள் யாவரும் எழுபதாயிரம் கடவுள்கள் கூறி, அக் கடவுள் யாவரும் வானில் உண்டெனக் கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட! பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே

புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்

சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!

சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!

கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!

வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!

தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்

தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

_ கண்ணதாசன் கவிதைகள்- _பக்கம் 162,163

---- நன்றி விடுதலை மலர் (11-12-2010)

நம்பித் தொலையுங்கள்..நரேந்திர மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லை!

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் (27.2.2002) தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினரான முசுலிம் மக்கள்மீது நடத்தப்பட்ட படுகொலைகளை இன்று நினைத்தாலும் குலையே நடுநடுங்குகிறது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்-டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தரை-மட்டமாக்கப்பட்டன. 230 தர்க்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை. சிறுபான்மை மக்களின் 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன. ஆயிரம் உணவு விடுதிகளைக் காணோம். 3800 கோடி ரூபாய் நட்டம் சிறுபான்மையினருக்கு என்று தகவல்கள் வெளிவந்தன.

இந்தச் சிறுபான்மையினரை இல்-லாமல் செய்வதற்காகக் களத்தில் இறக்கப்பட்டவர்கள் 12 லட்சம் பேர்-களாம். நடோரா _பாட்டியா என்னும் இடத்தில் மட்டும் கொல்லப்பட்ட சிறுபான்மையினர் 58 முஸ்லிம்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உட்பட!

பெயரளவிற்கு இந்தக் கொலை-யாளிகள்மீது பதியப்பட்ட குற்றப் பத்திரிகை என்ன சொல்லுகிறது? கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்-கிறது என்று காவல் நிலையமே குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டது மூலம் _ அந்தக் காகிதத்திலேயே தீர்ப்பையும் வழங்கி விட்டது என்று தானே பொருள்?

குஜராத்தில் வதேரா என்னும் நகரம். முசுலிம் ஒருவருக்குச் சொந்தமான பெஸ்ட் பேக்கரி. அங்குப் பணிபுரிந்த 14 பேர் கொல்லப்பட்டனர் எப்படி தெரி-யுமா? மனிதர்களை விறகுக் கட்டைகளாக்கி _ பேக்கரி அடுப்பில் வேகவைத்து _ வேடிக்கை காட்டினர்.

இந்தப் பிரச்சினை மாநிலத்தையும் தாண்டி மக்கள் மத்தியில் கோபாவேசத்-தைத் தூண்டியது என்றவுடன், உலகத்தார் கண்களில் மண்ணைத் தூவ வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர். 21 பேர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பில் 21 பேர்களும் விடுதலை செய்யப்பட்டனர் என்றால், அந்தக் குற்றப் பத்திரிகை என்பது காகிதத்தில் எழுதப்பட்ட சுரைக்காய், அவ்வளவுதான் கறிக்கு உதவவில்லை.

21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ. மகிதாவுக்கு வெகுமதி என்ன தெரியுமா? குஜராத் மாநில மின்வாரியத்தின் ஆலோசகர்; மாத சம்பளம் ரூபாய் 30 ஆயிரம், பங்களா, கார், தொலைபேசி, உதவியாளர் இத்தியாதி இத்தியாதி வசதிகள். குஜராத் கலவரத்தின் போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; இறுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்-பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்-பட்டன.

உச்சநீதிமன்றமோ, விலக்கிக் கொள்-ளப்பட்ட வழக்குகளையும் சேர்த்து அனைத்தையும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. (17.8.2004)

மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருந்தவர் மாயாபென்-கோட் நானி என்னும் பெண் அமைச்-சர்; பாட்டியா மாவட்டம் நரோடா என்னும் கிராமத்தில் 108 முசுலிம்கள் கொல்லப்பட்டதில் இந்தப் பெண் அமைச்சருக்கு முக்கிய பங்கு உண்டு. கொஞ்ச காலம் தலைமறைவானார்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குஜராத் கலவரம் உலகம் முழுவதும் இந்தியாவை மீண்டும் ஒரு முறை தலைகுனிய வைத்தது.

பிரதமர் வாஜ்பேயி இதனை மனதிற் கொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன் என்று புலம்பியதுண்டு.

குஜராத் மாநில காங்கிரசின் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இஹ்சான் ஜாப்ரி இந்து மதவெறியர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். டயரைக் கொளுத்தி ஜாப்ரியின் கழுத்தில் மாட்டினார்கள்; கொடு-வாளால் நெஞ்சைப் பிளந்தார்கள்; பின்னர் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தினார்கள்.

இஹ்சான் ஜாப்ரியின் மனைவியான ஜாக்சியா காவல்துறையிடம் புகார் கொடுத்தார். மோடி ஆட்சியில் காவல்-துறை தன்னிச்சையாகச் செயல்பட முடியுமா? அடுத்த கட்டமாக உச்சநீதி-மன்றத்திற்குச் சென்றார் அந்தப் பெண்மணி. உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு முன்னாள் சி.பி.அய். இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய ஆணை பிறப்பித்தது.

11 மணி நேரம் மோடியை விசாரித்-தது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் அளிக்-கப்-பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன.

குடியரசுத் தலைவரிடம் அளிக்கும் தணிக்கையாளர் அறிக்கையாக, இருந்-தாலும் சரி, உச்சநீதிமன்றத்தில் சீல் வைத்து அளிக்கப்பட்ட ராகவன் அறிக்-கையாக இருந்தாலும் சரி, அவை எப்படி கசிகின்றன? இதற்கே ஒரு விசாரணை ஆணையம் வைக்கப்பட வேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது.

மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லையாம். அவர் கலவரத்தைத் தூண்டவே இல்லையாம். ஜாதி பேதமின்றி அனைத்து மக்களின் உயிருக்கும் அசல் பாதுகாவலராக அவர் நடந்து கொண்டாராம். சரி, அவர் உத்தமப் புத்திரராகவே இருக்கட்டும்; 2000-க்கு மேல் படுகொலை நடந்திருக்கிறதே குஜராத் மாநிலத்தில் அதற்கு யார்தான் பொறுப்பு?

நரேந்திர மோடியே உத்தமப்-புத்திரன் குற்றவாளி அல்ல என்றால், இந்த நாட்டில் யார் நல்ல மனிதர்? யார் குற்றவாளி என்று நினைப்பதற்கே தலையைச் சுற்றுகிறது. இந்த விசாரணை எந்தத் தரத்தில் நடந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.

குஜராத்தில் சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்ட நேரத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர் ஸ்ரீகுமார், இராகவன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு 35 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தந்துள்ளார். 2002இல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து விரிவாக அதில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை கொடுத்தவர் சாதாரணமானவர் அல்லர். குஜராத் மாநிலத்தின் காவல்துறை முன்னாள் தலைவர்.

அந்த அறிக்கைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா? அதனைக் கண்டு கொள்ளவே-யில்லை _ புலனாய்வு செய்தவர்கள் என்றால், இந்தக் குழுவினர் அறிக்கை எந்தத் தரத்தைச் சேர்ந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் மாநிலக் காவல்துறையின் இரண்டா-வது அணியாகச் செயல்பட்டது என்று ஸ்ரீகுமார் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மோடியின் ஏவலுக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே விசாரணை நடந்திருப்-பதாக ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

இனிமேல் என்ன? ஒரு நாகரிகமான நாட்டில் தான் நாம் இருக்கிறோமா? நிருவாகமும், சட்டமும், நீதியும் உயிர் வாழும் நாட்டில்தான் நாம் குடிமகனாக இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆமாம், நம்புங்கள் _ நம்பித் தொலையுங்கள் _ நரேந்திரமோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் சம்பந்தா சம்பந்தமேயில்லை என்று நம்பித் தொலையுங்கள். பாம்பு தின்னும் ஊருக்குச் சென்-றால், நடுக் கண்டம் எனக்கு என்று-தான் தின்று உயிர் வாழ வேண்டும் _- அப்படித்தானே!

 ---- நன்றி விடுதலை மலர் (11-12-2010)



ராஜபக்சேவுக்கு மொத்து என்பது கிடைத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறது

சிங்கப்பூர் அதிபராகவிருந்து ஓய்வு பெற்ற லீகுவான்யூ சொன்னதுபோல இலங்கை அதிபர் சிங்கள வெறியர் ராஜபக்சே திருந்துவார் என்று எதிர் பார்ப்பதைவிட அறியாமை வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

லண்டன் சென்று தமிழர்களின் உணர்வை நேரில் அறிந்து அவமானப்பட்ட பிறகும்கூட, பட்டும் புத்திவர வில்லை என்பதுதான் அந்தப் பாசிஸ்டின் நிலை.

இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தேசிய கீதம் இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. இனி தமிழில் கிடையாது - சிங்களத்தில் மட்டும்தான் என்று அறிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவைக்குள்ளேயே ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் தமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராஜதந்திர நடவடிக்கை என்றோ, வேறு எந்த மண்ணாங்கட்டிக் காரணத்தையோ கூறிக் கொண்டு சிங்கள அரசிடம் நேசம் - பாசம் கொண்டு கசிந் துருகும் இந்திய அரசின் கண்கள் இதற்குப் பிறகும் கூடத் திறக்கவில்லையென்றால், அந்த நிலை மிகவும் பரிதாபமே.

ஆட்சி மொழி என்ற தகுதியிலிருந்து தமிழ் முன்பு நீக்கப்பட்டது. வாகனங்களில் எல்லாம் சிங்கள எழுத்துப் பொறிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற யாழ் நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் சிங்கள மயம் ஆக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பு என்பதை சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி செய்து வருகிறார் ராஜபக்சே.

லண்டனில் மட்டுமல்ல உலகில் வேறு எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ராஜபக்சேவுக்கு மொத்து என்பது கிடைத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறது. ஆனாலும், அந்த மனிதனுக்கு அது உறைக்கப் போவதில்லை.

போர்க் குற்றவாளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனை அளிக்கப் படாத வரை - இதற்கு ஒரு தீர்வு காணப்படப் போவதில்லை.

இதில் அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் மேற்கொண்ட முயற்சி ஒரு தேக்க நிலையில்தான் இருந்து வருகிறது. மனித உரிமையில் அக்கறை உள்ள நாடுகள் - ஒவ்வொரு நாட்டின் தேசிய இனம், தேசிய மொழி, அது தொடர்பான உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது அய்.நா.வில் ஒப்புக்கொள்ளப் பட்டவையாகும்.

இந்த வகையில் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கூடுதல் காரணமும்  கிடைத்துள்ளது என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினை அணுகப்பட வேண்டும்.

சிங்களம், சிங்களவர்கள் ஆகியவற்றுக்கும், ஆரியர்களுக்கும், ஆரியத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதன் காரணமாக, சிங்களவர்களின் நடவடிக்கைகளுக்கு இங்குள்ள ஆரியப் பார்ப்பனர் களும், அவர்களின் ஊடகங்களும் பல்லக்குத் தூக்கிக் கொண்டு நிற்கின்றன.

இலங்கை அதிபர்களால் அளிக்கப்பட்ட சிங்கள ரத்னாக்கள் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். மிக வெளிப்படையாகத் தமிழின அழிப்பை நியாயப்படுத்திக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக இந்த இன எதிரிகள் அம்பலப்படுத்தப்படவேண்டும். சில புறக்கணிப்பு நடவடிக்கைகள்மூலம் பார்ப்பனர் - தமிழர் என்ற உத்திப் பிரிவு வெளிப்படையாக ஏற்பட்டால்தான் இந்தப் பார்ப்பனர்கள் சரிப்பட்டு வருவார்கள்.

இங்கு எரிவதை வெளியில் இழுத்தால் இந்தப் பார்ப்பனர்களின் கொழுப்பு - கொதிப்பு அடங்கிப் போய்விடும். இலங்கையிலும் அதன் பிரதிபலிப்பைக் காணமுடியும். இந்நிலையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கியே தீரவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழில் ஏடுகள் நடத்திப் பிழைத்துக் கொண்டே, தமிழ் செம்மொழியானால், வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா? என்று தைரியமாக எழுதக்கூடிய ஏடுகளும் இருக்கத்தானே செய்கின்றன.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவிட்டாலே கருநாடகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து தமிழ்நாட்டில் முப்போகம் விளையுமா? என்று கேலி செய்கின்ற பூணூல் இதழ்களைத் தமிழர்களே, காசு கொடுத்து வாங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

முதலில் இதற்கொரு முடிவு காணப்படவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா, தமிழனாக இரு!!

---------- விடுதலை தலையங்கம் (13-12-2010)

Saturday, December 11, 2010

அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?

2ஜி அலைக்கற்றை தொடர்பாக மானமிகு ஆ.இராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை; குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்ல வில்லை; இன்னும் சொல்லப்போனால், தணிக்கை அறிக்கையில்கூட இராசா லஞ்சம் வாங்கினார்; ஊழல் செய்தார் என்று குறிப்பிடப்படவில்லை.

வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற தன்மையில், தி.மு.க. தலை வர் முடிவெடுத்து அதன் அடிப்படையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேநேரத்தில், பா.ஜ.க.வின் கதை என்ன? பாபர் மசூதி இடிப்பில் எல்.கே. அத்வானி உள்பட பா.ஜ.க., வி.எச்.பி., மற்றும் சங் பரிவார்களைச் சேர்ந்த 49 பேர்கள் மீது இந்தியன் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சாதாரணமான குற்றங்களா? வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்கூட அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?

கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமலும், தார்மீகம் இல்லாமலும் பதவிகளை இறுகப் பிடித்துக்கொண்டு தானே கிடந்தனர்?

பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலத்த குரல் கொடுத்தும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், பதவி நாற்காலியில் ஆணி அடித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்களே!

ஆனால், ஆ.இராசா அவர்கள் குற்றப் பதிவு இல்லாமலே பதவியைத் தூக்கி எறிந்தாரே - இதில் யார் பெரிய மனிதர்? யார் கவுரவமானவர்? யார் மக்கள்நாயகத்தை மதிக்கக் கூடியவர் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா?

இதில் இன்னொரு கடைந்தெடுத்த வெட்கக்கேடு - இந்தக் குற்றப் பின்னணி உள்ளவர், பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுதான்.

இந்த அத்வானிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கரசேவகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். கரசேவகர்கள் மத்தியில் தூண்டுதல் செய்தார் என்று அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த அஞ்சு குப்தா சாட்சியம் சொல்லியிருக்கிறாரே - குறைந்த பட்சம் எம்.பி., பதவியையாவது தூக்கி எறிந்திருக்க வேண்டாமா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மும்பையில் அதன் எதிரொலியாகக் கலவரம் நடந்தது; 900 பேர் கொல் லப்பட்டனர்; பெரும்பாலும் இசுலாமிய சிறுபான்மை மக்கள்தான் படுகொலைக்கு ஆளானவர்கள்.

நீதிபதி சிறீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப் பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பா.ஜ.க., - சிவசேனா கூட்டாட்சி முற்றிலும் நிராகரித்து விடவில்லையா? நீதிமன்றம் தலையிட்டு, அந்த அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்பட்ட நிலையில், சிவசேனா தலைவர் பால்தாக்கரே முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதே - இதுவரை அவர்மீது நடவடிக்கை உண்டா?

முதலமைச்சர் பதவியைத் தூக்கி எறிவேனே தவிர, என் தலைவர் பால்தாக்கரேயை கைது செய்யமாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் சொல்லவில்லையா?

இந்த நிலையில் உள்ளவர்கள் ஆ.இராசாவை நோக்கிக் குற்றவாளி என்று விரலை நீட்ட யோக்கி யதை உடையவர்கள்தானா?

சிறைக்குள் இருக்கவேண்டிய குற்றவாளிகள், வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒருவர்மீது குற்றம் சுமத்தி வேட்டையாடுவது நியாயம்தானா?

பிகாரில் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உறுப் பினர்களில் 53 சதவிகிதத்தினர் மீது கிரிமினல் வழக் குகள் உள்ளன என்று தெரியவரும் நிலையில், அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆ.இராசா மீது குற்றப் பத்திரிகை படிக்க முன்வருகிறார்கள்?

குஜராத் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றமே அடையாளம் காட்டிய நிலையில், அவர் பதவி நாற்காலியை விட்டு விலகி நின்றதுண்டா?

நானாவதி கமிஷன் அறிக்கை வந்தபோது ஆடிப்பாடி மகிழ்ந்த சோ கூட்டம், லிபரான் ஆணை யத்தின் அறிக்கை வெளியில் வந்தபோது என்ன எழுதியது?

பாபர் மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது இந்தக் கமிஷன் அறிக்கைக்கு என்ன மரியாதை என்று கேட்கிறார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது நாடாளுமன்றக் கூட்டுக்குழு எதற்கு? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வலிமை அதிகமா? நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுக்கு வலிமை அதிகமா?

இரட்டை நாக்கு இரட்டை வேடம் என்பது பார்ப்பனர்களின் பிறவிக் குணம் என்று ஆபேடூபே சொன்னதுதான் எத்துணை உண்மை!

தமிழர்களே, பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!
(-------- நன்றி விடுதலை தலையங்கம் , 11-12-2010)



Saturday, December 04, 2010

துக்ளக் துர்வாசர்களும் - ஜூனியர் விகடன் மணியன்களும்!

ஆ. இராசா பிரச்சினை ஆரிய திராவிடப் பிரச்சினையா? எதிலும் உங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் தானா? என்று ஜாதிக் கண்ணோட்டமே இல்லாத, இனப் பார்வையே இல்லாத (சத்தியமாய் நம்பித் தொலைக்க வேண்டும்)வர்கள் போல சிலர் எழுதுகோலைப் பிடித்து ஏர் உழுகிறார்கள்.

துக்ளக், தினமணி, ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், தினமலர் வகையறாக்கள் துள்ளி விளையாடப் பார்க்கின்றன.துக்ளக்கில் துர்வாசர் என்ற புனைப் பெயரில் ஒருவர் ஒளிந்து கொண்டு இருமிக் கொண்டிருக்கிறார். தமிழன் என்றால் அவருக்கு வேப்பங்காயை மென்று விளக்கெண்ணெய்யைக் குடித்தது போலே.... துர்வாசர் என்றாலே கோபக்கார முனி என்றுதானே பொருள்!. ஆத்திரக்காரனுக்கு அறிவில்லை என்பது பால பாடமாயிற்றே! பார்ப்பனர் அல்லாதோர்மீது துவேஷம் துக்ளக் துர்வாசருக்கு எப்பொழுதுமே பொத்துக் கொண்டு கிளம்பும். தமிழ் மொழி என்றால் ஒரு கிண்டல்; தமிழன் என்றால் ஒரு ஏளனம் _ இவர் கைவசம் இருந்து கொண்டே இருக்கும் .இப்பொழுது ஆ. இராசா விஷயத்திலும் ஆரியத்தின் கொடுக்கு கொம்பு தீட்டிக்கொண்டு பாய்கிறது. சென்னை - தியாகராயர் அரங்கில் 24.11.2010 அன்று தமிழ் ஊடகப் பேரவை சார்பில் ஒரு கருத்தரங்கம்.

மத்திய அமைச்சர்மீது வேட்டையாடக் கிளம்பியிருக்கும் ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அந்தக் கூட்டம்! இதுபற்றி எழுத வந்த துர்வாசர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, பேராசிரியர் சுப.. வீரபாண்டியன் ஜெகத் கஸ்பார், ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா ஆகியோர் பேசியதில் என்ன பொருள் குற்றம்? சொல் குற்றம்? என்று எதிர்த்து ஒருவரிகூட எழுத முடி யாத இந்த உஞ்சிவிருத்திக் கூட்டம் _ இவர்கள் எல்லாம் பெரிய பத்திரிகையாளர்களா? ஊடகத்துறை அறிஞர்களா? என்று எகத்தாளம் கொட்டுகிறது துக்ளக். பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது என்கிற தப்பான ஆட்ட ரகத்தைச் சேர்ந்தது இந்த முப்புரிக் கூட்டம். அதனால்தான் அவர்கள் தெரிவித் துள்ள கருத்துகளுக்குள் உள்ள நுழைய முடியாத நிலையில், கழுத்தைக் கொடுத்தால் கில்லட்டின் காவுதான் என்பதை நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில்தான் இவர்கள் எல்லாம் பெரிய ஊடகக்காரர்களா என்று உதட்டைப் பிதுக்குகிறது. என்.டி.டி.வி. _ பிரணாராய், சி.என்.என். அய்.பி.என்னின் ராஜ்தீப் சர் தேசாய், அவுட் லுக் வினோத் மேத்தா, டெக்கான் கிரானிக்கிளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர் போன்ற பழந்தின்று கொட்டை போட்டவர்களா இவர்கள் எல்லாம் என்று நையாண்டி மேளம் கொட்டுகிறார் துர்வாசர். எடுத்துக் காட்டப்படும் இந்த ஆசாமிகள் எல்லாம் நிஜப் புலிகளா? வைக்கோல் புலிகளா என்கிற கோதாவுக்குள் நுழைவது தேவையற்ற வேலை. நாம் கேட்பதெல்லாம் இதில் யார் யாரை மிஞ்சுபவர்கள் என்பதல்ல _ அது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். நாம் வைக்கும் முதல்கேள்வி, துர்வாசர் கண்ணோட்டத்தில் _ பிரபலமில்லாதவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஒருவரிகூட பதில் சொல்ல முடியாத வக்கற்றவர்கள், சரக்கு இல்லாதவர்கள் சகட்டு மேனியாகத் தனி நபர் விமர்சனக் கோதாவில் குதிக்-கிறார்களே -_ இதன் பொருள் என்ன? ஆ. இராசா மீது அவதூறு சுமத் துவதுதான் அவாளின் நோக்கம்; இராசா தரப்பில் எழுப்பப்படும் அர்த்தமிக்க வினாக்களுக்கு விடை என்பது அவர்கள் கைவசம் கிடையாது என்பது இதன் மூலம் விளங்கிட-வில்லையா? இதில் இன்னொரு பார்ப்பனத் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் ஊடகப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுள் ஏ.எஸ். பன்னீர்செல்வம் (செயல் இயக்குநர், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு) அவர்களின் பெயரை விட்டுவிட்டு எழுதுவது ஏன்? ஒருக்கால் அவர் பிரபலமான ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்தவர்தான் _ அவரைப் பிரபலமற்றவர் பட்டியலில் சேர்க்க முடியாது என்ற உள் எண் ணத்தில் ஒதுக்கி விட்டதோ! (இதற்குப் பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது!). ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்காவது பதில் சொல்ல முன்வர வேண்டியதுதானே! ஏன் முடியவில்லை? பதில் சொல்ல முடியவில்லை -_ அதனால் எழுத முன் வரவில்லை என்பதைத் தவிர வேறு இதில் என்ன இருக்கிறது? விடுதலை ஆசிரியர் இவர்கள் கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர் அல்ல; அப்படித்தானே? திராவிட இயக்கத்தைச் சேர்ந்த, 75 ஆண்டு காலம் வரலாறு படைத்த விடுதலையின் 48 ஆண்டு கால ஆசிரி-யர் அவர். ஆசிரியர் என்று தமிழ்நாட்-டில் சொன்னால் அது விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்பது பூணூல்காரர்கள் உட்படத் தெரிந்த சேதிதான். துர்வாசர்தான் ஆத்திரக்காரரா-யிற்றே -_ அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? துக்ளக் தர்ப்பையில் பதுங்கியி-ருக்கும் துர்வாசரே, துர்வாசரே! உமக்கு வரலாறு தெரியுமா? இந்த விடுதலை ஏடுதான் உடம்பெல்லாம் மூளை உள்ளவர் என்று நீங்கள் தூக்கிக்கொண்டு ஆடும் ஆச்சாரியாரை 1938இல் ஒரு முறையும், 1954இல் ஒரு முறையும் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியது என்பது உமக்குத் தெரியாதா?

உங்கள் ராமச்சந்திர அய்யர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, பிறந்த தேதியைத் திருத்தி எழுதி (Fraud) பதவியில் நீடித்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விரட்டியடித்தது இந்த விடுதலைதான் _ இந்த விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான் என்ற சரித்திரம் தெரியுமா உமக்கு?

1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில், இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் திமுகவுக்கா ஓட்டு என்று ஒப்பாரி வைத்து எழுதியதே துக்ளக் _ சிறப்பு இதழாகக் கூட துக்ளக் வெளிவந்ததே _ உங்கள் தினமணி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அய்யப்பனையும், விநாயகனையும் வேண்டி பெட்டிச் செய்திகளை வெளியிட்டதே, (சிவராமய்யர் தான் அப்பொழுது அதன் ஆசிரியர்) நினைவிருக்கிறதா? திராவிடர் இயக்கத்தின் வீர சிப்பாயாக இருந்து உங்கள் அஸ்திவா-ரத்தையும், பூணூல் அம்பறா தூணியி-லிருந்து புறப்பட்ட அம்புகளையும் இந்த விடுதலை தானே _ இந்த விடுதலை ஆசிரியர்தானே நொறுக்கித் தள்ளினார்.

ஒரு சேலம் நிகழ்ச்சியை முன்வைத்து தேர்தலை ஆரியர் -_ திராவிடர் போராட்-டமாகச் சித்திரித்தது உங்கள் கூட்டம்தானே? முடிவு என்ன ஆயிற்று? இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. (1967 தேர்தலில்) பெற்ற இடம் 138. இராமனை செருப்பால் அடித்தபிறகு தி.முக.வுக்குத் தேர்தலில் (1971) கிடைத்த இடங்கள் 183 என்பதை மறந்துவிட வேண்டாம். துக்ளக், தினமணி ஹிந்து வகையறாக்களின் சிண்டுகள் அறுபட விரட்டியடித்தது இதே விடுதலை தான் _ விடுதலையின் ஆசிரியர்தான் என்-பதை வசதியாக மறந்து விட்டீர்களா?

பதில் அளிக்கத் துப்பு இல்லாத நிலையில் பெரியாரும், அண்ணாதுரை-யும் அவிழ்த்துவிட்ட ஆரிய - திராவிடக் கதை என்று மங்களம் கூறி கடைகட்டி விட்டது _ துக்ளக். ஆரியர் - திராவிடர் என்பது பெரியாரும், அண்ணாவும் கட்டிவிட்ட கதைகளா? உங்கள் ஆதி சங்கரர் திராவிட சிசு என்று சொன்னதை வசதியாக மறந்து-விட்டீர்களா? உங்கள் வேதங்களில் எத்தனை இடங்களில் திராவிடர்கள் இடம் பெற்றிருக்கிறது! தேசிய கீதத்தில் திராவிட வந்தது என்பதும் பெரியா-ராலும், அண்ணாவாலும்தானா? உங்கள் பிஜேபி ஆட்சியில் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று கூறி, கணினி தந்திரம் மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டினீர்-களே அப்பொழுது எங்கே மேயப் போனது உங்கள் புத்தி? தங்களுக்குத் தேவைப்படும் பொழுது ஆரியர் - திராவிடர் என்பது கண்-முன்னே வந்து நிற்கும். தமக்குச் சாதக-மாக இருக்காது என்ற நிலை ஏற்-பட்டால் ஆரியராவது - திராவிடராவது  எல்லாம் பெரியார், அண்ணாதுரை கைசரக்கு என்பதா? இராமன் செருப்படி பட்டும் உங்களுக்குப் புத்தி வரவில்லையே, என்ன செய்ய? மானமுள்ள ஆயிரம் பேருடன் போரிடலாம். ஆனால், மானமற்ற ஒருவனுடன் போராடுவது கடினம் என்றாரே தந்தை பெரியார் _ அதுதான் நினைவிற்கு வருகிறது.

ஏதோ விடுதலை ஆசிரியரை மடக்கியது போல ஒன்றைச் சொல்லி தன் பூணூலால் ஒருமுறை முதுகைச் சொறிந்து கொள்கிறது. இதே இனமானத் தலைவர் வீரமணிதான் முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது ஆரிய பிராமணத் தலைமைக்கு, இடஒதுக்கீட்டை அதிகரித்ததற்காக (இதுவே பொய் -_ அதிகாரித்ததற்காக அல்ல _ ஏற்கனவே இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக) சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஜால்ராபோட்டார் என்று துர்வாசர் எழுதுகோல் பிடிக்கிறார்.

பொதுவாக இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போர்க் கொடி பிடிக்கும் பார்ப்பனர்களைப் பயன்படுத்தியே வீரமணி வெற்றி பெற்ற இடம் அது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களையும் பயன்-படுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக பாதுகாத்துக் கொடுத்தது எப்படித் தவறாகும்? தமிழர்கள் வென்ற இடத்தைக்கூட வேறுவிதமாகச் சித்திரிக்க முயலும் பேதமையை என்ன சொல்லி நகைப்பது!

அடே, வாருமய்யா.. தமிழருவியாரே! இன்னொரு பார்ப்பன ஏடான ஜூனியர் விடகனில் (24.11.2010) தமிழருவி மணியன் என்பார் ஒன்றை எழுதியிருக்கிறார்: ஆ இராசாவிடம் இருந்து மாண்-புமிகு பறி போனாலும் மானமிகு அடை மொழி பறி போகாது என்று வாய் மலர்ந்திருக்கிறார். குற்றம் செய்யாதவருக்கு ஜென்ம தண்ட-னையா? என்றும் குமுறியிருக்கிறார்? வீரமணியின் பகுத்தறிவு அகராதியில் மானம் என்ற சொல்லுக்கும், குற்றம் என்ற வார்த்தைக்கும் என்ன பொருள் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது! என்று திருவாளர் தமிழருவி மணியன் நம்மை வேண்டிக் கொண்டிருக்கிறார். நெற்றியில் பட்டை போடாத, பக்திச் சகதியில் விழாத பகுத்தறிவாளராக இவர் இருந்திருந்தால் வீரமணியின் பகுத்தறிவு அகராதியில், மானம் குற்றம் என்பதற்கான பொருள் எளிமையாகவே புரிந்திருக்கும்.

இனிமேல் புதிதாக ஒரு கட்சிக்குப் போக முடியாத நிலையில், தனக்குத்-தானே கட்சியை உண்டாக்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் பகுத்தறிவு இல்லைதான். ஹெக்டே கட்சி வரை சென்று வந்த தீராதி தீர பகுத்தறிவாளர் ஆயிற்றே! ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே தலைவர், ஒரே கொடியின் கீழ் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்று-பவர்கள் பற்றிக் கருத்துச் சொல்லும் போது கொஞ்சம் கூடுதல் பொறுப்-புணர்ச்சியும், மரியாதையும் தேவைப்-படும். அது இல்லாதவர்கள் இப்படித்-தான் எழுத்தைத் தொழிலாக்குவார்கள். ஆச்சாரியாரால் கறுப்புக் காக்கை என்று அடையாளம் காட்டப்பட்ட காமராஜர் _ கல்கியால் பெரிய பதவி சின்ன புத்தி என்று கல்கியால் கார்ட்டூன் போடப்பட காமராசர் _ பெரியார் ஆதரவு என்கிற முக்கோணங்-களையும் தெரிந்து கொண்டவர்களுக்-குத்-தான் பகுத்தறிவு அகராதியில் மானம் குற்றம் என்பதற்கான பொருளை உணர முடியும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கப்பட்டது என்று எந்த அமைப்பும் கூறவில்லை; தணிக்கைத் தலைமை அதிகாரிகூட, இது ஒரு யூகம்தான் என்று குறிப்பிட்-டுள்ளார். ஊகத்தால் நட்டம் என்பதுகூட பொது மக்களுக்குத்தான் அந்த லாபம் போய் சேர்ந்திருக்கிறது என்றெல்லாம் கருத்துக் கூறப்பட்டுள்ள நிலையில், ஆளாளுக்கு நீதிபதியாகித் தண்டனை வழங்குவது என்றால், ராஜா என்ன ஊருக்கு இளைத்தவரா? இது எங்கே போய் முடியும்? 2008இல் ஆ. இராசா பொறுப்-பேற்றபோது தொலைப்பேசி இணைப்-புகளின் எண்ணிக்கை 30 கோடிதான். அவர் பதவி விலகும்போது 73 கோடியாக உயர்ந்துள்ளதே, இதுபற்றி ஏன் பேனாவைத் திறக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள்? கொலைக் குற்றம் சாற்றப்பட்ட சங்கராச்சாரியார்மீது ஒரு தூசுகூட விழாமல் பார்த்துக் கொண்ட பார்ப்-பன ஊடகங்கள் ஆ. இராசா என்ற தாழ்த்தப்பட்ட சகோதரன்மீது யூகத்-தின் அடிப்படையில் புழுதி வாரித் தூற்றுவதைப் புரிந்து கொள்ள பச்சைத் தமிழர் காமராசரின் சீடராக இருப்பதாக நாம் நம்பும் தோழர் புரிந்து கொள்ளவில்லையே -_ அவர்களோடு சேர்ந்து கோரஸ்பாடும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாரே _ - இதனை வெட்கக்கேடு என்பதா? தமிழர்களின் சுபாவமே எதிரிகளிடம் ஆழ்வார் பட்டம் வாங்குவதுதானே _ இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று சமாதானம் செய்து கொள்வதா? சங்கராச்சாரி பிரச்சனை குறித்து இவர் என்றாவது எழுதியிருப்பாரா? எழுதினால் ஜூ.வி. தான் வெளியிடுமா? ஊழலில் குளித்துத் திளைத்து மூழ்கும் பா.ஜ.க.வின் முதல்வர் _ அதைப்பற்றி இந்தப் பார்ப்பன ஏடுகள் எப்படி தளுக்காக எழுதுகின்றன _ இராசா விடயத்தில் எப்படித் துள்ளிக் குதிக்கின்றன என்பதைப் பார்த்தாவது புத்தி கொள்முதல் பெற வேண்டாமா? இனநலமும் - _ எதிரிகளின் குணமும் தெரிந்து கொள்ளப்பட முடியாத நிலையில் உள்ளவர்கள் ரொம்பப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்; அவர்கள் ஏதோ ஒரு வகையில் விளம்-பரமும் பெற்று விடுகிறார்கள். ஆனால், இந்தக் கண்ணோட்டத்தில் ஒரே ஒரு பார்ப்பானைக் காண்பது அரிதினும் அரிதாயிற்றே! பெரியாரைப்பற்றிப் பேசினால் மட்டும் போதாது; காமராசரைப் பற்றி எழுதினால் மட்டும் போதாது. அவர்களின் சுவாசத்தைச் சுவாசிக்கக் கற்றுக் கொண்டதால்தான் தமிழர்-களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்பவர்கள் ஆவோம்! சிந்திப்பார்களாக!

----- மின்சாரம், விடுதலை  ஞாயிறு மலர் (04-11-2010)
                                                                                                                                                               


பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்..

                                   பிகாரும் - பார்ப்பனர்களும்!

இன்றைக்கு அனேமாக பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற தலைவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் தகுதி கீழிறக்கத்திற்கு ஆளாகிவிட்டது.

சு.சாமி போலவே அரசியல் தரகராகச் செயல்படக் கூடியவர்தான் இவர் என்பது எல்லோருக்கும் தெரியும். வேறு எந்தத் தனிப்பட்டவர் வீட்டுக்கும் செல்லாத ஜெய லலிதா சோ வீட்டுக்கு மட்டும் போவார்; விருந்துண்பார்; கலகலப்பாக சோ குடும்பத்தாருடன் கலந்து உறவாடுவார்.

இதற்கு என்ன காரணம்? அரசியலா? கொள்கைக் கோட்பாடுகளா? இனப் பாசத்தைத் தவிர இதில் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

அ.தி.மு.க. மீது அதிருப்தி தரும் பிரச்சினைகள் வரும்போதுகூட செல்லமாக சுட்டிக்காட்டி இப்படி நடந்து கொள்ளவேண்டும் என்னும் அறிவுரைதான்; மக்களவைத் தேர்தலின்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் மீது பாசம் கொட்டி கருத்து மழையை ஜெயலலிதா பெய்தபோது அப்படித்தான் நடந்துகொண்டார் சோ.

பா.ஜ.க.வின்மீது சோவுக்கு இருக்கும் பாசம்கூட பார்ப்பன ஜனதா என்ற பாசவெள்ளம்தான்.

கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா விசயத்தில் பா.ஜ.க. நடந்துகொள்வது பெருமைக்குரியதல்ல - அவ்வளவுதான் பா.ஜ.க.பற்றி சோவின் விமர்சனம் (துக்ளக், 8.12.2010).

ஊழலுக்குத் துணை போகும் இந்த பா.ஜ.க. பிகாரில் பா.ஜ.க.வுக்கு 91 இடங்கள் கிடைத்துவிட்டன என்றதும் தலைகால் புரியவில்லை.

அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்துடன், அய்க்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் 81 தான்; அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த சதவிகித வாக்குகள் 90 என்று எழுதுகிறார். நிதிஷ்குமார் போன்றவர்கள் இந்த இடத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்வது நல்லது.

இந்த வார துக்ளக் தலையங்கத்தில் (8.12.2010) அவர் என்ன சொல்கிறார் - முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித் துள்ளனர் என்கிறார். நரேந்திர மோடியை நிதிஷ்குமார் தேர்தல் கூட்டங்களுக்கு அழைக்காததால்தான் முசுலிம்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தார்கள் என்பது தவறு; அத்வானி குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியைப்பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்பொழுது நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வராததால்தான் முசுலிம்கள் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு வாக் களித்தனர் என்று எப்படிக் கூற முடியும் என்று வாதாட முயற்சி செய்கிறார்.

சென்னையிலிருந்து பிகார் தேர்தல் பிரச்சினையை அலசுபவரைவிட, நேரிடையாக களத்தில் உள்ளவர் - ஆட்சியில் இருப்பவர் நிதிஷ்குமார். நரேந்திர மோடியை ஏன் அழைக்கக் கூடாது என்பதற்கு, அவருக்கு நேரிடையாகத் தெரிந்ததைவிட இந்த சோக்குத் தெரியும் என்று எதிர் பார்ப்பது அசல் சிறுபிள்ளைத்தனம்.

நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஆசைப்படும் சோ வேறு விதமாக எழுதுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியாவுக்குப் பிரதமராக வரவேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான முசுலிம்களை தனது காவல்துறையைத் துணைக்கு அனுப்பி, சங் பரிவார்கள் மற்றும் கூலிகளின் கைகளில் கொலைகார ஆயுதங்களைக் கொடுத்துக் கொன்று முடிக்கவேண்டும்; அவர்களின் வீடுகளையும் வியாபார நிறுவனங்களையும் தீயிட்டுக் கொளுத்தி முடிக்கவேண்டும்.

கருவுற்ற பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை எரியும் தீயில் தூக்கி எறிந்து குதியாட்டம் போடவேண்டும்.

இப்படிப்பட்டவர் பிரதமராக வந்தால்தான் குஜராத்தில் மட்டும் நடந்தது இந்தியா முழுமையும் நடக்கும்; அதன் மூலம்தான் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்க முடியும்; இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக; பூணூல் ராஜ்ஜியமாக ஆக்க முடியும் - இதுதான் சோ பார்ப்பனரின் அந்தரங் கத்தில் துள்ளிக் குதிக்கும் ஆசை வெறி!

அது ஒருபுறம் இருக்கட்டும்; நரேந்திர மோடியின் செல்வாக்கு என்பது - குஜராத்துக்குள்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று சொன்னவர் காங்கிரஸ் கட்சிக் காரர் அல்ல - பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் - மக்க ளவையில் பா.ஜ.க.வின் தலைவர் - எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு என்ன பதில் இருக்கிறது இந்த சோ கூட்டத்திடம்?

சோ போன்றவர்கள் இப்படித் துள்ளிக் குதிப்பதற்கு காங்கிரஸ் செய்த தவறுதான் காரணம். பிகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி இவற்றுடன் கூட்டணி வைத்தி ருந்தால் பா.ஜ.க. கூடாரம் காலியாகி இருக்கும். தேர்தல் முடிவுகளின் வாக்குகள் பற்றிக் கண்ணோட்டம் செலுத்தும் போது இந்த நிலை மிகவும் தெளிவாகவே தெரிகிறது.

உ.பி.யில் பாடம் படித்ததற்குப் பிறகாவது காங்கிரஸ் புத்தி கொள்முதல் பெற்றிருக்கவேண்டும்.

காங்கிரசின் அணுகுமுறை குறைபாட்டால் பிகாரில் தேர்தல் முடிவு இந்த நிலைக்கு ஆளானது என்பது சோவுக்கும் அவர் வகையறாக்களுக்கும் நன்கு தெரியும். என்றாலும், பா.ஜ.க.வுக்கு எப்படியும் முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தவேண்டுமே - அதற்காக இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பிகார் தோல்விக்குப் பிறகாவது காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி தலைவர்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் காண்பார்களாக!

-------- நன்றி விடுதலை (04-11-2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]