வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 11, 2010

அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?

2ஜி அலைக்கற்றை தொடர்பாக மானமிகு ஆ.இராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை; குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்ல வில்லை; இன்னும் சொல்லப்போனால், தணிக்கை அறிக்கையில்கூட இராசா லஞ்சம் வாங்கினார்; ஊழல் செய்தார் என்று குறிப்பிடப்படவில்லை.

வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற தன்மையில், தி.மு.க. தலை வர் முடிவெடுத்து அதன் அடிப்படையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேநேரத்தில், பா.ஜ.க.வின் கதை என்ன? பாபர் மசூதி இடிப்பில் எல்.கே. அத்வானி உள்பட பா.ஜ.க., வி.எச்.பி., மற்றும் சங் பரிவார்களைச் சேர்ந்த 49 பேர்கள் மீது இந்தியன் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சாதாரணமான குற்றங்களா? வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்கூட அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?

கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமலும், தார்மீகம் இல்லாமலும் பதவிகளை இறுகப் பிடித்துக்கொண்டு தானே கிடந்தனர்?

பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலத்த குரல் கொடுத்தும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், பதவி நாற்காலியில் ஆணி அடித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்களே!

ஆனால், ஆ.இராசா அவர்கள் குற்றப் பதிவு இல்லாமலே பதவியைத் தூக்கி எறிந்தாரே - இதில் யார் பெரிய மனிதர்? யார் கவுரவமானவர்? யார் மக்கள்நாயகத்தை மதிக்கக் கூடியவர் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா?

இதில் இன்னொரு கடைந்தெடுத்த வெட்கக்கேடு - இந்தக் குற்றப் பின்னணி உள்ளவர், பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுதான்.

இந்த அத்வானிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கரசேவகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். கரசேவகர்கள் மத்தியில் தூண்டுதல் செய்தார் என்று அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த அஞ்சு குப்தா சாட்சியம் சொல்லியிருக்கிறாரே - குறைந்த பட்சம் எம்.பி., பதவியையாவது தூக்கி எறிந்திருக்க வேண்டாமா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மும்பையில் அதன் எதிரொலியாகக் கலவரம் நடந்தது; 900 பேர் கொல் லப்பட்டனர்; பெரும்பாலும் இசுலாமிய சிறுபான்மை மக்கள்தான் படுகொலைக்கு ஆளானவர்கள்.

நீதிபதி சிறீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப் பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பா.ஜ.க., - சிவசேனா கூட்டாட்சி முற்றிலும் நிராகரித்து விடவில்லையா? நீதிமன்றம் தலையிட்டு, அந்த அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்பட்ட நிலையில், சிவசேனா தலைவர் பால்தாக்கரே முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதே - இதுவரை அவர்மீது நடவடிக்கை உண்டா?

முதலமைச்சர் பதவியைத் தூக்கி எறிவேனே தவிர, என் தலைவர் பால்தாக்கரேயை கைது செய்யமாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் சொல்லவில்லையா?

இந்த நிலையில் உள்ளவர்கள் ஆ.இராசாவை நோக்கிக் குற்றவாளி என்று விரலை நீட்ட யோக்கி யதை உடையவர்கள்தானா?

சிறைக்குள் இருக்கவேண்டிய குற்றவாளிகள், வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒருவர்மீது குற்றம் சுமத்தி வேட்டையாடுவது நியாயம்தானா?

பிகாரில் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உறுப் பினர்களில் 53 சதவிகிதத்தினர் மீது கிரிமினல் வழக் குகள் உள்ளன என்று தெரியவரும் நிலையில், அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆ.இராசா மீது குற்றப் பத்திரிகை படிக்க முன்வருகிறார்கள்?

குஜராத் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றமே அடையாளம் காட்டிய நிலையில், அவர் பதவி நாற்காலியை விட்டு விலகி நின்றதுண்டா?

நானாவதி கமிஷன் அறிக்கை வந்தபோது ஆடிப்பாடி மகிழ்ந்த சோ கூட்டம், லிபரான் ஆணை யத்தின் அறிக்கை வெளியில் வந்தபோது என்ன எழுதியது?

பாபர் மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது இந்தக் கமிஷன் அறிக்கைக்கு என்ன மரியாதை என்று கேட்கிறார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது நாடாளுமன்றக் கூட்டுக்குழு எதற்கு? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வலிமை அதிகமா? நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுக்கு வலிமை அதிகமா?

இரட்டை நாக்கு இரட்டை வேடம் என்பது பார்ப்பனர்களின் பிறவிக் குணம் என்று ஆபேடூபே சொன்னதுதான் எத்துணை உண்மை!

தமிழர்களே, பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!
(-------- நன்றி விடுதலை தலையங்கம் , 11-12-2010)



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]