வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 27, 2011

திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதி - பாரதிதாசன்

பாரதிதாசன் என்றால் அவர் ஒரு கவிஞர் _ பெரியார் பற்றாளர் _ பகுத்தறி வாளர் என்கிற அளவில் தான் நம் கழகத் தோழர்கள் உட்பட பலராலும் பொதுவாக அறியப்பட்டுள்ளார்.

அதையும் தாண்டி அவர் ஒரு இயக்கவாதியாக கருஞ்சட்டைத் தளபதியாக _ திராவிடர் கழகச் சீரிய போர்வாளாக இருந்தார் என்பதுதான் உண்மை.

தொடக்கத்தில் ஆன்மீகவாதியாக இருந்தவர்தான் இந்த கனக சுப்பு ரத்தினம்.

புதுவை மாநிலம் காரைக்காலை யடுத்த நிரவியில் ஆசிரியராக இருந்த போது மயிலாடுதுறையில் (1928-இல்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் உரையை முதன் முதலாகக் கேட்ட மாத்திரத் திலேயே இவர்தான் நம் தலைவர்; நமக்குரிய மய்யக் கருத்து இவரிடம் கிடைத்து விட்டது! என்ற உணர்வு பெற்று, அதுவரை அவர் மண்டைக்குள் புதைந்திருந்த பழைய பத்தாம் பசலி புராணக் குப்பை மேடுகளை ஒரு நொடியில் தூக்கி எறிந்தார் _ பெரியார் தொண்டர் ஆனார்!

மயிலம் சுப்பிரமணிய துதியமுது களைப் பாடிக் கொண்டிருந்த இந்தப் புலவனின் எழுதுகோல் அது முதல் புரட்சிப் படைப்புகளைப் பிரசவிக்க ஆரம்பித்தது. புராணப் புலவன் புரட்சிக் கவிஞன் ஆனதன் தொடக்கம் இதுதான்.

உண்டென்பார் சிலர்
இல்லை என்பார் சிலர்
எனக்கில்லை கடவுள் கவலை

என்ற நோக்கில் (Agnostic)இருந்த கவிஞர் நாளடைவில் தந்தை பெரியார் அவர்களின் நுட்பமிகு கருத்துக் கருவூ லங்களை அசை போட்டு அசல் நாத்தி கன் ஆனார்..

1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.

கடவுள் இல்லை என்பான் யாரடா?
தில்லை கண்டு பாரடா!

என்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக

இல்லை என்பேன் நானடா - அத்
தில்லை கண்டு தானடா!

என்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதி தாசன்.

பாடல் பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று;
பாடலெல்லாம் கடவுளுக்கு என்று இருக்கு மட்டும்
பாடலிலே புதுப்பாங்கும், புதுக் கருத்தும் பல்பொருளின்
நல்லழகும் உயர்வும் இந்த நாடு பெறல் முடியாது...
தன்னிலூறும் நல்நூற்றுக் கவிஞரும் தோன்ற மாட்டார்
மாடுகளும் வழக்கத்தால் செக்குச் சுற்றும்
மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்

என்று தந்தை பெரியாரின் கருத்து அடிச்சுவட்டில் தன் கொள்கைப் பயணத்தைத் தொடங்கினார் புரட்சிக் கவிஞர்.

சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கமானார். இதோ கவிஞர் எழுதுகிறார்:

அலைக் கூட்டத்தைக் கடல் என்பது உன் பிழை. நட்டுப் பார்ப்பதைவிட்டு நிமிர்ந்து நோக்கு; கடல் தெரியும். அது எத்தனை பெரிது; எத்தனை ஆழ முடையது; எத்தனை தெளிவுள்ளது; சமத்துவமுடையது; விடுதலையுடையது! சுயமரியாதைக் கடல் -_ மற்றொரு முறை கூறுகின்றேன்; அது பெரு நோக்க முடையது; ஆழ்ந்த கருத்துக்களுள்ளது. சமத்துவமும் விடுதலையுமுடையது.. சுயமரியாதைக் கொள்கையின் அளவு உன் கருத்தைப் பரப்பு; நீ அறிஞரால் அறிஞன் என்று கருதப்படுவாய்; அப்போது நீ ஓர் குள்ள மனிதனாய் இருக்க வழியில்லை; நீ பேரறிஞன் (பாரதிதாசன், புதுவை முரசு 27.4.1931) புரட்சிக் கவிஞர் குயில் இதழை நடத்தினார். அதில் திராவிடர் கழகச் செய்திகளை வெளியிட்டார்.

சாதி ஒழிக _ தமிழ்நாடு மீள்க என்னும் உயிர் மருந்தே கொள்கை யாகக் கொண்டு தமிழர் மானங் காக்கும் பெரியார் இயக்கத்தில், தி.க. இயக்கத்தில் உண்மைப் பற்றுடைய வர்கள் மட்டும் குயிலை எழுத்தால் பிற வகையால் ஆதரித்தால் போதும், அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவோரும் எழுதும் எழுத்துகள் வரவேற்கப்படும்
_ (குயில் 22.7.1958)
தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய இயக்கச் செய்திகளை சுருக்கமாக எழுதியனுப்புக. செய்திகளை அஞ்ச லட்டையில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.

குயில் 15.7.1958

கழகத் தோழர்களுக்கு புரட்சிக் கவிஞர் கட்டளை!

நன்றே செய்க! அதையும் இன்றே செய்க!

திராவிடர் கழக நிர்வாகிகள் (மாவட்ட ஒன்றிய, நகர) எப்படி துரிதப் பணி புரிதல் வேண்டும் என்பதை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமது குயில் ஏட்டில் எழுதியுள்ளார். இப்போதும் அது நமது பொறுப் பாளர்களுக்கு தேவை என்பதால் கீழே தருகிறோம்).

எந்த வட்டாரத்தில் திராவிடர் கழகக் கொள்கை பரவவில்லை? அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்குதல் வேண்டும்.

எந்த வட்டாரத்தின் தலைவரிட முள்ள உறுப்பினர் பட்டியல் குறுகலாய் இருக்கின்றது? -_ அந்தத் தலைவர் அப்பட்டியலை விரிவுபடுத்த வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொடி பறக்கவில்லை? _ அங்குக் கழகக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில் விடுதலை பரவவில்லை? _ அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணி செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை? _ அங்கு நல்லெண்ணத்தோடு பொறுப்போடு பரப்ப வேண்டும்.

இப்படியெல்லாம் நாம் கூறுவதால், எந்த வட்டாரத் தலைவரும், உறுப்பினரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

இன்று இந்த உலகத்தில் திராவிடர் கழக உறுப்பினர் போன்ற தன்னல மறுத்த தவத் திருவாளர்களைக் காண முடியாது. உடல், பொருள், ஆவி மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழர்களின் பொது நலத்திற்கு அளித்த - அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப் புறத்திலன்றி வேறு எங்கு காண முடியும்?

இத்தகைய மேன்மைப் பண்புடையவர்கள் சிறிது சோர்வு கண்டு நினைவுறுத்தினால், வருத்தமா அடைவார்கள்? மகிழ்ச்சியல்லவா கொள்வார்கள்!

ஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது இருபத்தையாயிரம் பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி, உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? என்று கேட்டால் _ அவர், நான் ஒருவன் தான் இருந்து தொண்டு செய்து கொண்டிருக்கின்றேன் என்கிறார். இன்னும் சில தலைவர்கள் அய்ந்து பேர் பத்து பேர் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

உறுப்பினர் கணக்கு இப்படியானால், கழகக் கொடிக் கணக்கு எப்படி என்றால் நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக்கின்றன. தி.க. கொடி எங்கே என்றால் கொடி எதற்கு என்று திருப்பிக் கேட் கிறார்கள். கொடிக் கணக்கு இப்படியானால், விடுதலைக் கணக்கு எப்படியென்றால், தலைவரை நோக்கி, இந்த ஊர்ப் புகைவண்டி நிலையத்தில்தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கிருந்தால் ஒன்று கொடுங்கள் என்றால் (ஏஜெண்டு) முகவர் இந்த ஊரில் இல்லை என்கின்றார்

இந்த நிலைக்கு அந்தந்த வட்டாரத் தலைவருக்கு நாணம் இருக்க வேண்டாமா? தலைவர் என்போரும், கழக உறுப்பினர் என்போரும், இரவு வரக் கண்டவுடன், இன்று நாம் கழகத்திற்கு _ கழக வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?

(ஆதாரம்: 1.7.1958 குயில் புதுவை)
இந்த அளவுக்குக் கழகச் செயல்பாட்டில் நேரடியாகப் புரட்சிக் கவிஞர் ஈடுபாடு கொண்டார் என்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும். புதுப்போர் என்னும் தலைப்பில் புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இதோ:

புதுப்போர்

சாதி ஒழிய வேண்டும் என்பதும்
தமிழக விடுதலை வேண்டும் என்பதும்
குள்ளக் கருத்தா? வெள்ளம் போன்ற
தமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ?
ஒழியாச் சாதி ஒழிய வேண்டும்
தமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும்
இன்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின்
கொள்கை அன்றோ? இந்தக் கொள்கை
வெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும்
அல்லல் தீரும் இழிவும் அகலும்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
தமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்;
பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்!
அரிய இவற்றை அவரை அல்லால்
எவரால் இங்கே சொல்ல முடிந்தது?
எவர்தாம் இதுவரை சொல்ல லானார்?
சொன்னார் பெரியார் என்பது மட்டுமா?
செய்தார் பெரியார் செய்வார் பெரியார்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
ஆயிரம் ஆண்டுகள் அகன்றன! வரலாறு
சாகவில்லை இருக்கக் கண்டோம்.
அவ்வர லாற்றில் ஓர் தமிழர் தலைவனைக்
கண்டதுண்டோ? காதுதான் கேட்டதா?
பெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை!
பெற்றோம் இன்று தான் பெரியார் தம்மை!
அன்புடையீரே அறிவுடைத் தமிழரே
பெரியார் எண்பது வயதும் பெற்றார்
இருக்கும் போதே விடுதலை எய்தலாம்
கட்சி வேண்டாம் கலகம் வேண்டாம்
எப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே!
எல்லா மக்களும் இரும்புக் குண்டுபோல்
ஒன்று படுதல் வேண்டும் இன்றே!
நன்று பெறுதல் வேண்டும் அனைவரும்!
திராவிடர் கழகம் சிறிய தன்றே,
அஃது பெரியார்க் குரிய தன்றே,
சாற்றுவேன்: அஃது தமிழரின் உடைமை!
பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்
அங்கி ருந்து கிளம்பும்! அரும்போர் நிறுவனம்!
பொதுப்போர்! புதுப்போர்! எழுக எழுக!

திராவிடர் கழகம் சிறியதன்று -_ அது தமிழரின் உடைமை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர்.

கழகத்தைப்பற்றிப் பாடிய புரட்சிக் கவிஞர் கழகக் கொடியைப் பற்றியும் பாடி மகிழ்கிறார்.

வைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும்
திராவிடர் மணிக்கொடி குறிக்கும்!
வாழ்விருள் தவிர்ப்பதோர் தனிப் பெரும் புரட்சியை
வரவேற்றல் கொடியின் நோக்கம்!
துய்யபன் னூறாயி ரந்திரா விடமக்கள்
கொடிநெடுந் தறியினைச் சூழ்ந்தே
தோய்கருஞ் சட்டையால் துயருளங் காட்டியும்
சுடர் விழிகள் நாளின்மேல் வைத்தும்
எய்யகோ வாரிரோ திராவிட மக்களே
ஆனஉம் மானத்தைக் காப்பீர்
அடிமையினை மிடிமையினை மாற்றுவீர் என்னவே
அழைத்தனர் இதை மறுத்தே
வையகம் எதிர்க்கட்டும்! அதிகார மக்கள்தாம்
வாட்படை யொடும்வரட்டும்
வன்சிறை இதோஎன்று காட்டட்டும்! திராவிடம்
மீட்பதெம் குறியாகு மே!

புதுச்சேரியில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது (1.10.1944).

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் பங்கு கொண்டனர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்பட பெண்கள் ஏறி வந்த குதிரை வண்டி கலகக் காரர்களால் தாக்கப்பட்டனர். விரைந்தார் புரட்சிக் கவிஞர் 100 பேர்கள் கொண்ட கலகக் கும்பல் புரட்சிக் கவிஞரைத் தாக்கியது (கலைஞர் அவர் களும் இம்மாநாட்டின் போது தாக்கப்பட்டார்).

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட் டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1957 நவம்பர் 26) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரை கடுங் காவல் தண்டனை ஏற்றனர். பலரும் சிறையில் செத்தும் மடிந்தனர்.

கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழி வாளர்கள் எல்லாம் சிறைப்பட்ட அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாடெங்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு கள் நடைபெற்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அத்தகு மாநாடுகளில் எல்லாம் பங்கேற்று சங்கநாதம் செய்தார். கடலூர் கி. வீரமணி, (அப்பொழுது அப்படித்தான் அழைக்கப்பட்டார்) டாக்டர் இரா. இராசமாணிக்கனார் ஆகியோர் அந்தக் கால கட்டத்தில் கழக மாநாடுகளில் பங்கேற்று கழகத்தில் தொய்வு விழாமல் பாடுபட்டனர்.

திருச்சிராப்பள்ளியில் 19.1.1958 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் புரட்சிக் கவிஞர் உரையாற்றினார்.

ஆதிக்கமில்லாத ஆட்சியொன்றே சுதந்திரம் ஆகும். அந்நியன் வெளியேறினால் மட்டும் போதாது; மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்பட்ட சட்டங்கள்தாம் மதிக்கத்தக்கவை. தமிழராயினும், முஸ்லிம், கிறித்தவராயினும் எல்லோரும் - _ இந்நாட்டின் தூய மக்களே ஆவர். பிறவியில் உயர்வு தாழ்வென்பது பயித்தியக்காரத்தனம்.

இதை நீக்கி தமிழர் பொது நலம் காணுவதே பெரியாரின் இயக்கம். அவர் முறைப்படி சாதிக்கு வழிகாணும் அத்தனை ஏடுகளும் திருத்தப்பட அன்றி எரிக்கப் பட வேண்டும். புரோகிதர் ஆட்சி ஒழிந்து மக்கள் நல ஆட்சி மலர வேண்டும்

(விடுதலை 25.1.1958) என்று அம்மாநாட்டுத் தலைமை உரையில் கர்ச்சித்தவர் நமது கவிஞர் பெருமான்.

வ.வெ.சு. அய்யரை வாங்கினார்!

புதுவையிலே ஒருநாள் சுப்பிரமணிய பாரதி, வ.வெ.சு. அய்யர், பாரதிதாசன் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வந்த அவர்களின் நண்பர் கிருட்டினசாமியின் கையிலே அப்பொழுது வந்த ஐஸ்டிஸ் பத்திரிகை இருந்தது. அதைக் கையில் வாங்கிய வ.வெ.சு. அய்யர் ஒரு புரட்டு புரட்டி விட்டுச் சொன்னார். என்ன கிருஷ்ணா! உத்தியோகம், பொருளாதாரத் துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சமநிலை அடைய வேண்டும் என்பதுதானே ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம். பிராமணரல்லாதார் அந்தச் சமநிலையை அடைய முயலும் காலமெல்லாம் பிராமணர்கள் சும்மாவா இருந்து விடுவார்கள்? அவர்களும் முன்னேறிக் கொண்டு தானே இருப்பார்கள்? எனவே, எக்காலத்திலும் பிராமணரோடு சமநிலை அடைய முடியாது! என்று அய்யர் கூறிவிட்டுச் சிரித்தார்.

அப்பொழுது பாரதிதாசன் நல்ல துடிப்பான இளைஞர். அவரால் பொறுக்க முடியவில்லை _ பொங்கி எழுந்து வெடுக்கென்று கன்னத்தில் அறைவதுபோல் கூறினார்:

பார்ப்பனரல்லாதார் மிகப் பெரும்பாலோர்; அவர்கள் உண்மையை உணர்ந்து அடிதடியில் கிளம்பி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று வீரமுடன் கேட்டார். பாரதியின் முன்னிலையிலேயே நடந்த நிகழ்ச்சி இது.

பாரதிதாசனின் இன உணர்ச்சிக்கும் சுயமரியாதை உணர்வுக்கும் தந்தை பெரியார் அவர்களின் விழுமிய தொண்டர் என்பதற்கும் சிறந்து எடுத்துக்காட்டு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக _ முத்தாய்ப்பாக _ திராவிடர் கழகம் இருக்கையில் தமிழா, உனக்கு ஏன் வேறு ஒரு கட்சி _ இயக்கம்? என்று புரட்சிக் கவிஞர் எழுப்பும் வினாவின்மூலம் அவர் அப்பழுக்கற்ற திராவிடர் கழக மாவீரர், கறுஞ்சட்டைத் தீரர் என்பது விளங்கும்.

இதோ அந்தப் பாடல்:

உனக்குமா ஓர் இயக்கம்? - அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ்நா டென்று பேர்வை என்றார்
வரலா றில்லை என்றான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம்பெரியார் இயக்கம் இருக்க உனக்குமா ஓர் இயக்கம்?
காங்கிரசுக் காரா உனக்குத்
தமிழன் என்று பேரா?
தீங்கிழைக்கும் தில்லி காலைச்
சேருவது உன் சீரா?
உனக்குமா ஓர் இயக்கம்?
தனியுடைமை பழித்தாய் - இது
வரைக்கும் என்ன கிழித்தாய்?
இனிய தமிழை அழிக்கும் தில்லியை
ஏத்தி வாலைக் குழைத்தாய்
உனக்குமா ஓர் இயக்கம்?
பார்ப்பானுக்குப் பிள்ளை நீ
தமிழர் நலத்தில் நொள்ளை
பார்ப்பான் கொள்ளை தனில் அசைக்க
முடியுமா ஓர் எள்ளை?
உனக்குமா ஓர் இயக்கம்?
செட்டுத் தமிழர் நெல்லை - சேர்த்தான்
மலையாளத்தின் எல்லை
கொட்டம் அடிக்கும் ஆட்சித் தொல்லை
குறைக்க உன்னால் ஆவ தில்லை
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழரசி கூலி - இங்கே
உனக்கு மென்ன சோலி?
தமிழ் ஒழிப்பானோடு கூடி
தமிழைச் செய்தாய் கேலி!
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ் பெருமை துணித்தான் - இந்தி
தமிழகத்தில் திணித்தான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம் பெரியார் இயக்கம் இருக்க
உனக்குமா ஓர் இயக்கம்?
நாம் தமிழர் தானா - இல்லை
நல்ல தலைக்குப் பேனா
ஏந்தியகை இட்ட கையை
ஒடிப்பதுவே கொள்கை ஆனால்
உனக்குமா ஓர் இயக்கம்?

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(குயில் 3.3.1959)


இதற்கு மேலும் ஆதாரம் தேவையா _ புரட்சிக் கவிஞர் கடைந்தெடுத்த இயக்கவாதி என்பதற்கு? திராவிடர் கழகத்தின் தீர மிக்க தளபதி என்பதற்கு?

----- விடுதலை,ஞாயிறு மலர் (27-04-2011)


Sunday, April 17, 2011

உண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா?

ஊழலை ஒழிக்கப் போவதாக உண்ணா விரதம் இருந்தவர்களின் பின்னணி குறித்தும், ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:


ஊழல் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அதை ஒழிக்க சிலர் திடீரென்று அவதாரம் எடுத்து, மலிவான விளம்பரம் தேடு வதும், அதன் மூலம் இந்தியாவின் அடுத்த மகாத் மாக்களாகவும் தங்களை உயர்த்திக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் தினமும் குளித்துக் கொண் டிருக்கவும் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் காண வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது!


உண்ணாவிரதம் பற்றி தந்தை பெரியார்

தந்தை பெரியார் மிகப் பெரிய தொலை நோக் காளர்; புது உலகின் மகத்தான சிந்தனையாளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் அடையாளம் காட்டி விருது வழங்கியது எவ்வளவு பொருத்தமானது என்பதை இப்போது அல்லது இனிவரும் நாள்களில் உலகம் உணர்ந்து கொள்ளும். காந்தியார் பட்டினிப் போராட்டம் - உண்ணா விரதம் - சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல் லாம் இறங்கிய அக்காலத்திலேயே பெரியார் ஒருவர் தான், இது பயமுறுத்திப் பணிய வைக்கும் விரும்பத்தகாத தவறான முறை (Coercive and Blackmailing) என்று துணிந்து கூறி அதனை வன்மையாகக் கண்டித்ததோடு, அம்முறை மூலம் வருங்காலத்தில் பொது ஒழுக்கக் கேடு வளர அடிகோலி வழிகாட்டியதாகும் என்று கூறியிருக் கிறார். பலரும் அய்யாமீது பாய்ந்தனர்; அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.


பட்டினிப் போர் தொடங்கிய திடீர் தலைவர்கள்!

திடீரென்று அன்னா ஹசாரே என்ற மராட்டிய சமூகப் போராளி - ஒருவர் ஊழலை ஒழிக்கத் தயாராகும் சட்டம் ஒன்றை விரைந்து நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்; ஏற்கெனவே கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டதை இப்போது விரைந்து - ஊழலில் யாரையும் விலக்கிடாமல் தண்டிக்கும் வண்ணம் சக்தி வாய்ந்த விதி முறைகளை உள்ளடக்கிய சட்டமாக அதன் வரைவு (Draft Bill) மசோதா அமைந்து, சட்டமாக வரும் குளிர்கால கூட்டத் தொடரில் விரைந்து நிறை வேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புது டில்லிக்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து பட்டினிப் போர் தொடங்கினார்.


பட்டினிப் போரின் அரசியல் பின்னணி!

ஊடகங்கள் அபார விளம்பரம் தந்தன. முக்கியமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடையிலே கவிழ்க்க விரும்பும் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக - அல்லது இடையில் அது கவிழ்ந்து திடீர்த் தேர்தல் வந்தால், பி.ஜே.பி. போன்ற ஆட்சி வாய்ப்பு இழந்த கட்சிகளுக்கு இது தீனியாகப் பயன்படும் என்ற உள்நோக்கத்தோடு, கோழி திருடியவனும் கும்பலில் சேர்ந்து கூச்சல் போடுகிறான் எனும் கிராமியப் பழமொழிக்கேற்ப, ஊழலில் தினம் தினம் குளித்து எழுவது கர்நாடக பி.ஜே.பி. அரசு; பி.ஜே.பி. ஆதரவு டிரஸ்ட்டுக்கு அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த அக்கிர மத்திற்காக உச்சநீதிமன்றத்தால் குட்டுவாங்கப்பட்ட அரசு, ஏற்கெனவே அவர்கள் கட்சித் தலைவர் பங்காருகள் டெகல்கா படம் மூலம் ரூபாய் நோட்டு களை வாங்கி வைப்பதை படம் பிடித்துக் காட்டியதை யெல்லாம் மறைத்து விட்டு, ஊழல் ஒழிப்புக் கோரசில் தங்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.



4 நாள் உண்ணாவிரதத்துக்குச் செலவு ரூ.50 லட்சமா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் ஒரு பிரச்சினையைச் சரியாக எழுப்பியுள்ளார்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? யார்? இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா?

4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள அவர் எப்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு குறிப்பிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லலாம்? - என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருக்கின்றனர் என்பதும், ஆர்.எஸ்.எஸ். சார்புடைய வர்கள் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறதே!

லஞ்சம் மட்டும்தான் ஊழலா?

அன்னா ஹசாரே என்பவர் நரேந்திரமோடியை வானளாவப் புகழ்கிறார். ஊழல் என்பது வெறும் லஞ்சம் மாத்திரம்தானா? உச்சநீதிமன்றத்தில் பொய் வழக்குகள் - புனை வழக்குகள் போடப்பட்டதற்கான கண்டனத் திற்கு ஆளானால் அது அப்பட்டியலில் வராதோ? நீரோ மன்னன் என்று மோடி உச்சநீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்படவில்லையா?

இந்த லட்சணத்தில் ஊழல் ஒழிப்புக்கு ஜெயலலிதா அம்மையாரும் கோஷ்டி கானத்தில் கலந்து குரல் கொடுப்பதுதான் வேடிக்கை!

அரசியல் கட்சி நடத்தும் எந்தத் தலைவரும் தேர்தல் நிதி வசூலிக்காமல் (பல வழிகளில்) தேர்தல்களில் ஈடுபடுவது - தத்தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது நடைமுறை சாத்தியம்தானா? மனசாட்சியோடு பேசினால் ஊழல் என்பதை சுவாசிக்காமல் (இன்றைய தேர்தல் முறை - செலவு கணக்கு காட்டும் முறை) எவராவது - அவர் எக்கட்சி யினராயினும் - உண்டா? ஊழலின் ஊற்று இங்கேயே இருக்கிறதே!

ஊழல் ஒழிப்புத் தேவைதான்! அதற்கு இப்படி விளம்பர ஸ்டண்ட் அடிப்பது, அதைக் காட்டி அச்சுறுத்தி ஒரு பதவி பெறுவது, அடுத்த ஜூனியர் தேசப் பிதா(?)வாக அவதாரம் தரிப்பது என்பதெல்லாம் சரியானது தானா?

நியாயமாக அவர் பதவியேற்று இருக்கலாமா? அரசியல் சட்டப்படி நாடாளுமன்றத்தின் பணியை - நீதித்துறையின் பணியை, சட்ட முறைக்கு எதிராக தாங்களே ஒரு கும்பல் கூடி குறுக்கு வழியில் நவீன ஊழல் ஒழிப்பு நாயகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வது தவறு அல்லவா?

இதனை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் பி.ஜி. வர்கீஸ் அவர்கள் நேற்று (16.4.2011) எழுதிய சிந்திக்கத் தூண்டும் கட்டுரையில் பல்வேறு கோணங்களில் நம் நாட்டு கிரிக்கெட் ஊழல் - சீரழிவு உட்பட பலவற்றைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்! (அதன் மொழியாக்கம் 2ஆம் பக்கம் காண்க.)

திருமதி ஷர்மிளா தாகூர் அவர்களும் இதே கருத்தினை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

உண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா?

இப்படி ஒருவர் திடீரென்று சாகும் வரை உண்ணாவிரதம் என்றவுடன் அரசு பணிந்து, அவர்கள் கேட்ட வரத்தை உடனே கொடுத்து விடுவது தவறான முன்மாதிரி அல்லவா? இது நாட்டை நாளைக்கு எங்கே இழுத்துச் செல்லும்?

தடி எடுத்து மிரட்டுபவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்ற நிலைக்கு அல்லவா கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்று கேட்டிருக்கிறார் - அப்பேட்டியில்.

தந்தை பெரியாரின் தீர்க்கதரிசனம் எவ் வளவு சரியானது என்பதை இன்று நடுநிலை யாளர்கள் பேசத் தொடங்கி, அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதைக் காண முடிகிறது.

ஊழலின் ஊற்றுக் கண்கள் எவை, எவை?

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கை களில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனை பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது!

 17-04-2011                                                                                    கி.வீரமணி,
                                                                                                       தலைவர் திராவிடர் கழகம்



Saturday, April 09, 2011

சோ ராமசாமியின் தகிடுதத்தமான வழி முறை.....


பார்ப்பனர்களின் சாமர்த்தியம் யாருக்கு வரும்? தங்களின் பேனாக்களை எப்படி வேண்டுமானாலும் அவர்கள் சுழற்றுவார்கள். அதைப்பற்றியெல்லாம் பார்ப்பனர்களோ விமர்சகர்களோ கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டன.

தி.மு.க. அறிவித்தது என்றவுடன் அ.தி.மு.க.வும் இலவசங்களைக் கடந்த தேர்தலிலேயே அறிவிக்க ஆரம்பித்து விட்டது. வரும் 2011 தேர்தலிலும் தி.மு.க. சில இலவசங்களை அறிவித்தது. அதனைக் காப்பி அடிப்பதுபோல அ.தி.மு.க.வும் தன் தேர்தல் அறிக்கை யிலே சில இலவசங்களை அட்டகாச மாக அறிவித்தது.

கலைஞர் அவர்கள் மிக்சி அல்லது கிரைண்டர் அளிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலோ ஃபேன், மிக்சி, கிரைண் டர் மூன்றுமே இலவசமாக அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவசர அவசரமாக துக்ளக் இதழ் (30-.3.2011) அட்டைப்படம் போட்டு கிண்டல் செய்யப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசங்கள் தொலைக்காட்சியில் வசந்த் அன்-_கோவின் விளம்பரம் என்று தன்னுடைய வித்தார ஒயிலைக் காட்டி னார் திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாள்.

அடுத்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையைத் தாண்டி இலவசங்கள் மலிவாக வாரி இறைக்கப்பட்டு இருந்தனவே -_ என் செய்வது! உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி போல பதறி விட்டார் மனுஷன்.

எப்படியும் ஜெயலலிதாவைக் காப்பாற்றித் தீரவே வேண்டும் என்ற தேள் கடியில் இருக்கிறாரே, - தனக்கே உரித்தான தகிடுதத்தமான வழி முறைகளைக் கையாண்டாவது அக்கிர காரத்து அம்மாவுக்கு வக்காலத்துப் போட்டு எழுத வேண்டுமே...

எல்லாவற்றிற்கும் அஞ்ஞானத்தைக் கட்டி அழும் அய்யர்வாள் இந்த முறை விஞ்ஞானத் தூரிகையைப் பிடித்து விட்டார்.

ஒரு வியாதி வராமல் தடுப்பதற் காகப் போடப்படுகிற தடுப்பு ஊசியில், அந்த நோய்க்கான கிருமிகளையே உள்ளே செலுத்தி, அந்த வியாதியைத் தடுப்பது மருத்துவப் பழக்கம். அந்த மாதிரி, தி.மு.க. ஆட்சி மீண்டும் வராமல் தடுக்க, தானும் இலவசங் களைத் தர வேண்டியதுதான் என்று அ.தி.மு.க. தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. (துக்ளக் 6.4.2011 பக்கம் 17) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இலவசம் கொடுப்பது தவறு -_ குற்றம் _ என்பது திரு சோவின் அழுத்தமான கருத்தாக இருக்குமேயானால் அவர் என்ன எழுதியிருக்க வேண்டும்? யார் அறிவித்தாலும் இலவசம் என்பது தவறானதுதான்  என்று அடித்து எழுதி யிருப்பாரே -_ அது அல்லவே சோ அய்யர்வாளின் நோக்கம்.

திமு.க. அறிக்கையில் இலவசம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதை வைத்துக் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் -_ கேலி செய்ய வேண்டும் என்பதுதானே அவரின் பரந்த நோக்கம்?

அ.தி.மு.க. அறிக்கை வரும் வரைகூட அவரால் காத்துக் கொண்டு இருக்க முடிய வில்லை - _ கார்ட்டூன் போட்டுக் கலை ஞரைக் காய்ச்சி எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா அம்மையாரோ கலைஞரையும் தாண்டி இலவசங்களை அறிவித்த நிலையில், அதனைக் கண்டிக்க முடியாத நிலையில், தன் மூக்கை தானே வெட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. அய்யங்கார் அம்மையாருக்கு ஹானி வந்து விடக் கூடாது என்பதிலே கவனம் செலுத்தி விட்டார் - _ அவ்வளவுதான்.

இதே சோ ராமசாமி ஜெயலலிதா வைப் பற்றி என்ன எழுதினார்?

குமுதம்: ஜெயலலிதாவுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இருக்கிற மிரட்டலான உறவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்!

சோ: ஜெயலலிதாவுக்குச் சம்பிரதாய மரியாதைகளை விழுந்து விழுந்து காட்டுகிறது பாரதீய ஜனதா. ஆனால் ஜெய லலிதாவின் கோரிக்கைகளை எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஜெய லலிதாவின் கோபம் இதுதான்.. இப்போ துள்ள நிலையில், அவங்க எதிர்பார்க் கிற தமிழக ஆட்சிக் கலைப் புக்கு. (தி.மு.க. ஆட்சிக் கலைப்புக்கு) சாத்தியமில்லை. (குமுதம் 19.11.1998)

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண் டும் என்று பி.ஜே.பி. யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்த நிலையில், மத்திய பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில்  அங்கம் வகித்த நிலையில், அழுத்தம் கொடுத்தார் ஜெய லலிதா என்பதை இதன்மூலம் சோ ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்தாண்டு காலம் ஆட்சியில் அமர்த் தப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பில் குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொல்லைப்புறம் வழியாகக் கவிழ்க்க எத்தனிக்கும் ஜெயலலிதா ஒரு ஜனநாயகவாதிதானா?

ஒரு வகையில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாத ஒரு கோழைத்தனமும், அறிவு நாணயமற்ற தன்மையும் இது அல்லவா! (அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்த போது தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கொடுத்த தொல்லையைப்பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் பேட்டி  ஒன்றும் இதே குமுதத்தில் (20.9.1999) வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது)



ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத இத்தகைய ஜெயலலிதாவைத் தான் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்று தவம் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் கவனிக்க வேண்டும்.

இன்னொரு கேள்வி அதே குமுதத்தில் குமுதம்: ஜெயலலிதாவின் செல் வாக்கு இப்போது எப்படி இருக்கிறது?

சோ: அவர்களே அதைக் கெடுத்துக் கிறாங்கன்னு நினைக்கிறேன்..

அவர்களுக்கு ஓட்டுப் போட்ட வங்களே _- மறுபடி அதை மறுபரிசீலனை  பண்ணுவாங்கன்னு தான் நான் நினைக்கிறேன்; பாரதீய ஜனதா உறவை ரிவ்யூ பண்ணுகிற மாதிரி மக்கள் இவங்களுக்கு ஓட்டுப் போட்டதைப் பற்றி ரிவ்யூ பண்ணிக்கிட்டிருக்காங்க.
இதன்மூலம் சோ என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதாவுக்கு ஒட்டுப் போட்ட வங்க - -_ இவங்களுக்கு ஏன் ஒட்டுப் போட்டோமுன்னு மறுபரிசீலனை பண்ணுவாங்க என்று சொல்லும் சோ அய்யர்வாள்தான் மீண்டும் ஜெய லலிதாவை முதல்வராகப் பார்க்க ஆசைப்படுகிறார்.

ஓட்டுப் போட்ட மக்களே வெறுக்கும் வகையில் நடந்து கொள்பவர்தான் ஜெயலலிதா என்பதற்கு சோவே சர்டிஃபிகேட் கொடுத்து  விட்டார்.

அதிலாவது அறிவு நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டாமா? ஆட்சிக்கு லாயக்கற்ற ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கலாமா? - _ இதுதான் அறிவு நாணயம் உடையோர் கேட்கும் கேள்வியாகும்.

இன்னொரு கேள்வியும் உண்டு - _ அதற்கு சோ அளித்த பதிலைப் படிக் கும் பொழுது -_ இவரா கலைஞரைப்பற்றி இப்படி சொல்லுகிறார் என்கிற ஆச்சரியம் ஏற்படாமல் போகாது.
குமுதம்: தி.மு.க.வின் எதிர் காலம் எப்படி இருக்கும்?

சோ: தி.மு.க. ஒன்றும் கலைஞ ருக்குப் பின்னால்  அழிந்து விடக் கூடிய கட்சி அல்ல; மாறன், அன்ப ழகன், ஸ்டாலின், யார் வேண்டுமா னாலும் கூட்டாக இயங்கலாம்.

குமுதம்: தற்போது தி.மு.க. ஆட்சி இயங்குகிறவிதம் எப்படி இருக்கிறது?

சோ: ஊழல் பெருமளவுக்குக்  குறைந்திருக்கு.. ஜெயலலிதா பீரியட் மாதிரி இல்லை.. கருணாநிதியின் கோப தாபங்கள் குறைந்த மாதிரி தான் தெரிகிறது. திரும்பவும் ராவணன் அது இதுன்னு பேசறதைப் பார்த்தால் பழைய லைனுக்கே போறாரோன்னு சந்தேகம் வருது.

இதுதான் சோ பேட்டி.

கலைஞருக்குப் பின்னால் தி.மு.க. நல்லபடி இயங்கும்; ஸ்டாலின் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்ட சோ இப்பொழுது அந்தக் கருத்திலே இருக்கிறாரா?

ஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்யக் கூடியவர். அந்த அள வெல்லாம் தி.மு.க. ஆட்சியில் கிடை யாது என்று சொன்னவர்தான் இவர்.

கலைஞர் என்று வரும்போது சோவை இடறக் கூடிய இடம்  _ இனவுணர்வு அடிப்படையில் இராவணன் அது -_ இது என்ன பேசுவதுதான். கலைஞர் அவர்களை அவர் தலைமையிலான ஆட்சியை சோ கூட்டம் வெறுப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் உரிய இடம் இதுதான்.

கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் அவர் சாதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை பார்ப்பன வட்டாரத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்தி விட்டன.

1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் (2)  தமிழ் செம்மொழி அங்கீ காரம்

(3) சித்திரை முதல் நாள் அல்ல தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு - _ சமஸ் கிருத மொழியில் இருக்கும் 60 ஆண்டுகள் தமிழுக்கான ஆண்டுகள் அல்ல _ தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது.

4) தீண்டாமை -_ ஜாதி ஒழிப்புத் திசையில் மிக முக்கியமான ஆக்க ரீதியான உருவாக்கமாகிய பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்.

5) தீட்சதர்ப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. வடலூர் வள்ள லாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது.

_ இத்தகு சமூக மாற்றத்துக்கான சட்டங்கள் தந்தை பெரியார் அவர்கள் கொள்கை அடிப்படையில் சட்ட ரீதியாக நிலை பெறச் செய்யப்பட்டு விட்டன.

இது பார்ப்பனீயத்தை ஆணி வேரோடு வீழ்த்தித் தூக்கி எறியக் கூடியவை என்பதுதான் சோ கூட்டத்துக்கு அடக்கப்பட முடியாத ஆத்திரச் சுனாமி.

அதே நேரத்தில் ஜெயலலிதா என்னதான் கேடு கெட்டவராக இருந்தாலும், மக்கள் விரோத மனப் பான்மை கொண்டவராக இருந் தாலும், லஞ்ச லாவண்யத்தில் உச்சியைத் தொடக் கூடியவர் என்று தெரிந்திருந்தாலும் அவர் ஆன்மிக வாதி -_ பார்ப்பனிய சடங்காச்சாரங் களில் மூழ்கிக் கிடப்பவர் _ கும்பகோணம் மகாமகத்துக்குச் சென்று வெளிப் படையாக முழக்குப் போடுபவர், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்காதவர் - _ என் பதையெல்லாம் தெரிந்த தெளிந்த நிலையில், பழையன வற்றையெல்லாம் புறந்தள்ளி, மீண்டும் நம்மள வாளான அக்கிர காரத்து அய்யங்கார், அம்மை யாரை அரியணையில் ஏற்றியே தீர வேண்டும் என்பதிலே மிக ஆத் திரம் கொண்டு செயல்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஒருவர் _ ஜெயலலிதாவைத் தவிர வேறு ஒருவர் வரக்கூடும் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகும்.

தேசிய இயக்கத்தால்கூட அது நடக்க முடியாத நிலையில், எப்படியோ திராவிட இயக்கத்தின் பேரால் ஒரு பார்ப்பனரை முதல் அமைச்சராகக் கொண்டுவர ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது _  அதனை நழுவ விடக் கூடாது என்று புத்திசாலித் தனமாக அவர்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனை நம் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லையே! இனநலம் பேசும் பேர்வழிகளேகூட இந்தச் சூட்சமத்தை உணர்ந்து கொள்ள வில்லையே!

சில தமிழ் எழுத்தாளர்கள்கூட இந்த இடத்தில் வழுக்கி விழு கிறார்களே!

இன்னொன்றும் பார்ப்பனர்கள் அடிமனதில் பதுங்கியுள்ள விடயம். பா.ஜ.க. எப்படியும் தமிழ் மண்ணில் வேர்ப் பிடிக்கப் போவதில்லை.

பா.ஜ.க.. நேரிடையாக தமிழ் மண்ணில் தலை எடுக்கா விட்டா லும். பா.ஜ.க.வின் கொள்கையை உடைய ஒருவர் முதல் அமைச் சராக வர வாய்ப்பு இருக்கும் போது, அதனை ஏன் நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கருது கின்றனர். அதுவும் திராவிட இயக் கத்தின் பேராலே அது நடக்கிற போது, அதைப் பயன் படுத்திக் கொள்ளாதது எவ்வளவுப் பெரிய படுமுட்டாள்தனம் என்று பார்ப் பனர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மத்தியில் பா.ஜ.க. அமைக்க அது பெரிதும் உதவும் என்பதும் சோ போன்றவர்களின் கணிப்பாகும்.

2009ஆம் ஆண்டில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக் கில் (13.5.2009 பக்கம் 4) எழுதியதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை விளங்கும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. பெறுகிற வெற்றிகள் நாளை மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமை யவும் உதவும். ஆனால் தமிழ கத்திலோ ஓரிரு தொகு திகளைத் தவிர மற்ற தொகுதிகளில் ஓட்டைப் பிளந்து தி.மு.க.விற்கு உதவக் கூடிய நிலையில்தான் பா.ஜ.க. இருக்கிறதே தவிர, மற்ற இடங்களில் பா.ஜ.க.விற்கு அளிக்கிற ஓட்டு, தி.மு.க.விற்கு உதவுகிற ஓட்டுதான் என்பதை யும் வாக்காளர்கள் மனதில் நிறுத்த வேண்டும் (துக்ளக் 13.5.2009 பக்கம் 4)

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவும் என்று சோ எழுதியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. பெயரில் ஜெயலலிதா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி. இதுதான் பார்ப்பனர் களின் திட்டம்.

பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், பார்ப்பனர்களின் இந்த அரசியல் கண்ணிவெடியின் தன்மையை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

ஈரோட்டுக் கண்ணாடியை ஒழுங்காக அணிந்து கொள்பவர்கள் துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொள் பவர்கள்கூட ஆரியக் கண்ணி வெடிக்குப் பலியாகக் கூடிய வர்களே!

---------- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (09-04-2011)


Thursday, April 07, 2011

சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் - தோழர் தா.பாண்டியன் மற்றும் தோழர் என்.வரதராஜன் ஆகியோர் பேசியது என்ன?

சேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (8.5.2007) அக்கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
அக்கூட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்த அமைப்பின் சார்பாக சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. (16.5.2007) அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் ஆகியோர் பேசியது என்ன?  (வக்கனை தெரிந்து கொள்ள படத்தை பார்த்து படிக்கவும்)
 
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி செயலாளரும்- இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்)கட்சியின் மாநில செயலாளரும் யார் மீது குற்றஞ்சுமத்தினார்கள்? இராமன் பாலத்தை இடிக்கலாமா இந்துக்களின் மனதைப் புண்படுத்தலாமா (Dr.நமது எம்.ஜி.ஆர் 26.7.2008) என்று சொல்லும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத்தானே கண்டித்தனர் - எதிர்த்தனர்.
 
சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்திற்குச் சென்று தடை வாங்கியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா. இப்பொழுது தா.பாண்டியன் என்ன சொல்கிறார்? இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்டு கட்சி என்ன சொல்லுகிறது?

அன்று ஜெயலலிதா மீது வைத்த குற்றச் சாற்றுகள் கூட்டணி என்னும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா? 30 வயது மகன் அப்பாவைப் பார்த்து நீதான் என் அப்பனா? என்று தோழர் தா.பாண்டியன் கேட்ட கேள்வி என்னாயிற்று? முதல் அமைச்சர் கலைஞர் முதல் கப்பலைத் தொடங்கி வைப்பார் என்றவர் தோழர் தா.பாண்டியன்-இப்பொழுது யார் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று கர்ச்சிக்கிறார்?

அந்தத் திட்டமே கூடாது என்பவரை முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தாண்டிக் குதிக்கிறார். ராமன் பாலத்தைச் சொல்லி ஒரு மக்கள் நலத்திட்டத்தை எதிர்ப்பது வெட்கக் கேடு என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வீறு கொண்டு பேசினார். இன்றைக்கு நிலை என்ன? அவர் அன்று சொன்ன அந்த வெட்கக்கேட்டுடன் கூட்டணி வைத்துள்ளனரே!
இவர்களுக்கு நாடு பெரிதா? நாலு சீட்டுகள் பெரியதா?  தமிழக வாக்காளப் பெரு மக்களே, சிந்திப்பீர்! நாட்டு நலனுக்கு வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் கூட்டத்திற்குப் பாடம் கற்பிப்பீர்! கற்பிப்பீர்!!
 
--- விடுதலை, 07-04-2011


Tuesday, April 05, 2011

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு துதி பாடும் யோக்கிய சிகாமணிகளுக்கு

/****************குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது****************/

எதுவுமே கிடையாதாம் குஜராத்துல மத்திய அரசில் அங்கோ பங்கோ கிடையாதாம்...என்ன கண்டு பிடிப்பு...இதனை சொல்ல வெட்கமா இல்லையே...காங்கிரஸ் உடன் எப்படி மோடி அங்கம் வகிப்பார்...மதவாதத்தின் மொத்த உருவம் மோடி...இந்த மோடி நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வர்நிக்கப்ட்டவர்...அப்படிப்பட்ட பேர்வழி நல்ல ஆட்சி கொடுக்கிறாராம்...

ஓட்டுக்கு பணம் கிடையாதாம்...டாஸ்மாக் கிடையாதாம்...யார் சொன்னது? போலி மது பானங்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கும் முதன்மை மாநிலம் குஜராத்...போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.

காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.


இப்பொழுது சொல்லுங்கள் மது ஒழிப்பு இருக்கிறதா குஜராத்தில்? மேலும் இந்த நீரோ மன்னன் மற்ற இன மக்களை வாழவிடாமல் கொன்று குவிப்பது மட்டுமே நல்ல ஆட்சியில் நடந்தேறுகிறது....உசார்! சோ பார்ப்பானோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தில் இருந்து கொண்டு மோடிக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் தோழர்களே...
 
****************

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
...
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன. *************/

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு பிரச்சாரம் செய்யும் பேர்வழிகளுக்கு தமிழகத்தின் நலம் கண்ணிருந்தால் தெரியும்...ரெண்டும் புண்ணாக இருந்தால் தமிழக அரசு செய்யும் நலன் எப்படி தெரியும்.....பெண்களுக்கு படிப்பறிவு கொடுக்குதாம் குஜராத் அரசு....... தமிழகத்தில் பெண்களுக்கு கல்வி அறிவு மட்டும் அல்ல......வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சொத்துரிமையும் வழங்கி, மற்றும் பல அறிய திட்டங்கள் தந்து பெரியாரின் பெண்ணியத்தை நிலைநாட்டி உள்ளது...

இந்தியாவின் ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து 35 சதவீதம் செல்லுகிறது

இந்தியாவில் பங்கு சந்தையில் 45 சதவீத பங்குகள் தமிழகத்தில் முதலீடு...

TATA,Hyundai,Ford,Reliance,Honda மட்டும் அல்ல கோவை,திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ஒரு துறை..சேலம் இரும்பு...ஓசூர் மருந்து மற்று இதர தொழில்கள்...இவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகிறது....மேலும் வளர்ச்சி அடைய பணிகள் மேற்கொண்டுள்ளது நம் தமிழக அரசு......இங்கு இந்த தொழில் பெருக்கத்தை மேலும் வலுப்படுத்த முயன்றால் விளைநிலம் போகும் என்று கூச்சல் போடுவார்கள்...குஜரத்தில் மோடி தத்தி முத்தி.....ஒரு சில தொழிற்ச்சாலை கொண்டுவந்தால் அது வளர்ச்சிக்கான முயர்ச்சியாம்......தமிழா இன உணர்வு கொள்...தமிழனாக இரு...
 
நல்லாட்சியோ ..நாடுமாறி ஆட்சியோ செய்யும்.. மோடி மஸ்த்தான் பற்றி மேலும் சில துளிகள்...

குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை.... உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.

புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?

ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே!
 
மேலே சொன்ன மோடிமஸ்தான் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்று நினைக்கும் கூட்டம்......பார்ப்பன அம்மையாரை தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறது ....உசார் தமிழர்களே...நிதானம் தேவை....சும்மா குடும்பம்...சொத்து,சொத்தது என்று சொல்லுவதை நம்பி மோசம் போகாதீர்கள்.....இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் வேலை பார்க்கும் தமிழக பார்ப்பனர்கள் கூட அங்கு வீடு வாங்கி வசிக்காமல் தமிழகம் நோக்கி வீறுநடை போடுகிறார்கள்...நல்லாட்சி என்றால் அங்கேயே இருக்கவேண்டியது தானே......ஏன்னா மோடியே சென்னையில் வந்துதான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் ..அய்யா வாங்க...அம்மா வாங்க  தொழில் தொடங்க..என்று.......தமிழ்நாட்டை பார்த்து அதில் ஒரு 15 சதவீதம் ஆவது குஜராத்தில் தொழில் வளர்ச்சி தொடக்கி தன் மீது படிந்துள்ள இந்துத்துவ கரையை மறைத்து...பார் பார் இதோ நானும் நல்லாட்சி செய்கிறேன் என்று  மோடி மஸ்தான் மார்தட்ட படும் பாடு...இங்கு உள்ள கலைஞர் எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள யோக்கிய சிகாமணிகளுக்கு கண்ணை மறைக்கிறது..........திராவிடர் இன உணர்வு கொண்ட தமிழா விழித்துகொள்....
 


Monday, April 04, 2011

பார்பனிய எதிர்ப்பு பேசினால் பார்பனர் பள்ளியில் படிக்க கூடாதா?

சில தோழர்களிடம் பெரியாரியம் மற்றும் திராவிடர் கழகத்தின் பிரதான கொள்கையான பார்ப்பனிய எதிர்ப்பு பற்றி விவாதிக்கும் போது, அந்த தோழர்கள் சுதாரிப்பாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு...சில புரிதல் இல்லாத கேள்வியை தொடுக்கிறார்கள்...அவர்களுக்கு பதில் கொடுத்தாலும் புரியவில்லை...உதரனத்திற்க்கு ஒன்று....நான் என் மகளை சென்னையில் உள்ள ஒரு CBSE கல்வித்திட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளேன்...அது பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடம்....இதனை அந்த தோழர் கேட்கிறார், பார்ப்பனிய எதிர்ப்பு பேசிவிட்டு நீங்களே பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடத்தில் சேர்ப்பது நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இல்லை என்று காண்பிக்கிறது என்றார்....

நான் கூறிய பதில், ஒருகாலத்தில் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்காதே என்று சொன்ன பார்ப்பனியம்...இப்பொழுது தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு? யார் ஆட்சியில் இருப்பதால்?.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட எங்கள் வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று என் மகள் பார்ப்பனர் நடத்தும் அந்த பள்ளியில் படிப்பது.......இப்படி எல்லா குழந்தைகளும் வரும் வரை உழைப்பது நம் கடமை இல்லையா?......இதனை சொன்னால் கொள்கையை விட்டு விலகிவிட்டேன் என்கிறார்......வாயால் சிரிக்க முடியவில்லை..





Sunday, April 03, 2011

கல்கி சொல்லுகிறது......தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம

கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்:



5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.


பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.
நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.


கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.


இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.   -------கல்கி 3.4.2011



தமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதா சொல்றாங்களே...?

தமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதா சொல்றாங்களே...?
அதெல்லாம் நீங்கதான் சொல்றீங்க. அரசியல்ல மட்டும்தான் அந்தப் புள்ளைங்க ஈடுபடணுமா? என் பையனை நான் நடிகனாக்க விரும்பலையா? டைரக்டர் ஆக்க விரும்பலையா?


எஸ்.ஏ.சந்திரசேகரனும், சிவகுமாரும் அவங்கவங்க பசங்களை நடிகர் ஆக்கலையா? சிவாஜி பையன் நடிக்க வரலையா? ராஜ்குமார் பையன் வரலையா? உங்க ஃபேமிலியில 10 பேரைக் கொண்டுவாங்க. போட்டி வரட்டும். நீங்க தோத்துட்டீங்க என்பதற்காக.... அவங்களைத் திட்டக்கூடாது. ஜெயிக்க முயற்சிக்கணும். கீப் ட்ரையிங்!


எனக்கு தமிழ்நாட்டில் கலைஞன் என்பதுதான் அடையாளம். சினிமாவில் விளையாட்டு காட்டினான், வித்தியாசமா கதை சொன்னான், உணர்ச்சிகளைக் குவிச்சான்னுதான் மக்கள் என்னை அங்கீகரிச்சிருக்காங்க. நான் அரசியல் ஞானம் உள்ளவன், உலகப் பொருளாதாரம் தெரிஞ்சவன், பூலோகம் தெரிஞ்சவன், மக்களுடைய வறுமை புரிஞ்சவன்னு எவனும் என்னை ஏத்துக்கிடலை.

தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயன்னு சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு, ஏன்னா, எந்த மொழிக்காரனும் வரலாம், இங்கே தலைவன் ஆகலாம், மந்திரி ஆகலாம். என் பாவப்பட்ட ஜென்மத்துக்கு இன்னும் அறிவு வரலை.


லஞ்சத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், சாப்பாடு கொடுப்போம், சட்டை கொடுப்போம்னு மைக் பிடிச்சுச் சொல்லிடலாம். திட்டம் என்னன்னு என்னிக்காவது பிராக்டிக்கலா சொல்லி இருக்கியா? எங்கள் மக்களை ஏமாற்றியவன் எவனாக இருந்தாலும், என்றைக்கு இருந்தாலும், அவனுக்கு அடி விழுவது நிச்சயம்!


விஜய், அஜீத்தும் அரசியலுக்கு வருவாங்கன்னு பேச்சிருக்கே?


அதேதான் திரும்பவும் சொல்றேன். எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், குதிக்கத் தெரியும், சண்டை போடத் தெரியும். அதனால், எனக்கு அரசியலும் தெரியும்னு சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.


காமராஜர், பக்தவச்சலம், கக்கன், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி அவங்கல்லாம் எங்கே....மக்களோட அடிப்படைப் பிரச்சினைகளே தெரியாத இவங்கள்லாம் எங்கே?



இயக்குநர் பாரதிராஜா பேட்டி ஆனந்தவிகடன் 12.1.2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]