வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 19, 2015

நூல்: கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்


கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்.
ஆசிரியர்:அ.அன்வர்உசேன்,வெ.பத்மனாபன்,
வெளியீடு :பாரதி புத்தகாலயம்.7,இளங்கோ தெரு, தேனாம் பேட்டை ,சென்னை - 600 018 .
பக்:96 , விலை : ரூ. 70/-

வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் ஏன் ?கஜினி முகமது சோமநாதர் ஆலயத்தைக் கொள்ளையடித்தது மெய்யா ?இல்லையா ?எல்லா முஸ்லிம் மன்னர்களும் கோவில்களை இடித்தார்களா ?இந்து மன்னர்கள் மசூதியை இடித்ததுண்டா? வேறுமத வழிபாட்டுத் தலங்களை இந்து மன்னர்கள்அழித்ததுண்டா ?இடிப்பு பற்றி பேசுகிறவர்கள் அக்பரையும் பாபரையும் பேசுவதில்லை ஏன் ?மசூதிக்கும் கோயிலுக்கும் என்னவேறுபாடு ?

இப்படி இயல்பாய் எழும் கேள்விகளுக்கு விடைதேடி -ஆதாரங்கள் தேடிச் சேகரித்து இந்நூலை ஆக்கியுள்ள அன்வருக்கும் பத்மனாபனுக்கும் பாராட்டுகள் .

முதல் அத்தியாயமே சூடாகவும் சுவையாக வும் துவங்குகிறது . கி.பி.835ல் பாண்டிய மன்னன் படையெடுத்து அனுராதபுரம் புத்த மடத்தைக் கொள்ளையடித்து புத்தர் சிலை யை மதுரைக்குக் கொண்டுவந்தான்; காலம் திரும்பியது சிங்கள அரசன் படையெடுத்துவந்து. புத்தர் சிலை யை மீட்டுச் சென்றான். ஏன்? புத்தர் சிலை அரசு அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்பட்டது என்பதை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளனர் .

“ தோற்ற மன்னனின் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்ல; மன்னனின் மனைவிகள், இதரப் பெண்கள் மட்டுமல்ல; தோற்ற மன்னனின் கடவுள்கள் கூட வெற்றிபெற்ற மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டன” என நூலாசிரியர்கள் சொல்வதுடன் ; அதற்கு ஆதாரமாக சோழர் , சாளுக்கியர் உட்பட பல இந்து அரசர்கள் அவ்வாறு செய்ததை எடுத்துக்காட்டி மநுஸ்மிருதி அதனை நியாயப்படுத்தியுள்ளதையும் பொருத்தமாகக் கூறியுள்ளனர் . இவையெல்லாம் கஜினி முகமது படையெடுத்து வரும்முன்பே இந்தியாவில் வழக்கமாக நடந்து வந்தது என்கிறார்கள்.

கஜினி முகமது செய்த கொடுமைகளை யும் அவனுக்கு இருந்த மதவெறியையும் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை ; அதே சமயம் கஜினி முகமது இந்துக்களை மட்டுமல்ல தனது சன்னி இனத்தைச் சாராத ஷியா மற்றும் இஸ்மாயிலி பிரிவினரையும் கொன்றதையும் பதிவு செய்துள்ளதோடு, வரலாற்றில் எப்படி மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளன என்பதையும் பிரிட்டிஷ் ஆட்சி பின்னிய வஞ்சக வலை மதமோதலுக்கு வழிவகுத்ததையும் கே. எம் முன்ஷி போன்றோர் பகையை விசிறிவிட்டதையும் விவரமாகக் குறிப்பிடுகிறார் . கஜினி, ஒளரங்கசீப் தவிர ஏனைய முஸ்லிம் அரசர்கள் கோயில் இடிப்பில் ஈடுபடவில்லை என்பதையும் அவர்களும் கூட மன்னரின் பெருமைக்குரிய கோயிலைத்தவிர வேறெதிலும் கைவைக்கவில்லை என்பதையும் மாறாக கோயில்களுக்கு மானியம் அளித்து உதவியதை யும் விவரிக்கின்றன .

கோயில்கள் இடிக்கப்பட்டது போல் மசூதிகளும் இடிக்கப்பட்டதுண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் கோயில் இடிப்பு அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் . புத்த, சமண வழிபாட்டுத் தலங்களை இந்துக்கோயில்களாக மாற்றியதையும் சொல்லிச் செல்கிறார்கள் .

கோயில்கள் கஜானாக்களாக இருந்ததாலும் அரசின் அதிகாரச் சின்னமாக இருந்ததாலும் இடிக்கப்பட்டன . அதே சமயம் மசூதிகள் அரசு அதிகாரச் சின்னங்களாக மாற்றப்படவில்லை. ஆன்மீகக் குறியீடாகவே கருதப்பட்டது என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்கள் .

அரசன் இந்துவோ, முஸ்லீமோ அதிகாரத்தை நிலைநாட்ட தோற்றவர்கள் மீதும் அடிபணிந்தவர்கள் மீதும் பண்பாட்டு ஆதிக்கம் செய்ய மதத்தைப் பயன்படுத்தினர். .கஜினி முகமதுக்கு இருந்ததுபோல் மதமாற்ற வெறி இதரர்களுக்கு இருக்கவில்லை ; இதன் அரசியல் பொருளாதார ,சமூகக் காரணங்களையும் நூலாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர் .

வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் உலகின் இதர பகுதிகளில் இருந்ததையும் கோடிட்டுக்காட்டி ; அரசர்களின் ஆதிக்க வெறியே அடிப்படைக் காரணம் என நிறுவுகிறார்கள். அதே சமயம் கடந்த கால சரித்திர நிகழ்வுகளுக்குப் பழிவாங்க எனக் கிளம்பினால் அதற்கு முடிவேது ? சங்பரிவாரின் நோக்கம் எவ்வளவு கொடு மையானது ; அவர்களின் வாதம் எவ்வளவு பிழையானது என்பதை தக்க சான்றுகளோடு நிறுவுகின்றனர் நூலாசிரியர்கள் .

கனகவிஜயன் தலையில் கல்லை ஏற்றி ஒரியக்கடற்கரை முதல் தஞ்சாவூர் வரை நடத்தியே கூட்டிவந்தான் சோழ அரசன் என தமிழ்நாட்டில் பெருமைப்படுவதுண்டு ; யோசிப்பவர்கள் நம்புவது சிரமம் . இது போலவே எழுதப்பட்ட வரலாறுகள் வென்றவரின் பெருமையைப் பீற்ற எழுதி வைத்திருப்பர் ;அதில் மெய்யைவிட கற்பனையும் கைச்சரக்கும் அதிகம் கலந்திருக்கும் ; அதனை அலசி உண்மையை மட்டும் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்தப்பாடம் இந்நூலில் உள்ளது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில் மதுரா , காசி என அடுத்து குறிவைக்கும் சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு வரலாற்றை, பண்பாட்டை சிதைத்து குறுகிய மதவெறி மோதலை சங்பரிவார் உசுப்பிவிடும் காலத்தில் இந்நூல் ஒரு காத்திரமான வரவு . இந்நூல் இன்றைய காலத்தின் தேவை . அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் . மதவெறியருக்கு பதிலடி கொடுக்க இதுபோன்ற நூல்கள் இன்னும் அதிகம் தேவை . இந்நூலை வாங்குங்கள் ! படியுங்கள்! உண்மையை ஊரறிய உரக்கச் சொல்லுங்கள் !

நன்றி: தீக்கதிர், 19-July-2015


Sunday, July 05, 2015

காவி ஆட்சி யோகிதை - பாஜக பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் குழந்தைத் திருமணம்


ராஜஸ்தானில் 53 வயதான பஞ்சாயத்து தலைவருக்கு 6 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த பிறகு படம் சமூக வளைதளங்களில் வெளியான பிறகு காவல்துறை செயலில் இறங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் மேவாட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமம் கிர்கர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ரதன்லால் ஜாட் (வயது 35). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.       மேவாட் நகரத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் சரண் என்பவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இவருக்கு கிர்கர் பஞ்சாயத்து தலைவர் ரூ30,000 கடனாக அதே கிராமத்தைச்சேர்ந்த ஜமுனாபாய் என்பவர்மூலம் பணம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக பணத்தைத் திருப்பித் தராததால் மேவாட் நகரத்திற்குச் சென்று உன்னால் பணம் கொடுக்க முடியா விட்டால் உனது பெண் குழந்தையை ரதன்லால் ஜாட்டிற்கு திருமணம் செய்து கொடுத்துவிடு இல்லையென்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார் ஜமுனாபாய்  என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சரண் தனது பெண் குழந்தையை திருமணம் செய்து தர முடிவுசெய்தார். இதனை அடுத்து ஜூன் மாதம் 29 ஆம் தேதி மேவாட் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கோவில் ஒன்றில் பார்ப்பனப்புரோகிதர் ஒருவர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின் போது ஜமுனா பாய் மற்றும் குழந்தையின் பெற்றோர்களுடன் ரதன்லாலில் உறவி னர்கள் பலர் கலந்துகொண்டனர். காவல்துறை தரப்பில் இந்தத் திருமணத்தில் சுமார் 40 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரதன்லால் ஜாட் ஏற்கெனவே திருமணமானவராக இருந்தாலும் அவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தபடியால் யாரும் அவரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இவரது திருமண ஆல்பம் சமூகவலைதளம் ஒன்றில் வெளி யானது. இந்தப்படத்தைப் பார்த்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேவாட் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கியானேந்திர சிங் நடவடிக்கையில் இறங்கினார். கிர்கர் கிராமத்திற்குச் சென்று ரதன்லாலைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: குழந்தைத் திருமணம் தொடர்பான படம் சமூகவலைதளத்தில் வந்ததை அடிப்படையாக வைத்து புகார் தெரிவித்தனர்.அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் ரதன்லால் ஜாட்டின் மீது குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் 2006 கீழ்  கைது செய்தோம் என்றனர்.
ஏற்கெனவே 2008-ஆம் ஆண்டு இவர் குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற போது பிடிபட்டு எச்சரித்து விடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடைத்தரகர் போல் செயல்பட்ட ஜமுனாபாய் தலை மறைவாகிவிட்டார். அவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக்கூறி மணம் முடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் தாங்களாகவே நீதிமன்றம் சென்று நீதிகேட்டது தொடர்பான செய்தி மார்ச் மாதம் விடுதலையில் தலைப்புச் செய்தியாக வந்தி ருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அதே மாநிலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது.    லலித்மோடி ஊழல் புகழ் வசுந்தரா ராஜே முதல் வராக உள்ள மாநிலம் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் மோடி பெண் குழந்தைகளுடன் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வானொலியில் அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : விடுதலை நாளிதழ், 05-07-2015


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு



துச்சம்

ஆசிரியர்: ஸ்ரீரசாவெளியீடு: காலம் வெளியீடு26, மருதுபாண்டியர் 4வது தெரு(சுல்தான் நகர்)கருமாரியம்மன் கோயில் எதிர் வீதிமதுரை - 625 002பக்: 64 விலை ரூ.60/-   (நன்றி : தீக்கதிர்,  05-07-2015 )


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு. எளிய நடையில் எழுதபட்டிருக்கும் கவிதை தொகுப்பு.



Tamil 10 top sites [www.tamil10 .com ]