வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 30, 2010

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

கருஞ்சிறுத்தைகளே_- கழகத் தோழர்களே, தமிழின உணர்வுள்ள பெருமக்களே, மொழி மானம் போற்றும் மூத்த தமிழ்க் குடி மக்களே!

கோவை உலகத் தமிழ் _ - மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.

காரணம் என்ன?

தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை_- தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.

தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.

தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?

தமிழர்கள்_- தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?

இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?

கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?

அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?

பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?

குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?

இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர்_- தி.மு.க. தொண்டர்களை,- பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.

தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல_ - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.

திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே_ அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?

எப்பொழுது வரும் ஜூலை 5 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?

சோற்றால் அடித்த பிண்டங்களா_ நாம் சுருண்டு கிடப்பதற்கு?

கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,

கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!

கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் , விடுதலை (30.06.2010)


Tuesday, June 29, 2010

மாணவர்களை சீரழிக்கும் கேம்ஸ் மையங்கள்

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்கள் வளரும் மாணவ சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றன.

 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முறையற்ற பல்வேறு வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் பொதுவாக தங்களது குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என பெற்றோர்கள் புகார் தெரிவிப்பதுண்டு.

 இந்நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்களில் சிக்கி தினமும் பல்லாயிரக்கணக்கில் பணத்தை வீணடித்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய மையங்கள் உள்ளன.

பந்தயப் போட்டிகள்: பொழுது போக்குக்காக விளையாடிய கார் பந்தயம், பைக் பந்தயம், சண்டை விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளை, இப்போது மாணவர்கள் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

 சுமார் 5 அல்லது 6 மாணவர்கள் இணைந்து ஒரு குழுவாக இந்த மையங்களுக்குச் செல்கின்றனர். இதே போன்று வரும் வேறு ஒரு குழுவினருடன் இந்த பந்தய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

 ஒரு தடவை விளையாடுவதற்கு சுமார் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.5000 வரை பந்தயம் கட்டுகின்றனர். குழுவின் தலைவர்கள் இருவரும் விளையாடுகின்றனர். இதில் ஜெயிக்கும் குழுவுக்கு மொத்த பணமும் போய்விடுகிறது.

பள்ளி,கல்லூரிகளை புறக்கணித்து...விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள மோகத்தினால், பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு இதில் புகுந்து விடுகின்றனர். பள்ளிக்குச் செல்வதுபோன்று கிளம்பி, இந்த மையங்களுக்குள் சென்று விடுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர். பள்ளி சீருடைகளுடன் மையங்களில் இவர்கள் விளையாடி வருகின்றனர்.

கடன் வைத்தும்...விளையாட்டு போதை தலைக்கு ஏற ஏற, பணம் தீர்ந்துவிட்டாலும், கடன் வைத்து விளையாடத் தொடங்குகின்றனர். கடன் தொகை சில சமயங்களில் ஒரு மாதத்துக்கு ரூ. 40 ஆயிரத்தைக்கூட தொடும் என்றும், ஒரு மாத முடிவில் தோற்றவர்கள் இதனை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இவர்களுக்குள் விதி உண்டாம்.

புதியவர்களுக்கு வாய்ப்பில்லை...கடன் வைத்தவர்கள் தங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால், பழகிய அல்லது பல நாள்களாக அந்த மையத்தில் விளையாடுபவர்கள், அவர்கள் வீட்டின் தொலைபேசி எண், வீட்டு முகவரி, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் அறிந்த பின்னரே பந்தயம் தொடங்குகிறது. பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர்களின் பகுதிக்கே சென்று தகராறு செய்யவும் தயங்குவதில்லை. இதனால் கடன் வைத்து விளையாடும் பந்தயத்துக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை எனவும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உரிமையாளர்கள்...சாதாரண கம்ப்யூட்டர் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.10லிருந்து ரூ.25, ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கேம்ஸ் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50லிருந்து ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட இரு குழுக்கள் ஒரு மணி நேரம் விளையாடினாலே ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேம்ஸ் மையங்களின் உரிமையாளர்கள் இதில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

நள்ளிரவு வரை...இவ்வாறு லாபம் கொழித்து பழக்கப்பட்ட கேம்ஸ் மையங்கள் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இதனால் நள்ளிரவு வரை இந்த பந்தய ஆட்டம் தொடர்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரிய இடத்து விவகாரம்...பெரிய இடத்துப் பிள்ளைகளும், நடிகர்களின் வாரிசுகளும், அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அதிக அளவில் இந்த மையங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவையெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்பதாலேயே இத்தகைய மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸôர் தயங்குகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் மாதம் தவறாமல் "கவனித்துவிடுவதால்' அவர்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை. இங்கு விளையாட வரும் பெரிய இடத்து பிள்ளைகள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களிலும் சில சமயம் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஏழை பெற்றோரின் கதி என்ன? பணக்கார வீடுகளில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. நடுத்தர வர்கத்து பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டு மோகம் தொற்றிக் கொள்வதால், அவர்கள் பணத்துக்காக வீடுகளிலேயே மோசடி செய்வதாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கவலை தெரிவிக்கின்றார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், தன் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்று இரவும் பகலும் உழைக்கும் பெற்றோரின் கனவில் மண்ணை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?

------------- நன்றி தினமணி (30.06.2010)




Monday, June 28, 2010

நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று திமிரோடு பேசும் நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

1916-_இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.
அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்-களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.

இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்-தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!

1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை _ பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது - _ சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்-பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் _ முதுகில் குத்துகள்!

இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்-தார் _ வெற்றியும் பெற்றார்.
ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநா-தரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.
வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரி-யார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரி-யார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.

பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.

அவ்வப்பொழுது இடையில் ஏற்-படும் தடைகளைத் தவிடு பொடியாக்-கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்-பட்-டோருக்கு இருந்து வந்த இட-ஒதுக்கீடு அகில இந்திய அளவில் அம-லுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.

42 மாநாடுகளையும் 16 போராட்டங்-களையும் அது நடத்தியது. ஒரு சமூக-நீதிக்காவலரை - _ வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்-றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்-கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2009_ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முசுலிம்கள் 16
முன்னேறியோர் 54

இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்-பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..

இவ்வாண்டு (2010) பொறியியல் கல்-லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.
 அதில் பிற்படுத்தப்பட்டோர் 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3
(இதில் பெண்கள் இருவர்)

எவ்வளவு பெரிய மாற்றம் _ மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!

இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்தது-போல குதித்தார்கள்.

இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்-பட்டுக் கொண்டு வருகிறது.

தகுதி போய்விடும் _ திறமை போய்-விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்-துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்-பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்-ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!
இலக்கை அடைவோம்!

அதுவரை சமரசங்களுக்கு
இடம் இல்லை,
இல்லவேயில்லை.
வாழ்க பெரியார்!
வெல்க சமூகநீதி! 

---------- நன்றி விடுதலை ஞரயிருமலர் (26.06.2010)

பார்ப்பனர்களே பதில் கூறுங்கள்..

கோவை_ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்குகளும், ஆய்வரங்கங்-களும், கவியரங்குகளும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்-தாய்ப்பாகவே ஒலித்தது.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.

இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.

ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.

தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் _என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.

மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் _ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.
பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பி-யிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?
நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்-களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்-மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசை-யான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்-ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்-பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்-தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வ-தற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்-படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?

நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்?_ என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.

இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

-------------- நன்றி விடுதலை தலையங்கம் (28.06.2010)

Friday, June 25, 2010

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே...

செம்மொழி மாநாட்டினால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இந்து ஒரு கட்டுரை பதில் சொல்லும்..இதுபோல் செம்மொழி மாநாட்டின்  பல ஆய்வு கட்டுரைகள் நம் திராவிடர் தமிழர் பண்பாடு பற்றி விவாதிக்கிறது. இதோ ஒரு ஆய்வு கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.....
 
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்கின்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்றுவரும் சூழலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துகளும் திராவிடத் தொடர்புகளும் என்ற பொருண்மையில் ஆய்வரங்கம் ஆராய்ச்சியாளர் அஸ்கோ பர்ப்போலா தலைமையில் செம்மொழி மாநாட்டில் நடைபெற்றது. சிந்துசமவெளி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஐராவதம் மகாதேவன், •ஷா யாதவ், ரோஜா முத்தையா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுந்தர் கணேசன், ஒரிசாவில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கட்டுரைகளை அளித்தனர். 

குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தற்போதுள்ள சில ஊர்கள், சில பெயர்களில் இருக்கும் ஒலிப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஊர், மக்கள், குழுக்கள் பெயரினை அப்படியே கொண்டிருப்பதாக ஆர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுக் கட்டுரை மூலம் விளக்கினார். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்கள், ஆறுகள், மலைகள், துறைமுகங்கள், தலைநகரங்கள் பழந்தமிழ்க் குடிகள், வேளிர், அதியர் போன்ற குறு"லக் குடிகள் பெயர்களை •னைவூட்டும் இடப்பெயர்கள் இன்றும் வழக்கதில் உள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேலும் முன்னகர்த்திச் சென்றால், சிந்துசமவெளி நாகரீகம் திராவிட நாகரிகம் என்பதை •றுவ முடியும் என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாககம் என்ற கருதுகோளும் (Dravidian Hypothesis) திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன்மொழிவுகளும் இந்தியவியலின் மிக முக்கியமான ஆய்வுக் களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. 

சிந்துவெளி நாகரிகம் தான்  திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக்கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஐராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள், சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்பிற்கான வாய்ப்பை பெயராய்வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப் பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாககத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப் பெயர்கள் உதவக்கூடம் என்று அஸ்கோ பர்ப்போலோ நம்புகிறார். இந்திய ஊர்ப் பெயர்களை குறிப்பாகத் தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கனிஸ்தான், ஈரான், இராக், அஜர்பைஜான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும் இந் நாடுகளின் ஊர்ப் பெயர்களை திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடப் பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.ஒருபுறம், சிந்து சமவெளிப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப் பெயர்கள் தற்போது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப் பெயர்களை அச்சுமாறாமல் அப்படியே நினைவுபடுத்துகின்றன.அதுமட்டுமன்றி, அவ் வடமேற்குப் புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின், பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குள்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழக் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத் தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்துபம் இடப் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. மறுபுறம் தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப் பெயர்களுடன் ஒப்பிடத்தக்க இடப் பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன், ஏராளமான சிந்துவெளி மற்றும் வடமேற்குப் புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப் பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப் பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்கு புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை.சிந்து சமவெளி நாககத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை, சிந்து, ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வழங்குவது இடப் பெயர்களைக் கொண்டு நிறுவுவது இயலும். குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்துவெளி திராவிடத் தொடர்புக்கு சான்றளிக்கின்றன.


இக்கட்டுரையாளர் தரும் தரவுகள் சில:ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் அச்சுமாறாமல் அப்படியே ஒலிக்கப்படும் பெயர்கள் வடபுலங்களில் உள்ளன.இப்பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்தால், சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம்.கடலுள் மூழ்கியதாகக் கூறப்படும் பஃறுளி ஆற்றின் பெயர் பக்ரோலி என்ற ஊரின் பெயராக இருப்பதைக் காணலாம். 


---------- நன்றி தினமணி (26.06.2010)

Tuesday, June 22, 2010

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும்

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் என்ற நூலை எழுதி வெளியிட்டுப் அண்மையில் புகழ் பெற்றுள்ளவர் பிலிப் புல்மேன் என்பவர். ஏசு, கிறிஸ்து என்ற இரு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியுள்ள இந்த நூலில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கடுமையாக விமர்சிப்பவராக ஏசுவை அவர் சித்திரித்துள்ளார். புல்மேன் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய Dark Materials என்ற நூல் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்-டியில் கூறியிருப்பது இங்கே தரப்படு-கிறது.

இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப் பற்றி கூறுகிறார்களே?

உண்மையில் அவ்வாறு கூறப்படு-வதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான் நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவ-தில்லை. வினைச்சொற்களால் அடை-யாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்-பது என்பது மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி, மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை
கொண்ட-வனல்ல நான் என்பது பொதுமக்-களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி அறியப்-பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து கொள்ளப்பட்-டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக் கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்? அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா-?

எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமான-தாக இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில் உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்-துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்பதெல்-லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்-தான். மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.

ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங் களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே தோன்றுகிறது.
 இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?

அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இரட்டையர்களின் முக்கியத்-துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ மதத்தைப் போலவே பழமை-யானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப் பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின் இயல்-புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.

கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?

வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப் படித்ததும்தான்.

கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம் போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?

எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால், கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும், கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு வழி-பாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது போன்று நான் அறிந்-திருக்கவில்லை. அவர்கள் கதை-களைக் கூற நான் முயலமாட்டேன்.

அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல் மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு. உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம் இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது. மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால் கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான் எப்-போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்-களின் தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின் கருத்து போன்றது என்ற குற்றச்-சாட்டு ஆதாரமற்றது, அடிப்படை-யற்றது.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா கிரெஸ்ட் எடிஷன் 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)


Monday, June 21, 2010

தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்?

தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றதற்குப் பிறகு _ உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக வரும் ஜூன் 23 முதல் 27 முடிய கொங்கு நாட்டில் (கோவையில்) நடைபெறவுள்ளது.

தமிழுணர்வு, தமிழன் உணர்வு உள்ள அனைவரும் இதனை வாழ்த்தி வரவேற்கவே செய்வர்.

வரவேற்காதவர்களில் பல பிரிவினர் உண்டு. தமிழை எதிர் கலாச்சாரமாகக் கருதும் இனப் பகைவர்கள் ஒருபுறம், அரசியல் காரணத்திற்காக அனல் கக்கும் பிரிவினர் இன்னொருபுறம்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இப்படி-யெல்லாம் காழ்ப்பு வெப்பு நோய்க்குப் பலியாகிக் கிடப்பது இன்று நேற்றல்ல.

தந்தை பெரியார் அவர்கள் தமிழன் என்கிற இனவுணர்வை ஊட்டுவதற்குப் பெரிதும் முயன்றார். பிரச்சாரம் செய்தார், பாடுபட்டார்.

ஆதீனகர்த்தர்களைக்கூட தமிழன் என்ற முறையில் அரவணைத்த சிறப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.

1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தில், அன்றைய பிரதம அமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகப் பச்சையாகவே கூறினார்.
நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பெருமைகளைப் புறக் கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமை ஸம்ஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலி ருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற ஸம்ஸ் கிருதம் தெரியாவிட்டால் மகாபெரிய விபத் தாகும்.

அது பணம் இருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிச்சை யெடுப்பதற்கு ஒப்பாகும்.(சென்னை லயோலா கல்லூரியில் பிரதம அமைச்சர் ராஜாஜி, 24.1.1937)

மக்களின் பேச்சு வழக்கிலில்லாத செத்த மொழி-பற்றி பார்ப்பனர்களின் முக்கிய தலைவரான ஆச்சாரியார் அருளிய கருத்து இது.

இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகிதம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெளிவாக்கியுள்ளன.

இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவில் உள்ள செம்மொழிகளுள் இந்தச் செத்துச் சுண்ணாம்பாகிப்போன சமஸ்கிருதமும் ஒன்றாகும்.

எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானாவது இதுபற்றி குறைகூறி எழுதுவதுண்டா? இந்த சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத்தான் தமிழகப் பள்ளிகளில் ஆச்சாரியார் திணித்தார்.

அந்தக்கால கட்டத்தில்தான் ஜாதி, மதம், ஆன்மீகம் என்பவற்றையெல்லாம் கடந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தார் தந்தை பெரியார்.

மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் தந்தை பெரியார் தலைமையில் அணிவகுத்து நின்றனர் என்றால், மொழியால், இனத்தால் ஒன்றுபடச் செய்த தந்தை பெரியார் அவர்களின் மிகப்பெரிய முயற்சியே அதற்கு விழுமிய காரணமாகும்.

உலகத் தமிழ் மாநாடுகள்மூலம் இந்த உணர்வை மேலும் மேலும் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?

அதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அரசியல் கண்கொண்டு பார்த்து தமி-ழர்கள் மொழியால்கூட ஒன்று சேரமாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கலாமா?
செல்வி ஜெயலலிதா அப்படி நடந்துகொள்-கிறார் என்றால், அதில் வியப்பதற்கு ஒன்று-மில்லை. ஆனால், தமிழர்களாக உள்ள சிலர் கோவை மாநாட்டின்மீது கறைச் சேற்றை வாரி இறைக்கலாமா என்பதுதான் நமது நியாயமான வினாவாகும்.

உலகெங்குமிருந்தும் 4000 தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று கருத்தரங்கில் கலந்து-கொள்-கின்றனர் என்றால், அது எவ்வளவுப் பெரிய பெருமை!

தமிழால்கூட ஒன்றுபட முடியாவிட்டால், நாம் எதில் ஒன்றுபடப் போகிறோம்? தமிழர்கள் சிந்திப்பார்களாக!

 விடுதலை தலையங்கம் (21.06.2010)


கரூரில் கழக மாநாடு களை கட்டும்!

கரூரில் இந்து முன்னணியினர் நேற்று மாநாடு _ அத-னையொட்டி ஊர்வல-மும் நடத்தினர். ஊர்வ-லப் பாதை முழுவதும் அநாகரிகமாகக் கூச்சல் போட்டுச் சென்றனர்.
உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பதா-கைகளை அடித்து நொறுக்-கினர். தட்டிக் கேட்ட தி.மு.க.வினரைத் தாக்கி-யும் உள்ளனர்.

ஜூலை 5 ஆம் தேதி அதே கரூரில் திராவிடர் கழக மாநாடு நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவிப்பு செய்-துள்ளார். இதற்கிடை-யில், இந்து முன்னணியி-னர் வன்முறையில் ஈடு-பட்டு வருகின்றனர்.

கரூரில் ஜூலை 5 ஆம் தேதி நடக்க இருக்-கும் மாநாட்டை கரூர் பொது-மக்கள் அரசிய-லைத் தாண்டி பெரிதும் ஆர்-வமுடன் எதிர்பார்க்-கும் நிலை ஏற்பட்டுள்-ளது.
முதலமைச்சர் கலைஞ-ரின் டிஜிட்டல் பேனரை கிழித்தவர்களை தட்டிக் கேட்ட தி.மு.க.வினர் 3 பேர் தாக்கப்பட்டனர். இதில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்-கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்-துறை-யில் புகார் செய்யப்-பட்டு உள்ளது.

இந்து முன்னணியின் 6- ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் கரூரை அடுத்த வெங்கமேட்டில் இருந்து பேரணி புறப்பட்-டது.

அப்போது வெங்க-மேட்-டில் இனாம் கரூர் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு செம்மொழி மாநாடு குறித்த டிஜிட்-டல் பேனர் வைக்கப்-பட்டு இருந்தது. அதில் இருந்த முதலமைச்சர் கலைஞரின் உருவ படத்தை பேரணியில் வந்த சிலர் கிழித்து உள்ளனர்.

இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த இனாம் கரூர் நகர தி.மு.க. துணை செயலாளர் ரவி (வயது 40), இளைஞர் அணி துணை அமைப்பா-ளர் தனபால் (41), சின்ன-தம்பி (47) ஆகிய 3 பேர் தட்டிக் கேட்டு உள்ள-னர். அப்போது பேரணி-யில் வந்தவர்கள் இவர்-கள் 3 பேரையும் கடுமை-யாகத் தாக்கி உள்ளனர்.

இதில் அவர்கள் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதைத்-தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்காக சேர்த்து உள்ள-னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற-வர்களை இனாம் கரூர் நகர செயலாளர் கே.கந்த-சாமி தலைமையில் தி.மு.க.-வினர் நேரில் சென்ற பார்த்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தி.மு.க.-வினர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்-னணியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்க-மேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 -------- நன்றி விடுதலை (21.06.2010)

                                                                                                                                                                   

Sunday, June 20, 2010

பார்ப்பனிய எதிர்ப்பை எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான்

முதலில் இதனை பற்றி எழுதவே கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் இணையத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை பற்றி  நிறைய கீழ்த்தரமான விமர்சனகளை பார்த்த பிறகு எழுத நேர்ந்தது.

பெரியாரின் குடியரசு தொகுதிகளை சில குழுக்கள் வெளியிடலாம் என்று இந்த உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது தான் தாமதம்...யாராரு என்ன என்ன விமர்சனம் செய்யணுமோ அனைவரும் விமர்சனம்...அதுவும் இந்த பார்ப்பன ஏடுகளுக்கு படு குசி. அதே போல facebook,twitter ப்ளாக் பூரா ஒரே விமர்சனம். அதில் ஒரு சிலர் கழகத்தை விட்டு சென்ற, கழகத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியில் அனுப்பப்பட்ட துரோகிகள். அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் தலைமையை ஒழிக்க இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டுகிரார்கலாம். அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை அடையாலப்படுத்தியவரேயே....அழிக்க ஆதரவு திரட்டுகிரர்கலாம். இன்றைக்கும் அவர்களுக்கு பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பு திராவிடர் கழத்தின் தலைமையினால் தான் என்பது  புரியுமோ என்னவோ?. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடலில் சொன்னதை போல...பார்ப்பனர்களுக்கு யாரை ஆதரித்தால் அவர்களுக்கு பாதகம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் ஒரு சில பார்ப்பன ஊடகங்கள் ஏதோ பெரியாரின் குடியரசு தொகுப்பை வெளியிட்டதில் மகிழ்ச்சி போன்று கொடி பிடிக்கின்றன. அவர்களுக்கு அந்த குழுக்களினால் எந்த பாதகமும் வந்து விட போவதில்லை.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்ப்பு வந்த அன்றே ஒரு அறிக்கையும் கொடுத்தார்கள். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பெரியாரின் நூல்களை (குடியரசு மட்டுமல்ல...அணைத்து பெரியார் நூல்களும்) வெளியிடலாம் என்று. இதில் என்ன தவறு. பெரியார் யாரிடம் ஒப்படைத்து சென்றாரோ அவரிடம் அனுமதி பெற்று வெளியிட வேண்டியது தானே? இதோ பெரியார் அவர்கள் (6.6.1964)-விடுதலையில் எழுதிய தலையங்கம்...

வீரமணி அவர்கள்  M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார்  வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும்  என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது "விடுதலை " ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் "விடுதலை"யை ஒப்படைத்து விட்டேன் .

"விடுதலை " பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி "விடுதலை"க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் "விடுதலை"யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் "விடுதலை "பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000  ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும்  நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே "விடுதலை"யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை "விடுதலை" நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி "விடுதலை"யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .

இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .

ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .

விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும்  5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .

ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .

நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில்  ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .

அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .

ஆண்டு மாத காலம் 60  நாள்களில் 2500  சந்தா .தினம் 42  சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200  சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு  கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் .  -விடுதலை(6.6.1964)

இதற்க்கு மேல என்ன வேணும். இப்படி சொன்னால், ஒரு சிலர் விவாதத்துக்கு வருகிறார்கள் விடுதலை மட்டும் தான் பெரியார் ஒப்படைத்தாராம்.குடியரசு அல்லவாம். என்ன அறிவாளித்தனம். குடியரசுக்கு மாற்று தான் விடுதலை. அதனை ஒப்படைக்கும் போது அப்புறம் குடியரசு யார் பொறுப்பு?. சரி இப்படி அனுமதி இல்லாமல் வெளியிட்டு நாளைக்கு பார்ப்பனர்களால் திரிபுவாதம் வந்தால் யார் பொறுப்பு? அப்போ பெரியார் திடல் தானே வரிந்து கட்டிகொண்டு வரவேண்டும்.

பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு தீனி போடத்தான் இது உதவும். மற்றபடி அய்யாவின் குடியரசை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவாது. உண்மையில் குடியரசு தொகுதிகளை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க நினைபவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட மாட்டார்கள். பெரியாரின் கொள்கை வாரிசு என்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி தான். அதில் ஒரு மாற்று கருத்தும் கிடையாது. பெரியாருக்கு எந்த இடையூறு வந்தாலும் முதலில் தட்டி கேட்பவர் அவராகத்தான் இருப்பார். பார்ப்பனிய எதிர்ப்பை இன்றைய சூழலில் எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான். மற்றவர்கள் பார்ப்பன ஊடகங்களின் முன்னர் தவிடு பொடியாகி காணாமல் போய்விடுவர். எச்சரிக்கை!
                                                                                                                                                                     

Saturday, June 19, 2010

சார் நாங்க பிராமணாஸ்தான் தமிழுக்கு நாங்க எதிரி இல்லை

தமிழ் மறைகளை வழங்கிய தெய்வத் தமிழ்ப் புலவர்களின் படிமங்-களுக்கு இங்கு இடமில்லை என்றும் தமிழ் மொழியில் குடமுழுக்குக் செய்யப்பட்ட அச்சிலைகளைத் தொடுவதே தீட்டு என்றும் ஒரு கோயில் நிருவாகம் கூறியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில்தான் அது.
பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து பாடிய திருஞான சம்பந்தர் உள்பட அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மற்றும் தமிழ் வளர்த்த அடியார்கள், மன்னர்கள், உலகப் பொதுமறை கொடுத்துச் சென்ற அய்யன் திருவள்ளுவர் என மொத்தம் 100 பேரின் உருவச் சிலைகளுக்குத்தான் இக்கோயில் நிருவாகம் இடமில்லை என்றும் அலட்சியப்படுத்தியுள்ளது.

ஏன்? என்ன காரணம்? சிவனடி-யார் திருக்கூட்டம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜனே முழு விபரத்-தையும் நம்மிடம் பேசுகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாடல்கள், தேவாரம், திருவாசகம் எனத் தமிழின் இதிகாசப் பாடல்களைக் கடவுளிடம் பாடுவதுதான் எங்கள் வேலை. பவானியில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முடிவு செய்தோம். அறு-பத்து மூன்று நாயன்மார்கள், தொகை-யடியார் ஒன்பது, பன்னிரு திருமுறை-களை அருளிய அருளாளர்கள், மாமன்னன் ராஜ ராஜசோழன், பெரிய புராணம் பாடத்தூண்டிய அநபாயச் சோழன், ஞானசாஸ்திரங்கள் கொடுத்த சந்தானக் குரவர்கள், வாழ்வியல் நெறி வழங்கிய அய்யன் திருவள்ளுவர் வரை 100 பேரின் திருவுருவச் சிலைகள் செய்து அதைத் தமிழில் குடமுழுக்கு நடத்திப் புண்ணிய ஸ்தலமான பவானி சங்க-மேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்குவது என்பதுதான் எங்கள் முடிவு. அதன்-படித் தமிழை நேசிக்கும் அடியார்கள், பக்தர்கள், அன்பர்கள் என்று பலரிட-மும் நன்கொடை பெற்று ஒவ்வொரு சிலையையும் சுமார் இருபதாயிரம் மதிப்பில் அய்ம்பொன்னில் மிக அழ-காக நேர்த்தியாகச் செய்து முடித்தோம்.

இந்த நிலையில்தான் முறைப்படி இந்து சமய அறநிலையத்துறையிடம் அணுக வேண்டும் என்று துறை அமைச்-சர் பெரியகருப்பனைச் சந்தித்தோம். 100 சிலைகளையும் நாங்களே தமிழில் குடமுழுக்குச் செய்து கொடுக்கிறோம். அதை அப்படியே சங்கமேஸ்வரர் கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து வழிபடலாம் என்றோம். அமைச்சரும் அதிகாரிகளிடம் கூறிவிடுகி-றோம் கொடுங்கள் என்றார். அதன்பிறகு கோவையில் உள்ள இணை-யாணையாளர் எங்களை அழைத்துக் கோயில் செயல் அலுவலருக்குக் கடிதம் அனுப்பி விட்டேன். நீங்கள் போய் அவரைப் பாருங்கள் என்றார்.
தீர்மானித்தபடி நாங்கள் குட-முழுக்கு (கும்பாபிஷேகம்) வேலையில் இறங்கினோம். 16.5.2010 அன்று காலை தமிழ்ப் பண்டிதர்கள் தமிழ் மந்திரங்கள் பாட தவத்திரு குன்றக்குடி பொன்னம்-பல அடிகளார் உள்பட தமிழ் அடியார்கள் பலரது முன்னிலையில் 100 சிலைகளுக்கும் தமிழில் குடமுழுக்குச் செய்து முடித்தோம்.

இந்நிலையில், பவானி சங்கமேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சக்தி சுகர்ஸ் நிறுவனங்களின் நிருவாக இயக்குநரான மாணிக்கம் எங்களிடம் தமிழா, சமஸ்கிருதமா என்ற புதிய பிரச்சினையை உருவாக்காதீர்கள். இங்குக் கோயிலில் ஒரு நடைமுறை உள்ளது. கோயில் குருக்கள் நீங்கள் கொடுக்கும் சிலைகளைத் தண்ணி தெளித்துப் புண்ணியாட்சனை செய்து சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்துதான் _ அதுவும் நல்ல நாள் பார்த்துத்தான் வாங்குவார்கள். இது உங்களுக்குச் சம்மதம் என்றால் அதன்படி செய்யுங்கள். இல்லையென்-றால் நீங்களே தனியாக ஒரு கோயில் கட்டி அந்த 100 சிலைகளையும் வைத்து வழிபட்டுக் கொள்ளுங்கள், தேவையில்-லாமல் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்றார்.

மீண்டும் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரனைப் போய்ப் பார்த்தோம். அவர், நீங்கள் தனியாகக் கோயில் கட்டிக் கொள்ளுங்கள், சிலைகளுக்கு இங்கு இடமில்லை என்று கூறிவிட்-டார். என்ன செய்வது என்றே தெரிய-வில்லை. குடமுழுக்குச் செய்யப்பட்ட 100 சிலைகளையும் எங்கள் அமைப்பின் நிருவாகி ஒருவரின் வீட்டில் வைத்துப் பூஜை செய்து பாதுகாத்து வருகிறோம். தமிழக முதல்வர் கலைஞருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். 63 நாயன்மார்கள், புலவர்கள், பண்டிதர்களின் திருமேனிச் சிலைகளைச் சமஸ்கிருதத்தில் மீண்டும் குடமுழுக்குச் செய்யாமல் அப்படியே கோயிலில் வைத்து வழிபாடு செய்ய உத்தரவிட முதல்வரால்தான் முடியும். அந்த நம்பிக்கையோடு உள்ளோம் என்றார்.
நாம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மாணிக்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். சக்தி சுகர்ஸ் நிருவாகம் பிறகு பேசுங்கள். என்ற பதிலையே தந்தது. கோயில் செயல் அலுவலர் பாஸ்கரனைக் கோயிலுக்குச் சென்று நேரில் சந்தித்தோம். அதெல்-லாம் யார் வேணும்னாலும் நான் அதைத் தர்றேன் இதைத் தர்றேனு சொல்லி வாங்கிக்க முடியுமா? அந்தச் சிலைகளை வைக்க இங்க இடம் இல்லை. அப்படியே வைக்கறதுனா இங்க உள்ள வழக்கப்படி -_ சமஸ்கிருதப்-படி-தான் நடக்கும். கோயில் அறங்காவலர் குழு முடிவும் அதுதான். அமைச்சர் வைக்கச் சொன்னார்னு சொல்றீங்க. அவரையே வந்து தமிழில் மந்திரம் ஓதி இடம் பார்த்து வைக்கச் சொல்லுங்க என வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

சார் நாங்க பிராமணாஸ்தான் தமிழுக்கு நாங்க எதிரி இல்லை. ஆனா, எங்கள் சமுதாய வழக்கப்படிச் சமஸ்-கிருதத்தில்தான் குடமுழுக்குச் செய்ய வேண்டும், சமஸ்கிருதம்தானே கடவுள் மொழி. அந்தச் சிலைகளை கொண்டு வந்தால் அப்படியே வழிபட முடியாது. தண்ணி தெளித்துத் தீட்டுக் கழிப்பது வழக்கம்தான். இதையெல்லாம் எங்கள் கருத்து என்று நீங்கள் எழுத வேண்-டாம் என் கோயில் குருக்கள் சிலர் பெயர் கூற விரும்பாமல் நம்மிடம் பேசி-னார்கள்.

அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் உலக-ளாவிய வளர்ச்சி பெற்றாலும் தமிழ் வளர்த்த புலவர்களும், தமிழ்மொழியும் நம் கோயில் கருவறைக்குள் கோயில் வளாகத்திற்குப் போகக்கூட முடியாமல் இன்னமும் அவாள் கூட்டம் தடுத்துக் கொண்டேதான் உள்ளது.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்-குள் 100 சிலைகள் நுழையுமா? சமஸ்-கிருதத்தால் தீட்டுக் கழிக்கப்படுமா? இவையெல்லாம் முதல்வர் உத்தரவில்-தான் உள்ளது.

- ஜீவாதங்கவேல்
நன்றி: நக்கீரன் 4.6.2010

தந்தை பெரியாரால் ஆரிய இறுமாப்பு ஆதிக்கக் கோட்டை தூள் தூளாக்கப்பட்டது.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் மனுதர்மம். அந்தக் காலத்தில் கல்வி என்பதேகூட சுருதி, ஸ்மிருதிகள்தானே! அவற்றைச் சூத்திரனுக்குச் சொல்லிக் கொடுத்தால் அந்தப் பிராமணன் நரகத்திற்குப் போகவேண்டும் என்று கற்பவனுக்கும், கற்பிப்பவனுக்கும்கூட தண்டனை என்கின்ற கொடுமை!

வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் அந்தத் தடை கொஞ்சம் உடைக்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில் பாதை அமைக்கப்பட்டு செப்பனிடப்பட்டது.

தந்தை பெரியார் என்ற மாபெரும் சகாப்தத் தலைவரின் எரிமலைப் பிரச்சாரத்தால், பூகம்பப் போராட்டங்களால் இமய-மலைபோல தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஆரிய இறுமாப்பு ஆதிக்கக் கோட்டை தூள் தூளாக்கப்பட்டது.

பார்ப்பனர் இரண்டுமுறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுண்டு. 1937_39 இல் உடம்-பெல்லாம் மூளை உள்ளவர் என்று அக்கிரகார சரகத்தால் ஏற்றப்பாட்டுப் பாடப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி-யார் (ராஜாஜி) 2500 கிராமப்பள்ளிகளை இழுத்து மூடினார். அதற்கு அவர் சொன்ன காரணம் விசித்திரமானது என்று சொல்வதைவிட பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்-படுத்தக் கூடியது.

மதுவிலக்குக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே பள்ளிகளை இழுத்து மூடுவதாகச் சொன்னார்.

சரி, 1952 இல் மறுமுறை சென்னை மாநிலத்தின் முதல-மைச்சராக வந்தாரே _ அப்பொழுதும் என்ன செய்தார்? 6000 தொடக்கப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தினார்.

தந்தை பெரியார் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட அரிய கருவூலமான பச்சைத் தமிழர் காமராசரைக் கொண்டு, ஆச்சாரியார் இழுத்து மூடிய 6000 பள்ளிகளைத் திறக்கச் செய்ததோடு அல்லாமல், மேலும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறக்கச் செய்தார் தந்தை பெரியார்.

இலவசக் கல்வி, இலவச புத்தகங்கள், இலவச சீருடை, மதிய உணவு என்று அலை அலையாகச் சலுகை மழை பெய்து, கல்வி என்றால் என்ன என்று அறியாத குக்கிராமத்துக் குப்பன் வீட்டுப் பிள்ளைகளும் கல்விக் கூடங்களில் காலடி வைக்கும் சகாப்தம் பிறப்பெடுத்தது.

இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் வண்ணம் 1928 ஆம் ஆண்டிலேயே வகுப்பு வாரி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து ஆண்டாண்டு காலமாக அடிமை மாடுகளாக நடத்தப்பட்டுக் கிடந்த _ தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்-களுக்கும், கல்வி வேலை வாய்ப்பு வாய்க்கால்கள் திறந்து விடப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்னும் அசல் மனுதர்மச் சட்டம், முதலாவதாகப் பலி கொண்டது தமிழ் மண்ணின் வகுப்புரிமைச் சட்டத்தைத்தான் _ அதற்காகவும் போராடி முதல் திருத்தம் கொண்டு வருவதற்கும் காரண கர்த்தாவாக இருந்த காலக்கதிரவன் தந்தை பெரியாரே!

தமிழ்மண் கொடுத்த அந்த சமூகநீதி ஒளி இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி காரிருளை காணாமற் போகச் செய்தது.

இந்தியா முழுமையும் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் 27 விழுக்காடு கொண்டு வந்ததற்குக் காரணம் திராவிடர் கழகமும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுமேயாகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் கலைஞர் தலைமையிலான ஆட்சி செய்த ஒரு புரட்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர், மாணவி-யர்-களின் பெற்றோர் பட்டதாரிகளாக இல்லாவிட்டால், இந்த முதல் தலைமுறையினர் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவை-யில்லை என்று முதலமைச்சர் மானமிகு மாண்பு-மிகு கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்!

அதன் பலனின் மாட்சியை என்ன சொல்ல! இந்த வகையைச் சேர்ந்தவர்கள் இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளில் 78086 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் 6440 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

தகுதி மதிப்பெண்களைக் குறைத்ததாலோ, கட்டணம் கிடையாது என்று அறிவித்ததாலோ கல்வியின் தரம் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

தேர்வில் வெற்றி பெறாத எவருக்கும் பட்டங்கள் வழங்-கப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, தகுதி_திறமை தரைமட்டமாகிவிடும் என்று கருதிட இடம் இல்லை.

இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு, உயர்-ஜாதி-யினருடன் போட்டிப் போட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்-தப்பட்ட மாணவர்கள், தங்களின் தனித்தகுதிகளை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக 2009 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி தேர்வில் பொதுப் போட்டியில் 460 இடங்கள் என்றால், அதில் பிற்படுத்தப்பட்டோர் 300; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72; தாழ்த்தப்பட்டோர் 18; முசுலிம்கள் 16; உயர்ஜாதியினர் 54.

அதேபோல, மருத்துவக் கல்லூரி கட் ஆஃப் மதிப்பெண்ணில் 200_க்கு 200 வாங்கியோர் 8 பேர்; அதில் பிற்படுத்தப்பட்டோர் 7; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர். உயர் ஜாதியினர் எவரும் இலர்.

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? வாய்ப்புகள் கொடுத்தால், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள் என்பதைத்தானே காட்டுகிறது.

தொழிற்கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் சேருவது தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் ஒளிரும் வைரக்கல்லாகும்.

--------------- விடுதலை தலையங்கம் (17.06.2010)

Friday, June 18, 2010

கும்பகோணம் மகாமகத்துக்கும் விடுமுறை..செம்மொழி மாநாட்டுக்கு விடுமுறை கூடாதா?

இராமாயணக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆரியர் திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்று முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலை-ஞர் அவர்கள் சொன்னது எவ்வளவுத் துல்லிய-மானது என்பதற்கு எங்கேயோ போய் ஆதாரங்-களைத் தேடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை அங்கீ-கரிக்கச் செய்த காலம் முதல், கோவையில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்புக் காலந்தொட்டு இந்தப் பார்ப்பன சக்திகள் பேசும் _ எழுதும் _ கக்கும் நச்சுக் குண்டுகளைப் படிக்க _ கேட்கச் சகிக்கவே இல்லை.

தமிழ் செம்மொழியாக ஆகிவிட்டால், கத்தரிக்-காய் விலை குறையுமா? ஏழை நெசவாளர் வீட்டுத் தறி தடங்கல் இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா? என்று கேட்டது தினமலர் கூட்டம்.

திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறந்துவிட்டதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுமா என்றும் அதே கும்பல் கேட்டது.

கோவை செம்மொழி மாநாடு குறித்து மய்யப்-பாடலை முதல்வர் கலைஞர் எழுதினார் என்ற-வுடன், வேறு வழியில்லாமல் திரிபுவாதத்தில் குதித்துவிட்டது துக்ளக் திரிநூல் வகையறா.

இந்து மதத் தத்துவத்தை உள்ளடக்கிய பாடல் அது என்று தன் முதுகைச் சொரிந்து கொண்டு தன் ஆற்றாமையைப் பரிதாபமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வருணாசிரமத் தர்மத்தின் ஆணி-வேரை வெட்டி எறியும் குறளைக்கூட தன் கேடு-கெட்ட புத்திக்கு ஏற்றாற்போல திரிபுவாதத்தில் இறங்கி-விட்டது.

கீதைக்கு வேட்டு வைத்த நூலாயிற்றே திருக்குறள் _ நூலோர் கூட்டத்துக்குப் பொறுக்குமா?

பார்ப்பனப் பெண்ணுக்கும், ஆதிதிராவிடர்க்கும் பிறந்-தவர்தான் திருவள்ளுவர் என்று எழுத-வில்லையா இந்த இழிகுணத்தார்கள்.

கோவை செம்மொழி மாநாட்டைக் கொச்சைப்-படுத்தும் தனிக் கட்டுரைகள் _ கேள்வி பதில் என்ற பெயரால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் கோணங்கித்தனம் அப்பப்பா பொறுக்க முடியாது.

கோவை செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துவிட்ட-தாம். அனலில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடிக்கிறது துக்ளக். மாணவர்களின் படிப்பு என்-னாவது என்று கசிந்துருகிறது. தீபாவளி வாண-வேடிக்கை என்கிறது. (அப்பாடியாவது தீபாவளி வாணவேடிக்கை தேவையில்லாதது _ வீண் செலவு என்று ஒப்புக்கொள்கிறதே_ அதுவரைக்கும் அதன் புத்தி தெளிவடைந்திருந்தால் வரவேற்கலாம்-தான்).

செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்-களுக்கு விடுப்பு விட்டால் கன கோபம் வருகிறது. ஊரில் கும்பாபிசேகம், கோயில் திருவிழா என்ற பெயரால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறதே _ கேவலம் கிரிக்-கெட் போட்டிக்குக்கூட விடுமுறை அளிக்கப்படு-கிறதே_ அப்பொழுது எங்கே போனது இந்த துர்வாசர்களின் துர்நாற்றம் பிடித்த எழுதுகோல்கள்!

மூத்திரைக் குட்டையில் குளிக்கும் கும்பமேளாவுக்கும், கும்பகோணம் மகாமகத்துக்கும் விடுமுறை அளிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. ஓரினத்துக்கான உயர் செம்மொழிக்காக மாநாடு நடத்தும்போது மட்டும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது  ஏன்?

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்காக ஓர் ஆண்டையே அறிவித்து கோடிக்கணக்கான ரூபாயை பாரதீய ஜனதா ஆட்சி கொட்டி அழுததே _ அப்பொழுது இந்தக் கூட்டம் எதிர்த்து எழுதியதுண்டா?

தமிழில் எழுதிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களின் காசுகளைக் கல்லாப் பெட்டியில் நிரப்பிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழையும், தமிழர்களின் தனிப் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் இந்தக் கும்பலைத் தமிழர்கள் அடையாளம் காணவேண்டாமா?

தமிழா இனவுணர்வு கொள்!, தமிழா, தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் உணர்வூட்டும் முழக்கங்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டாமா?
தமிழை நீஷப் பாஷை என்று சொன்ன சங்கராச்சாரியார் கும்பலை _ அவரின் அடியாள்களை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டாமா? அந்த இன எதிரிகளின் ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இக்காலகட்டத்திலாவது தமிழர்கள் சூளுரை எடுப்பார்களாக!

---------- விடுதலை தலையங்கம் (18.06.2010)

Thursday, June 17, 2010

ஆன்மீகத்தில் அசல் என்ன? நகல் என்ன?

கும்பகோணத்திற்கு டிக்கெட் வாங்கி-விட்டுக் கோயம்புத்தூர் ரயிலில் ஏறிப் பாதியில் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு அவமானப்படும் புத்திசாலிகள் இவரைப்போல் பலர் உண்டு. அந்த இவர் சாருநிவேதிதா எனும் எழுத்தாளர். இவர் கற்றுத் தேர்ந்த ஆன்மீகப் பகுத்தறிவால் ஆரம்பத்திலேயே நித்தியானந்தா ஒரு போலி என்று எச்சரிக்கவில்லை. பாமரர்-கள் ஏமாறுவதில் வியப்பென்ன?

நித்தியானந்தா சாமியாரின் பேச்சுத்திறமை, எழுத்துத் திறமை, ஹீலிங்சக்தி ஆகியவற்றால் ஈர்க்கப்-பட்ட சாரு நிவேதிதா சாமியாரின் பப் டெக்னிக்கில் (பெண்களுக்கு மது இலவசம்) சுத்தமாக விழுந்து விட்டாராம். நித்தியானந்தா சாமியார் பேசியதும், எழுதியதும் சொந்தச் சரக்கல்ல, திருமூலரின் திருமந்திரம் நூலில் இருக்கும் கருத்துகளின் பிரதிதான் என்பதுகூடப் புரியாத பாமர எழுத்தாளரே சாருநிவேதிதா என்பதை எண்ணிப் பரிதாபப்படுகிறோம்.

நித்தியானந்தா போன்ற சாமியார்களைக்கூட மன்னிக்கலாம். ஏனென்றால் கடவுளின் பெயரால் ஏமாற்றுவதும், மோசடி செய்து பணம் சேர்ப்பதும் அவர்களின் இயற்கையான குணம். ஆனால், நித்தியானந்தா மட்டுமே மோச-மானவன் என்றும் ஆன்மீகம் அற்புதச் சக்திகளை வழங்கவல்லது என்றும் இன்னமும் ஆன்-மீகத்துக்கு வக்காலத்து வாங்கும் சாரு நிவேதிதாக்-கள் ஆயிரம் நித்தியானந்தாக்களுக்குச் சமம்.

ஒரு போலிச் சாமியார் செய்த அநியாயத்தால் எப்படி நம்மைச் சுற்றி இயங்கும் பிரபஞ்சச் சக்தியின் எல்லையற்ற அற்புதங்களையும் அதிசயங்-களையும் பகுத்தறிவு என்ற அளவு-கோலால் நாம் அளக்க முடியும்? எந்தப் பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் களிமண் உருண்டைகளைப் போன்ற கணக்கற்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சூட்சும விதிகளை எப்படிப் பகுத்தறிவால் புரிந்து கொள்வது?---- தத்துவமேதை சாரு நிவேதிதா உதிர்த்திருக்கும் இந்த மணி வாசகங்கள் போதும், இந்த ஆன்மீகப் புரோக்-கரின் அறிவுக் கூர்மையைப் புரிந்து கொள்ள.

தன்னுடைய ஆன்மீக நியாயத்திற்கு வலுச்-சேர்க்க இயேசுவையும், ஆதி சங்கரரையும், வள்ள-ளா-ரையும் சாட்சியமாக்குகிறார். இந்தக் கதை-களை எல்லாம் கண்டவர்கள் எவரும் இல்லை. சொன்னவர்களும் யார் என்று தெரியாது. மூச்சை அடக்கினால் சாவே இல்லை என்று போதித்த திருமூலரும் செத்துப்போனார்.

தோன்றுவதும், அழிவதும் இயற்கையின் பொதுவிதி. கடவுள் என்று எதுவும் இல்லை. கிரகங்-களையும், நட்சத்திரங்களையும் கடவுள்-தான் தாங்கிக்கொண்டிருந்தால் புவி வெப்பமய-மாவது குறித்து விஞ்ஞானிகள் எதற்காகக் கவலைப்படவேண்டும்? சுனாமிகளைத் தடுக்கும் சக்தி கடவுளுக்கு இல்லையா? ஏழைகளின் வயிற்றில் அடிப்பவனை, திருடனை, பெண்பித்தனை, கொள்ளையடிக்கும் வியாபாரியை, ஊழல் செய்யும் அரசியல்வாதியை, நெறிதவறி வாழும் அயோக்கியனை எல்லாம் கடவுள் தண்டிக்காது. சிவன் சொத்தைக் கொள்ளை-யடிப்பவனை மட்டும் கடவுள் நாசம் செய்து விடும் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சாரு நிவேதிதா வெளியிட்டிருக்கிறார்.

நித்தியானந்தர் பக்திவேடம் தரித்து 5000 கோடி சம்பாதித்ததை சிவன் தடுத்து நிறுத்த-வில்லை. போலீஸ்தான் அவனைக் கைது செய்தது. கடவுளின் பெயரால் எத்தனை மோசடிகள் தொடர்ந்தாலும் சாரு நிவேதி-தாக்கள் இருக்கும்வரைப் புதிய நித்தியானந்-தாக்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள். ஏமாளிகளான பக்தர்கள் கூட்டமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

இந்தக் காலத்து வணிக எழுத்தாளர்கள் சுய அறிவில், பிறரை எடைபோடுவதில், கருத்துகளை _ தத்துவங்களை _ மனிதர்களைப் புரிந்து கொள்-வதில் எவ்வளவு அரை வேக்காடுகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே ஓர் வாழும் உதாரணம்.

நித்தியானந்தாவை அம்பலப்படுத்துவதாக எழுதத்தொடங்கி, இப்போது இமயமலைச் சாமியார் பாபாவின் அற்புதங்கள் என்றும், வீடியோ காமிரா வருவதற்கு முந்தைய காலத்தில் பரப்பப்பட்ட சாமியார்களின் அதிசயப்புளுகுக் கதைகளையும் எழுதத் தொடங்கிவிட்டார். சராசரி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படாத இந்தச் சாமியார்களின் கதைகளால் சமூகத்திற்கு என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

வெளிச்சத்திற்கு இருள், நன்மைக்குத் தீமை, கடவுளுக்குச் சைத்தான் என்ற தத்துவ முத்துக்-களை உதிர்த்திருக்கும் சாரு நிவேதிதா, வெளிச்சமாகவும் _ இருளாகவும், நன்மையாகவும் _ தீமையாகவும், எல்லாமும் ஆக இருப்பது கடவுளே என்பதை நம்பவில்லை. ஏனென்றால், சரியான ஆன்மீக நம்பிக்கையுள்ளவன் சைத்-தானும் கடவுளின் ஒரு அம்சம்தான் என்பதை நம்பவேண்டும். சைத்தானுக்குக் கட்டுப்படும் அல்லது பணிந்துவிடும் ஒரு சக்தியை எப்படிக் கடவுள் என்பது? அவனன்றி ஓரணுவும் அசையாதென்றால் சைத்தான் எப்படி இயங்க முடியும்? ஆக, சைத்தானும் கடவுளும் வேறல்ல.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தின் குரல் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார் சாரு நிவேதிதா. அது, சரி என்றால் நித்தியானந்தா சாமியாரிடம் இருந்து வந்ததும் தெய்வத்தின் குரல்தானே?

பெரியாரால் முடியாமல் போன பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நித்தியானந்தா செய்து முடித்து-விட்டதாகச் சாருநிவேதிதாவின் ஒரு நண்பர் சொன்னாராம். ஆன்மீக மூடத்தனங்-களை எழுத்தாக்கி வளர்த்துவரும் சாரு நிவேதிதாவே இன்று பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு ஒரு விதையாகியிருக்கிறார். இவரது உளறல்களைப் படிக்கும் வாசகர்கள் கண்டிப்பாக பகுத்தறி-வாளர்-களாக மாறுவார்கள் என்பது நிச்சயம். கடவுள் என்று தனியாக எதுவும் இல்லை. கடவுளே பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற போலித்தனங்களின் வடிவம்தான்_ கற்பனை-யான ஒரு மோசடிதான்.

------------வெ.ஜவகர் ஆறுமுகம் , நன்றி உண்மை (June 16-30) மாதம் இருமுறை
                                                                                                                                                                 





Wednesday, June 16, 2010

இந்து முன்னணி...நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா?

கரூரில் இந்து முன்னணி மாநாடு நடக்க இருக்கிறதாம். எதற்காக இந்த மாநாடு? அதன் மாநில அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இந்துக்கள் தொடர்ந்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்களாம். கோவில் நிருவாகம், கல்வி, அரசின் சட்டங்கள் மற்ற மதத்தினருக்கு உள்ளது போல இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இம்மாநாடு என்று கூறியிருக்கிறார்.

இந்துக்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படு-கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களுக்குள்ளேயே இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்கள் நான்காம் தர மக்களாக, அய்ந்-தாம் தர மக்களாக ஆக்கப் பட்டுள்ளார்களே, நடத்தப்படுகிறார்களே. இதற்கு என்ன பதிலாம்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து இந்து மதத்தில் _ உயர்ஜாதி மக்கள் உச்சநீதிமன்றம் செல்லு-கிறார்களே. அதனை எதிர்த்து இந்து முன்னணி மாநாடு கூடப் போடவேண்டாம் _ கண்டித்து அறிக்கை விடலாமே _ ஏன் செய்யவில்லை?

இந்துக்கள் பெரும்பான்மையான மக்களின் மொழி கோயில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றால் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் யார்?

கோயில்களிலும் பெரும்பான்மை இந்து மக்களின் மொழியான தமிழில்தான் அர்ச்சனை நடைபெற-வேண்டும் என்று இந்து முன்னணி கரூரில் நடக்க இருக்கும் மாநாட்டில் குறைந்த பட்சம் தீர்மானம் நிறைவேற்றுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

இந்து முன்னணி மாநாடு நடத்த இருக்கும் அதே கரூரையடுத்த திருமுக்கூடலூர் சைவக் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்று கோயிலை இழுத்து மூடித் தோஷம் கழித்தார்களே, அப்பொழுது எங்கே போனார் இந்த ராமகோபாலன்?

சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடினார் என்பதற்-காக வயது மூப்படைந்த ஓதுவார் ஆறுமுகசாமி, தீட்சதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டபோது இந்து முன்னணி எங்கே போய் முக்காடு போட்டுக் கொண்டது?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இந்துக்கள் என்று இந்து முன்னணி ஒப்புக் கொள்ளு-மேயா-னால், அந்தத் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்-பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாராக அமர இந்து முன்னணி ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்விக்கும் விடை தேவை.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர் என்று கேட்பது போல, இந்து முன்னணிக் கும்பலே முதலில் உம் மதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை, ஜாதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநாடு கூட்டுங்கள். உம் வீட்டிலேயே வண்டி வண்டியாகக் குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவது வீண் வேலையல்லவா?

இந்துக்களுக்கும் கல்வியில் உரிமை வேண்டுமாம். அதற்காக இந்து முன்னணி மாநாடாம். வாயால் சிரிக்க முடியாது.

இந்துக்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுதெல்-லாம் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த முற்போக்குக் கூட்டம் எது?

குஜராத் பாணியிலே சென்னையில் ஊர்வலம் நடத்துவோம் என்று அறிவித்தவர்கள் யார்? எதிர் ஊர்-வலம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்த பிறகுதானே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடினீர்கள்?

இன்னும் தீண்டாமையை வைத்துக் கொண்டிருக்கிற மதம் உலகத்திலேயே இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று பச்சை-யாக சொன்னவர்தானே உங்களின் பெரியவாள் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி?

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்-கும் இந்துக் கோயில்களின் நிருவாகம் இவர்களின் கைகளுக்கு வரவேண்டுமாம். ஏன், கொள்ளையடிக்-கவா? சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று செய்யவா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதப் பார்ப்-பனர்கள் அடித்த கொள்ளை இப்பொழுது வீதிக்கு வந்துவிட்டதே ; இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்த நிலையில் கடந்த 14 மாதங்களில் கோயில் வருவாய் ரூபாய் 29 லட்சம் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே! அதே நேரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் கையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிருவாகம் இருந்த நேரத்தில் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் வெறும் ரூபாய் 37,199 என்றும், அதில் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதி ரூ.199 என்றும் உயர்நீதிமன்றத்திலே கணக்குச் சொன்னார்களே!

இதை வைத்துப் பார்க்கும் போது எத்தனை நூறு ஆண்டு காலமாக கோடி கோடியாக இந்தப் பார்ப்-பனர்கள் பணத்தைச் சுரண்டிக் கொழுத்து இருப்பார்கள்.

அந்தக் கொள்ளை மீண்டும் நடக்கத்தான் கோயில் நிருவாகம் இவர்களின் கைகளில் வரவேண்டுமா?

கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்கு முன் நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா? எங்கே பார்ப்போம்?

---------- விடுதலை தலையங்கம் (16.06.2010)

Tuesday, June 15, 2010

ரமண மகரிஷி, நித்தியானந்தா..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்..

மக்களைச் சொர்க்கத்-துக்கு அழைத்துச் செல்வ-தாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்-தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்-துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தை-யும் ஒரு வகையில் தோலுரித்-தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?
நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒரு-போதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடை-யாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்-கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்-தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் _ அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரை-ஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்-களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்-றற்றவர்போல காட்டிக்-கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்-தார்? தன் தம்பிக்குச் சொத்-துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்-கச் சீடராகவிருந்த பெருமாள்-சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்-குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல _ ரமண ரிஷி-யின் விஷயத்திலும் நடந்தது.
நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாச-மெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்-கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமி-யார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்-பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வ-மாகக் குடும்பம் நடத்தாவிட்-டாலும், ஏராளான வைப்பு-களை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?
சாமியார்களில் காமியார்-கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்க-லாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

- விடுதலை(14.06.2010) மயிலாடன்

Monday, June 14, 2010

அனைத்து ஜாதியினரும் ஆலய நுழைவு சுயமரியாதைக்காரர்களே முதன் முதலில் செய்து காட்டியவர்கள்

ஆலய நுழைவு என்பது பார்ப்பனர் அல்லாதவர்களில் ஒடுக்கப்பட்டவர்-களுக்கு மட்டுமன்றிப் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கும் மறுக்கப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி கோயிலில் வைத்-தியநாத அய்யர்தான் அழைத்துச் சென்றார் என்றெல்லாம் கூறி அதிலும் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார்கள். கோயிலுக்குச் செல்லாதவர்கள் ஆயிற்றே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தவர். எனவே, ஆலய நுழைவை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று-தான் பலரும் கருதினர்.

அதுமட்டுமல்ல, அனைவரும் ஆலயத்தில் நுழையலாம் என்று ராஜாஜிதான் முதன் முதலில் சட்டம் இயற்றினார் என்றும் கூறிப் பெருமைப்-பட்டுக் கொண்டவர்களும் இருந்-தார்கள்.

ஆனால், ஆய்வின் பொருட்டு ஒரு புதிய உண்மையை 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட விடுதலையில் காண நேரிட்டது.

கோயிலுக்குள்ளே எல்லா ஜாதியாரும் சம உரிமையுடன் செல்வதற்குத் தடையி ருக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் முதன் முதல் கிளர்ச்சி செய்தவர்கள் சுயமரி யாதைக்காரர்களேயாவர்

என்னும் முதல் வரியே நம்மைத் தலைநிமிரச் செய்தது. ஏனென்றால், விடுதலை தலையங்கத்தின் தலைப்பு தமிழ்க்கோயிலில் ஆரிய மொழி. ஆனால் உள்ளே உள்ள தகவல்களோ சுய-மரியாதைக்காரர்கள் ஆலய நுழைவுக் கிளர்ச்சி செய்த செய்தி.
அண்ணல் காந்தி தாழ்த்தப்-பட்டவர்களை அரிஜனம் என்னும் பெயரால் அழைத்ததும், திருவாங்கூர் சமஸ்தானக் கோயில்களில் அனைவரும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்-ததும் நேற்றைய நிகழ்ச்சிகள்.

எல்லாவற்றிற்கும், அனைத்துச் சீர்திருத்தத்திற்கும் முன்னோடியாக விளங்கிய தந்தை பெரியாரே தமிழ் மண்ணில் ஆலய நுழைவுக்கும் காரண கர்த்தாவாக விளங்கினார் என்பதும் நாம் பெருமைப்படும் செய்தி. ஆம்! ஆண்டவன் இல்லை, ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரம், ஆலயங்கள் அகற்றப்படவேண்டியவை என்று கூறிய அய்யாதான் முன்னோடி என்னும் அற்புதச் செய்தி.

தந்தை பெரியார் ஈரோடு ஈஸ்வரன் கோயிலின் அறங்காவலராக அதாவது தர்மகர்த்தாவாக இருந்த போது கோயில் நுழைவு குறித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அத்தீர்-மானம் ஈஸ்வரன் கோயிலுக்குள்ளே அனைவரும் நுழைவதற்கு அனுமதி உண்டு என்னும் தீர்மானமாகும்.

எனவே அன்றைய நாளில் தந்தை பெரியாருக்கு நெருக்கமாக இருந்தவர்களான சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மாயவரம் சி.நடராசன், பொன்னம்பலனார், எம்.ஏ.ஈஸ்வரன், எஸ். குருசாமி ஆகியோர் அய்யாவின் தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க முடிவு செய்தனர். அதாவது தாழ்த்தப்பட்ட தோழரை ஈரோட்டு ஈஸ்வரன் கோயிலினுள் அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.

ஈரோட்டில் அப்போது குடிஅரசு நிலையத்தில் பணியாளராயிருந்த கருப்பன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழரை அழைத்துக் கொண்டு செல்ல முடிவுசெய்தனர். அவரோடு வேறு சில ஆதித் திராவிடத் தோழர்களையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டு ஈசுவரன் கோயிலினுள் நுழைந்தார்கள்.

ஆதிக்கச் சக்திகள் சும்மாயிருக்குமா? எதிர்ப்புத் தெரிவித்தார்கள், எப்படி?
கோயிலில் நுழைந்தவர்களை ஆதிக்கச் சக்திகளின் தூண்டுதலால் கோயில் அதிகாரிகள் உள்ளே வைத்துக் கோபுர வாயிற் கதவை இழுத்துப் பூட்டினார்கள். அவ்வேளையில் அய்யா அவர்கள் ஈரோட்டில் இல்லை. பனகல் அரசர் இறந்த செய்திகேட்டுத் தந்தை பெரியார் சென்னை சென்றி-ருந்தார்.

கோயில் வாயிலை இழுத்துப் பூட்டி விட்டனர். ஆதலால், கோயிலுக்குள் சென்ற சுயமரியாதை இயக்கத் தோழர்-கள் இரவு முழுவதும் கோயிலுக்குள்-ளேயே இருந்தனர். பக்தர்கள் என்ற போர்-வையில் இருந்தவர்கள் வெளியி-லிருந்தபடியே கல்லையும், மண்ணையும் வாழைப்பழத் தோலையும். கரும்புச் சக்கைகளையும் பீடித் துண்டுகளையும், எலும்புகளையும் உள்ளே இருந்தவர்கள் மீது வீசியெறிந்தனர்.
மறுநாள் காலையில் பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பி வந்து கதவைத் திறக்கச் செய்தார். வழக்கு நடந்தது. இருவருக்கு மட்டும் சிறைதண்டனை கிடைத்தது என்று விடுதலை ஏடு பதிவு செய்துள்ளதோடு 1956 இல் எழுதுகையில் இது நடந்தது. 1925 இல் அதாவது 31 ஆண்டுகளுக்கு முன் என்று குறிப்பிட்டுள்ள உன்மைச்செய்தி இது.

இதற்குப் பிறகுதான் நீதிக்கட்சித் தலைவர்களான ஜே.என் ராமநாதன், டி.வி.சுப்ரமணியம், ஆகியோர் திருவண்-ணாமலை, திருச்சி மலைக்கோட்டை முதலிய ஊர்களில் கோயில் நுழைவுக் கிளர்ச்சி நடத்தினர். அப்போதெல்லாம் காங்கிரஸ் இயக்கத்தவர்களுக்குக் கோயில் நுழைவைப்பற்றிய சிந்தனை-யுமில்லை, முயற்சியுமில்லை.

அத்தோடு சுயமரியாதைக்காரர்கள் நின்றுவிடவில்லை. சுயமரியாதைக்காரர்-கள் உருவாக்கிய ஆலய நுழைவு ஆதிக்கவாதிகளை அச்சம் கொள்ளச் செய்தது. என்ன அச்சம்? எங்கே தம் ஊரிலும் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு -நுழைந்து-விடுவார்களோ என்ற அச்சம்தான் அது.

எந்த ஊரில் சுயமரியாதை இயக்கக் கூட்டம் நடந்தாலும் அந்த ஊரிலுள்ள கோயில்களையெல்லாம் மூடிவிடு-வார்கள். கூட்டம் முடிந்து 3, 4 மணி நேரம் கழித்துத்தான் கோயில்களைத் திறப்பார்களாம். ஏனெனில், நாம் மேலே குறிப்பிட்டவாறு ஆதித்திராவி-டர்களை அழைத்துக் கொண்டு சுயமரியாதைக்காரர்கள் கோயில் நுழைவு செய்வார்கள் என்ற நடுக்கம். இந்த உணர்ச்சியைத் தூண்டிய-வர்கள் சுயமரியாதைக்காரர்கள். எனவே வைதிகர்களும், ஆரியச் சமய வெறியர்-களும் ஆரியர்களும் பொங்கி எழுந்தனர்.

இவர்கள்தான் இந்து மதத்தை எதிர்க்கிறார்களே! கடவுள் இல்லை-யென்கிறார்களே! சிலை வணக்கத்தைக் கண்டிக்கிறார்களே! இவர்கள் ஏன் கோயிலுக்குச் செல்லவேண்டும்? என்று கேட்டனர் பலரும் அதைக் கேட்ட போது, கடவுளை வழிபடுவதற்காக நாங்-கள் உள்ளே செல்லவில்லை; தமிழன் கோயிலில் ஆரியனின் ஆதிக்கம் எதற்காகா? தமிழன் கட்டிய கோவிலில் தமிழன் எந்த இடத்துக்கும் செல்ல உரிமையில்லையா? என்று சுயமரியாதைக்காரர், கேட்டனர்.

அதன் பின்னரும் கோயில் நுழைவு அனைவருக்கும் உரியது என்ற கொள்-கையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்தனர். 1945 இல் திருச்சியில் திராவி-டர் கழகத்தின் முதல் மாநாடு நடை-பெற்றது. இம் மாநாட்டில் நிறைவேறிய 11 ஆவது தீர்மானம் இது.
இந்த மாகாணத்திலே சில கோயில் களிலே ஆதித்திராவிடரை அனுமதித்தும் சில கோயில்களில் அனுமதிக்காமலும் இருக்கும் போக்கை இம்மாநாடு கண்டிப்ப தோடு மாகாணத்திலுள்ள எல்லாக் கோயில் களிலும் ஆதித்திராவிட மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இத்தீர்மானத்தை டி. சண்முகமும், நாவலர் நெடுஞ்செழியனும் முன்மொழிந் தனர். இத்தீர்மானத்தை வழிமொழிந்-தவர் பேரறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானத்தைத் தூத்துக்குடி எம்.எஸ் சிவசாமியும், எஸ்.சுப்பிரமணி-யனும் எதிர்த்தனர்.

திராவிடர் கழகத்தார் கோயில்கள் கள்ளர் குகைகளாகும் எனக் கருதுவ-தால் கோயில் பிரவேசம் வேண்டாது கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பது எதிர்த்த தோழர்கள் இருவரின் அபிப்பிராயம். அண்ணா-வின் தீர்மானம் 1944இல் சேலத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறியது. ஆனால், இங்கோ அண்ணா வழிமொழிந்த தீர்மானம் எதிர்ப்பிற்கு ஆளாகி ஓட்-டெடுப்பிற்கு விடப்பட்டது. பெருவாரி-யானவர்களால் ஆதரிக்கப்பட்டு இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

விடுதலை தலையங்கத்தில் படித்த-வர்களுக்குக்கூட இப்பிரச்சினையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்ப-தற்காகவே இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறோம் என்று விடுதலையில் குறிப்பிடப்பட்டது.

அடுத்து மாயூரம் ஜாதி ஒழிப்பு மாநாடு குறிப்பிடத்தக்கதாகிறது. இம்மாநாட்டுத் தீர்மானம் இது:

கோயில்களில் தமிழ் மொழியிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவும் தமிழர்களே அர்ச்சனையாளர்களாக நியமிக்கப்படவேண்டும். இந்த ஏற்பாட்டை ஒரு மாத காலத்திற்குள் செய்யாவிட்டால் கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் இடத்திற்குத் தமிழர்கள் செல்வதற்காகக் கிளர்ச்சி தொடங்க வேண்டிவரும் என்று இந்து பரிபாலன இலாகாவுக்கு இம்மா நாடு எச்சரிக்கை விடுக்கிறது

இன்றைக்கு 53 ஆண்டுகளுக்குமுன் நிறைவேறிய இத்தீர்மானம் எவ்வளவு முக்கியமான தீர்மானம் என்பதை உணரவேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்துப் பிரிவினரும் அர்ச்ச கராக வழி வகுத்த இமாலயச் சாதனை புரிந்த பிறகும், அதற்குரிய பயிற்சியை மாணவர்கள் பெற்ற பிறகும் இன்றும் வைதிகத் திருக்கூட்டமும், அவர்களுக்கு வால்பிடிக்கும் கூட்டமும் நீதிமன்றப் படியேறி அதை நடைமுறைக்கு வரவிடா மல் தடுக்கும் அவலம் உள்ள நிலையில் அன்றே இத்தீர்மானம் நிறைவேற்றினார் கள் திராவிடர் கழகத்தார் என்றால் அது சாதாரணமா?

ஏன் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரனுக்கே இதன் தத்துவம் புரியவில்லையே. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பெரியார் சிலையைத் திறந்து வைத்த மேடையில் பேசிய அம்மா மணியம்-மையார் அவர்கள் எம்.ஜி.ஆரை முதலமைச்சர் என்பதால் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்துப் பிரிவையும் சார்ந்தோர் அர்ச்சகர் ஆகச் சட்டமியற்ற வேண்டினார்.

அடுத்துப் பேசிய முதல்வர் எம்.ஜி.ஆர் குதர்க்கம் பேசினார். கடவுளே இல்லையென்ற பெரியார் ஆலயத்தினுள் கருவறையில் சென்று அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கேட்டிருப்பாரா? என்று விதண்டா-வாதமாகப் பேசினார்.

மறுநாள் மணியம்மையார் முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் துணிவோடு பதிலடி கொடுத்தார். அது போலத்தான் ஆத்திகத் திருக்கூட்டத்தவர் சிலர் இவர்களுக்குத்தான் சிலை வணக்கத்-தில் நம்பிக்கையில்லையே? யார் அர்ச்-சனை செய்தாலென்ன? எந்த மொழி-யில் அர்ச்சனை செய்தாலென்ன? என்று பக்குவமில்லாமல் அரைவேக்-காட்டுத்தனமாகக் கேள்வி கேட்டனர்.

அவர்களுக்கு மட்டுமல்ல, இன்னும்-கூட நாம் அளிக்கும் பதில் அவர்களின் கேள்வியின் முதுகெலும்பை முறிக்கும் பதிலாக அமைகிறது.

ஆலய நுழைவு விஷயமென்றாலும், ஆலயத்தில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவேண்டும் என்ற கருத்தானாலும், அனைத்துப்பிரிவினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதற்-கான போராட்டம் என்றாலும், திரா-விடர் கழகத்தார் தலையிடுவதன் காரணம் ஆத்திகத் தமிழர்களுக்குத், திராவிடர்களுக்குத் தன்மான உணர்ச்சி, சுயமரியாதை உணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.

புரியாத மொழியில் செத்த மொழி-யில் அந்நிய மொழியில் அர்ச்சனை நடக்கிறதே, தூய மொழியான தமிழுக்கு இடமில்லையே, மொழிப்பற்று கடுகளவுமில்லையே _ ஆத்திக அன்ப-ரான தமிழ் அன்பர்களுக்கு இல்லையே என்ற அடித்தள உணர்வுதான் கார-ணம். அதுமட்டுமில்லை _ அந்நிய-னான ஆரியன் மட்டும் சிலையருகே நிற்கிறானே, அந்தச் சிலை வடித்த தமிழன் எவ்வளவு ஒழுக்கசீலனாகவும், பக்தனாகவும் இருந்தாலும் அவனுக்கு இடமில்லையே திராவிடகுல உணர்ச்சியும் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு ஆதங்கம்தான். எனவேதான் திராவிடர் கழகம் கேட்டது.

யாரோ ஒரு ஆஷாடபூதி ஆரிய அர்ச்சகனுக்கு உள்ள உரிமை ஒரு குன்றக்குடியாருக்கோ, ஒரு மதுரை ஆதீனத்திற்கோ இல்லையே ஏன்? இதற்காக எந்த ஆத்திகத் தமிழராவது வெட்கப்படுகிறார்களா, ஆத்திரப்படு-கிறார்களா?

இன்னும் ஒரு மாபெரும் மனித உண்மையையும் இங்கே கொடுக்க வேண்டும்.
ஆரிய மொழியான_வடமொழியான தேவபாஷை என்பதற்குப் பதிலாகத் தமிழிலோ, ஆரிய அர்ச்சகருக்குப் பதிலாகத் தமிழர்களோ அர்ச்சனை செய்து விட்டால் உடனே, செம்பில் _ கல்லில் வடிக்கப்பட்டுள்ள கடவுள் காட்சியளித்துவிடுவார் என்னும் நம்பிக்கை திராவிடர் கழகத்தாருக்குக் கிடையாது.

எல்லாத் துறைகளிலும் இன உணர்ச்சியும், தன்மானமும், மொழிப்-பற்றும், வேண்டும்; அப்போதுதான் ஆரியனின் சுரண்டலும், ஆதிக்கமும். ஜாதித் திமிரும் ஒழியும் என்ற கருத்தைக் கொண்டே ஜாதி ஒழிப்பு மாநாட்டில் அன்று தீர்மானம் நிறை-வேற்றினர்.
எனவே, ஆலய நுழைவானாலும், அர்ச்சனை விஷயமானாலும், அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதானாலும், அதில் தன்மான உணர்ச்சி வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

----------- விடுதலை  ஞாயிறு மலர் (12.06.2010), முனைவர் ந.க.மங்கள முருகேசன்

Sunday, June 13, 2010

பகுத்தறிவற்ற பார்ப்பனர் எழுதிய புராணங்களை பார்ப்பனர் அல்லாதாருக்கு போதிப்பது ஏன்?

காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள விளம்பரத் தில் பார்ப்பனர் அல்லாதாருக்குப் புராணங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது ஏன்?

புராணங்கள் என்றாலே புளுகு மூட்டைகள்தான். அந்தப் புளுகு மூட்டைகள் கூட எதைத் திணிக்-கின்றன என்பதுதான் முக்கியம்.

பார்ப்பனீயத்தை எதிர்த்த அரசர்களை அசுரர்களை அச்சுறுத்தி அடக்கப் புனையப்பட்ட கட்டுக்கதைகள்-தான் புராணங்கள் எனப்படுபவை.

ஸ்ரீசிவமூர்த்தியினிடம் புராணங்களைக் கேட்ட நந்திமாதேவர் சநற்குமார முனிவருக்கு உபதேசிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க வியாச பகவான் சூதருக்கு உபதேசித்தனர் . . .
திரிமூர்த்திகள், எழுவகைத் தோற்றம், பிரமாண்டம் இவற்றின் நிலைகளையறிவித்துத் தான் கெடாமல் இருப்-பதால் புராணமே பிரமம் என்பன. அப்புராணங்கள்

சொல்லியவற்றைத் தவறி நடப்பதே பந்தம். இவை நீங்கிப் புராணம் சொன்ன வழியில் நடப்பது மோக்ஷம்.
(அபிதான சிந்தாமணி (1984) பக்கம் 1169_ -1170)

இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் எனும் நூலின் முன்னுரையில் (பக்கம் 8) கே.எம். முன்ஷி என்ற பார்ப்பனர் (இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கக் குழுவிலும் இடம் பெற்றவர் இவர்) புராணங்கள் பற்றிக் கூறும் கருத்தும் கவனிக்கத்தக்கது:
புராணங்களும் _ இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல. இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது  இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புகளே என்று குறிப்பிட்டுள்ளார்.
 (விரிவான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள புரட்டு இமாலயப் புரட்டு எனும் நூலைப் படிக்கலாம்!)

புராணங்கள் _ பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதற்கு ஒரு புறம் _ இன்னொரு பக்கம் பார்ப்பனீய அடிமைத்தன உணர்ச்சியைப் பார்ப்பனர் அல்லாதார் 
மூளையில் ஆழமாகப் பதிவு செய்வதற்கே யாகும்.

புராணங்களில் கூறப்படும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைக் கவனித்தால் இதன் உண்மை வெள்ளையாகும்.

தில்லைவாழ் அந்தணர் புராணம் என்றால் சுந்தரருக்கு சிவபெருமானால் முதல் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டது என்று வருகிறது.

தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் இந்த அடியைத்தான் சிவபெருமான் எடுத்துக் கொடுத்தானாம்.

தில்லையில் வாழும் பார்ப்பனர்களுக்குச் சிவபெருமானே அடியேன் என்றால், புராணம் எழுதுவதன் நோக்கம் புரியவில்லையா?

பெரிய புராணம் முழுவதும் அடியார்களின் வரலாறு; அடியார்கள் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும், கடவுளுக்காக மனைவியை கூட்டிக் கொடுத்த-வனாகவும் (இயற்பகை நாயனார்) பெற்ற பிள்ளையையே தாயும், தந்தையும் அரிந்து கறி சமைத்துச் சிவனடியாருக்குக் கொடுத்ததாகவும் (சிறுத்தொண்டர்) என்றுதானே புகழ்கின்றன.
கோட்புலி நாயனார் சோழ மன்னன் சேனாதிபதி. கோயில் சிலைக்குத் தளிகை பூசைக்காக நெல்லை வாங்கித் தன் வீட்டில் சேர்த்து வைத்திருந்தான். இவன் படை எடுத்துச் சென்றிருந்தபோது பஞ்சம் காரணமாக சுற்றத்தார் இந்த நெல்லை எடுத்துப் பயன்படுத்தி, பஞ்சம் பட்டினி கொடுஞ்சாவிலிருந்தும் தப்பித்தனர்.

ஆனால் கோட்புலியார் போர்க்களத்திலிருந்து திரும்பியதும் கோயில் நெல்லைச் சுற்றத்தார் உண்டு விட்டது அறிந்தார். வீடு சேர்ந்தார்.
இது குறித்து திரு.வி.க. எழுதுகிறார்:.

சுற்றத்தாருக்குப் பரிசில் வழங்கல் வேண்டும் என்று சொல்லி அவரை அழைப்பித்தார். கோட்புலி என்னும் தம் பெயருடைய சேவகன் ஒருவனை வாயில் காக்குமாறு செய்தார். அடாது செயல் புரிந்த இவனைக் கொல்லாது விடுவதோ என்று உருத்து எழுந்தார். எழுந்த தந்தை, தாய், உடன் பிறந்தோர், தாரம், துரோகத்துக்குட்பட்ட மற்றவர் ஆகிய எல்லாரையும் வெட்டி வீழ்த்தினார். ஓர் ஆண் குழந்தை மட்டும் எஞ்சி நின்றது.
நாயனார் அதன் மீது பாய்ந்த பொழுது, வாயில் காப்போன் அவரைப் பார்த்து, பெருமானே, இக்குழந்தை என்ன செய்தது? இது சிவ சோற்றை உண்ணவில்லையே! ஒரு குடிக்கு ஒரு பிள்ளை. அருள் செய்யும் என்று வேண்டினான். அதற்குக் கோட்புலியார் இக்குழவி சிவசொத்தை உண்ண-வில்லை. ஆனால் அதை உண்டவளுடைய முலைப்-பாலை உண்டது என்று கூறி அக்குழந்தையையும் வாளுக்கு இரையாக்கினார்.
(திரு.வி.க.வின் நாயன்மார் வரலாறு, பக்கம் 306_-307)

புராணங்களைப் பார்ப்பனர் அல்லாதாருக்குச் சொல்லிக் கொடுக்க சங்கரமடம் திட்டமிட்டிருப்பதன் சூட்சமம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே.

பார்ப்பனர் அல்லாத நாயன்மார்களின் கதை இப்படி இருக்க, பார்ப்பனப் பக்தர்களின் கதையோ வேறு மாதிரி.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மதுரையில் சிவன் எப்படி மோட்சம் கொடுத்தான்? பொற்றாமரைக் குளத்தில் குளிக்கச் சொன்னான் _ பசுமாட்டுக்குப் பசும்புல்போடச் சொன்னான்  தீர்ந்தது தாயைப் புணர்ந்த பாவம். திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் இதுதான்.

இந்தப் புராணங்கள்தான் பார்ப்பனர் அல்லாதாருக்கு! பார்ப்பனர்களுக்கோ வேதங்கள்!

----- விடுதலை ஞாயிறு மலர் (12.06.2010)
                                                                                                                                                                 


பாரத நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான்

ஜப்பான் பார்! ஜெர்மன் பார்! என்று பயாஸ்கோப் காட்டு-வார்கள். அப்பொழுது காசு கொடுத்து குழந்தை-களும், பெரியவர்களும்-கூட வண்ணக் கண்ணாடி மூலம் பார்ப்பார்கள். அதில் பல படங்கள் தெரி-யும். அது அந்தக் காலம்.

இப்பொழுது சீனா-வைப் பார் என்று சொல்ல வேண்டியுள்ளது. சீன எல்லையில் மூன்று சீனர்களை வடகொரியக் காவல்படை சுட்டுக் கொன்றுவிட்டது. ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சீனாவின் கவனத்-துக்கு இது கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி-கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதி-யாகக் கூறியுள்ளது. வடகொரிய அரசும், கண்டிப்பாகத் தண்டிக்கப்-படுவார்கள் என்று கூறியுள்ளது.

தன் நாட்டைச் சேர்ந்-தவர்களோ, இனத்தவர்-களோ இன்னொரு நாட்-டால் பாதிக்கப்படும்-பொழுது கடுமையாக நடந்து கொள்வது சீனா-வின் வழமையாகும். இது குற்றமான ஒன்றும் அல்ல. பாராட்டத்தக்க உணர்ச்சியுமாகும்.

திபேத் உரிமைக்காக பீஜிங்கில் தலாய் லாமா-வின் கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பாட்டத்-தில் பங்கு கொண்ட அமெரிக்கர்களை சீனா கைது செய்து சிறையில் அடைத்தது என்றவுடன், அமெரிக்க உடனே தலை-யிட்டது - _ சீன அரசும் அவர்-களை விடுதலை செய்தது.

உலகத்தில் உள்ள பல நாடுகளும் தங்கள் நாட்-டைச் சேர்ந்த மக்களைப் பாதுகாக்கும் உணர்-வோடு நடந்து கொள்கின்றன.

இந்தியாவில்கூட தமிழர்களைத் தவிர மற்ற மாநில மக்கள், மற்ற மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்-டால் குரல் கொடுக்கத்-தான் செய்கிறது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் பெண்களுக்கு கன்னித்-திரை (Virgin Test) சோதனை செய்தபோது இந்தியா கடுமையாக எதிர்த்து, அதனை முறி-யடித்தது.
சீக்கியர்களாக இருந்-தாலும் தலைக்கவசம் (Helmet) அணிந்துதான் செல்ல வேண்டும் என்று பிரிட்டன் சட்டம் பிறப்-பித்தபோது, சீக்கியர்-களுக்காக இந்தியா கரி-சனத்துடன் குரல் கொடுத்த-துண்டு.

ஆனால் இந்தப் பாழாய்ப் போன தமிழர்-கள் இலட்சக்கணக்கில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டாலும் இந்-தியா இரக்கம் காட்டாது. இரக்கம் காட்டாதது மட்டுமல்ல, தமிழர்களை அதிவேகமாகக் கொன்று தீர்ப்பதற்கு எதிராளி-களுக்கு நவீன ஆயுதங்-களையும் கொட்டிக் கொடுக்கும் கொன்று குவிந்த ரத்த வாடை வீசும் இலங்கை அதிப-ருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்துக் குலாவும். பாரத நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான்.

-விடுதலை (13.06.2010), மயிலாடன்

Saturday, June 12, 2010

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடிப்பதா?-இப்படி ஒரு புரளி

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறிவிட்டால் கலைஞர் அரசுக்கு, காங்கிரஸ் அரசுக்குப் பெருமை ஏற்பட்டு விடுமே என்று பா.ஜ.க., அதி.மு.க எதிர்க்கிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஒரத்தநாட்டில் 30.5.2010 அன்று நடைபெற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியார் நாட்டிலே கொள்கைப் பிரச்சாரம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே திராவிடர் கழகத்தின் சார்பில் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே இங்கே இன்றைக்கு காலை முதற்கொண்டு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல இதுவரையிலே அடர்த்தியான கொள்கைப் பிரச்சார மழை இந்த பெரியார் நாட்டிலே தொடர்ந்து பெய்யக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பை நம்முடைய தோழர்கள் மிக அருமையாக எடுத்துக்காட்டாக செய்து காட்டியிருக்கின்றார்கள்.

எல்லாம் கொள்கை மயம் என்று சொல்லக்கூடிய அளவிலே எல்லாவற்றுக்கும் துணிந்த நம்முடைய இளைஞர்கள் மிகத் தெளிவான இராணுவ கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன என்று சொல்லுவதைவிட, பெயர் உள்ள இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் முதலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இடம் பெரியார் நாடு ஆகிய ஒரத்தநாடு பகுதிதான் என்ற பெருமைக்குரிய பகுதியிலே இந்த மண்ணிலே நின்று உங்களை எல்லாம் சந்திப்பதிலே மூடநம்பிக்கை ஒழிப்புநிகழ்ச்சியிலே நீங்கள் எப்படி எல்லாம் கணித்திருக்கிறீர்களோ அது போல அந்த மகிழ்ச்சியிலே நானும் பங்கு கொள்வதிலே பெரிய வாய்ப்பு என்று கருதுகின்றேன்.

பழைய தோழர்களை நினைத்துப் பார்த்தேன்

அருமை நண்பர்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இந்த ஊரிலே இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் பழைய தோழர்களான ஆர்.பி.சாமி போன்றவர்கள் வை.குப்புசாமி போன்றவர்கள் இன்னும் பல நண்பர்கள் பழைய தோழர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றோம்.

இங்கே வரும் பொழுதெல்லாம் நான் அசைபோட்டுக்கொண்டு வந்தேன். இந்த ஒரத்தநாடு பகுதி பெரியார் நாடு என்றழைக்கப்படக்கூடிய தலைசிறந்த பகுதியாக இருக்கிறது.
விடுதலை நுழையாத கிராமமே இல்லை. பிரச்சாரம் நுழையாத ஊராட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிலே மகிழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் இதற்கு அடித்தளமிட்ட நண்பர்களை வேர்களாகப் புதைந்திருந்து விழுதுகளாக உங்களை எல்லாம் ஆளாக்கிக் கொண்டு வந்திருப்பதற்கு உழைத்த நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு நாம் அனைவரும் முதற்கண் வீரவணக்கத்தை செலுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.
ஆசிரியர் மதிவாணன் அந்த வகையிலே தோழர் மதிவாணன் அவர்கள். அவர் ஒரு ஆசிரியர். பல நண்பர்களுக்கு முதியோர்களுக்கு இங்கே தெரியும். ஒரத்தநாடு நண்பர் மதிவாணன் அவர்கள் தந்தை பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக இருந்தவர். அது போல நண்பர் சீதா அவர்கள். அவர் ஒரு விபத்திலே அகால மரணமடையக்கூடிய ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இயக்கத்திற்கே பலம் குன்றியது என்று சொல்லும் அளவுக்கு கம்பீரமானவர்.

எப்பொழுதும் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்து மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள். இலங்கையிலே ஈழத்திலே நீண்ட நாள் இருந்து பிறகு இங்கே வந்து தன்னுடைய பணியை செய்த அருமையான கழகப் பொறுப்பாளர்களிலே ஒருவர் தோழர் ஆறுமுகம் அவர்கள் ஆவார்கள்.

ஆறுமுகம் அவர்கள் பல்வேறு உடல் சங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும்கூட அவர் ஆஸ்துமா நோயினாலே தொல்லைப்பட்டவர். ஆனாலும் கூட நல்ல தெளிவானவர். தந்தை பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று இந்த வட்டாரத்திலே கழகம் இயங்குவதற்கு மிகத் தெளிவாகப் பணிபுரிந்த ஒருவர்.

அது போலவே நம்முடைய டாக்டர் முருகேசன். அதுபோலவே இன்னொரு வைத்தியர் முருகேசன். அவர்களும் மிகச்சிறப்பாக இருக்கக் கூடியவர்கள். நைனா முகம்மது அண்மைக் காலம் வரையிலே நம்மோடு இருந்து நமக்கு அறிமுகமானவர். இப்படி ஒரு பெரிய பட்டியலையே நான் நினைத்துக் கொண்டு வந்தேன்.

கைலாசமுத்து-இராமச்சந்திரன்

இந்த இடத்தை தந்தை பெரியார் அவர்களுடைய அறக்கட்டளைக்கு இடம் வாங்கிக்கொடுக்க சர்வே முதற்கொண்டு முயற்சி செய்தவர். நம்முடைய முகிலனுடைய தந்தையார் கைலாச முத்து ஆவார்கள். பெரியார் மய்யத்திறப்பு விழாவிற்குச் சென்றபொழுது அந்த பேருந்திலே அவரும், நம்முடைய குணசேகரன் அவர்களுடைய அருமைத் தந்தையார் இராமச் சந்திரன் அவர்களும், அதுபோலவே அவருடைய தாயார் அவர்களும் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகி நம்முடைய பேபி ரெங்கசாமி அவர்கள் நல்ல வாய்ப்பாக அந்த பெரும் விபத்திலிருந்து தப்பித்து பல மாதங்கள் மருத்துவமனையிலே இருக்கக் கூடிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இப்படி எல்லாம் அவர்கள் உழைத்த உழைப்புதான் இன்றைக்கு இவ்வளவு அற்புதமான ஒரு விளைச்சலை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே கொள்கை விளைச்சலைப் பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

நினைவைப் போற்றி....

முதற்கண் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்றோம். அவர்களுடைய தொண்டுக்கெல்லாம் பாராட்டுத் தெரிவித்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன். நிறைய தீர்மானங்கள் அதாவது 15 தீர்மானங்கள் அற்புதமான தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஒரத்தநாடு திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்திலே ஒரு வரலாற்றுப் பதிவு அதற்குள்ளாகவே ஊடகங்களுக்கு வந்துவிட்டது. அந்தப் பெருமையை ஒரத்தநாடு இன்றைக்குப் பெற்றிருக்கின்றது. அதற்கு அடிப்படையான தீர்மானம் எதுஎன்றால், அதுதான் நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் விளக்கினார்களே சேது சமுத்திர கால்வாய் திட்டம்.

தேவையின்றி அது காலதாமதம் செய்யப்படுகிறது. திட்டமிட்டே துவக்கப்படுத்தப்படுகிறது. அதற்கு என்ன வழி என்று சொன்னால் நேரடியாக அதை செய்யாமல் மாறாக எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும். அதை கிடப்பிலே போட வேண்டும் என்பதற்காக இடையிலே இருக்கக் கூடியவர்கள் நீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

பி.ஜே.பி ஆட்சியில்....

மத்தியில் பி.ஜே.பி ஆட்சி செய்த பொழுது சேதுக்கால்வாயில் அய்ந்து வழித்தடங்களை ஆராய்ந்து பார்த்தார்கள் அது சரிவரவில்லை. இந்த வழித்தடங்களை பல்வேறு நிபுணர் குழுவினர் ஆராய்ச்சி செய்தார்கள்.

இந்தப் பணி எப்பொழுது தொடங்கியது என்று சொன்னால் வாஜ்பேயி பிரதமராக இருந்த காரணத்தினாலே தொடர்ந்து நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். பெரியார், அண்ணா, காங்கிரஸ் நண்பர்கள் எல்லாம் வலியுறுத்தி இங்கே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தால் இன்றைக்கு நமது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகமே வளம் கொழிக்கக் கூடிய பகுதியாக ஆகிவிடும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வரும் என்பதை எல்லாம் தெளிவாகப் புரிந்துதான் வலியுறுத்தினோம்.
அதை அரசியல் ரீதியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்ற திட்டத்தை அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்து அதற்கான முயற்சி செய்தது எல்லாம் அவர்களுடைய காலம். 

பல வகையில் ஆராய்ந்தார்கள்

சேது சமுத்திர கால்வாய் எந்த இடத்திலே அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக முயற்சி எடுத்தார்கள்.

சுற்றுச்சூழல் சரியாக இருக்க வேண்டும். சர்வதேச அனுமதி கிடைக்க வேண்டும். மீன்வளம், பவளப் பாறைகள், இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி பல்வேறு செய்திகளை வைத்து ஆராய்ந்து ஒவ்வொரு தடமும் சரியில்லை, சரியில்லை என்ற ஒதுக்கப்பட்டது.
  
தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப...

கடைசியாக மிக அருமையான ஆறாவது வழித்தடம் என்று சொல்லக் கூடிய அந்த வழித்தடத்தை எடுத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள் எல்லோருமே அதை ஆய்வு செய்த பிற்பாடுதான் பணி தொடங்கப்பட்டது.

பாரதீய ஜனதா ஆட்சி முடிந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலே, சோனியாகாந்தி அம்மையாருடைய வழிகாட்டுதலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற ஆட்சியின் காரணமாக சாதனையாக சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி முடிப்போம் என்று தேர்தலிலே கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய வகையிலே 2005_லே மதுரையிலே இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

குறிப்பாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட குறிப்பாக கலைஞர் அவர்கள் இந்தத் திட்டத்தைக் கேட்டுப் பெற்றார்கள்.
  
கப்பல் துறையைக் கேட்டுப் பெற்றார் கலைஞர்

சேது சமுத்திர கால்வாய் திட்டம் எப்படியும் நம்முடைய காலத்திலே முடிவடைய வேண்டுமானால் நம்முடைய அமைச்சர் இருந்தால் இன்னும் வேகமாக அதனை வற்புறுத்த முடியும் என்ற உணர்வோடு கேட்டுப் பெற்று டி.ஆர்.பாலு அவர்களின் மிகக் கடுமையான உழைப்பின் பெயரில் வேகமாக பணியாற்றினார்கள். 2400 கோடித் திட்டம். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல. இந்த ரூபாய்களை செலவழித்து வேகமாகப் பணிகளை முடுக்கிவிட்டு, கடைசியிலே முடிய வேண்டிய ஒரு பகுதி வெறும் 12 கி.மீ.தான் மீதி எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களிலே கப்பல் ஓட இருக்கிறது என்று அறிவித்தார்கள்.
  
எதிர்க்கட்சியினருக்கு என்ன நோக்கம்?

உடனே மய்யமாக இங்கேயிருக்கிற எதிர்க் கட்சிக்காரர்களுக்கு என்ன நோக்கம்? அப்படியானால் இதை அவர்கள் செய்து முடித்துவிட்டால் இவர்கள் அல்லவா அந்த பெருமைக்குரியவர்கள் ஆகி விடுவார்கள்.

இதைக்காட்டி அல்லவா திமுகவும் காங்கிரசும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆகவே இதை செய்யவிடக்கூடாது என்று அரசியல் கண்ணோட்டத்தின் காரணமாக அ.தி.மு.கவினுடைய பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு முறை அல்ல. இரண்டு முறை வலியுறுத்திய வர்கள்.
  
இரண்டு தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியவர் ஜெயலலிதா

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலே வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை யிலே வலியுறுத்தினார். சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது அண்ணா அவர்களுடைய கனவுத்திட்டம். எம்.ஜி.ஆர். வலியுறுத்திய திட்டம். கலைஞர் வலியுறுத்திய திட்டம். ஆனால் அதே ஜெயலலிதா அம்மையார் இப்பொழுது அப்படியே தலைகுப்புற பல்டி அடித்து நேர் எதிரிடையாக முற்றிலுமே திரும்பி சேது சமுத்திர கால்வாய் திட்டமே கூடாது என்று சொல்லக் கூடிய அளவிலே வந்துவிட்டார்கள்.
  
ராமன் பாலத்தை இடிப்பதா?-இப்படி ஒரு புரளி

பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் கூட கொஞ்சம் அரசியல் தெரிந்திருக்கிற காரணத்தினாலே பெரியார் பிறந்த பூமியில் எப்படியும் காலூன்ற முடியவில்லையே என்று கருதிய காரணத்தாலே சேது சமுத்திர திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ராமர் பாலத்தை இடிப்பதா? என்று ஆரம்பித்து வேறு வழித்தடத்தை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று இல்லாத ஊருக்குப் போகாத பாதையை புரியாத மனிதரிடம் தெரியாத பாஷையில் பேசுவதைப் போல இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அதே நேரத்திலே அவர்கள் சொல்லுகிறார்கள். நாங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரிகள் அல்லர் என்று சொல்லு கின்றார்கள். 

கலைஞர் பெருந்தன்மையாக சொன்னார்

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கலைஞர் போன்றவர்கள் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. சகோதரர் வைகோ போன்றவர்கள் நானல்லவா இந்த திட்டத்திற்கு பாத்யதை உடையவன். எனவே இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். கலைஞர் அவர்களிடம் கேட்டபொழுது கூட ரொம்ப பெருந்தன்மையாகச் சொன்னார். யாரால் இந்தத்திட்டம் வந்தது என்பது முக்கியமல்ல. இந்தத்திட்டம் முடிய வேண்டும். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அதைத்தான் நான் சொல்லுகிறேன் என்று கலைஞர் அவர்கள் பெருந்தன்மையாகச் சொன்னார்கள்.

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை தடுப்பதற்காக ஒரு அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி எங்கேயும், யாரையும் பிளாக்மெயில் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு ஆசாமி. நான் ஒரு பொது நல வழக்குப் போடுகிறேன். இது ராமர் பாலம் உடைக்கக் கூடாது என்று இல்லாத பாலத்தை இவர்கள் சொன்னார்கள். இடிக்கக் கூடாது என்று அதற்கு ஒரு தடையை உண்டாக்கக் கூடிய சூழலை உருவாக்கினார்கள். 

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்...

அப்பொழுது தடை ஆணை கொடுக்கவில்லை. ஆனால் நீதிபதிகள் என்ன சொன்னார்கள்? ராமன் என்ற ஒருவனே கிடையாது. அது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படக்கூடியதல்ல. ராமாயணம் நடந்த கதை அல்ல. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே என்று சொல்லகின்றீர்களே அத்துணை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே முதலில் மனிதன் இருந்தானா? பொறியியல் துறை இருந்ததா? என்ற கேள்வியை எல்லாம் கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்லுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் நம்பிக்கை. நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லுகிறார்கள்.     (தொடரும்)

----- நன்றி விடுதலை

சூத்திரர்களுடைய பணம் வேண்டும் சங்கரமடத்துக்கு... உதவி மட்டும் அக்கிரகாரக் கும்பலுக்கே!

இந்த கருப்புச் சட்டைக்காரர்களுக்கு இதுதான் வேலை! எதற்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் என்ற பாட்-டினைப் பாடாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வராது. ஒரு காலத்தில் எப்படியோ இருந்திருக்கலாம் _ இப்பொழுது அவர்கள் முழுக்கவே மாறிவிட்டார்கள்; முனியாண்டி ஓட்டலில் கூட சாப்பிடுகிறார்கள்.

இப்பொழுதெல்லாம் யார் உச்சிக் குடுமி வைத்திருக்கிறார்கள் மாடர்னாக கிராப் வெட்டிக் கொள்கிறார்-கள், பஞ்சகச்சமா கட்டுகிறார்கள் கோட்டு சூட்டுகளில் அமர்க்களமாகக் காட்சி அளிக்கிறார்கள் _ மாமி கூட மடிசார் கட்டுவதில்லை என்று அக்கி-காரத்து வக்கீல்களாக தமிழர்களில் பலர் அதுவும் மெத்தப்படித்த பலர் வக்காலத்துப் போட்டுப் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களால் முன்பு போல் நடந்து கொள்ள முடியாதுதான் பேசமுடியாது-தான்_ உச்சிக் குடுமி வைத்துக் கொள்ள முடியாதுதான் பஞ்சகச்சம் கட்ட முடி-யாதுதான். அவ்வாறு நடந்து கொண்-டால் கோலி விளையாடும் கோவணம் கட்டாத சிறுவன்கூடக் கேலி செய்வான்_ ஏன், பைத்தியக்காரர்கள் என்று கல்லால் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கால தேச வர்த்தமானம் என்பார்-களே, அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளக் கூடியவர்கள்தான் _ மறுக்க-வில்லை.

ஆனால் சிந்தனையில், வாழ்க்கைக் கலாச்சாரத்தில், வீட்டு நடப்புகளில், பெயர்களைச் சூட்டிக் கொள்வதில், அவாள் வட்டாரத்துச் சடங்கு ஆச்சாரங்-களில் அவர்கள் அக்கிரகாரவாசிகளா ? அல்லது நம்மவர்களா? என்பதை ஒரு கணம் _ ஒரே ஒரு கணம் சிந்தனையைச் செலவிட்டு, கண்களை அகலத் திறந்து விட்டுப் பார்த்தால் _ பார்த்த மாத்திரத்-திலேயே பளிச்சென்று புலப்பட்டுவிடுமே! ஆமாம், ஆமாம்_ வெளிவேஷம்_ உத்தி-ராட்சப் பூனைகள் _ பசுத்தோல் போர்த்-திய ஓநாய்கள் என்பதை புரிந்து கொண்டு விடலாமே!

ஜூன் 4 ஆம் தேதி (2010) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையைக் கையில் எடுங்கள்.
அதில் முழு பக்கம் விளம்பரம்!
Educate
Enlighten
Empower

என்ற தலைப்பிட்டு ஒரு முழு பக்க விளம்பரம்

இடது பக்கத்தில் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் படம். வலது புறத்தில் ஜெயேந்திர சரஸ்வதியின் படம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.

காஞ்சி சங்கர மடம் நடத்தும் வேத பாடம் கலந்த பொதுக்கல்வி அளிக்கும் பள்ளி. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிராமணப் பையன் வேதப் பாட சாலை யில் பயில வரவேற்கப் படுகிறான். வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால், இந்த ஈடு இணையற்ற செயல் திட்டத்தில் மதச் சார்பற்ற தற்போதைய கல்வியும் சேர்த்து அளிக்கப் படுகிறது. பிராமணச் சிறுவர்கள் வேதங் களைக் கற்றுக் கொள்வதுடன் அதே நேரத்தில் முறையான கல்வியையும் பெற லாம்.
புராணங்கள், இசை, வரலாறு, கலை போன்ற இந்திய கலாச்சாரப் பாடங்களைக் கற்க ஈடு இணையற்ற ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குக் கலாச்சார மறுபயிற்சி செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படு கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அதன் குடும்ப வருவாய் பற்றிய விவரங்கள் அறிந்தபின் சேர்த்துக் கொள்ளப்படும். குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்பது-தான் இந்த விளம்பரம்.

வேதங்கள் பிராமணப் பையன்களுக்கு
புராணங்கள் பிராமணர் அல்லாத வர்களுக்கு
ஏனிந்த வேறுபாடு? ஏனிந்த பாட பேதம்?
பார்ப்பனர் அல்லாத மாணவர்-களுக்கு ஏன் வேதங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடாது?
பார்ப்பன மாணவர்கள் ஏன் புராணங்களைப் படிக்கக்கூடாது?

கொஞ்சமாவது அறிவைச் செலுத்து பவர்களுக்கு இந்த வினாக்கள் எழாமல் போகாது.
வேதங்களை ஏன் பிராமணர் அல்லாதாருக்கு _ சூத்திரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது?

அவர்களின் மனுதர்மம் அவ்வாறு கூறுகின்றது!

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி ஊற்ற வேண்டும்.

சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையானதால், அவன் பக்கத்தில் வேதமோதக்கூடாது.
வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளை உணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்கவேண்டும்.என்பது பார்ப்பனர்கள் சுருதி, ஸ்மிருதிகளின் கட்டளை.

இதனைத் தெரிந்து கொண்டால், காஞ்சி மடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியிட்டுள்ள முழு பக்க விளம்பரத்திற்கான தாத்பரியம் என்ன என்று புரியும்.
சூத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கலா-காது என்று மனு கட்டளையிட்ட பிறகு மறு வார்த்தை ஏது?

வேதம் விளக்கிய பிறகு, வேறு சிந்தனை சங்கர மடத்துக்கு வருமா-?

சூத்திரன் வேதங்களைப் படிக்கக்-கூடாது என்பது மட்டுமல்ல _ சூத்திர-னுக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுக்-காதே என்று பார்ப்பனர்களுக்கு மனு-வால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டு-விட்டதே! (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 103).

இதன் அடிப்படையில்தான் பிராமணப் பையன்களுக்கு வேதமும், பார்ப்பனர் அல்லாத சூத்திரர்களுக்கு புராணமும் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற சங்கர மடத்தின் விளம்பரமாகும்.

முனியாண்டி ஓட்டலில் பார்ப்பனர் சாப்பிடும் அளவிற்கு வந்து விட்-டார்கள், இப்பொழுதெல்லாம் உச்சிக் குடுமி வைப்பதில்லை என்று வக்-காலத்து வாங்கும் பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது தலையைக் கொஞ்சம் குலுக்குவார்களா? மூளைக்கு ரத்த ஓட்டத்தை உண்டாக்க முயற்சிப்பார்களா?
பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். கருஞ்சட்டைத் தோழர்-களின் கனமான கருத்து இது என்ப-தற்காகவும் சஞ்சலப்படவேண்டாம்.

இரண்டு தரப்பு தகவல்களும் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. எது சரி என்ற முடிவுக்கு வரவேண்டியது பார்ப்பனர் அல்லாத மக்களின் கடமை _ இதைத்தான் நாங்கள் சுட்டிக்-காட்டுகிறோம்.

பார்ப்பனர்களை, சங்கர மடங்களின் சரிதங்களை, நடப்புகளைச் சரியாக உணர்ந்தவர்களுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்காது; அவாளின் புத்தி அப்படித்தான். சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்ற டாக்டர் டி.எம். நாயரின் கருத்து நூற்றுக்கு நூறு சரியே என்பதை ஒப்புக் கொள்வர். பக்தியின் போதை ஏறி பார்ப்பனீ-யத்தின் மடியில் வீழ்ந்து கிடப்பவர்கள் போதை தெளியும் வரை கடைத் தேறமாட்டார்கள்.

ஜெயேந்திரர் தங்கியுள்ள கலவையில் சங்கர மடத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 160 பேர்களும் பிராமணர்கள். வேதபாட சாலையில் பயிலும் 21 சிறுவர்களும் பிராமணர்களே. சொல்லுவது விடுதலை ஏடு அல்ல சங்கர மடத்தின் செல்லப் பிள்ளையான தினமணி (16_1_2005)

காஞ்சி சங்கர மடத்தால் காஞ்சியை-யடுத்த ஏனாத்தூரில் நடத்தப்படும் பல்கலைக் கழகத்தில் கூட பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்கிற பாரபட்சம் உண்டு.

நக்கீரன் இதழுக்கு (31_8_2001) மாண-வர்கள் அளித்த பேட்டி வருமாறு:

காலேஜ் அட்மிஷன்போதே நான்பிராமின் மாணவர்களிடம் லட்ச ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை நன்கொடை வசூல் பண்றாங்க . . . அதே சமயம் பிராமின் மாணவர்-கள்ட்ட வெறும் பத்தாயிரம், பதினைந்-தாயிரம் மட்டுமே வாங்கிக்கிறாங்க.
முதல்ல கடிகாஸ்தானம், அன்ன-பூரணிங்கற ரெண்டு ஹாஸ்டல் மட்டும்தான் இருந்தது. கடிகாஸ்-தானத்தில் சமஸ்கிருத வேதம் படிக்கிற மாணவர்கள் மட்டுமே தங்க வைக்கப்-பட்டாங்க. மற்ற பிராமின், நான்பிரா-மின் மாணவர்களை அன்னபூரணி ஹாஸ்டல்ல தங்க வச்சாங்க.

அதற்குப் பிறகு மூணாவது விசா-லாட்சி ங்கற பேர்ல ஒரு ஹாஸ்-டலைக் கட்டினாங்க. அதன் பிறகு போன நவம்பர், டிசம்பரில் எங்கள்ட்ட ஒரு ஃபாரத்தைக் கொடுத்து அதில் எங்கள் கேஸ்டையும் சப்--_கேஸ்டையும் தெளிவா எழுதிக் கொடுக்கச் சொன்-னாங்க. இதன் அடிப்படையில் பிரா-மின் மாணவர்களை மட்டும் தனியே பிரிச்சி அவங்களை விசாலாட்சி-யில் தங்க வைச்சிட்டாங்க.

ஹாஸ்டல் மாத வாடகையில் கூட இந்த இரண்டு கேட்டகரிக்கும் வித்தி-யாசம் உண்டு. மார்க் போடுவதிலும் பாரபட்சம்தாங்க.

உதாரணத்துக்குச் சொல்றோம். எங்க கூட படிச்ச பிராமண நண்பன் 14 பேப்பரில் 4 பேப்பரில் மட்டுமே பாஸ் பண்ணினான்; ஃபோர்த்து செமஸ்டர்ல அவனை கடிகாஸ்-தானத்தில் தங்க வைச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு அவன் எல்லா பேப்-பரையும் எழுதி கிளியர் பண்ணிட்-டான். எப்படின்னா . . . இண்டர்னல் மார்க்கை இவனை மாதிரி பிராமின் மாணவர்களுக்கு முழுசா போட்டு பாஸாக்கிடுவாங்க. நான் பிராமின் மாணவர்களுக்கு மினிமம் மார்க்கான 11 மார்க்கை மட்டுமே பெரும்பாலும் போடுவாங்க. அதே மாதிரி காலேஜ் காம்பஸ்ல உள்ள இன்டர்நெட் ப்ரவுசிங் சென்டரை பிராமின் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். யாராவது நான் _ பிராமின் மாணவர்கள் சொந்தமா ஹாஸ்டல்ல கம்ப்யூட்டர் வச்சிருந்தா அவர்களிடமிருந்து வருடம் 500 ரூபாயை வசூலிச்சுக்குவாங்க. பிராமின்-களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது. என்று பாதிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கொடுத்த பேட்டி நக்கீரனில் விலாவாரியாக வந்ததே. (31_8_2001)

இதற்குப் பிறகும் பிராமின் _ நான்பிராமின் பிரச்சினை எல்லாம் அவுட் டேட்டடு என்று யாராவது சொல்வார்களானால் அவர்களை விடசற் சூத்திரர்கள் (பார்ப்பனர்களின் அசல் வைப்பாட்டி மக்கள்) வேறு யாராகத்தான் இருக்க முடியும்?

வேத ரக்ஷண டிரஸ்ட்
ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்
வேத ரக்ஷணநிதி டிரஸ்ட்
வேதபாட நிதி டிரஸ்ட்
கன்னிகாதான டிரஸ்ட்

இந்த எல்லா டிரஸ்டுகளுமே காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்படுபவைதான். பார்ப்பனப் பிள்ளைகளுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பது, பார்ப்பனர்-களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பவர்-களுக்கு உதவி செய்வதற்கே.

சரி, கன்னிகாதான டிரஸ்ட் என்று சொல்லப்படுகிறதே. அதிலாவது கல்யாணம் ஆகாத பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு ஏதாவது உதவி செய்யப்படுகிறதா என்றால், அங்கும் பூச்சியம்தான்.

இதுபற்றி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் (இரண்டாம் பாகம் - _ பக்கம் 903) ஜெகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன எழுதுகிறார்?

மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாக காலேஜ் படிப்பு உத்தியோகம் என்று போய் சுயேச்சையாகத் திரியும்படி தண்ணித் தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழை பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டி-ருக்கிறது.
இப்படிச் சொல்கிறவர்தான் இந்த லோகத்துக்கே குருவாம் _ சூத்திர ஜாதியினருக்கு உள்பட.

என்னதான் லோகக் குரு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் புத்தி மட்டும். எதையோதான் மேயப்-போகிறது என்பதை மறந்துவிடக்-கூடாது
இத்தனை டிரஸ்டுகளுக்கும் பணத்தை அள்ளிக் கொடுப்பது பார்ப்பனர்கள் மட்டும்தானா? எத்தனை எத்தனை சூத்திரத் தமிழர்கள் கொட்டிக் கொடுக்கிறார்கள்? காணிக்கை என்று கூறி பணத்தை வாரி இறைக்கிறார்கள்?

சூத்திரர்களுடைய பணமும், நிதியும் மட்டும் வேண்டும். ஆனால் உதவி மட்டும் அக்கிரகாரக் கும்பலுக்கே!

தமிழனின் பக்திப் போதை தலைக்கேறி ஏமாந்த சோணகிரியாக இருக்கு மட்டும் அக்கிரகார மேனிகள் ஏன் தமிழன் தலைகளைத் தடவ மாட்டார்கள்  தொடையில் கயிறு திரித்துத் தூங்கவிடமாட்டார்கள்?

காஞ்சி சங்கர மட முழு பக்க விளம் பரத்தைக் கொஞ்சம் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிராமணன் வீட்டிலிருந்-தும் ஒரு பிராமணப் பையன் வேதம் படிக்க வேண்டும் என்று சொல்லு-வதைக் கூடப் புரிந்து கொள்ள முடி-கிறது _ காரணம் வேதம் அவாளுக்-காகவே உள்ளது.

சாஸ்திர சம்பிரதாயத்தை வலியுறுத்-தும் காஞ்சி மடம் வேதத்தை மட்டுமேதான் பிராமணர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் அல்லவா? ஏன் அவ்வாறு வலியுறுத்தவில்லை?

வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால்... என்று இழுப்பானேன்? வேதபாடத்தாடு தற்கால கல்வியைப் போதிக்க திட்டமிடுவது ஏன்?
தங்கள் வசதிக்காக தங்கள் குல தருமத்தை மாற்றிக் கொள்வது ஏன்? வேத மரபையும் விட்டு விடக்கூடாது, தற்கால லவுகிக நாகரிக ஆடம்பர வாழ்-வையும் அனுபவிக்கவேண்டும் என்-பதிலே அவர்கள் குறியாக இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. அடேயப்பா! எவ்வளவு சாமார்த்தியக்காரர்கள்!

இன்னொன்றும் முக்கியமானது; கன்னிகாதான டிரஸ்ட் கல்யாணம் ஆகாத பிராமணப் பெண்களுக்கு என்று சொல்லும்போது சந்திரசேக-ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
மற்ற ஜாதிகள் பிராமணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை
பெருவாரியாக காலேஜ் படிப்பு, உத்தியோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி தண்ணி தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை என்கிறாரே பார்க்கலாம். பார்ப்பனப் பெண்கள் பெருவாரி-யாகக் காலேஜில் படிப்பது _ பெரு-வாரியாக உத்தியோகம் பார்ப்பது என்கிற அவர்களின் வசதியான வாய்ப்-பைக் கூட குறை கூறுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் பார்ப்பனீய சாமர்த்தியத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனப் பெண்கள் அதிகமாகப் படிப்பது _ உத்தியோகம் பார்ப்பது கிரிசை கெட்டத்தனம் என்றால் சங்கராச்சாரியாரின் கடமை என்ன?

பிராமணப் பெண்களே படிக்கா-தீர்கள் _ உத்தியோகத்துக்குப் போகா-தீகள் என்று அதட்டிச் சொல்ல வேண்-டியதுதானே _ அது போன்ற சாஸ்திரத்தைக் கட்டிக்காக்கத்தானே சங்கராச்சாரியார் இருக்கிறார்?

அவர் பாவம் பணக்காரர்! அவருக்கு ஏழடுக்கு மாளிகை. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பத்து கார் சொந்தத்தில் வைத்துள்ளார். எவ்வளவு சிரமம்,

காதில் வைரக் கடுக்கண். எவ்வளவு கஷ்டம்... என்று ஒருவர் சொன்னால் அவனைச் சூதன் _ சூழ்ச்சிக்காரன் என்று சமுதாயம் சொல்லும். அதே பாணியில் அதிகப் பார்ப்பனப் பெண்-கள் படிக்கிறார்கள் _ உத்தியோகத்துக்குப் போகிறார்கள் _ இவை எவ்வளவுக் கிரிசை கெட்டத்தனம் என்று சொல்-லும் சங்கராச்சாரியாரை ஏமாற்றுக்காரர் என்று
சொல்வதில்லை. மாறாக ஜெகத்குரு என்று சொல்கிறார்கள் என்றால்

சொல்லுகிறவர்களின் மண்-டையில் பார்ப்பனிய அடிமைத்தனம் என்ற களிம்பு அளவுக்கு மீறி ஏறி இருக்கிறது என்றுதானே பொருள்?

------ மின்சாரம்  விடுதலை ஞாயிறு மலர் (12.06.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]