வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 13, 2010

பாரத நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான்

ஜப்பான் பார்! ஜெர்மன் பார்! என்று பயாஸ்கோப் காட்டு-வார்கள். அப்பொழுது காசு கொடுத்து குழந்தை-களும், பெரியவர்களும்-கூட வண்ணக் கண்ணாடி மூலம் பார்ப்பார்கள். அதில் பல படங்கள் தெரி-யும். அது அந்தக் காலம்.

இப்பொழுது சீனா-வைப் பார் என்று சொல்ல வேண்டியுள்ளது. சீன எல்லையில் மூன்று சீனர்களை வடகொரியக் காவல்படை சுட்டுக் கொன்றுவிட்டது. ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சீனாவின் கவனத்-துக்கு இது கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி-கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உறுதி-யாகக் கூறியுள்ளது. வடகொரிய அரசும், கண்டிப்பாகத் தண்டிக்கப்-படுவார்கள் என்று கூறியுள்ளது.

தன் நாட்டைச் சேர்ந்-தவர்களோ, இனத்தவர்-களோ இன்னொரு நாட்-டால் பாதிக்கப்படும்-பொழுது கடுமையாக நடந்து கொள்வது சீனா-வின் வழமையாகும். இது குற்றமான ஒன்றும் அல்ல. பாராட்டத்தக்க உணர்ச்சியுமாகும்.

திபேத் உரிமைக்காக பீஜிங்கில் தலாய் லாமா-வின் கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பாட்டத்-தில் பங்கு கொண்ட அமெரிக்கர்களை சீனா கைது செய்து சிறையில் அடைத்தது என்றவுடன், அமெரிக்க உடனே தலை-யிட்டது - _ சீன அரசும் அவர்-களை விடுதலை செய்தது.

உலகத்தில் உள்ள பல நாடுகளும் தங்கள் நாட்-டைச் சேர்ந்த மக்களைப் பாதுகாக்கும் உணர்-வோடு நடந்து கொள்கின்றன.

இந்தியாவில்கூட தமிழர்களைத் தவிர மற்ற மாநில மக்கள், மற்ற மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்-டால் குரல் கொடுக்கத்-தான் செய்கிறது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் பெண்களுக்கு கன்னித்-திரை (Virgin Test) சோதனை செய்தபோது இந்தியா கடுமையாக எதிர்த்து, அதனை முறி-யடித்தது.
சீக்கியர்களாக இருந்-தாலும் தலைக்கவசம் (Helmet) அணிந்துதான் செல்ல வேண்டும் என்று பிரிட்டன் சட்டம் பிறப்-பித்தபோது, சீக்கியர்-களுக்காக இந்தியா கரி-சனத்துடன் குரல் கொடுத்த-துண்டு.

ஆனால் இந்தப் பாழாய்ப் போன தமிழர்-கள் இலட்சக்கணக்கில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டாலும் இந்-தியா இரக்கம் காட்டாது. இரக்கம் காட்டாதது மட்டுமல்ல, தமிழர்களை அதிவேகமாகக் கொன்று தீர்ப்பதற்கு எதிராளி-களுக்கு நவீன ஆயுதங்-களையும் கொட்டிக் கொடுக்கும் கொன்று குவிந்த ரத்த வாடை வீசும் இலங்கை அதிப-ருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்துக் குலாவும். பாரத நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான்.

-விடுதலை (13.06.2010), மயிலாடன்

1 comment:

வெத்து வேட்டு said...

ஈழ தமிழர்கள் இந்தியர்களா?
அல்லது கொல்லபட்ட கடத்தல் காரர்களை பற்றி கவலைபடுகிறீர்களா?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]