வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, June 08, 2010

பூவும், பொட்டும், வளையல்களும் பெண்களுக்கு பெருமையா?

கடந்த ஞாயிறு வாரமலர் (6.6.2010) ஒன்றில் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டி.வி.யில் திரைப்படம் ஒன்றைப் பார்த்-தேன். நாயகனிடம் சண்டை-யிட்டுத் தோற்றுவிடுகிறான் வில்லன். அவனுக்குத் தலை-யில் பூ வைத்து, வளையல் அணிவித்து, அவமானப்-படுத்துவதுபோல் ஒரு காட்சி அப்படத்தில் இடம் பெற்றி-ருந்தது.
இந்தக் காட்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. தோல்வி அடைந்தவர் தலை-யில் பூ வைத்து, வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றால், வளையல் அணி-பவர் எதற்கும் உருப்படாதவர் என்று அர்த்தமா? பல திரைப்படங்களில், இதுபோன்ற காட்சி இடம் பெற்று வருவது வருத்தத்தையே ஏற்படுத்து-கிறது.

சினிமாக்காரர்களே, சேலை கட்டுவது, பொட்டு வைப்-பது, வளையல் அணி-வது போன்ற பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷ-யங்களை, தோல்வியின் அடையாளங்களாக சித்திரிக்-காதீர்கள், ப்ளீஸ்!  - த. மாஸ்கோராணி, அறந்தாங்கி

இதில் உள்ள தகவல்-களை எடுத்துக் கொள்ளலாம். கடிதம் எழுதியவருக்குக்கூட தெளிவு இல்லை. அரை-குறையாகத்தான் கருத்து-களைக் கூறிட முயற்சி செய்துள்ளார்.
தோல்வி அடைந்த வில்-லனின் தலையில் பூ வைப்-பது, வளையல் அணிந்து கொள்ளச் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்துகிறார்-கள்? பூவையும், வளையல்-களையும் அணிந்து கொள்-பவர்கள் பெண்கள்தானே?

கோழை என்று ஒருவரை சித்திரிப்பதற்கு இந்த பொருள்களை அணிவிக்கி-றார்கள் என்றால், இதன் பொருள் பெண்கள் என்றால் கோழைகள் என்பதுதானே?
சிலர் சண்டை போட்டுக்-கொள்ளும்போதும் கூட ஒரு சில சொற்களைப் பயன்-படுத்துவதைக் கேட்க முடிகிறது.

என்னை என்ன பொட்-டச்சி என்று நினைத்துக் கொண்டாயா?
நான் என்ன சேலையா கட்டியிருக்கிறேன்?
என் கையில் வளையலா போட்டிருக்கிறேன்? என்று ஆண்கள் பேசுவது அவர்-களின் அகம்பாவத்தையும், பெண்கள் என்றால் பேடிகள் என்று நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையையும்தான் இவை காட்டுகின்றன.

இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் என்ன சொல்கிறார்? பொட்டு வைப்-பது, வளையல் அணிவது பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள்; இவைகளையே தோல்வியின் அடையாளங்களாக சித்தரிக்-காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.
இந்தச் சின்னங்க-ளெல்-லாம் உண்மையில் பெண்-களுக்குப் பெருமை சேர்ப்ப-தில்லை என்பதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களை இது மாதிரி-யான அணிகலன்கள் என்கிற கூண்டுக்குள் சிக்க வைத்து, அவர்களின் அறிவுத் திறனை-யும், உடல் வலிமையையும் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை நினைக்க வேண்-டும்.

இப்படி பூவும், பொட்டும், வளையல்களும் அணிந்து கொள்ளும் பெண்களின் கணவன்மார்கள் இறந்து-விட்டால், இவற்றையெல்லாம் துறந்துவிட வேண்டும் என்ப-தன் பொருள் என்ன? விதவை என்ற முத்திரை குத்தி அவ-மானப்படுத்தும் ஏற்பாடு-தானே? அதே நேரத்தில் மனைவி மரணம் அடைந்-தால் கணவன் இழக்கவேண்-டியது ஒன்றும் இல்லையே! ஆண்_-பெண்களுக்கிடையே இருக்கும் இந்த வேறுபாடு-களைத் தெரிந்து கொண்டால் இந்த அடையாளங்கள் எல்-லாம் பெண்கள் ஆண்-களின் உடைமைகள் என்-பதை அறி-விக்கும் விளம்பரப் பலகை அல்லாமல் வேறு என்னவாம்?
- விடுதலை (08.06.2010) மயிலாடன்


2 comments:

Kannan.S said...

//பெண்களை இது மாதிரி-யான அணிகலன்கள் என்கிற கூண்டுக்குள் சிக்க வைத்து, அவர்களின் அறிவுத் திறனை-யும், உடல் வலிமையையும் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை நினைக்க வேண்-டும். // -please think again.. Now, women are not as you mentioned..

hai said...

Mr.Kanna. Now some women (not all) are not like that. Bot most men are like that only.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]