வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 18, 2010

கும்பகோணம் மகாமகத்துக்கும் விடுமுறை..செம்மொழி மாநாட்டுக்கு விடுமுறை கூடாதா?

இராமாயணக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆரியர் திராவிடர் யுத்தம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்று முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலை-ஞர் அவர்கள் சொன்னது எவ்வளவுத் துல்லிய-மானது என்பதற்கு எங்கேயோ போய் ஆதாரங்-களைத் தேடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை அங்கீ-கரிக்கச் செய்த காலம் முதல், கோவையில் நடக்க இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்புக் காலந்தொட்டு இந்தப் பார்ப்பன சக்திகள் பேசும் _ எழுதும் _ கக்கும் நச்சுக் குண்டுகளைப் படிக்க _ கேட்கச் சகிக்கவே இல்லை.

தமிழ் செம்மொழியாக ஆகிவிட்டால், கத்தரிக்-காய் விலை குறையுமா? ஏழை நெசவாளர் வீட்டுத் தறி தடங்கல் இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா? என்று கேட்டது தினமலர் கூட்டம்.

திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறந்துவிட்டதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுமா என்றும் அதே கும்பல் கேட்டது.

கோவை செம்மொழி மாநாடு குறித்து மய்யப்-பாடலை முதல்வர் கலைஞர் எழுதினார் என்ற-வுடன், வேறு வழியில்லாமல் திரிபுவாதத்தில் குதித்துவிட்டது துக்ளக் திரிநூல் வகையறா.

இந்து மதத் தத்துவத்தை உள்ளடக்கிய பாடல் அது என்று தன் முதுகைச் சொரிந்து கொண்டு தன் ஆற்றாமையைப் பரிதாபமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வருணாசிரமத் தர்மத்தின் ஆணி-வேரை வெட்டி எறியும் குறளைக்கூட தன் கேடு-கெட்ட புத்திக்கு ஏற்றாற்போல திரிபுவாதத்தில் இறங்கி-விட்டது.

கீதைக்கு வேட்டு வைத்த நூலாயிற்றே திருக்குறள் _ நூலோர் கூட்டத்துக்குப் பொறுக்குமா?

பார்ப்பனப் பெண்ணுக்கும், ஆதிதிராவிடர்க்கும் பிறந்-தவர்தான் திருவள்ளுவர் என்று எழுத-வில்லையா இந்த இழிகுணத்தார்கள்.

கோவை செம்மொழி மாநாட்டைக் கொச்சைப்-படுத்தும் தனிக் கட்டுரைகள் _ கேள்வி பதில் என்ற பெயரால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் கோணங்கித்தனம் அப்பப்பா பொறுக்க முடியாது.

கோவை செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துவிட்ட-தாம். அனலில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடிக்கிறது துக்ளக். மாணவர்களின் படிப்பு என்-னாவது என்று கசிந்துருகிறது. தீபாவளி வாண-வேடிக்கை என்கிறது. (அப்பாடியாவது தீபாவளி வாணவேடிக்கை தேவையில்லாதது _ வீண் செலவு என்று ஒப்புக்கொள்கிறதே_ அதுவரைக்கும் அதன் புத்தி தெளிவடைந்திருந்தால் வரவேற்கலாம்-தான்).

செம்மொழி மாநாட்டுக்காகக் கல்விக் கூடங்-களுக்கு விடுப்பு விட்டால் கன கோபம் வருகிறது. ஊரில் கும்பாபிசேகம், கோயில் திருவிழா என்ற பெயரால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறதே _ கேவலம் கிரிக்-கெட் போட்டிக்குக்கூட விடுமுறை அளிக்கப்படு-கிறதே_ அப்பொழுது எங்கே போனது இந்த துர்வாசர்களின் துர்நாற்றம் பிடித்த எழுதுகோல்கள்!

மூத்திரைக் குட்டையில் குளிக்கும் கும்பமேளாவுக்கும், கும்பகோணம் மகாமகத்துக்கும் விடுமுறை அளிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. ஓரினத்துக்கான உயர் செம்மொழிக்காக மாநாடு நடத்தும்போது மட்டும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது  ஏன்?

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்காக ஓர் ஆண்டையே அறிவித்து கோடிக்கணக்கான ரூபாயை பாரதீய ஜனதா ஆட்சி கொட்டி அழுததே _ அப்பொழுது இந்தக் கூட்டம் எதிர்த்து எழுதியதுண்டா?

தமிழில் எழுதிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களின் காசுகளைக் கல்லாப் பெட்டியில் நிரப்பிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழையும், தமிழர்களின் தனிப் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தும் இந்தக் கும்பலைத் தமிழர்கள் அடையாளம் காணவேண்டாமா?

தமிழா இனவுணர்வு கொள்!, தமிழா, தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் உணர்வூட்டும் முழக்கங்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டாமா?
தமிழை நீஷப் பாஷை என்று சொன்ன சங்கராச்சாரியார் கும்பலை _ அவரின் அடியாள்களை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டாமா? அந்த இன எதிரிகளின் ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இக்காலகட்டத்திலாவது தமிழர்கள் சூளுரை எடுப்பார்களாக!

---------- விடுதலை தலையங்கம் (18.06.2010)

5 comments:

Unknown said...

அய்யோ பாவம்!

Thamizhan said...

வைகுண்ட ஏகாதேசி-
பிள்ளையார் சதுர்த்தி-
கிருஷ்ண ஜயந்தி=
ஆண்டுக்காண்டு வரும் கடவுள்-கடவுளச்சிக் கல்யாணங்கள், விவாஹரத்து நடந்ததாலோ ?
இந்தக் கருமாந்திரங்களுக்கு விடும் விடுமுறைகளை நீக்க வேண்டும்.

Unknown said...

மாமியார் உடைத்தால் மண்ணெண்ணை பாட்டில்! மருமகள் உடைத்தால் டாஸ்மேக் பாட்டில்!

தான் செய்வது எல்லாம் சரி என்று வாதிடுவது,சப்பைக் கட்டு கட்டுவது, அடுத்தவரைப் பழிப்பது - மூடர்களின் அடையாளம்!

கபிலன் said...

"தமிழை நீஷப் பாஷை என்று சொன்ன சங்கராச்சாரியார் கும்பலை _ அவரின் அடியாள்களை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டாமா? "

பெரியார் கூடத் தான் தமிழை காட்டு மிராண்டிகளின் பாஷை என்றார்...பெரியாரை புறக்கணிக்கலாமா ?

நம்பி said...

கபிலன் said.
//பெரியார் கூடத் தான் தமிழை காட்டு மிராண்டிகளின் பாஷை என்றார்...பெரியாரை புறக்கணிக்கலாமா ? //

இதற்காக சொன்னார்....

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.
புறக்கணிக்கலாமா? மதவாத கும்பல் புறக்கணிக்கத்தான் செய்யும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]