வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 12, 2012

திராவிடர் திருநாள் -- அறிஞர் அண்ணா


காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது. அவனுக்கு நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தரு கின்றன கழனிகள் அங்கே-கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண் ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே-சிற்றாடை தடுக்க-தத்தை போல்  தாவி-நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண் டிருக்கிறாள் - சின்ன மகள். கமலக் கரங்களால், தும்பைப் பூக்கக் கொட் டுகிறான், குறுநடைச் சிறுவன்! பிள்ளைக் கனி!! ஆகா, அந்தத் தும்பைப் பூவின் நிறம்தான் எவ்வளவு வெண்மையானது! அதையும் மிஞ்சும் அந்த உழவனின் உள்ளம் தான் எத்தகையது. பாடுபடுகிறான்-தசைகள், அசையாத நேரமில்லை. அவனுக்கு, உழைப்புதான்! உழைப்பிலே மலர் கிறது. செந்நெல்கதிர்கள்!! ஆனால், கதிர் கண்டதும், தனக்கு வாழ்வளிக் கும் தாயை மறந்துவிடவில்லை பலன் பெற்றதும், பலன் தந்தோரை மறக்கும் பதரல்லவே அவன். அதனால் மாதா வுக்கு மரியாதை செய்ய நினைக்கிறான்.
தன்னையும், தன்னைச் சார்ந்திருக்கும் கோடானுகோடி உயிர் ராசிகளையும் உய்விக்கும் அன்னை வழங்கும்பரிசைக் கண்டு பரவசமடையும் அவன, விழா கொண்டாடுகிறான். விளைச்சல் விழா வியர்வை பயன் தந்த நாளைக் குறிக்க ஓர் விழா பலன் கருதாது பரிசளிக்கும் பூமியன்னையின் ஞாபகார்த்தமான விழா! ஏன், அவனக்குப் பெருமிதம் வராது? பூமியிருக்கும் வரை எனக் கேது கவலை? என்று பூரிப்போடு பார்க்கிறான். அந்தப் பூரிப்பிலே, உலகமே, காட்சி தருகிறது. மனக் கண்ணில். நிமிர்ந்து பார்க்கிறான் தனது குப்பத்தில் கோலமிடும் கோதை யர் கும்பல், குடமெடுத்தேகும் குல மாதர்வரிசை மலர் ஆடி மகிழும் மகளிர்-அவர்தம் மொழிநாடியேகும் வீரர்! பள்ளுப்பாட்டு! பரவைசகீதம், அவனது அரும்பு மீசைகளிலே, அவன் இதயத்திலிருந்து ஓடும் இன்ப மூச்சு கள், தாக்குகின்றன. வீரம் கொட்டும் விழிகளிலே கனிவு வழிகிறது. முறுக் கேறிய உடம்பினிலே குதூகலம் ஏறு நடைபோடுகிறான் எமக்கு நிகர் யாரிங்கே? என்பது தென்படுகிறது, அவன் தோற்றத்தில்.
இத்தகைய உழவனைக் கண்டார், உலகப் பெரியார்! உளம் கிழ வரைந் தார். உழுதுண்டு வாழ்வாரே, வாழ் வார்-மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று. வள்ளுவப் பெருந் தகை சித்தரித்த, உழுதுண்டு வாழ்வா ருடன், இன்றைய உழவரை நினைத் துப் பார்த்தால், நெஞ்சு சிலிர்க்கும், ஏர்பிடித்த வனுக்கே பார் ஆளும் வேந்தன் அடைக்கலம்-என்றோர். நிலை, தமிழகத்தில் இருந்ததுண்டு. அந்தத் தமிழகமா - இன்று? இல்லை! இல்லை!! மிடுக்கோடு பார்க்கும் உழவன் இல்லை-ஆளரசுக்கு அடி மைப்பட்டு கூனல் முதுகாகிப், போன ஏழை இருக்கிறான். ஆனால், அந்த ஏழையிடம் பரம்பரைக் குணம் மட்டும் மாறிப்போய் விடவில்லை! தமிழ்ப்பண்பு, காய்ந்து போகவில்லை! தன்னையும் உலகையும் வாழ்விக்கும் தாயைப் போற்றத் தவறவில்லை; அவன் உடல் கறுத்து விட்டது. ஆனால் உள்ளம் தும்பைப் பூவாக வேயிருக்கிறது. அவனால் உலகம் வாழ்கிறது. வள்ளுவப் பெருந்தகை வர்ணிப்பதுபோல, அவனைத்தான் அரசுக்கட்டிலேறியோர் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்! அவன், பலன் கருதாத பூமியன் னையின், புத்ரனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டிருக்கிறான்! ஆனால் அவனால் பலன் பெறும் அரசோ, அவனை ஏமாளியென்று எண்ணிக்கொண்டிருக்கிறது!! எனினும், அவன், தன்னுடைய நன்றி காட்டும் விழாவை நடத்தத் தவற வில்லை! பொங்கலை-மறந்துவிட வில்லை.
கவ்விக்கொண்டிருக்கும் காரிருளில் ஒரு ஒளிச்சிதர்-இன்றைய பொங்கல் நாள், தமிழகத்திலே ஒரு பொன்னாளாகவிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று அந்தப் பொன், தூசுகளாலும் தூர்த்தர்களின் கழுகுப் போக்காலும், ஒளியிழந்து கிடக்கிறது. பழைய மாட்சியும், பண்டைப் பெரு மையும் இல்லை யென்றாலும், சிதறிய வரைத்தின் சிறுதுளிபோல, நமது சிந்தனையில் ஒளியிட்டுக் கொண்டிருக்கிறது.
அதனாற்றான், இந்த நாளை, இன்னும் தமிழகம் மறக்கவில்லை. விளைச்சல் விழா - விளைச்சல் வேறெங்கோ, கொட்டிச் செல்லப்பட் டாலும், நாம் கொண்டாடத் தவறா மலிருக்கும்விழா. இத்தகைய பண்பு நம்மிடையே ஒளியிழந்திருந்த காலம்போய், இன்று ஓரளவாவது சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. தூசு போக்கவும், நல்லறிவு பரப்பவுமான நற்பணி வளர்ந்து வருகிறது. இனப் பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று எனும் வகைகளில், இந்த ஆனந்த நாளிலே, அரசு பீடத்திலமர்ந்தும் உழைப்பவன் வாழவழி செய்யாது, உறுமுதலையும் உதை தருவதையும் ஆட்சிப் பாதையாகக் கொண்டி ருக்கும் ஆட்சியினருக்கும் ஒன்றை அறிவுறுத்த விரும்புகிறோம்.
அந்த அறிவுரையும், வள்ளுவர் வழங்கியதுதான். அல்லற்பட்டு ஆற்றது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை, என்றார் அப்பெரி யார். அந்தப் படை வளர்ந்து வருகிறது. அதனை எண்ணிப் பாரீர் என்று அரசினருக்கு அறிவுறுத்துகிறோம்.

புதுநிலை வளரவும், புதுவாழ்வு விரையவும், வள்ளுவர் கண்ட திரு அகத்தைப் பெறவும் இந்த இன்ப நாளில், உறுதியெடுத்துக்கொள்வோம். வாழ்க திராவிடம், வருக இன்பம்.
-----திராவிடநாடு 1953 - பொங்கல் மலர்.


Saturday, January 07, 2012

மாமி மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?


கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தை திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பெறும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்...என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகம் உள்ள மயிலாப்பூர் மாஃபியாயாவும். இந்த விமர்சனம் எம்ஜியார் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களை கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

“நான் அரசியலுக்குள்ளே நுழைஞ்ச நேரம் அது. எம்ஜியார் என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டுவர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அத்தோடு, கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, நம்ம கட்சியும் திராவிட இயக்கம்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னார். அப்ப எம்ஜியார். ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்டுபட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்க இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிடிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சி கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்கன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்லறாங்க” என்றபடி சிரித்திருகிறார்.

மேற்கண்ட செய்தி ஜன 7 – 10 , 2012 நக்கீரன் இதழில், ஆட்டையில், “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா என்று வந்துள்ளது.

அதன்பின் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள், நக்கீரன் அலுவலகத்தை தாக்கியிருகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது பத்திரிக்கைகள் தாக்கபடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும், இப்போது எதற்காக தாக்கப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அந்த செய்தி, உண்மையா? கற்பனையா? என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை ஒரு கற்பனை என்றே ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டு, நாம் இந்த செய்தியில் உள்ள கருத்தை பார்ப்போம்.

மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாமிகள் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்சர்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்று சொல்லி, ஆஷ் துறையை கொன்ற இந்து வெறியன் வாஞ்சி அய்யரின் செயலுக்கும், நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ் மோடியுடனும் சோவுடனும் இருக்கும் நெருக்கம், மாட்டுக்கறி தின்பதை தவறென காட்டச் சொல்லுகிறதா?

நாம் இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் குறித்து கொஞ்சம் பார்ப்போம், அதுவும் பார்ப்பனர்கள் சாப்பிடுவது குறித்து பார்ப்போம்.  

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தெளிவாக சொல்லுகிறார், படியுங்கள்.
“ திருமணத்திற்கு முதல்நாள் மதுவர்க்கம் எண்ணும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள். “விவாஹே கௌஹீ...க்ருஹே கௌஹீ...” திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.  திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்...வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம்தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்திற்கு முதல்நாள் நிகழ்சியில் மதுவர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும்...மறுநாள் திருமணச் சடங்கிலும் ரிஷிகளுக்கும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

அடுத்து சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதை படியுங்கள்.

“என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும்,  அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டுவந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது.

புத்தருடைய கொள்கைக்கு எதிராக, மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனையும் விதித்திருக்கிறார்.

“நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாதிமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதீம்”

இதன் பொருள்: சிராத்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உன்னாவிடின், இருபத்தொரு தடவை மிருகமாக பிறப்பான்.

மேலும் தேவதைகளுக்கு கள்ளும் ஊனுமே படைக்கவேண்டும்.
“ஜாமிவா ஏதத் யஞஸ்ய க்ரியதே
யஹன்வஞ் சௌபுரோடாசௌ”

அதாவது புரோடசம் மாத்திரம் உட்கொள்வதால், யஜ்ஞ புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக்கும் பொருட்டு மத்தியில் வபா (உயிரினங்களில் உள்ள கொழுப்பு) ஹோமம் செய்யவேண்டும்.

மேலும்,

“மஹோஷம் லா மகாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா சேவனம்
ஸ்வாது போஜனம் சூன்ருதம் வச்”

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காதவிடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்றும் சுரோத்ரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்கவேண்டும்.

இப்படி மாட்டுக்கறி தின்னும் வேதகால வழக்கத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி இருக்க, மாமிகள் மாட்டுக்கறியை சாப்பிட்டால் என்ன? சாப்பிடாவிட்டால் என்ன? சாமிகளே சாப்பிடலாம் எனும்போது இரண்டும் தவறல்ல.

அவர் சாப்பிடுவதாக வந்த செய்தி, அவரை மனதளவில் பாதிக்கிற செய்தியோ இல்லையோ, ஆனால் அவரை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் வகையறாவிற்கு நெருடலான செய்திதான்.

தாக்குதல் நடத்திய அ.தி.மு.க தோழர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதவர்களா?

அ.தி.மு.கவில், மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இல்லையா?

அவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதாக வந்த செய்தியை பொறுக்கமுடியாமல் நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என்று சொல்ல வருகிறார்களா?
மாட்டு கறியைத்தானே சாப்பிட்டதாக செய்தி வெளியிட்டாங்க...
மாட்டு சாணியை சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட மாதிரி கோபப்படுவது....நியாயமா?

இந்த தாக்குதல் நக்கீரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மனிதஉரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களின் உணவு கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்துத்துவாவின் தாக்குதல்.


திராவிடர்களே! இந்துத்துவா மெல்ல திராவிட இயக்கங்களின் உள்ளே, அதன் வீரியமிக்க விஷத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. உயிர் போகும் முன்னே விஷமுறிவு மருந்தை செலுத்தவேண்டும். கவனமாக செயல்படவேண்டிய நேரமிது. எதற்காக ஆதரிக்கிறோம்? எதற்காக போராடுகிறோம்? என்பதை தெரிந்து புரிந்து செயல்படுங்கள்.


--- முகநூளில் (facebook) திராவிடப்புரட்சி அவர்கள் எழுதியது


Thursday, January 05, 2012

பார்ப்பானை (பிராமணன்) தெரியுது....அவன் உன்னை கீழ்மகனாக சித்தரிக்கும் சூத்திர பட்டம்?


ஒரு நண்பர் கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது, கீதை பற்றி ரஷ்யாவில் நடந்த பிரச்சனை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்....அப்பொழுது, நான்கு வருணம் பற்றியும் சொன்னேன்....அதற்க்கு அவர், சூத்திரன் என்றால் என்ன? என்றார்...சரி, உங்கள் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை பற்றி நான் கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்றேன்....சரி என்றார்.

நான் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினேன்.

என் கேள்வி: கல்யாணம் எப்படி பண்ணுனிங்க?
அவர் பதில்: பார்ப்பான்(அய்யர்) வந்து பண்ணினார்

என் கேள்வி: ரெண்டு வீடு வாங்கினீர்களே அது திறப்பு விழா என்று ஏதும் செய்தீர்களா?
அவர் பதில்: ஆமாம், கிரகபிரவேசம் அய்யர் (பார்ப்பான்) வந்து ஓம குண்டம்
 வளர்த்து உள்ளே போனோம்.

என் கேள்வி: கார்,பைக் வாங்கி இருக்கிங்களே, அதற்க்கு எதாவது?
அவர் பதில்: அதற்க்கு (அய்யரை) பார்பானை அழைக்கவில்லை...நான் கோவிலுக்கு பொய் அவரிடம் சொல்லி பூஜை போட்டு கொண்டுதான் வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

இப்படி இருப்பதால் தான் சூத்திரன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை....பார்ப்பானை (பிராமணன்) தெரியுது......அவன் உன்னை கீழ்மகனாக சித்தரிக்கும் சூத்திர பட்டம் உங்களுக்கே தெரியவில்லை.....

இதனால் தான் அவன் இன்னும் குதியாட்டம் போட்டுகொண்டு திரியுறான்....என்று சொன்னேன்.....இதனை சொன்ன பிறகு ஒரு நீளமான அமைதிதான் அவரது பதிலாக இருந்தது.



Tuesday, January 03, 2012

அண்ணாமலைக்கு அரோகரா..மார்கழி வைகுண்ட ஏகாதசி..

போன மாசம் முழுவதும் அண்ணாமலைக்கு அரோகரா போட்டு தீபம் கொளுத்தி சொரண்டி தின்ன பார்ப்பனர்கள்......இப்ப, இந்தமாசம்(மார்கழி) வைகுண்ட ஏகாதசி என்று சொல்லிக்கிட்டு சொர்க்கவாசல் திறக்க கிளம்பிட்டானுக.....இதனால் பலன் அடைவது யார்? யாருக்கு சொர்க்கம்?....அப்புறம் மார்கழி மாச கடைசியில் திருவாதிரை என்று சொல்லி ஒரு சுரண்டல் போடுவானுக.....அடுத்து தை மாசம் தை பூசம் வரும்.......தமிழன் காசை சொரண்டி தமிழனை மொட்டை அடித்து.... இந்த பார்ப்பானுக வயிறு வளர்க்க இப்படி மாசம் மாசம் ஒரு ஆரிய பண்டிகையை நம் மீது திணித்துள்ளார்கள்...இந்த ஆரிய கலாச்சார படையெடுப்பை என்று உணர்வாய் தமிழா? அன்றே உனக்கு விடிவு காலம்.

கடவுளை கற்பித்தவன் முட்டாள்...அதனால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிகிறதா?


Tamil 10 top sites [www.tamil10 .com ]