வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, May 27, 2013

எவ்வளவு மகா அயோக்கியத்தனம்!

சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார் என்று  ஒரு பத்திரிகை எழுதுது. இந்த பத்திரிகை தான் தமிழ், வெங்காயம் என்று கதை அளந்து ஊரை ஏமாற்றும் பத்திரிகை.

கலைஞர் அவர்களை கருணாநிதி என்று எழுதும் சூரியன் பத்திரிக்கைக்கு இதனை பார்த்தாவது உணர்வு வருமா?????

எவ்வளவு மகா அயோக்கியத்தனம் ; பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு; ரியல் எஸ்டேட் கேப்புமாரி தனம், சங்கரராமன் கொலை வழக்கில் 60 நாள் போலிஸ் காவல் என்று அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட ஜெயேந்திரனை...ஏதோ பெரிய யோகியன் போல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று ஒரு பத்திரிக்கைகாரன் எழுதுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மகா மகா அயோக்கியன். 

இந்த அக்கிரமத்தை படிக்கும் போது மனுதர்மம் பற்றி அறிவு ஆசான் தந்தை பெரியார் சொன்ன கருத்து தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

மனுதர்மம் என்பது என்ன? பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் மேலானவன்; வணகதக்கவன். பார்ப்பானல்லாதவன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் வெறுக்கத் தக்கவன் என்பதுதானே? இராமாயணம் தரும் படிப்பினையும் இதுதானே?


Tamil 10 top sites [www.tamil10 .com ]