வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, June 07, 2010

சிறீரங்கத்து அய்யங்கார்...ஆபாசத்தை புதுக் கவிதையில் மொண்டு கொடுக்க முனைந்துள்ளார்

கந்தபுராணத்தை மிஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற பழமொழியே உண்டு. அந்த அளவுக்குப் புளுகு மூட்டை மட்டுமல்ல, ஆபாசக் குட்டையுமாகும்.

அந்தக் கந்தபுராணத்தை புதுக்கவிதை நடையில் நூலாக ஆக்கித் தந்திருக்கிறார் சினிமா கவிஞர் வாலி. இதற்கு முன் இராமாயணத்தையும் புதுக்கவிதையில் ஆனந்த-விகடனில் தொடராக எழுதி பிறகு நூலாகவும் வெளிவந்தது.

என்னதான் திராவிட இயக்கத் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவர்களின் கலாச்சாரத்திலும், நம்பிக்கையிலும், அனுஷ்டானத்திலும், அவற்றைக் கட்டிக்காப்பதிலும் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும்தான் இருக்கிறார்கள்.

இராமாயணத்தில் ஆரியர் திரவிடர் போராட்டம் என்பது மய்யப் புள்ளியாகும். கந்த புராணமும் அதே அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்று அன்னை மணியம்மையார் அவர்கள்_ நிரூபித்து எழுதியுள்ளார்கள்_ தக்க எடுத்துக்காட்டுகளுடன்.

இரண்டு கதைகளுக்கும்மூலம் சமஸ்கிருமாகும். இரண்டு கதைகளும் தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்துக் கற்பிக்கப்பட்டவையே!

இரு கதைகள் உற்பத்திக்குக் காட்டப்பட்ட காரணங்கள் அசுரர்களின் தொல்லைகள்
பொறுக்கமாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்கள் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டதாகும்.

இராமாயணத்துக்கு விஷ்ணு_ இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்த புராணத்திற்கு சிவன்_ கந்தனாக (சுப்பிரமணியனாக)ப் பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.

இராமாயணத்தில் இராவணன் அரக்கன் என்றால், கந்தபுராணத்தில் அரக்கன் சூரபத்மன் ஆவார்.

இராவணனுக்கு விரோதமாக அவன் தம்பி விபீஷணன் இருந்தான். சூரபத்மனுக்கு விரோதமாக அவன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரிக்குக் கையாளாக இருந்தான்.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சுரர்_அசுரர் போராட்டம் என்பதெல்லாம் ஆரிய திராவிடப் போராட்டமே என்று வரலாற்று ஆசிரியர்களே அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

உண்மை இவ்வாறெல்லாம் இருக்க, இந்த 2010 இல் ரெங்கராஜ அய்யங்கார் (கவிஞர் வாலி) கந்தபுராணத்தை புதுக் கவிதையில் எழுதி நூலாக வெளியிடுகிறார் என்றால் இதன் பார்ப்பனீயப் பின்னணியை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிறப்பு என்பது மிகவும் ஆபாசமானதாகும். வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினிமார்கள் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யாகப் புரோகி-தர்-களிடம் பட்டத்து ராணிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள்-மூலம் சூலாக்கப்பட்டு, அதன்பின் தசரதனிடம் அளவற்ற திரவியத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களைத் தசரதனிடத்தில் கொடுத்து விட்டார்கள் புரோகிதர்கள் (பாலகாண்டம் சர்க்கம் 14, பக்கம் 46, 47 நரசிம்மாச்சாரியார் மொழி பெயர்ப்பு).

கந்தபுராணம் குறித்து தந்தை பெரியார் கூறுகிறார்: ஸ்கந்தனுக்கு அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் என்ன-வெனில், ஸ்கந்தம்_ கந்தம் என்றால் இந்திரியம் என்ற பொருளும் காணலாம். கந்தன் பிறப்பு, சிவனுடைய ஒழுகிப்போன இந்திரியத்தில் இருந்து உற்பத்தியானவன் என்பதாகப் புராண ஆதாரம் இருப்பதால், அவனுக்குக் கந்தன் என்று பெயரிட வேண்டியதாயிற்று எனலாம்.

கதைக்கு மூலகாரணம் தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்தியதாகக் காரணம் வைத்து, அசுரர்களை ஒழிக்கச் சிவனின் உதவியைத் தேவர்கள் கோரியதாகவும், சிவன் தான் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுப்பதாகவும், அந்தப் பிள்ளை அசுரர்களை அழிக்கக்கூடியவனாவான் என்றும் கூறி - ஒரு பிள்ளையைப் பெறுவதற்காகத் தனது மனைவி பார்வதியிடம் கூடிக் கலவி துவக்கியதாகவும்; அக் கலவி தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு (நமக்கு ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள், இந்த நாள் 360 கொண்டது தேவர்களுக்கு ஓராண்டு; இந்தப்-படியாக ஆயிரம் ஆண்டு என்றால் 3,60,000 -(மூன்று லட்சத்து அறுபதினாயிரம் நாட்கள்) நடந்ததாகவும், அது-வரையில்கூட பார்வதிக்குச் சினை (கர்ப்பம்) ஏற்படவில்லை என்றும்; பிறகு தேவர்கள் வேண்டுகோளால் கலவியை நிறுத்தி இந்திரியத்தைப் பூமியில் விட நேரிட்டதாகவும்; அது ஆறாய் ஓடிக் கங்கையில் விழுந்து 6 பிரிவுகளாய் கங்கையில் மிதந்ததாகவும்; அதை ஆறு பெண்கள் எடுக்க, அது ஆறு குழந்தைகளாக ஆகி, ஆறு பெண்களிடமும் முலைப் பால் அருந்தியதாகவும்; பிறகு அவற்றை ஒன்றுபடுத்தியதில் ஆறு உடல்கள் ஓருடலாகித் தலை மாத்திரம் ஆறு தலைகளாக இருந்து அந்த ஓருடலில் ஒட்டிக்கொண்டதால் அது ஆறு தலைக் குழுந்தையாகி ஆறுமுகனானான் எனவும் கதை கட்டிக்கொண்டார்கள். இதன்படியும், இன்னும் கதையில் வரும் மற்ற சம்பவங்களின்படியும் பார்த்தால், இந்தக் கதை கற்பனை செய்துகொண்ட காலத்தில் ஆரியர்களுக்கிருந்து வந்த புத்தி, காட்டுமிராண்டித்தனமான புத்தி, அறிவு என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் கருத்துக் கொண்ட கந்தபுராணத்தை, வெகுகாலத்திற்குப் பிறகு வைணவர்கள் தங்கள் சமயமரபாக ஆக்கிக் கொள்ள விரும்பி, கந்த புராணக் கதைப் போக்கையே மூலமாகக் கொண்டு, பெயர்களையும், சம்பவங்களையும் மாற்றி, அதற்குக் கதா புருஷன் இராமன் என்றும், இராமன்_ விஷ்ணுவின் அவதாரம் என்றும் காட்டி, அந்நூலுக்கு இராமாயணம் என்றும் பெயர் வைத்துக் கற்பித்துவிட்டார்கள் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

இந்த ஆபாசத்தை புதுக் கவிதையில் மொண்டு கொடுக்க முனைந்துள்ளார் சிறீரங்கத்து அய்யங்கார். தமிழர்களை பார்ப்பனர்கள் வீழ்த்தத் தயாராக வைத்திருக்கும் போர்வாள் இந்தப் பக்திதான். எச்சரிக்கை!

-------- விடுதலை தலையங்கம் (25.05.2010)

1 comment:

ttpian said...

poonool irukkum varai:thamizhan thalai nimirathu

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]