வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, June 21, 2010

கரூரில் கழக மாநாடு களை கட்டும்!

கரூரில் இந்து முன்னணியினர் நேற்று மாநாடு _ அத-னையொட்டி ஊர்வல-மும் நடத்தினர். ஊர்வ-லப் பாதை முழுவதும் அநாகரிகமாகக் கூச்சல் போட்டுச் சென்றனர்.
உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பதா-கைகளை அடித்து நொறுக்-கினர். தட்டிக் கேட்ட தி.மு.க.வினரைத் தாக்கி-யும் உள்ளனர்.

ஜூலை 5 ஆம் தேதி அதே கரூரில் திராவிடர் கழக மாநாடு நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவிப்பு செய்-துள்ளார். இதற்கிடை-யில், இந்து முன்னணியி-னர் வன்முறையில் ஈடு-பட்டு வருகின்றனர்.

கரூரில் ஜூலை 5 ஆம் தேதி நடக்க இருக்-கும் மாநாட்டை கரூர் பொது-மக்கள் அரசிய-லைத் தாண்டி பெரிதும் ஆர்-வமுடன் எதிர்பார்க்-கும் நிலை ஏற்பட்டுள்-ளது.
முதலமைச்சர் கலைஞ-ரின் டிஜிட்டல் பேனரை கிழித்தவர்களை தட்டிக் கேட்ட தி.மு.க.வினர் 3 பேர் தாக்கப்பட்டனர். இதில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்-கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்-துறை-யில் புகார் செய்யப்-பட்டு உள்ளது.

இந்து முன்னணியின் 6- ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் கரூரை அடுத்த வெங்கமேட்டில் இருந்து பேரணி புறப்பட்-டது.

அப்போது வெங்க-மேட்-டில் இனாம் கரூர் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு செம்மொழி மாநாடு குறித்த டிஜிட்-டல் பேனர் வைக்கப்-பட்டு இருந்தது. அதில் இருந்த முதலமைச்சர் கலைஞரின் உருவ படத்தை பேரணியில் வந்த சிலர் கிழித்து உள்ளனர்.

இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த இனாம் கரூர் நகர தி.மு.க. துணை செயலாளர் ரவி (வயது 40), இளைஞர் அணி துணை அமைப்பா-ளர் தனபால் (41), சின்ன-தம்பி (47) ஆகிய 3 பேர் தட்டிக் கேட்டு உள்ள-னர். அப்போது பேரணி-யில் வந்தவர்கள் இவர்-கள் 3 பேரையும் கடுமை-யாகத் தாக்கி உள்ளனர்.

இதில் அவர்கள் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதைத்-தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்காக சேர்த்து உள்ள-னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற-வர்களை இனாம் கரூர் நகர செயலாளர் கே.கந்த-சாமி தலைமையில் தி.மு.க.-வினர் நேரில் சென்ற பார்த்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தி.மு.க.-வினர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்-னணியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்க-மேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 -------- நன்றி விடுதலை (21.06.2010)

                                                                                                                                                                   

3 comments:

Anonymous said...

நீங்க ரெம்ப அப்பாவியா இருக்கீங்களே. மதுரை தினகரன் அலுவலகம், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் என்று நாங்க பார்த்த திமுகவே வேறேயாச்சே. "உண்மை"ன்னு தங்களது பத்திரிகைக்கு பெயர் வைச்சிட்டு "பகுத்த"றிவுக்கு வேலை கொடுக்காம செய்தி போடலாமா.

Unknown said...

இந்து கட்சிக்காரர்களும், திராவிட வழிக்கு, வருகிறார்கள் போல! வன்முறை என்ன திராவிடங்களுக்கும்,செங்கொடிகளுக்குமே உரியதா?

நம்பி said...

//ரம்மி said...

இந்து கட்சிக்காரர்களும், திராவிட வழிக்கு, வருகிறார்கள் போல! வன்முறை என்ன திராவிடங்களுக்கும்,செங்கொடிகளுக்குமே உரியதா?
9:16 AM //

என்ன? மாலேகான் குண்டு வெடிப்பை திராவிடக் கட்சிகள் நிகழ்த்தியதா? இல்லை அதையெல்லாம் வன்முறையிலிருந்து தூக்கி அகிம்சையில் சேர்த்துவிட்டனரா? காந்தியை கொன்றது புண்ணிய காரியத்தில் சேர்த்துவிட்டனரா? இந்து கட்சியினர்.

ஓ! தீவிரவாதம், பயங்கரவாதம், உயிர்க்கொலை, நாட்டை நாசமாக்குவது மட்டுமே இந்துக்ட்சிகளுக்கு சொந்தம்...வன்முறை வேறு டிவிஷன்....கரெக்ட்!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]