வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 16, 2010

நாட்டை நாசமாக்கும் வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்..

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பண ஊழலிலும், ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மத்திய அமைச்சர் சசிதரூர் போன்றோரை காங்கிரஸ் ஆட்சியில் வைத்திருக்கக் கூடாது; உடனே வெளியேற்றுங்கள் என்று பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாகவும் ஆகிவிட்டது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன.

விளையாடுகின்ற விளையாட்டாளர்களையும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கியே வெற்றி_ தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்!

நம் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும்கூட இப்போதை விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் சில நாள்கள் நடக்கும்.

ஆனால் இப்போது அய்.பி.எல்., (மி.றி.லி) என்ற அமைப்பு_ கிரிக்கெட் அணிகள் உருவாகி, ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடை-பெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு, இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

நாட்டை நாசமாக்கி வரும் கிரிக்கெட் போதை

பஞ்ச பாண்டவர் காலத்திலேயே பாரதக் கலாச்சாரமாக இந்த கிரிக்கெட் போதை, நாட்டை நாசமாக்கி வருகிறது என்பது தான் இதற்கு மூலவேர் ஆகும்!

கடந்த சில நாள்களாக, ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது_இந்த அய்.பி.எல். (மி.றி.லி) 20 ஓவர் கிரிக்கெட்டுகளில் புழங்கிய பண விளையாட்டும், பரஸ்பர குற்றச்சாட்டு ஊழல்களும்தான்!

நடுத்தர வர்க்கம் முதல் எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளைப் போல, இது மக்களைச் சுரண்டுகிறது, 3 ஆண்டுகளாக.

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் உள்ளனவாம்! உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் (உலக மயத்தின் மற்றொரு கூறு போலும் இது) இதில் பங்கேற்கிறார்களாம்!

மர்மம் நீடிக்கிறது

இதனால்_ போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அய்.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளைச் சேர்க்க முடிவு செய்-யப்-பட்டதாம். சமீபத்தில் அந்த 2 அணிகளுக்கான (கொச்சி, புனே அணிகள்) ஏலத்தின் மூலம் நடந்தனவாம். கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் அய்.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம்!.

இதில் கொச்சி அணி தேர்வு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் (ஸிமீஸீபீணீஸ்ணீக்ஷ்) என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கி-யுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம்!. இதனால் (எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா?) கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமையாளர்கள் யார்? யார்? என்று மர்மம் நீடிக்கிறது.

செய்தியாளர்களிடம் அய்.பி.எல். போட்டி ஆணையர் லலித் மோடி என்பவர், கொச்சி அணி உரிமையாளர் யார் என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது என் கடமையாகும்.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய்கள் மதிப்பு) இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

சசி தரூர் என்ற கேரளப் பார்ப்பனர்

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக்கொண்டே அறிவு ஜீவி, சசிதரூர் என்கிற (கேரளப் பார்ப்பனர் இவர்) பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளுமன்றத்திலும்,எதிர்க்கட்சியான பா.ஜ.க., இடதுசாரிகளாலும் பேசப்பட்டு வருகிறது!.

அந்த இலவசப் பங்கு பெற்றதாகக் கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்!. இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்!

ஏன் நனைந்து சுமக்க வேண்டும்?

இத்தகையவர்களை அமைச்சகளாக, மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் ஏன் நனைந்து சுமக்கிறது என்பது நம்மைப் போலவே பலருக்கும் புரியவில்லை!.

இது போலவே சர்ச்சைகளுக்குப் பெயர்போன அமைச்சர் மேலும் 2,3 பேர்கள் இடம்பெற்று, மத்திய ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்ற நிலையும் உள்ளது.

ரூ.70 கோடி கைமாறியிருக்கிறது

சசி தரூர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அய்.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில், தலையிட்டார் என்றும், அவரது உத்தரவின் பேரில் சுனந்தா (காஷ்மீர் அழகிக்கு) ரூபாய் 70 கோடி கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது!.

லலித் மோடியின் இணையதளத்தில், சசி தரூர் ஏன் அய்.பி.எல். ஏலத்தில் தலையிடுகிறார் என்று கேட்டிருந்தார்; அதற்கு சசிதரூர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம்!.

ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளில் லலித்மோடிக்கு ரகசியமாக பங்கு உள்ளது. அதுபற்றி அவர் ஏன் வாயைத் திறப்பது இல்லை என்று சசிதரூர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி ஊழல் ஒரு தொடர் கதை_ இத்துறையில் எனக்காட்டி வருவதாக தெரிகிறது!

இதற்கிடையில் கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளர் சத்திய ஜித் கெய்க்குவாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், லலித்மோடி எங்களைத் தொடர்புகொண்டு ரூ.230 கோடி தருகிறேன்; கொச்சி அணியை நான் சொல்பவர்களிடம் விற்றுவிடுங்கள் என்றார், நாங்கள் மறுத்துவிட்டோம் என்று ஒரு தகவல்!

திடீர் சோதனை

இதற்கிடையில் ஒரு நல்ல செய்தி: வருமான வரித்துறையினர் இந்த அய்.பி.எல். அலுவலகங்களை திடீர் சோதனையிட்டனர் என்பது _ கொள்ளை லாபக் குபேரர்களை வருமான வரித்துறை விட்டுவிடக் கூடாது. திமிங்கலங்கள் தப்பி, சிறுசிறு மீன்கள்தான் வலையில் சிக்குவது வழமை. இதற்கு மாறான நடவடிக்கையாக அது அமையவேண்டும்.

காங்கிரசுக்கு தலைவலி-திருகுவலி

காங்கிரஸ் கட்சி_ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி_ திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது. இந்த கிரிக்கெட் ஊழல்களுக்கு என்றுதான் முற்றுப்புள்ளியோ?

----- நன்றி விடுதலை (16.04.2010) 

2 comments:

Anonymous said...

இன்னிக்கு அரசியலும் அந்த லட்சணத்துல் தானே இருக்கு.

Deepak Kumar Vasudevan said...

ஆங்கிலத்தில் CRICKET என்ற வார்த்தையில் முதலேழுத்தினை வெட்டுங்கள். அது RICKET என்று வரும். Ricket என்பது எலும்புகளை பலவீனப் படுத்தும் ஒரு நோயாகும்.

அது போலத் தான் CRICKET உம் நமது நாட்டின் நிதி, கலாச்சாரங்களை வீக்கப் படுத்துகின்றன.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]