வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 21, 2010

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பு ஏற்படுத்தியதுதான் தமிழ்-நாடு தமிழருக்கே!

சக்ரவர்த்தி ராஜ-கோபாலாச்சாரியாரால் (ராஜாஜி) சென்னை மாகா-ணத்தில் கட்டாய இந்தி புகுத்-தப்பட்ட நாள் தான் இந்நாள் (1938).


சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சர் என்ற முறை-யில், 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய கையோடு கட்டாய இந்தி-யையும் திணித்தார்.

இந்தியைப் புகுத்திய-தற்குப் பிரதமர் ஆச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்-போது குறிப்பிட்டார்.

1926 ஆம் ஆண்டி-லேயே இந்தியின் இரகசி-யம்பற்றி எழுதினார் தந்தை பெரியார். தமிழிற்குத் துரோ-கமும் _ இந்தியின் இரகசிய-மும் (குடிஅரசு, 7.3.1926) என்ற தலைப்பில் எழுதி-யிருந்தார்.

1931 இல் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய புராணக் கதை களைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வட மொழி முதலிய மொழி களை நமது மக்கள் படிக் கும்படிச் செய்வது, பார்ப் பனீயத்துக்கு மறைமுக மாக ஆக்கம் தேடுவ தாகும் என்று 1931 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கப்-பட்டது. அதைத்தான் 1938 இலும் லயோலா கல்லூரியி-லும் ஆச்சாரியார் எதிரொ-லிக்கிறார்.

பார்ப்பனர்களின் உள்-ளத்து ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும் நச்சுப் பொருள் எவ்வளவுத் தொலைநோக்-கோடு துல்லியமாகக் கண்-டறிந்து வெளிப்படுத்தப்பட்-டுள்ளது என்பதை நினைக்-கும்பொழுது மிகுந்த ஆச்-சரியமாகவே இருக்கிறது.

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பும், அதனால் ஏற்-பட்ட எதிர்ப்பும்தான் தமிழ்-நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களால் முழங்கச் செய்தது.

கட்சிகளை மறந்து ஜாதி மதங்களைத் துறந்து தமி-ழர்கள் என்ற உணர்வுடன் தந்தை பெரியார் தலைமை-யில் தமிழர்களை ஓரணியில் திரட்டியது ஆச்சாரியாரின் இந்தித் திணிப்புதான்.

இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் தலைமை தாங்கிப் போர்க்குரல் எழுப்பி, இன-மான, மொழிமான, தன்மான எழுச்சிப் பேரலையைத் தமிழர்கள் மத்தியில் எழுப்-பியதன் விளைவுதான் பெண்கள் சென்னையில் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுக்-கும் உணர்வை ஊட்டியது (13.11.1938).

இறுதி வெற்றி தமிழர்-களுக்கே. கட்டாய இந்தி தொலைந்தது (21.2.1940).

எப்படியோ ஆச்சாரி-யாரின் சமஸ்கிருதத்தின் குட்டியான இந்தித் திணிப்பு தமிழர்கள் தம் தலைவரை அடையாளங் காணவும், தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வெடித்துக் கிளம்-பவும் பேருதவி செய்தது என்பது மட்டும் உண்மை!

- விடுதலை மயிலாடன் (21.04.2010)



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]