வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 15, 2010

திராவிடர் மாணவர் மாநில எழுச்சி மாநாடு தமிழகம் முழுவதுமிருந்து திரளுகிறார்கள்....

திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு ஏப்.16 அன்று காலை சென்னை பெரியார் திடலிலும் மாலை புரசைவாக்கம் தாணா தெருவிலும் மிக பிரம்-மாண்டமான ஏற்பாட்-டுடன் எழுச்-சியுடன் நடைபெறுகிறது.


தமிழகம் முழுவதுமிருந்து

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி-லிருந்தும் இளைஞர் பட்டாளத்-தினர் சென்னை நோக்கித் திரண்டு வருகின்றனர். கார், வேன், ரயில் மற்றும் பல வாகனங் களில் வரும் செய்திகள் தலைமைக் கழகத்திற்கு வந்த வண்-ணம் உள்ளன.

பெரியார் திடலில் மாநாடு தொடக்கம்

16.4.2010 அன்று காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திட-லில் நடிகவேள் ராதா மன்றத்தில் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு தொடங்குகிறது.

இன்னிசையுடன் தொடங்குகின்ற மாநாட்-டிற்கு மாநில மாணவ-ரணி துணைச் செய-லாளர் மு.சென்னியப்பன் தலைமை தாங்கி உரை-யாற்றுகிறார்.

காலை 11 மணிக்கு சுயமரியாதைச் சுடரொ-ளிகளின் படத்தினை கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி-துரை திறந்து வைத்து பேசுகிறார்.

மாநாடு திறப்பு-ஈரோடு தமிழன்பன்

காலை 11.10 மணிக்கு கவிஞர் ஈரோடு தமிழன்-பன் மாநாட்டைத் திறந்து வைத்து உரை-யாற்றுகின்றார். பகல் 12.10 மணிக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்-றுகிறார்.

மாநாட்டு இடைவே-ளைக்குப் பிறகு மந்திரம் அல்ல தந்திரமே என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. விவாதப் போர்

அடுத்து விவாதப் போர் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலா-ளர்கள் கவிஞர் கலி.பூங்-குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச்செயலா-ளர்கள் துரை.சந்திரசேக-ரன், பிரச்சாரச் செய-லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆகி-யோர் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பிர்மாண்ட பேரணி அடுத்து மாணவர்க-ளின் எழுச்சிப் பேரணி மாலை நேரத்தில் மாநாடு நடைபெறும் தாணா தெரு நோக்கிப் புறப்படுகிறது.

பேரணிக்கு கழக தலைமை நிலையச் செய-லாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்குகிறார். பேரணியை கழக துணைப் பொதுச்-செயலாளர் உரத்தநாடு இரா.குணசே-கரன் தொடங்கி வைக்-கிறார். துணைப்-பொதுச்-செயலாளர் டாக்-டர் பிறைநுதல் செல்வி, மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், வட-சென்னை மாவட்ட திக தலைவர் கவிஞர் செ.வை.ர.-சிகாமணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ-நாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் தி.இரா.-இரத்-தினசாமி ஆகியோர் ஊர்வலத்திற்கு முன்-னிலை வகிக்கின்றனர்.

திறந்தவெளி மாநாடு

பின்னர் மதவெறி மாய்ப்போம்! மனித-நேயம் காப்போம் மற்-றும் பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னை புரசை வாக்கம் தாணா தெருவில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. பல்சுவை இசை நிகழ்ச்சி, வீதி நாடகம், நடை பெறுகிறது. மாண-வரணி அமைப்பாளர் சு.மணி-கண்டன் வர-வேற்புரை-யாற்று-கிறார். மாநில மாணவரணி செயலா-ளர் ரெ.ரஞ்சித்-குமார் தலைமை உரை-யாற்று-கிறார். தலைவர்கள் உரை

மாநாட்டில் எஸ்.டி.-கொரியர் நவாஷ்கனி (நூலைப் பெறுகிறார்) திமுக எம்.பி டி.கே.எஸ்.-இளங்கோவன், மாநகர மேயர் மா.சுப்பிரம-ணியன், விடுதலை சிறுத்-தைகள் கட்சித் தலை-வர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலை-வர் கி.வீரமணி ஆகி-யோர் உரையாற்றுகின்-றனர்.

------ நன்றி விடுதலை(15.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]