வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 18, 2010

வெட்கமில்லை...பக்தி என்றால் வெட்கமும் அறிவும் கெட்ட இடம் தானே!

மத்திய அமைச்சர் வயலார்ரவி குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரையைக் காணிக்கை-யாகக் கொடுத்துள்ளார். பீதாம்பரப்பட்டு, கதளி எனும் வாழைப் பழங்-களையும் காணிக்கை-யாகக் கொடுத்தாராம். நீண்ட நேரம் கோயிலில் தியானத்தில் ஆழ்ந்தாராம்.


நம் நாட்டு அரசியல்-வாதிகள் இப்படிப் பக்திப் பழமாகக் காட்டிக் கொள்-வது ஒன்றும் அதிசய-மல்ல.

இதே குருவாயூரப்பன் கோயிலில் இதே வயலார் ரவிக்கு எப்படியெல்லாம் அவமதிப்பு நடந்தது என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வயலார் ரவியின் பேரன் ராஜீவ் கிருஷ்ணா-வுக்கு அன்னபிரச்சானம் (முதன் முறையாகக் குழந்-தைக்கு உணவு ஊட்டும் சடங்கு) குருவாயூர் கோயில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் அந்தக் கோயி-லில் என்ன நடந்தது? புண்யாகவசனம் நடத்தி-னார்கள் -_ அதாவது தீட்-டுக் கழித்து உள்ளனர்.

அதற்குக் காரணம் என்னவாம்? வயலார் ரவியின் மகன் மணந்து கொண்டது ஒரு கிறிஸ்-துவப் பெண்ணையாம். கிறிஸ்துவப் பெண்ணுக்-குப் பிறந்த பிள்ளைக்கு குருவாயூர் கோயிலில் எப்படி அன்னபிராச்-சனம் நடத்தலாம்? அதற்காகத்-தான் தோஷம் கழிக்கும் நடவடிக்கையாம்.

(பிண்டம் பிடிப்பதில்-கூட பிர்மா மதம் பார்த்து-தான் செயல்படுகிறோரோ!)

சரி.. அந்தச் சடங்கு நடப்ப-தற்குமுன் அது கிறிஸ்துவக் குழந்தை என்று தெரியாதா? ஏன் அப்பொழுதே தடுக்க-வில்லை? இங்குதான் இருக்கிறது அவர்களின் கோயில் பிசினஸ்; அன்னபிராச்-சனம் என்பதற்கும் ஒரு வசூல் - _ அதன்பின் தீட்-டுக் கழிப்பதற்கும் ஒரு வசூல்

இப்பொழுது பாருங்-கள். அதே குருவாயூரில் வயலார் ரவி எடைக்கு எடை காணிக்கை கொடுக்-கிறார். அதனை சாங்கோ பாங்கமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

கொள்ளு என்றால் வாய் திறப்பு கடிவாளம் என்றால் இறுக மூடலோ!

வயலார் ரவியின் குடும்பம் இப்பொழுது ஒட்டு மொத்தமாக இந்துக் குடும்பமாகி விட்டதா?

கோயில் கும்பலுக்கும் வெட்கமில்லை; வயலார் ரவி போன்றவர்களுக்கும் வெட்கமில்லை. பக்தி என்றால் வெட்கமும் அறிவும் கெட்ட இடம் தானே!

------- நன்றி விடுதலை மயிலாடன் (18.04.2010)

1 comment:

Sivamjothi said...

People in temple need money.

They depend on money for following reasons

1. food prices are too much.
2. Education is also costly.(you the quality of govt schools)
3. Treatments in hospital is non bearable.

Where is money for them?

Have we thought about this prices raises?

Do you know who introduced bribe,corruption?...
Who is having that attitude?

When பார்பன was in power every things were managed well.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]