வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 24, 2010

பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்

கேள்வி: நம் நாட்டில் இறைவுணர்வு குறைந்து வருகிறதோ?


பதில்: என் அனுபவத்-துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.

...கோயிலுக்குப் போற-வங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்-கிட்டே இருக்கு!

பழனியில் எம் பெரு-மான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடி-யெல்-லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடி-யைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.

கேள்வி: இறைவனி-டத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்-றால், ஒழுக்கமும் இருக்-கிற-தென்று சொல்லலாமே?

பதில்: ஊஹூம்... அப்-படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்த-மேயில்லை...

(ஆனந்தவிகடன், 2.12.1991).

கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.

சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?

காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்-தவும், திராவிட இயக்கத்-தைக் கொச்சைப்படுத்த-வுமே அவதாரம் எடுத்த-தாகச் சிண்டை விசிறி-விட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்-பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.

திருப்பதியில் தேவஸ்-தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டு-மாம்.

இதற்கான காரணங்-கள் வெளிப்படை. திருப்-பதி கோயிலுக்குச் சொந்த-மான தங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடு-களும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்-றன.

விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்-கெனவே வெளிவந்தது-தான்.

திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்-போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்-ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்ப-தைக் கண்டுபிடிக்கத்தான்.

திருப்பதி டாலர் விற்-பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.

ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தர-விட்டதும் நினைவில் இருக்குமே!

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?

---விடுதலை  மயிலாடன் (24.04.2010)




3 comments:

அருள் said...

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

தினமலருக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா ?

பார்ப்பானுக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா ?

பரணீதரன் said...

/*தினமலருக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா ?
பார்ப்பானுக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா ? */

நல்லதொரு கேள்வி அய்யா அருள்......சிந்திக்கட்டும் இந்த மானம்கெட்ட கூட்டம்

கோவி.கண்ணன் said...

30 ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்களின் எண்ணிக்கை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், ஆனால் தற்போது உணவகங்களின் எண்ணிக்கை தெருக்களின் எண்ணிக்கையை விட மிகுதி, இதை வைத்து மக்கள் ஓட்டல் உணவுகளை மிகுதியாக நாடுகிறார்கள் என்று சொல்ல முடியும், காரணம் சமையல் என்பதே ஒரு சுமையான வேலையாக போய்விட்டது, வீட்டில் சமைப்பதற்கு ஆயத்தம் செய்வதும், அதன் பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும் பெரிய வேலையாகிவிட்டது, ஆண் பெண் இருவரும் வேலை செய்வதால் சமையல் என்பது சுமையாகிவிட்டது எனலாம். ஓட்டல்களின் எண்ணிக்கையும் மிகுந்ததற்குக் காரணம் வீட்டில் சமைக்கும் வேளைகளின் எண்ணிக்கை குறைந்ததுவும் ஒரு காரணம். இந்த காரணங்களை வைத்து ஓட்டல்களில் தரமான உணவைத் தான் தருகிறார்கள் அதனால் தான் ஓட்டல்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது, மக்களுக்கும் ஓட்டல்கள் என்றென்றும் தேவையாக இருக்கிறது என்று தீர்ப்பு எழுதிவிட முடியமா ?

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு மக்கள் தொகை உயர்ந்ததும், நகரங்கள் பெருகியதும், புதிய புற நகரங்கள் தோன்றியதும் காரணம், அந்தந்த பகுதிகளில் ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் என்பது மறுக்க முடியாத தேவை ஆகி இருக்கிறது என்பது காரணம் அன்றி, அது வழிபடுபவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறது, தீர்த்து வைக்கிறது, மக்களுக்கு இறை நம்பிக்கைக் கூடி இருக்கிறது என்பதற்கான அடையாளம் இல்லை. வழிபாட்டுத் தலங்களினால் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தது என்பது உண்மையானால் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்காது என்பதே உண்மை. ஒரு வழிபாட்டுத் தலத்தினால் பிரச்சனைகள் தீர்ந்தவர்கள் அந்த வழிபாட்டுத் தலத்தையே அவர்களது சந்ததிகளுக்கும் பரிந்துரைப்பார்கள் புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களின் தேவைக்கு வாய்ப்பே இருந்திருக்காது.

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை.

100 ஆண்டுகளுக்கு முன் வெளி நாடுகளில் இந்து கோவில்கள் குறைவு, தற்பொழுது 100க் கணக்கில். அந்நாட்டு மக்கள் இந்துக்களாக மாறிவிட்டார்கள் என்று இதற்கு விடை சொல்ல முடியுமா ? மாறாக இந்துக்கள் அந்த நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளார்கள் என்பது மட்டும் தானே விடை.

****

நித்யானந்தம் போன்ற போலி சாமியார்களின் ஆன்மிக ஆதிக்கத்தால் பணக்காரர்களிடமிருந்து பெரிய அளவில் வருமானம் குன்றிய கோவில்களில் தற்போது உண்டியல் வசூல் மிகுந்து இருக்கிறதாம், இதை வைத்து மக்களுக்கு ஆன்மிக உணர்வும் இறை நம்பிக்கையும் வளர்ந்ததாகச் சொல்ல முடியுமா ? போலி சாமியாருக்கு போடும் பணத்தை பணக்காரர்கள் கோவில் உண்டியலில் போடுகிறார்கள் அவ்வளவு தானே.

மேலும் படிக்க...
http://govikannan.blogspot.com/2010/03/blog-post_24.html

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]