வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 21, 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்...மதம் என்ற காலத்தில் நாத்திகர், இனம் திராவிடர் என்று பதிவுசெய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களுள் முக்கியமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பானதாகும்.


(1) நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்,- சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்து-கிறது.

கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மத நம்பிக்கையற்றவர்  நாத்திகர்  என்று தெரிவிக்குமாறு பகுத்-தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இது ஏழாவது தீர்மானமாகும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெறும் மக்கள் தொகை என்பது மட்டு-மல்-லாமல் வேறு பல தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ஆடு, மாடுகள் உள்பட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப்-பெட்டிகள் வரை கேட்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்ளும் கணக்கெடுப்பு மட்டும் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுங்கூட நடுவண் அரசு கேளாக் காதுடையதாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக்கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி கே. எர்ரான் நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தென்ன? 1931_க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பெறவில்லை. எனவே அத்தகு கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டதே_ அப்படியிருந்தும் பிற்-படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மேற்-கொள்ளப்படாதது_ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதை இருளில் மூழ்கடிக்கும் சதியாகும் என்று எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் புஜ்பால் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெளிவாக ஒன்றை நினைவூட்டி உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளி விவரங்கள் திரட்டப்படவேண்டும் என்று காகாகலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணயமும் வலியுறுத்தி-யிருப்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திராவிடர் கழகம் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் தேவை-யில்லை என்பதற்கான நியாயபூர்வமான அல்லது சட்ட பூர்வமான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமலேயே_- அதேநேரத்தில் அத்தகு விவரங்கள் திரட்டாத ஒரு நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு ஆணையத்தின் கணக்-கீட்டின்படி) பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதும், உரிமைகளைத் தடுப்பதுமாகும். இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இடையில் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. மறுபரிசீலனை செய்து, நாட்டின் பெரும்பான்மையரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யுமாறு நடுவண் அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்த மிக முக்-கியமான பிரச்சினை குறித்து பிரதமரை வலி-யுறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(2) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் என்ற கலத்தில் மதமற்றவர் (ழிஷீஸீ-க்ஷீமீறீவீரீவீஷீ) நாத்திகர் (கிலீமீவீ) என்று சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு என்கிற புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. உலகிலேயே தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், - மத மறுப்பாளர்கள் புள்ளி விவரம் அதி-காரப்பூர்வமான புள்ளி விவரத்தில் இடம் பெற-வேண்டாமா?

தோழர்கள் இந்த முக்கியமான பிரச்சினையில் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இனம் என்று வரும்போது திராவிடர் என்று கூறப்படவேண்டும். இது வரலாற்று ரீதியான உண்-மையாதலால் அதனையும் பதிவு செய்யவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் உள்பட திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலை-யிலும், பார்ப்பனர் அல்லாதார் எனும் கண்-ணோட்டத்திலும் இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.


--------- நன்றி விடுதலை தலையங்கம் (20.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]