வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 29, 2010

சென்ற 2003 ஆட்சியின் விளைவுதான் பார்வதியம்மாள் திரும்பி செல்ல காரணம்..

பிரபாகரனின் தயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை சுற்றறிக்கை

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.அவரை விமான நிலையத்தில் இருந்த படியே அரசு அதிகாரிகள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது .நீதிபதிகள் தர்மாராவ் ,கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி "தமிழக அரசு கேட்டுகொண்டதன் பேரில் தான் பார்வதியம்மாள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து கடந்த 2003 ம் ஆண்டு மத்திய அரசு எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பியது.அந்த அடிப்படையிலே சென்னை வந்த பார்வதியம்மாள் திருப்பி அனுப்ப பட்டு உள்ளார்."என்று தெரிவித்தார்.

தமிழக அரசு நிலை என்ன?

அதை அடுத்து நீதிபதிகள் கூறுகையில் "கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன.இது குறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும் விசாரணை இன்று(வெள்ளிகிழமை) தொடர்ந்து நடை பெரும் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் குடியேற்ற அதிகாரி அவி பிரகாஷ் ஐகோர்ட் டில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

மனு தாரருக்கு இந்த மனுவை தாக்கல் செய்ய தகுதி இல்லை.அவர் பார்வதியம்மாளின் உறவினர் இல்லை.அவருக்கு வேறு எந்த விதத்திலும் தொடர்பும் கிடையாது.பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் குடியேற்ற அதிகாரிகள் சட்ட படிதான் நடந்து கொண்டுள்ளனர்.

பார்வதியம்மாள் இந்திய பிரஜை என்பது உறுதி செய்யப்படவில்லை.எந்த வெளி நாட்டவரையும் திருப்பி அனுப்பும் உரிமை குடியேற்ற அதிகாரிகளுக்கு உண்டு.

அடிப்படை உரிமை

தமிழக அரசு கேட்டு கொண்டதன் பேரிலேயே கடந்த 2003 ஆம் ஆண்டு பர்வதியம்மாளுக்கு எதிராக எச்சரிக்கை சுற்றறிக்கை அணைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது.அதன் படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கி இருக்ககூடாது.வெளி நாட்டவராக இருப்பதால் இந்தியாவில் அவருக்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை.எனவே அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறை கூற முடியாது .

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி :தினத்தந்தி (30-04-2010)
http://dailythanthi.com/article.asp?NewsID=563656&disdate=4/30/௨௦௧௦

















No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]