வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 10, 2010

ராம நாமம் சொல்-வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம்

ராம நாமம் சொல்-வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்று பார்ப்பனர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள திருச்சி கல்யாணராமன் கூறியதாக ஒரு பார்ப்பன ஏடு பிரஸ்தாபித்துள்ளது.


அத்வைகானந்த... எனத் தொடங்கும் ராம கவசம், அகத்திய மாமுனிவர் கூறு-வதுபோல் அமைந்துள்ளது. தினமும் காலையில் புளிய-தோரை, பால் பாயசம், நைவேத்தியத்துடன் இந்தக் கவசத்தை 45 நாள்கள் பாராயணம் செய்து வந்தால் சர்வ காரிய சித்தியும், சகல மங்கலமும் பெறலாம்.

விசுவாசமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போதும், ஸ்ரீராமர் நீர் _ மோர் மற்றும் பானகம் மட்டுமே அருந்தினாராம். அதனாலேயே ராம நவமியன்று நீர் _ மோரும், பானகமும் நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்-படுகின்றன என்று இ-ன்னொரு ஏடு எழுதுகிறது.

ராம நாமம் சொல்லி மற்றவர்கள் திருந்திக் கொள்-வது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அந்த ராமனே தவறு இல்லாத உத்தமனாக வாழ்ந்தானா என்பதுதான் கேள்விக்குறி.

ஒரே ஒரு எடுத்துக்-காட்டு போதுமே!

தசரதனுக்குப் பிறகு நாடு பரதனுக்கு உரியது என்று இராமனுக்குத் தெரியும்.

கைகேயி வயிற்றில் பிறக்கின்ற மகனுக்கே முடிசூட்டுவதாகக் கைகேயி-யிக்கும், அவன் தந்தைக்கும் தசரதன் வாக்குறுதி கொடுத்-திருந்ததை ராமன் அறிவான். அந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதைச் சித்திரக் கூடத்தில் பரதனிடம் பேசிய-போது இராமன் தெரிவித்-தான். (திரு. டி. அமிர்தலிங்க அய்யரால் எழுதப்பட்ட ஸிணீனீணீஹ்ணீஸீணீ க்ஷிவீனீணீக்ஷீணீ ஜீ403).

இது நன்கு தெரிந்திருந்-தும் பரதன் தன் பாட்டனார் வீட்டில் இருந்தபோது, அவனுக்குத் தெரியாமல் தன் தந்தையார் தசரதன், தனக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்ததை ஏற்றுக்-கொண்டானே _ இத்தகைய ராமன்தான் வாய்மை-யா-ளனா? நற்குணம் வாய்ந்த-வனா?

இத்தகையவனை நினைத்-தால் தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள முடியும்?

கடவுள் தான் உலகைப் படைத்தார் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, சிவன் திருவாதிரை நட்சத்-திரத்திலும், ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி திதியிலும், விநாயகன் சதுர்த்தியிலும், சுப்பிரமணியன் விசாக நட்சத்திரத்திலும் பிறந்தார்கள் என்பது எப்படி?

அப்படியானால், இந்தக் கடவுள் கந்தாயங்கள் பிறப்பதற்கு முன்பே உலகம் ஒன்று இருந்திருக்க-வேண்-டும் என்று ஆகிவிடவில்-லையா?

ராம நவமியில் புளியோ-தரை சாப்பிட்டு நீர்_ மோரும் பருகினால் நினைத்தது நடக்கும் என்றால், ராம பாலத்தைக் காப்பாற்ற ராம பக்தர்கள் புளியோதரை சாப்பிடுவதை யார் தடுத்தது? நீர்_ மோர் குடிப்பதற்குக் குறுக்கே நின்றவர்கள் யார்?

ராமன் பாலத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் சென்ற சு.சாமியும், ஜெய-லலிதா அம்மையாரும் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்.

- விடுதலை மயிலாடன் (09.04.2010)





No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]