வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 28, 2010

தகுதி, திறமை பேசும் (பார்ப்பன) ஏடுகள் என்ன செய்யப் போகின்றன?

அண்மையில்அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

1. சசிதரூர்: அண்மையில் ரூ.70 கோடி தன் காதலிக்குத் தந்ததாகக் கூறப்பட்டு, குற்றஞ் சாற்றப்பட்ட கேரளப் பார்ப்பனர்.


2. கேத்தன் தேசாய்: மண்டலை எதிர்த்து எழுந்த மனிதர்; மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட பார்ப்பனர்.

3. வரதராஜ அய்யங்கார்: குமுதம் வார ஏட்டின் ஆசிரியர் கொடுத்த புகார்படி ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இப்பார்ப்பனர்மீது குற்றச்சாற்று!


கிரிக்கெட் விளையாட்டின் சூதாட்டம், வர்த்தக பேரம், கறுப்பு பணத் திமிங்கலங்களின் திருவிளை-யாடல்கள், வெளிநாட்டிலிருந்து வந்த பண பேரங்-கள் (ஹவாலா) போன்ற பல ஊழல்கள் புற்றீசல்போல ஒன்றின்பின் ஒன்றாகக் கிளம்பி, மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மிகப்-பெரிய சோதனையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

நாடாளுமன்றத்தினை உலுக்கிக் கொண்டுள்ளது. இதில் ஊழல் ஒழிந்து, அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதாலும், இதில் பல கட்சிகளும், பல்வேறு கட்சி ஆதர-வாளர்-களான திமிங்கலங்களும் ஈடுபட்டிருப்பதாக பேசப்-படுவதாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைதான் சரியான தீர்வு; எனவே, இதனை ஏற்க யு.பி.ஏ. அரசு தயங்கக்கூடாது.

இல்லையேல், குற்றவாளிகளைப் பாதுகாத்த மாபெரும் குற்றத்திற்கு _ பழிக்கு _ வரலாற்றில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்!

நம் நாட்டின் கிராமப்புறங்களில் எலுமிச்சை, புளியம்பழம் பற்றிக் கூறும் பழமொழி ஒன்று உண்டு.

உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் அந்தக் கதைபோல, குஜராத் பார்ப்பனரான கேத்தன் தேசாய் என்பவர் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் என்பதைவிட மிகவும் சக்தி வாய்ந்தவரும்கூட!

இவர் பஞ்சாப் மெடிக்கல் காலேஜ் ஒன்றுக்கு அனுமதி _ மாணவர் சேர்க்கைக்காக முன் பணமாக 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறுகையில், கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்!

சி.பி.அய். இவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஏற்பாடாகியிருக்கிறதாம்!

இவர்மீது 2000 ஆம் ஆண்டே, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாற்று எழும்பி, அது மிகப்பெரும் அளவில் வெடித்து, அந்த மருத்துவக் கவுன்சில் (விசிமி) பொறுப்பிலிருந்தே விலகும்படிச் செய்யப்பட்டவர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் போட்ட வழக்கினால், இவர்பற்றிய பல உண்மைகள் வந்தும், வருமான வரித்துறை ரெய்ட் நடத்தி லஞ்சப் பணத்தை எடுத்தும் எல்லாம் நடந்தும், நாடாளு-மன்றத்தில் சில இடதுசாரிகள் கேள்வி எழுப்பியும், அன்றைய பா.ஜ.க. அரசு இவரைப் பாதுகாக்கவே செய்தது; அதற்குப் பிறகு வந்த இந்த அரசிலும் கூட இவரது செல்வாக்கு குறையவில்லை.

மத்திய சுகாதார அமைச்சர்கள் _ எக்கட்சியினர் ஆட்சி வந்தாலும் அவர்களை வசியப்படுத்தும் மந்திரக்கோல் உண்டு இந்த மகானிடம்!

முதலமைச்சர்கள்கூட இவரது தயவினைக் கோரும் அளவுக்கு நிலை உயர்ந்தது! காரணம், தத்தம் மாநிலத்தில் மெடிக்கல் காலேஜ்கள் வர-வேண்டும் என்பதாலும், அதற்கு ஓகே செய்ய-வேண்டிய அதிகாரம் இந்த குஜராத் பார்ப்பனரிடம்-தான் என்பதாலும் இந்நிலை!

ரூ.292 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் எடுத்துள்ளதாக செய்தி (வரி வேட்டையில் நேற்று) வந்-துள்ளது. வெறும் பனிப்பாறையின் முனை மட்டுமே!) தோண்டினால் இன்னும் பல மலைப் பாறைகள் உள்ளே இருக்கலாம்!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மெடிக்கல் காலே-ஜில் 5 சீட்டுகள் இவருக்கு. அதனை நல்ல விலைக்கு விற்றுத் தருவதும் அவாளுக்கே. பணத்தை இவரிடம் சிந்தாமல், சிதறாமல் தரவேண்டும்.

இவர் எப்படி டாக்டர் ஆனார் தெரியுமா?

1990 இல் பிரதமர் வி.பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயலாக்க ஆணை பிறப்பித்ததை எதிர்த்து டெல்லியில் மாணவர்களைக் கிளப்பிவிட்ட மீடியா மற்றும் பார்ப்பன சதிகளின் மிகைப்படுத்தப்-பட்ட மாணவர் தீக்குளிப்பு போன்ற புரூடாக்களால் இவர் மெடிக்கல் காலேஜில் மாணவர் கவுன்சிலில் இடம்பெற்று மாணவர் தலைவராக, மண்டலுக்கு எதிராகக் கொடி தூக்கி, பிரபலம் ஆனார்! அந்த செல்வாக்கிலேயே மெடிக்கல் கவுன்சிலிலும் இடம் பிடித்து, தனது அபார சக்தியினால் எல்லா மத்திய சுகாதார அமைச்சர்களை _ எந்த அரசுகள் மத்தி-யில், மாநிலங்களில் வந்தாலும் இவர் செல்வாக்கு மாறாத அளவுக்கு நன்கு கவனித்துக் கொள்ளத் தெரிந்த மாமனிதர் இவர்!

மத்தியில் இந்திரன்கள் மாறினாலும் இந்த இந்திராணி மட்டும் மாறவே மாட்டார்.

2000_த்தில் பதவி இழந்தும், செல்வாக்கு இழக்காத வகையில் இருந்தவர்; 2009 இல் மீண்டும் தலைவர் பதவியை (விசிமி) பிடித்து இவ்வளவு திறம்பட நடத்தி வருகிறார்!

மத்தியில் கபில்சிபல் கொண்டு வருவதாகக் கூறும் புதிய கல்வி ஒழுங்குபடுத்தும் மசோதாகூட, இவரது ராஜ்ஜியத்திற்குள் புகாமல் பார்த்துக்கொண்ட கைவந்த நிபுணர் இவர்!

இந்த வழக்கு சில நாள் பரபரப்போடு முடிந்து-விடக்கூடாது!

இந்தியா முழுவதும் மக்கள் நிம்மதி அடை-வார்கள்!


தகுதி, திறமை பேசும் (பார்ப்பன) ஏடுகள் என்ன செய்யப் போகின்றன? பொறுத்திருந்து பார்ப்போம்!

------------ நன்றி  விடுதலை(24.04.2010)

2 comments:

ssk said...

பார்பனியம் என்பதே அநீதியின் அடிப்படையில் கட்டப்பட்டது எனும் போது இதெல்லாம் சகஜமப்பா!
இல்லாததை சொல்லி, தகுதி ,திறமை என்று உளறி மற்றவரை எய்த்து பிழைப்பது தர்மம் என்று நினைக்கும் கூட்டம் இதை எல்லாம் கண்டு கொள்ளாது. அவர்களின் பத்திரிகைகள் இதை பற்றி பேசாது.

பரணீதரன் said...

ssk உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தோழரே

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]