வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 03, 2010

தமிழ் மண்ணில் தப்பித் தவறி பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு-களில் உள்ளவர்கள் உணர்வார்களா?

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


சென்னை பெரியார் திடலில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்-கள் சமச்சீர் கல்வித் திட்டத்தில் வருணாசிரம தர்மத்தை வேரறுத்த தந்தை பெரியார் பற்றிய பாடம் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா இந்துக்கள் நிறைந்த நாடு. அவர்கள்தான் பெரும்பான்மையான மக்கள். வருணாசிரமத்தை வேரறுக்க பாடுபட்ட பெரியார் என்று கூறியிருப்பதன் மூலம் இந்து மதத்தை வேரறுக்கப் பெரியார் பாடுபட்டார் என்பதை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்பது நற் பண்புகளையும், நல்ல சிந்தனைகளையும், நாட்டுப் பற்றையும் மாணவர்களிடையே வளர்ப்பதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தை வெறுப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்கள் மத்தியில் விஷக் கருத்துகளைப் பரப்ப இந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் பாடத் திட்டம் அமலுக்கு வருவதைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும்.-என்று பா.ஜ.க. மாநிலத் தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்து மதம் என்பது வருண தர்மத்தைக் காப்பாற்றக் கூடியதுதான். எனவே வருணாசிரமம் என்னும் ஜாதி முறையில் கை வைக்கக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக ஒப்புக் கொள்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் தப்பித் தவறி பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு-களில் உள்ளவர்கள் பா.ஜ.க. தலைவரின் இந்த அறிக்கையைப் படித்த பிறகாவது அந்த அமைப்பு-களில் இன்னும் தொடருவது அவமானகரமானது; -பிற்போக்குத்தனமானது என்பதை உணர-வேண்டும். உணர்வார்கள் என்று எதிர்பார்க்-கிறோம்.

பிறப்பின் அடிப்படையில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி_ பிரம்மாவின் நெற்றியில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி. நீ தீண்டத்தகாதவன், அருகில் வராதே _ தூரப் போ என்று கூறும் ஒரு மதம் தான் இந்து மதம் என்றும். அதனைக் காப்பாற்றத்தான் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரி-வாரங்கள் இருக்கின்றன என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகிவிட்டது.

இந்த உண்மையை ஒப்புக் கொண்டதற்காக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை பாராட்டலாமோ என்று கூடத் தோன்றுகிறது.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கு உரியவர்கள், தந்தை பெரியார் அவர்-களின் வருணாசிரமத்தை வேரறுக்கும் கொள்-கைக்கு கை தூக்குவார்களே தவிர, ஆதரவு காட்டுவார்களே தவிர, ஜாதிக்கு ஜமக்காளம் விரிக்கும் வேலையில் இறங்கமாட்டார்கள். ஜாதி அமைப்புகளை புறங்கால் பிடரியில் பட விரட்டியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமத்துவத்தை, சகோதரத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பிரித்துப் பேதப்படுத்தி, வெறுப்பை விளைவிக்கும் விஷ-வித்துக்களை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கக் கூடாது.

இதன் மூலம்தான் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளைத் தூண்ட முடியும். மாணவர்-களுக்குத் தேவை சகோதரத்துவமே தவிர, சண்டையிடத் தூண்டும் ஜாதி சழக்குகள் அல்ல.

வருணாசிரமம் என்பது -அன்று (1952 இல்) ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்-கல்வித் திட்டம் ஆகும். அதுதான் மீண்டும் வரவேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் விரும்புகிறாரா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் இதற்கு ஆசைப்படலாமா? அவர் என்ன செய்வார்? அவர் சேர்ந்த கட்சி அப்படி! அதற்காகப் பரிதாபப் படவேண்டியதுதான்.

சமச்சீர் கல்வி என்பதிலேயே சமத்துவ மணம் இருக்கிறது. அதனை எதிர்த்தால் அதனை ஒட்டு மொத்த தமிழர்கள் முறியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

----- நன்றி விடுதலை தலையங்கம் (04.03.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]