வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 11, 2010

குழந்தைகளுக்கு இப்படி அறிவுப் பாலை ஊட்டவேண்டும்.

தொண்டறம் என்பது பலதரப்பட்டது. பணம், காசு ஆகிய பொருள் நன்கொடை முதல் உழைப்பு, அறிவு , ஆற்றலைத் தருவது, சமூகத்தின் கடைகோடி மனிதனும் பயன் பெற எவ்வகையிலேனும் உதவுவது.

அமெரிக்கா போன்ற பல வெளி-நாடுகளில் வாழும் நம் திராவிட _ தமிழ்க் குடும்பங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட _ பலரது குழந்தைகள் தமிழ் மொழியை _ தமிழ் இலக்கியச் செல்வங்களை _ தமிழ் ஏடு-களைப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்-களாக இருந்தால்தான் தாய்மொழித் தமிழை, செம்மொழியான நம் மொழியைக் கற்றுக் கொள்ள வாய்ப்-பினை ஏற்படுத்திட முடியும்.

இதை அருமையாக உணர்ந்து தங்களது அரிய உழைப்பையும், தொண்டையும் சிகாகோ போன்ற பல பெருநகரங்களில் _ அமெரிக்காவில் _ டாக்டர் சரோஜா இளங்கோவன், திருமதி கண்ணகி விசுவநாதன், திருமதி பாபு, திரு. அருள்_பாலு போன்ற பலரும் (இப்படிப் பலர் பல ஊர்களில் உண்டு.) சனிக்கிழமைகளில் அந்த பிள்-ளைகளை ஒரு பொது அரங்கத்திற்கு அழைத்துச் சென்று தமிழ் மொழி கற்றுக் கொடுப்பார்கள்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் _ தமிழ் வகுப்பு-கள் எடுத்து, திருக்குறள் மற்றும் பல முக்கிய பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள்.
சிற்றுண்டிகளையும் அக்குழந்தைகளுக்குத் தருவார்கள்.

அங்கு படிக்கும் தமிழ்க் குழந்தை-கள் தமிழில் பேச முதலில் கற்றுக்-கொள்வதோடு, நமது திருக்குறள் போன்ற நல்ல இலக்கியங்களையும் கூட படிப்படியாகக் கற்கிறார்கள். இது ஒரு நல்ல தொண்டறமாகும்.

இவர்களுக்கு குறுந்தகடுகளும் மற்றும் பல கணினியுதவிகளும்கூட மிகவும் எளிதில் கற்றுக் கொள்ள வசதியாக _ பயன்படுத்துகின்றனர்!

நமது டாக்டா சரோஜா இளங்-கோவன் அவர்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் கதைகள் (ஜிலீவீக்ஷீளீக்ஷீணீறீ ஷீக்ஷீவீமீ யீஷீக்ஷீ நீலீவீறீபீக்ஷீமீஸீ) என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூல், ஒரு குறள் -_ அதன் ஆங்கில மொழியாக்கம் போட்டு, அதற்கேற்ப ஒரு நிகழ்வு _ அல்லது கற்பனைக் கதை _ குழந்தைகள் _ சிறுவர்-களை நன்கு ஈர்க்கும் வண்ணம் ஓரிரு பக்கங்களில் எளிய ஆங்கி-லத்தில் எழுதியுள்ளார்கள்.

அதை சென்னையில் உள்ள சாரதா பதிப்பகத்தார் (சென்னை 600 014 என்ற முகவரி) வெளியிட்டுள்ளனர்.

இந்த நூலை நமது ஆங்கில வழி பயிலும் பள்ளிகளில்கூட மாணவ_ மாணவிகள் ஒழுக்க பாட போதனை (Moral Instruction Class) என்ற வகுப்பில் பாடமாக படிக்கச் சொல்லி அறிவு கொளுத்தினால் நல்லது! எடுத்துக்காட்டாக,
பக்கம் 17 இல்

அறத்துப்பால்_ பகுதி என்று தமிழில் பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது (குறள் 103)
தரப்பட்டு _ அதற்கு ஆங்கிலத்தில்
“If anyone does a good deed without expecting anything back, the value of such deed is greater than the ocean’’ என்று போடப்பட்டுள்ளது!

இதை ஒரு பொருத்தமான நிகழ்வு ஒன்றின் மூலமாக புத்தக ஆசிரியர் டாக்டர் சரோஜா இளங்கோவன் விளக்குகிறார். உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஆர்பர்ட் ஷூவைட்சர் தலை சிறந்த மனிதாபிமானி.

அவர் 1875 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கேயார்ஸ் பெர்க் என்ற பகுதியில் பிறந்தவர். அவர் குடும்பம் ஜெர்மனியில் வாழ்ந்தது.
அவர் ஆப்ரிக்கா சென்று, அங்-குள்ள கறுப்பினத்தவரில் அதிகமாக

தொழுநோயாளிகளானவர்களுக்கு தனது பணத்தில் மருத்துவமனை கட்டி தொண்டறம் புரிந்த கதையைக் கூறியுள்ளார்.

(திருக்குறள் மீது இந்த டாக்டர் ஆல்பர்ட் ஷூவைட்சர் மிகுந்த காதல் கொண்டவர். The Second Book of Kural’ என்ற ஒரு நூலை அவர் எழுதி-யுள்ளார்).

அவரது தொண்டறத்தினையே உதாரணம் காட்டி குறள்நெறி விளக்கம் 2 பக்கங்களில் தந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

இது போன்று நம் நாட்டு தொண்-டறத் தலைவர்களையும் பற்றி இப்படி பல நூல்கள் வெளிவரவேண்டும்.

குழந்தைகளுக்கு இப்படி அறிவுப் பாலை ஊட்டவேண்டும்.

நல்ல தொண்டறம் செய்யும் அவர்-களது பணி தொடரட்டும்_ மற்றவர்-களும் இதை எங்கும் பின்பற்றலாமே!
------------------- வாழ்வியல் சிந்தனைகள் - ஆசிரியர் கி.வீரமணி



4 comments:

Unknown said...

நல்ல பதிவு!
நீதி மன்ற செய்தி ஏதேனும் உண்டா?
கூத்தாடிகள் இரண்டு பட்டதால் ஊருக்கு கொண்டாட்டமாமே!

வில்லங்கம் விக்னேஷ் said...

இதிலே ஈழத்தமிழர் எங்கேய்யா வருது?

பரணீதரன் said...

ஹ்ம்ம் நிறைய உண்டுன்களே ரம்மி அய்யா
.....உயர்நீதிமன்ற புதிய நீதிபதிய இக்பால் பதவி ஏற்று இருக்கிறார்.....நித்தியானந்தா ஜாமீன் வாங்கிட்டார்.....முக்கியமான் போபால் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் குழிதோண்டி புதைக்கபட்டு இருக்கு....இதுல நீதிமன்றமே அநீதி மன்றமா ஆயிகிட்டு வருது...இந்த மாதம் தானே விடுமுறை முடிந்து நீதிமன்றம் திறந்தது.

பரணீதரன் said...

/*நம் திராவிட _ தமிழ்க் குடும்பங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட _ பலரது குழந்தைகள் தமிழ் மொழியை _ தமிழ் இலக்கியச் செல்வங்களை _ தமிழ் ஏடு-களைப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்-களாக இருந்தால்தான்*/

மேலே நான் குறிபிட்டதில் ஈழம் வரவில்லையா? நீங்க ரொம்ப வில்லங்கமான ஆளுதான் போலிருக்கு....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]