வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 06, 2010

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை? நாய்கூட பைரவக் கடவுளின் வாகனம்தான்

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகில் ஒரு கிராமம்; பெயர் அண்டமான் என்பது.
இந்த ஊரில் ஒரு விசித்திரம் _ யாருமே இந்த ஊரில் செருப்பு அணிந்து நடப்பதில்லையாம்.

இன்று நேற்று அல்ல _ தலைமுறை தலைமுறையாக இந்த நிலைதானாம்.
ஒருக்கால் ஊரில் செருப்புத் தைப்பவர்கள் இல்லையோ! அங்கு இல்லை-யென்றால் என்ன, பக்கத்து ஊரில் போய் வாங்க முடியாதா, என்ன?

செருப்புகள் வீட்டில் இருக்கத்தான் செய்கின்றன. வெளியூர்களுக்குச் செல்லும்-போது, செருப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு போய், ஊர் எல்லையைத் தாண்டியபின் செருப்பை அணிந்துகொண்டுதான் போகிறார்கள். அதுபோல இந்த ஊருக்குள் வருபவர்-களும் ஊர் எல்லையின் ஆரம்பம்வரை செருப்பு-களை அணிந்துகொண்டு-தான் வருகிறார்கள். ஊருக்-குள் நுழையும்போது மட்டும் காலில் இருந்த செருப்பு கைக்கு மாறிவிடுகிறது.

என்ன ஒரே மர்மமாக இருக்கிறதே _ இதில் குடி-கொண்டு இருக்கும் சூட்-சமம்தான் என்ன? அதெல்-லாம் ஒரு மண்ணாங்கட்டி-யும் இல்லை.

இந்த ஊரில் மந்தையம்-மன், கருப்பசாமி கோயில்கள் இருக்கின்றனவாம்!
மக்களைக் காக்கும் இந்த சாமிகள் வாழும் ஊருக்குள் செருப்புப் போடுவது மரி-யாதை இல்லையாம். அத-னால்தான் யாரும் செருப்புப் போட்டுக்கொள்வதில்லை-யாம். (தகவல்: தினகரன் வெள்ளிமலர்).

செருப்புப் போட்டால் மரியாதை குறைவு என்றால், இந்த சாமிகள் இருக்கும் ஊரின் மண்ணைக் காலால் மிதிக்கலாமா? ஒருவன் கால் இன்னொருவன்மீது பட்டால் அவமானகரமாகத்தானே நினைக்கிறார்கள். அதன் காரணமாக அடிதடி சண்டைக்கூட நடப்பது உண்டே! அப்படியிருக்-கும்போது மந்தையம்மன் குடியிருக்கும் மண்ணை மிதிக்கலாமா?

அந்த ஊரில் உள்ள குளத்தில் கால் கழுவலாமா? அந்த ஊர் மண்ணில் மலம் கழிக்கலாமா? சிறுநீர் பாய்ச்-சலாமா? வாய்க் கொப்பளிக்-கலாமா?

இந்த ஊரில் மட்டும்-தான் சாமி கோயில்கள் இருக்-கின்றனவா? வெளியூர்களி-லும் கோயில்கள் இருக்-கத்தானே செய்கின்றன. அங்கெல்லாம் போகும்போது மட்டும் இதே ஊர்க்காரர்கள் செருப்பு அணிந்துகொண்டு செல்லுகிறார்களே _ இது என்ன போக்கிரித்தனம்? அடுத்த ஊர் சாமி என்றால் இளக்காரமா? அந்தச் சாமி-களுக்கெல்லாம் சக்தி-யில்லை என்று முடிவு கட்டி-விட்டார்களா?

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை? பன்றிகூட மகாவிஷ்ணுவின் அவதாரம்தான்! நாய்கூட பைரவக் கடவுளின் வாகனம்தான். அப்படியிருக்கும்போது, அட நாயே! என்று ஒருவனைத் திட்டலாமா?

பக்திப் பையத்தியம் பிடித்தால் மலம்கூட மலர்-தானோ? ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் மலத்தையே புசித்தார் என்பதுதான் அவருக்குள்ள பெருமையாம்! சிரியுங்கள்! பின்பொறியாலும் சிரியுங்கள்!!
- விடுதலை (05.06.2010) மயிலாடன்


9 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இது உச்சக் கட்ட அபத்தம்.

இந்து மதம் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டச் சொன்னது. மரியாதை தரச் சொல்லவில்லை.

இந்துக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை? பன்றிகூட மகாவிஷ்ணுவின் அவதாரம்தான்! நாய்கூட பைரவக் கடவுளின் வாகனம்தான். அப்படியிருக்கும்போது, அட நாயே! என்று ஒருவனைத் திட்டலாமா?

கூடாது என்பதற்காக தான் அவைகளையும் சாமியாக்கியது. மாட்டுக்காக பொங்கல் கொண்டாடும் போது மட்டும் நன்றி செலுத்துதல் கூடாது. எல்ல உயிர்களும் நமக்கு ஒரு வகையில் பயன்படுகின்றன, தியாகங்கள் செய்கின்றன. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஜெகதீஸ்வரன். said...

///அப்படியிருக்கும்போது, அட நாயே! என்று ஒருவனைத் திட்டலாமா?

கூடாது என்பதற்காக தான் அவைகளையும் சாமியாக்கியது.///

என்ன சொல்லவரீங்க? பலர் அதை விட கேவலமாக எல்லாரையும் உடம்பிலுள்ள அவயங்களையும் வைத்து திட்டுகிரார்களே. அப்பஅதையும் சாமிஆக்கிடலாம. உங்க கூற்றுப்படி சாமி உண்டானதுக்கு உண்மையான காரணம் இது தான். ஆக மொத்தம் சாமி இல்லை என்று நீங்களே கூறுகிறீர்கள்; அது ஒரு கதை என்று......பெரியார் இருந்தால் உங்களை வாழ்த்தி இருப்பார்!!!!!!!!

Unknown said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! இந்த தேசத்தில் நாய்க்கு உண்டான மரியாதை கூட நாத்திகனுக்கு இல்லையா? நாயையும், நாத்திகனையும் ஒன்றாகப் பார்த்தால், நாயைக் கும்பிடு! நாத்திகனை?

paldurai said...

இந்து மதத்தில் எல்லா அபத்தங்களும் உண்டு.எல்லாமே மனிதனின் பயத்தை
மூலாதாராகமாக கொண்டு உருவாக்கப்பட்டவை .அதில் பெரும்பகுதியான தல வரலாறு போன்ற கட்டுகதைகள் ஆரிய வந்தேறி பிராமணர்களால் தங்களுடிய வயற்று பிழைப்புக்காக உருவாக்கப்பட்டவை. இப்படி அபத்த மதமான இந்து மதத்தில் எந்த கடவுளாவது மனிதனிடம் நேரில் வந்து செறுப்பு அணியக்கூடாது என்று சொல்லியது.முட்டாள் மக்கள்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் இருக்கும் செட்டியபத்து என்கிற ஊரில் இறுக்கும் அயிந்து வீட்டு சுவாமி கோயிலில் உள்ள ஒரு ஸ்வாமியான வயந பெருமாளுக்கு செர்ர்ப்பு காணிக்கை யாக அளிக்க படுகிறது.இது உண்மை.அந்த சன்னதியில் ஆயிரக்கணிக்கில் செர்ருபுகள் தொங்கி கொண்டிருக்கும்.அந்த கோயிலில் ஒரு விசேசம் என்வென்றால் அங்கே ப்ரமங்கள் இல்லை .ஜாதி பாகுபாடு பார்ப்பது இல்லை.யார் வேண்டுமானாலும் பலி கொடுத்து வழி படலாம்.
இந்து மதமே உன் பெயர் முரண்பாடோ?.தமிழர்களின் கோணல் தலைவிதியோ ?

உமா .கா ,திருவனந்தபுரம்

paldurai said...

இந்து மதத்தில் எல்லா அபத்தங்களும் உண்டு.எல்லாமே மனிதனின் பயத்தை
மூலாதாராகமாக கொண்டு உருவாக்கப்பட்டவை .அதில் பெரும்பகுதியான தல வரலாறு போன்ற கட்டுகதைகள் ஆரிய வந்தேறி பிராமணர்களால் தங்களுடிய வயற்று பிழைப்புக்காக உருவாக்கப்பட்டவை. இப்படி அபத்த மதமான இந்து மதத்தில் எந்த கடவுளாவது மனிதனிடம் நேரில் வந்து செறுப்பு அணியக்கூடாது என்று சொல்லியது.முட்டாள் மக்கள்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் இருக்கும் செட்டியபத்து என்கிற ஊரில் இறுக்கும் அயிந்து வீட்டு சுவாமி கோயிலில் உள்ள ஒரு ஸ்வாமியான வயந பெருமாளுக்கு செர்ர்ப்பு காணிக்கை யாக அளிக்க படுகிறது.இது உண்மை.அந்த சன்னதியில் ஆயிரக்கணிக்கில் செர்ருபுகள் தொங்கி கொண்டிருக்கும்.அந்த கோயிலில் ஒரு விசேசம் என்வென்றால் அங்கே பிராமணர்கள் இல்லை .ஜாதி பாகுபாடு பார்ப்பது இல்லை.யார் வேண்டுமானாலும் பலி கொடுத்து வழி படலாம்.
இந்து மதமே உன் பெயர் முரண்பாடோ?.தமிழர்களின் கோணல் தலைவிதியோ ?

உமா .கா ,திருவனந்தபுரம்

Kannan said...

உலகத்தில் உள்ள அனைத்தும் புசிதததை தான் மலம் ஆக்குகின்றன, மலத்தை தான் புசிகின்றன என்பது தங்கள் பகுத்தறிவிற்கு இன்னும் எட்ட வில்லை போலும்.

நம்பி said...

//Kannan said...

உலகத்தில் உள்ள அனைத்தும் புசிதததை தான் மலம் ஆக்குகின்றன, மலத்தை தான் புசிகின்றன என்பது தங்கள் பகுத்தறிவிற்கு இன்னும் எட்ட வில்லை போலும்.
12:55 PM //

அப்படியென்றால் மலத்தையே ஓட்டலில் போடலாம்....ஒரு பிளேட் லிமிட்டட் மலம், அன்லிமிட்டட் மலம்...இவ்வளவு ரூபாய்...அது கூட தேவையில்லை...மலம் தானே...அதை இலவசமாக பெறலாம்....உடுப்பி சைவ மலம்..சைவ மல தோசை...சைவ ஸ்பெஷல் மல தோசை....மிலிட்டிரி மலம்...குவார்ட்டர் மலம்...என்ன கன்றாவி இது? பேதியை...எந்த மெனு லிஸ்ட்டில் சேர்ப்பது...சூப் லிஸ்ட்டில் சேர்க்கலாமா...? ஸ்டார் ஓட்டல்...மெனுவில்...அவங்கங்க சாப்பிடறத வைச்சு எல்லாம் தத்துவம் பேசப்படாது.

உட்டா க்கூஸையே வாயாலா கிளின் பண்ணிடுவாங்க போலிருக்கே...

இவ்வளவு பகுத்தறிவை யூஸ் பண்ணி மலத்தை பத்தியா ஆராய்ச்சி பண்ணாங்க....யாரை என்னா திட்டணும் என்றால் கூட மலத்தை தானே...இல்லை கன்றாவி சோத்தையா...திங்கற புத்தியில்லை? இப்படித்தான் மாத்திக்கணும் போல இருக்கு. கன்றாவி கப்பு தாங்கல மானிட்டரை தாண்டி வருது.

ஜெகதீஸ்வரன் said...

என்ன சொல்லவரீங்க? பலர் அதை விட கேவலமாக எல்லாரையும் உடம்பிலுள்ள அவயங்களையும் வைத்து திட்டுகிரார்களே. அப்பஅதையும் சாமிஆக்கிடலாம. உங்க கூற்றுப்படி சாமி உண்டானதுக்கு உண்மையான காரணம் இது தான். ஆக மொத்தம் சாமி இல்லை என்று நீங்களே கூறுகிறீர்கள்; அது ஒரு கதை என்று......பெரியார் இருந்தால் உங்களை வாழ்த்தி இருப்பார்!!!!!!!!

தங்களுக்கு இந்து மதத்தினைப் பற்றி அதிகம் தெரியாது என நினைக்கிறேன், வசை பாடுவதற்கு கூட இந்து மதத்தினைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். உடலில் இருக்கும் உறுப்புகளின் பெயரைச் சொல்லி திட்டுவது பற்றி குறிப்பிடுகின்றீர்கள். போட மூக்கு, போடா நாக்கு என்று திட்டிப்பாருங்களேன். அதுவும் கூட உறுப்புதானே. பாலியல் நோக்கங்களுக்கான உறுப்புகளை பொது இடங்களில் சொல்வதால் அந்த உறுப்பின் மேன்மை குறைந்துவிடப் போகின்றதா இல்லை. அது கெட்ட வார்த்தைக்கு பயன்படுகிறது என்று நீங்கள் அதனை அகற்றி விடப் போகின்றீர்களா.

இந்து மதத்தினை ஒடுக்க அதனை மலம், பிறப்புருப்புகளோடு ஒப்பிட்டு பேசுவது என்பது ஒரு அபத்தமான செயலே. தங்களுக்கு இந்து மதம் பற்றி மட்டுமல்ல, உறுப்புகளின் தேவைகளைப் பற்றியும் புரிதலில்லை. நண்பரே,. பெரியார் என்னைப் பாராட்டியிருப்பார் என்று கூறினீர்களே மகிழ்ச்சி.

பெரியாருக்கு முன்பே இந்து மதத்தில் நாத்திகம் இருந்து வந்துள்ளது. இறை மறுப்பினை தனது பாகமாகவே கொண்ட இந்து மதத்தினை நாத்திகத்தின் பெயரால் அசைக்க இயலாது. நன்றி.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]