வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 09, 2009

பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.


அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களை-யும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்-கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்-கள். அதாவது மக்க-ளுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தி-யாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்-சத்து இல்லாத உலக மக்-களில் 27 விழுக்காட்டி-னர் இந்தியாவில் உள்ள-னராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள உணவுப் பொருள்-கள் உள்ளிட்ட இன்றிய-மையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரி-மினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்-கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்-தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்-டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பர-லோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிக-வேள் ராதா இரத்தக்-கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டி-னால், அது தெய்வ காரிய-மோ!


இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடு-கிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டு-மாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்-களாம் _ அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்-தார். கனம் நீதி-மன்றம் சாத்திரங்களை-யெல்-லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்து-விட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறு-படியும் ரூ.17 லட்சமாம்.பார்ப்பனிய அமைப்-பில் சாத்திரப்படி நடந்து-கொண்டாலும் அவா-ளுக்கு இலாபம் _ சாத்தி-ரத்தை மீறி நடந்துகொண்-டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் _ மோசடியை உலகில் எங்-காவது கேள்விப்பட்ட-துண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாத-தால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்-களிடமிருந்துதானே பறி-முதல் செய்திருக்கவேண்-டும்?



பார்ப்பான் பண்ணை-யம் கேட்பாருண்டோ?


- மயிலாடன் (விடுதலை 09-11-09)

2 comments:

வரதராஜலு .பூ said...

கொடுமைதான்.

பரணீதரன் said...

தோழர் வரதராசலுவின் பிநூடதிர்க்கு நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]