வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, November 24, 2009

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள்

நாள்தோறும் நாட்டில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்-வொரு ஏடும், இதழும், பக்திச் செய்திகளைப் பரமார்த்தமாக வெளியிடு-கின்றன. ராசி பலன்களும் இடம்பெறும். மக்களை முட்டாள்களாகக் கட்டிப் போட்டால்தான் அவர்-களைச் சுரண்டிக் கொழுக்க முடியும் என்கிற பரந்த மனப்பான்மை பத்திரிகை முதலாளிகளுக்கு!


ஒரு இதழில் சிம்ம-ராசிக்-குப் பலன் இலாபம் என்றிருக்கும்; அதே நாளில் அதே ராசிக்கு இன்-னொரு பத்திரிகையில் பெருத்த நஷ்டம் என்றி-ருக்கும்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்குப் புத்திசாலித்-தனமோ, பொறுமையோ யாருக்கு இருக்கிறது? இந்த மெத்தனம்தான் பத்திரிகை முதலாளிகளுக்-குப் பெருத்த இலாபகர-மான ஒன்றாகும்.

இவற்றையும் தாண்டி வேறு விதமான தகவல்-களும் வந்துகொண்டு-தானி-ருக்கின்றன. அய்ம்பொன் சாமி சிலைகள் எனக் கூறி பித்-தளை சிலைகளை விற்க முயன்ற பூசாரி உள்பட நான்கு பேர் கைது! (தேனி மாவட்டம்). அடுத்தடுத்து 6 குழந்-தைகள் கொலை; பெண் சாமியார் மற்றும் அவரது கணவர் மீது 200 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்-றத்தில் தாக்கல்; 47 பேர் சாட்சிகள் (சேலம் ஆத்-தூர் அருகே).

இவை வெறும் செய்தி-கள் மட்டுமல்ல; மதம், பக்தியின் பெயரால் நாட்-டில் நடக்கும் கீழ்த்தர-மான செயல்பாடுகள் _ இவற்றின்மூலம் பக்தர்-களாக இருப்பவர்கள்கூட சிந்திக்கவேண்டிய கட்-டாயம் _ எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவ-சியம்.

காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் _ கோயில் கர்ப்-பக் கிரகத்துக்குள்ளேயே பெண்களிடம் நடத்திய காம விளையாட்டுகள் _ இவற்றிற்குப் பிறகும் கோயில், பக்தி சமாச்சாரங்-கள்பற்றி மக்கள் மறுபரி-சீலனை செய்யாவிட்டால் அவர்களின் அறிவுச் சாளரங்கள் எந்த அள-வுக்கு அடைபட்டுப் போயி-ருக்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு கோயிலுக்-கும் தலப்புரணாங்களை எழுதி வைத்திருப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கோயில்களில்-தான் இவ்வளவுக் கேவ-லங்களும் அரங்கேறுகின்-றன. அப்படியானால் அந்தத் தலப் புராணங்-களின் மகிமை எல்லாம் வெறும் வெத்து வேட்டு-தானே _ பொய்யில் புழுத்த புழுக்கள்தானே!

பத்திரிகைக்காரர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் எல்லாம் எழுதமாட்டார்-கள், எழுதினால் பிழைப்-புப் போய்விடுமே!

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள் என்று ஒரு பட்டியலிட்டார் தந்தை பெரியார். பார்ப்-பான், பத்திரிகை, அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா என்பவைதான் அந்த அய்ந்தும். பொறுமையாகப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்!

விடுதலை 25.11.09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]