வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 12, 2009

அசல் நாத்திகர்கள்...அய்யப்பன் கோவில் நிருவாகிகள்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நிருவாகிகள், அறங்காவலர்கள் அசல் நாத்திகர்கள் போல தோன்றுகிறது. இல்லாவிட்டால் அய்யப்பனுக்கு சக்தி இல்லை என்று இவளவு கேவலமாக அறிவிப்பார்களா?

18 படிகளை தாண்டி அய்யபனை தரிசிக்க வரும் அணைத்து பக்தர்களையும் தீவிரமாக சோதனை நடத்திட திடமிடபட்டுள்ளதாம். இதன் பொருள் என்ன?

பக்தர்கள் வெடிகுண்டுகளை எடுத்துசென்று அய்யப்பன் மீது வீசியிரிவார்கள் என்ற பயம் தானே!

அய்யப்பன் சர்வசக்தி வாய்ந்தவன்.அவனை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்ற நம்பிக்கை கோவில் அரங்காவளர்களுக்கு இருந்தால் இது மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுவார்களா?

அதே போல முதல் படிக்கட்டில் ஏறி 18 படிகளை தாண்டி பக்தர்கள் சரண கோசம் எழுப்பி தேங்காய் உடைப்பது வழக்கமேயாகும்.இப்பொழுது அதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அய்யபனை அசிங்க படுத்தியே தீருவது என்று அறங்காவலர் குழு தீர்மாநிதுவிட்டதாக தெரிகிறது.

தேன்காய்குள் வெடிபொருட்களை வைத்திருந்தால் அய்யப்பன் கதி என்னாவது என்ற என்னதில்தானே இந்த தடை?

நியமாக அய்யப்பன் மீதும் அவன் சக்தியின் மீதும் அபார நம்பிக்கை வைத்துள்ள யாரவது ஒரு பக்தர் அய்யப்பன் கோவில் அறங்காவலர் குழு நாத்திக பாணியில் செயல்படுகிறது இது எங்களின் உள்ளத்தை அதிக ஆழமாக புண்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டமா?

நீதிபதிகளுக்கு தான் வேறு என்ன வேலை இது போன்ற நாட்டுக்கு தேவையான பிரச்சினைகளில் தலையிடாமல் வேறு எந்த கடமையை செய்ய போகிறார்கள்.

ஏற்கனவே மகர சோதி என்பது பொய். அது ஒரு பித்தலாட்டம். கேரளா மின்வாரிய தொழிலாளர்கள்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து ஒரு சட்டியில் சூடத்தை கொளுத்தி காட்டுகிறார்கள் என்ற உண்மையை கேரளா பகுத்தறிவாளர்கள் நிருபித்துவிட்டார்கள். அது உண்மைதான் என்று கேரளா அறநிலைய துறை அமைச்சர் ஜி.சுதாகர், அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி கண்டேறு மகேஸ்வரரு, தேவச்தன் போர்ட் முன்னால் தலைவர் ராமன் நாயரும், முன்னால் முதலமைசர் ஈ.கே. நாயனாரும் ஆமாம் மகர சோதி என்பது உண்மையல்ல, மோசடிதான். செயற்ககையநதுதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டனர்.

இவலவுக்கு பிறகும் மகரஜோதி என்றால் அய்யோகியதனத்தின் மோசடியின் புகலிடம்  என்பது விளங்கவில்லையா?

விடுதலை 12.11.09

1 comment:

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]