வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, November 11, 2009

மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா?


உலகில் ஒரே இந்து நாடாகவிருந்த நேபாளத்-தில் இந்துமத ஆட்சி மாறினாலும், மாவோயிஸ்ட்கள் கையில் ஆட்சி வந்தாலும் இந்து மத சனாதன சடங்குகள் மட்டும் ஆணி அடித்ததுபோல அப்படியே ஆணிவேருடன் அப்படியே நிலை பெற்றுதான் இருக்கின்றன.


அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாள நாட்டின் தென்பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் நேபாள பெண் கடவுளான காதிமையைச் சாந்திபடுத்த அய்ந்து லட்சம் ஆடு, மாடு, கோழி, புறா, வாத்துகளைப் பலி-யிடு-வார்களாம். இம்மாதம் 24, 25 ஆகிய நாள்களில் இந்த காட்டுவிலங்காண்டித்தனமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்; அய்ந்து லட்சம் உயிர்களைப் பலியிடுவ-தென்-றால் அது எவ்வளவுப் பெரிய அச்சுறுத்தக்-கூடிய பயங்கரமான செயலாக, கோர காட்சியாக இருக்க முடியும்? அந்த வட்டாரமே ரத்த வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாதா? அந்தப் பகுதிவாழ் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாதா? சுற்றுச்சூழல் பாதிக்கப்-படாதா? எவ்வளவு குரூர நெஞ்சம் படைத்-திருந்தால் அய்ந்து லட்சம் உயிர்களை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லுவார்கள்!

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்து-விட்டதாம். மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாதாம் நேபாள அரசு.

பக்தியின் பெயரால் நடக்கும் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தைத் தடுக்க முடியவில்லையே மாவோயிஸ்ட்களால் என்றால், அந்நாடு மன்னராட்சியிலேயே இருந்து-விட்டுப் போகலாமே! மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா? மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியை, ஆற்றலை, அறிவை மார்க்சியம் அளிக்கவில்லையா? அல்லது அதனை இந்த மாவோயிஸ்ட்கள்தான் புரிந்துகொள்ள-வில்லையா?

பசுவதையைத் தடுக்கவேண்டும் என்று கூறும் சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்க் கும்பலும் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மனிதர்களையே கொன்று யாகம் நடத்தி-யிருக்கிறார்களே, அதற்கு “புருஷ யஜ்ஞ’’ என்று பெயர் ஆகும்.

“இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்’’ (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்தில் பதிப்பு வால்யூம் ஒன்று 405 ஆம் பக்கம்).

மனிதனையே கொன்று குவிக்கும் கொலைகாரத்தனத்துக்கு இந்து மதம் சூட்டும் பெயர் “புருஷ யஜ்ஞ’’வாம்.

மாட்டுக்குத் தார்குச்சி போட்டால் அது மிருகவதை என்று கூறி, அது குற்றச்செயல் என்று (ஷிறிசிகி) தண்டிக்கும் சட்டம் தனியே இருக்கிறது. ஆனால், யாகம் என்ற பெயரால் மாடுகளையும், ஆடுகளையும் வெட்டிக் கொல்-லுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால், இது என்ன இரட்டை அளவுகோல்!

ஒரே நேரத்தில் 5 லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது உலகில் வேறு எங்குமே கிடையாதாம்.

வேறு எங்கு இருக்க முடியும் _ ஒரு இந்து நாட்டைத் தவிர? இதே நேபாளத்தில்தானே (2001) சோதிடக் கிறுக்குத்தனம் காரணமாக தாய், தந்தையர் உள்பட எட்டு பேர்களைச் சுட்டுக் கொன்றான் இளவரசன்.

எந்த சோதிடனும் இதுபோல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லவில்லையே! இவ்வளவு கொடூரம் நடந்ததற்குப் பிறகும்கூட அதுபற்றிய உரத்த சிந்தனைக்கு இடமில்லாமல், தோஷம் கழிக்கும் பார்ப்பனிய சடங்குகளைத்-தானே நடத்தினார்கள்.

இது ஏதோ நேபாள நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொள்ளக்-கூடாது. கொடூரமான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த உலக நாடுகள் கடமைப்படவில்லையா?

விடுதலை தலையங்கம் 11.11.09

1 comment:

தமிழினியன் said...

அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்காத வரை மார்க்சியவாதிகளோ, மாவோவிய வாதிகளோ யாராலும் ஒன்றும் பிடுங்க முடியாது. ஏன் மார்க்ஸோ மாவோ வந்தால் கூட, ஏனென்றால் மதம் கலந்த ஒரு அரசு மதத்துக்கான பாதுகாப்பை சட்டத்தின் பெயரால் வழங்கி விடுகிறது. மார்க்ஸ் சொன்னது போல தலைகீழாக புரட்டி போடுவதுதான் புரட்சிக்காரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்

நேபாலத்தைப் பொறுத்த வரை. அந்த இந்து அரசாங்கத்தின் அரசியல் சாசனத்தை இவர்கள் இன்னும் மாற்றவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களால் ஒன்றும் பிடுங்க முடியாது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]