வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, November 04, 2009

இஸ்ரோ தலைவர்


இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் (இஸ்ரோ) தலைவராக அறிவிக்கப்-பட்-டுள்ள கே. இராதாகிருட்--டினன் தாம் பொறுப்பை ஏற்குமுன் அவசர அவசர-மாக குருவாயூர் கோயி-லுக்குச் சென்று எடைக்கு எடை வாழைப் பழங்-களைக் கொடுத்து பகவா-னின் ஆசியைப் பெற்றுக்-கொண்டிருக்கிறாராம்.


அறிவியலில் நோபெல் பரிசு பெற்றவ-ரான சி.வி. ராமன் கூறிய கருத்துக் குறித்து பொது உடைமைவாதியான ஏ.எஸ்.கே. தாம் எழுதிய கடவுள் கற்பனையே _ புரட்-சிகர மனித வரலாறு எனும் நூலின் முன்னுரை-யில் பின்வருமாறு குறிப்-பிட்டுள்ளார்.

முதல் மனிதன், யூரி காரின் 1962 இல் விண்-வெளி _ அகண்ட காஸ்-மாசில் (Cosmos) சென்-றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்-பிக்கைக் கொண்ட நல்ல-வர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனி-தன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்-டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங்-கொண்-டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை; கூறாமலேயே விளங்கும் என்று தம் வேதனையை வெளிப்படுத்தினார் தோழர் ஏ.எஸ்.கே.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்-புக்கான ஒரு லைசென்சு என்று தந்தை பெரியார் அவர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்-பது பொருத்த-மா-னதே!

ராகேஷ் சர்மா _ பெயர் நினைவிருக்கிறதா? முதல் விண்வெளி வீர-ரான இந்தியர் (1984) அவர்.

அப்பொழுது பார்ப்ப-னர்கள் நடத்திய தாம்-பிராஸ் என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா?ராகேஷ் சர்மா ஆம் வான்வெளியில் பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியர்.

பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது!நாமும் தலைவணங்கி நிற்கிறோம்.எதற்காக? அவன் நம் இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலா?விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைப்ப-தற்கு-முன் உதிர்த்தானே மூன்று முறைகள் அந்தக் காயத்ரி மந்திரத்துக் காக! என்றது பார்ப்பன ஏடு. சென்றவனின் அறி-வுத்தீட்சண்யமும், தாம்-பிராசில் எழுதுபவர்களின் புத்தியும் எப்படி மேய்-கின்றன பார்த்தீர்களா?

இந்நிலையில் விஞ்-ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்-வொரு இந்தியனின் அடிப்-படைக் கடமை என்று இந்-திய அரசமைப்புச் சட்டம் கூறு-வதையும் எண்ணிப்-பார்ப்-போம் (51ஏ).

இஸ்ரோ விஞ்ஞானக் கூடத்தின் தலைவரே குரு-வாயூரப்பனுக்கு வாழைப்-பழம் (அல்வா கொடுக்கி-றாரோ) கொடுக்கிறார். இந்தியாவின் பார்ப்பனியம் எல்லாவற்றையும் ஏப்ப-மிட்டு விடும், எச்சரிக்கை!



விடுதலை 04-11-09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]