வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 13, 2009

பெண்களும் மதமும்....


“கடவுளிடத்திலும், _ அவரால் ஒன்றுக்கொன்று முரணாகவும், போட்டியாகவும் உண்டாக்கப்பட்டுள்ள பல்வேறு மதங்களிடத்திலும், நீங்காப்பற்றுக் கொண்டுள்ள ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை பன் மடங்கு பெரிதாகும். பல “சர்ச்களில்” கணக்கிட்டுப் பார்த்ததில் ஆண்களைவிட 5_6 மடங்கு அதிகமாகவே பெண்கள் இருந்தனர். முன்னாள் மதத்தலைவர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “நரகம் என்ற நம்பிக்கையும், பெண்களின் ஆதரவும் இல்லா விட்டால் எங்கள் ‘சர்ச்’ (கோவில்) நாளைக் காலையிலேயே அழிந்து போய்விடும்’, என்று தெரிவித்தார்.

இதன் காரணமென்ன? பெண்கள் மிகமிகக் காரியவாதிகள் என்றாலும், ஆண்களைக் காட்டிலும், சுளுவாக ஏமாறக் கூடியவர்கள்; தத்துவ ரீதியாக சிந்திக்கக் கூடிய திறமையற்ற-வர்கள். உதாரணமாக, பர்ட்ரண்டு ரஸ்ஸல் எழுதி-யுள்ள ‘மேல் நாட்டுத் தத்துவ வரலாறு’ என்ற மாபெரும் நூலைப் படித்துப்பார்த்தால், அதில் பெண் தத்துவ ஞானி ஒருவரைக்கூடக் காண முடியாது. அதுவும் ரஸ்ஸல், ஸ்பினோசா, சாக்ரட்டீஸ், ஹ்யூம், லாக்கே, மாண்டேன், காண்ட், ஹெகல், லியனார்டோ போன்ற உலகப் பெரியார்களைப் போல் ஒரு பெண்கூட இல்லை. மனித வரலாறு முழுவதையும் பார்த்தாலும், ஆண்களுக்குச் சமமாக வைத்து எண்ணக்கூடிய பெண் பெரியோர்-கள் இரண்டே இரண்டு பேர்தாம் : மேரி க்யூரி;’ ஃபளாரன்ஸ் நைட்டிங் கேல்! இது போதுமா? பெண்களுக்-குத் தத்துவ ரீதியான சிந்தனா சக்தி இல்லாத படியால்தான் மதவாதிகளிட-மும், மந்திரவாதிகளிடமும், சோதிடர்-களிடமும், அர்ச்சகரிடமும் சுளுவில் ஏமாந்து விடுகின்றனர்.

“நான் என் தாயாரின் மடியில் என் மதத்தைக் கற்றுக் கொண்-டேன்” என்று ஆண்கள் கூறு-வதைக் கேட்டி-ருக்கிறோமல்லவா? நான் ஒரு சர்வாதிகாரியா-யிருந்தால் எந்தத் தாயாரும் நின்ற நிலை-யிலேதான் தங்கள் குழுந்தை-களுக்கு எதையும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிடுவேன்!

“மதத்துக்கு விரோதமாகவும் கடவுளுக்கு விரோதமாகவும் எந்த விவாதத்தையும் பெண்கள் பொதுவாகக் கேட்க விரும்புவதேயில்லை.

“பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாயிருக்கலாம்; தனி அன்புடையவர்களாகவும் இருக்கலாம். ஆனால் சரி - _ தப்பு என்ற தத்துவ ரீதியான ஆராய்ச்சி உணர்ச்சி _ அவர்களுக்குப் போதாது. குறிப்பாக மதத் துறையில் அவர்கள் ஆபத்-தானவர்கள். ஏதோ, இரண்டொரு விதி-விலக்கு இருக்கலாம் என்பதை மறுப்பதற்-கில்லை.”

_ ‘ஃப்ரீதிங்க்கர்’ (தொகுப்பு விடுதலை 13.11.09)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]