வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் - சர்-வதேச பட்டினி அட்ட-வணை-யில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 66


இன்று குழந்தைகள் தினம். ஆம் உலகம் முழு-வதும் கொண்டாடப்படு-கிறது. 1955 ஆம் ஆண்டு அய்.நா. அறிமுகப்படுத்தி-யது.


1963 இல் பிரதமர் நேரு மறைந்த நிலையில், அவர் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. பல நாளேடுகளில் வெவ்வேறு நாள்களில் இது கடைபிடிக்-கப்படுகிறது.

எதிர்கால ஒளி முத்து-களாகிய குழந்தைகளுக்காக ஒரு நாள் என்பது மிகமிக முக்கியம்தான். குழந்தைப் பரு-வத்தில் எப்படி வளர்க்கப்-படுகிறார்களோ _ பெற்றோ-ரும், வீட்டாரும் குடும்பங்-களில் எப்படி நடந்துகொள்-கிறார்களோ அவர்களைப் பொறுத்த பாதிப்பு நிச்சய-மாகக் குழந்தைகளுக்கு உண்டு! உண்டு!!

குழந்தைகள் நலன் கருதியாவது பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, சிக்கனக்காரர்களாக, எதிலும் ஒரு திட்டம் உடையவர்-களாக, நேரம் தவறாதவர்-களாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்களே!ஊட்டச்சத்து என்பது மிகமிக இன்றியமையாதது!

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானமுள்ள மக்கள் 77 விழுக்காடு வாழும் நாட்டில், குழந்தை-களுக்குச் சத்துணவை எங்கே போய் தேடுவது? சர்-வதேச பட்டினி அட்ட-வணை-யில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 66. (“கரீபி ஹட்டாவோ’’ _ வறுமையே வெளியேறு _ பிரதமர் இந்திரா காந்தியின் கோஷம்!). பரவாயில்லை நமக்கும்கீழ் இன்னும் 22 நாடுகள் இருக்கின்றன _ இது ஒரு அற்ப ‘போனஸ்’ சந்தோஷம்!

நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராகவிருந்த காலகட்டத்தில் முதன் முத-லாக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு இலவசத் திட்டம், காமராசர் காலத்தில், கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வழிகாட்டுதலோடு வளர்ந்து, தமிழ்நாட்டில் இன்றைய தினம் பல்கிப் பெருகி, இந்தியாவுக்கே மகுடமாக ஜொலிக்கிறது! (வாழ்க கலைஞர்!).

இந்தியத் துணைக் கண்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு _ 50 விழுக்காடு என்று தேசிய மனித உரிமை ஆணையத்-தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார் (10.10.2008).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடை-யும் குழந்தைகளின் எண்-ணிக்கை 1.25 கோடியாகும். இதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் ஆகும். முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத இந்தியக் குழந்-தைகள் ஆயிரத்துக்கு 58; உலக அளவில் எடை குறை-வாகப் பிறக்கும் குழந்தைகள் 35 விழுக்காடு _ இந்தியாவில்தானாம். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்-ணிக்கை 1,26,66,377. இந்தி-யாவில் பள்ளிக்குச் செல்-லாத குழந்தைகள் அதிகம் இல்லை _ வெறும் 7 கோடிதானாம்! ராஜஸ்தானில் இன்னும் குழந்தைகள் திருமணம்; தமிழ்நாட்டில் தீட்சதர் குடும்பங்களில் இன்னும் அதே நிலைதான்!

இன்னும் சொல்லலாம், புள்ளி விவரங்களை அதி-கம் சொன்னால் தலையைச் சுற்றுமே!

ஒரு கூடுதல் தகவல்: இலங்கைத் தீவில் முள்-வேலி முகாம்களில் உள்ள தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை 90 ஆயிர-மாகும்.

விடுதலை 14.11.09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]