வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 23, 2009

தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்

உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் பாட வேளையில் ஆசிரியர்கள் பிற மொழிச் சொற்களைப் பயன்-படுத்-தக்-கூடாது; அவ்வாறு பயன்படுத்துவது தாய்-மொழி கற்பித்தலின் நோக்-கத்தை எட்ட இயலாத நிலையை ஏற்படுத்துகிறது.


முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும்போது தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் பெருமாள்சாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

நியாயமான சுற்ற-றிக்கை இது. தமிழ் வகுப்-பில்கூட தமிழ் தாண்டவ-மாடாவிட்டால், வேறு எந்த வகுப்பில் அதற்-குரிய மதிப்பு காப்பாற்றப்-படும்?

தமிழன் வீட்டுத் திரு-மணத்தில் சமஸ்கிருதத்-திற்கு இடம் இல்லை என்று கூறி, தமிழன் தலைமை தாங்கி, தமிழி-லேயே அது நடத்தப்பட-வேண்டும் என்கிற உணர்ச்-சியின் வகைப்பட்டது இந்தச் சுற்றறிக்கை.

சென்னையில் ஆங்-கில வழிக் கல்வி நிறு-வ-னங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தப்பித் தவறி தமிழில் உரையாடிவிட்-டால், அவர்களுக்குத் தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படு-கின்றன என்ற தகவல்கள் வெளிவரவில்லையா? அந்த உணர்வு தமிழர்-களிடத்தில் ஏற்படவேண்-டாமா?

பொதுவாக ஆங்கிலத்-தில் ஒரே ஒரு எழுத்துத் (ஷிஜீமீறீறீவீஸீரீ) தவறாக எழுதி-விட்டால், இமயமலை உச்சியில் ஏறிக் கூவத்தில் குதிப்பவர்கள் உண்டு. அப்படி எழுதுபவர்-களுக்கு முட்டாள் பட்ட முத்திரையைக்கூடப் பொறித்து விடுவார்கள். அறிவாளித்தன்மை என்-பது ஆங்கில எழுத்து-களில் குடிகொண்டிருக்-கிறது என்பது அவர்-களின் நினைப்பு!

அதே ஆசாமிகள் பருப்பை பறுப்பு என்று எழுதினால், அப்படி எழு-துவதே ஒரு மேதாவித்-தனம் _ மெத்த படித்தவர் _ அவருக்குத் தமிழ் எல்லாம் அவ்வளவாக வராது என்று சொல்லு-வதே-கூட ஒரு பெருமை-யாகப் போய்விட்டது _ அந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மை தமிழர்களி-டத்தில் ததும்பி வழிகிறது.

இன்னொன்று, கல்வித் துறை இயக்குநருக்கு: பதவி உயர்வு, ஊதிய உயர்வு (மிஸீநீக்ஷீமீனீமீஸீ) கிடைக்கிறது என்பதற்காக, உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் அஞ்சல் வழியில் தமிழ் படித்து, கோனார் உரைகளை மட்டும் மேலோட்டமாகப் படித்துவிட்டு, தேர்வுக்-குரிய அளவில் மட்டும் மதிப்பெண் வாங்கி, புலவர் பட்டமும் பெற்று தமிழாசிரியராக ஆக்கப்-பட்டால், வகுப்பில் தமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்டாம்.

- மயிலாடன் விடுதலை 23.11.09

1 comment:

nerkuppai thumbi said...

மிக்க மகிழ்ச்சி.

இப்போது பள்ளியில் படிப்போர்களுக்கு தமிழ்ப் பற்று ஊட்டப்படுவதாக தெரியவில்லை. தமிழ் ஆசிரியர்கள் முறைப் படி vidwan, அல்லது B.O.L. அல்லது B.Litt கற்காமல், நடுநிலை அல்லது உடல் பயிற்சி ஆசிரியர்கள் குறைந்த பட்சம் படித்து தேறி வந்து விடுவது உண்மையே.
மற்றும் ஒன்று: தமிழ் என்னாமல் தமிள் என்றோ த்மில் என்றோ சொல்லக் கூடாது எனவும் உத்தரவு போட வேண்டியது அவசியம்.
விஜய் மட்டுமல்லாது இப்போது சன், கலைஞர், பொதிகையில் கூட உச்சரிப்பு கொலை செய்யப் படுகிறது.
நாங்கள் பள்ளியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்கள் உச்சரிப்பை திருத்த மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டார்கள். இப்போது, ல, ள, ழ என்றில்லாமல், ண, ன வில் கூட வேறுபாடு இல்லாமல் கொலை செய்கிறார்கள்.
குதிரை என்பதை ku திரை என்னாமல் gu திரை என்றால் கூட (நான் தென் தமிழ் நாட்டவன் - இது சென்னை தமிழ) உதைக்கிறது. தமிழ் அறிஞர்கள் கொஞ்சம் இது போன்ற ஒலிகளுக்கும் standard உச்சரிப்பு கொண்டு வர வேண்டும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]