வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 02, 2009

பாதுகைப் பூஜை


ஸ்ரீ குரு பாதுகை களை பூஜித்தால் அனைத்து கஷ்டங்களும் விலகும். சகல கார்யங்களும் கைகூடும். எல்லா ஐஸ்வர் யங்களும் வந்து சேரும். அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகும் குரு பாதுகா பஞ்சகத்தில் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் இப்படி தெரிவிக்கிறார்.



ஸ்ரீ ஜகத்குருவின் பாது கைக்கு பூஜை செய்தால் சகல மேன்மையையும் அடையலாம். இந்த அரிய வாய்ப்பு உங்கள் வீட்டி லேயே கிடைக்க உள்ளது. ஸ்ரீஜகத்குரு பாகைகள் புதுவை ரங்கப்பிள்ளை வீதி ஸ்ரீமடம் இடத்தில் உள்ளது.

இந்துக்கள் அனை வரும் ஜாதி வேறுபா டின்றி குடும்பத்துடன் சங்கல்பம் செய்துகொண்டு எளிய கட்டணத்தில் பூஜையில் பங்கேற்கலாம். நாடெங் கிலும் மக்கள் வழங்கும் இக்கட்டணத்துகையில் 100 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீமஹாஸ்வாமிக்கு தங்கத்தேர் செய்யப்படு கிறது._ இவ்வாறு ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளிவந்துள்ளது.

பக்திக்கு எந்தவித சேதாரமும் வந்துவிடக்-கூடாது என்பதிலேயே பார்ப்பனர்கள் எப்பொ-ழுதும் குறியாகவே இருப்-பார்கள்.

அதற்காக ஒன்று போனால் இன்னொன்-றைத் தயாராகவே வைத்தி-ருப்பார்கள்.பாதுகை என்றால் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று கருதிவிடக்கூடாது. செருப்பு என்று அதற்குப் பொருள்.

இப்பொழுது புரிந்தி-ருக்கவேண்டுமே! சங்க-ராச்-சாரியாரின் செருப்பைப் பூஜிக்கத்தான் அழைப்புக் கொடுத்திருக்கிறார்கள் _ இதனை விளம்பரமாகவும் தந்துள்ளார்கள்.

மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலந்து குடித்-தால் (பஞ்சகவ்யம்) புண்-ணியம் என்கிறார்கள். பக்-தர்களும் அதற்காகத் தட்-சணை கொடுத்தும் குடிக்-கிறார்கள்.

இப்பொழுது என்னடா என்றால், சங்கராச்சாரி-யாரின் கால் செருப்பைப் பூஜிக்கவேண்டும் என்கி-றார்கள்.



காற்செருப்பைப்
பிறனொருவன்
கழிவிடத்தில்
தள்ளிடினும்
பொறாத உள்ளம்

என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை என்பது.இந்தச் சுயமரியா-தையை அவமரியாதை செய்வதுதான் அவாளின் நோக்கம்.யார் இந்த சங்கராச்சாரி-யார்? தீண்டாமை க்ஷேமக-ர-மானது என்று சொன்ன-வர்,

இதற்காகப் பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின்கீழ் அவரை உள்ளே தள்ளியிருக்க-வேண்டாமா?

பக்தியென்றால் சுயமரி-யா-தைக்கு இழப்பு என்று இன்னும் புரியவில்லையா?

இவரது செருப்பைத் தொழ, பூஜை செய்ய அழைப்பாம்!

அவர்களைச் சொல்-லிக் குற்றமென்ன? இதற்-கும் தயாராக உள்ள சூத்-திரர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]