வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, November 10, 2009

காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து!



1. “மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையி-லிருந்து இட்டவேலி சாஸ்தான் கோயில் சாலை (வழி) தெங்கன் விளை, ஹரிஜன் காலணி சாலை கி.மீ. 0/0.1/0.


குமரி மாவட்டம் செருப்-பாலூரில் இருந்து அதன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட-வர்கள் இருக்கிறார்களாம். அதைக் குறிப்பிடுவதற்-காக இப்படி ஒரு விளம்பரப் பலகையினை நெடுஞ்-சாலைத் துறை பொறித்தி-ருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஹரிஜன்’ அதாவது இந்து மதக் கடவுளான விஷ்ணு-வின் புத்திரர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ‘ஹரன்_ சிவனின்’ புத்-திரர்களா?


இது காந்தியார் கிளப்பி-விட்ட கூத்து! கடவுளின் பிள்ளைகள் என்றால் அதன் பொருள் தீண்டத்-தகாதவர்கள் என்று அர்த்-தமா? ஊருக்கு வெளிப்-புறத்தில் குப்பைமேடு-களில் வாழவேண்டும் என்று பொருளா?

இந்த ஹரியின் புத்-திரர்கள் சிறீரங்கம் ரெங்க-நாதர் கோயில் கருவறைக்-குள் நேராக நுழைய முடியுமா?

தாழ்த்தப்பட்ட தோழர்-களைத் தனியே பிரித்துக் காட்டும் அவசியம் நெடுஞ்-சாலைத் துறைக்கு என்ன வந்தது? அதுகூட காலனி அல்லவாம் _ காலணி-யாம்! உண்மைதானே, செருப்பாகத்தானே அந்த உழைப்பாளித் தோழர்-களை பாழ்படுத்தும் இந்த இந்து மதம் இறுக்கி வைத்-திருக்கிறது.

ஹரிஜன நலத்துறை என்ற பெயர் ஆதிதிராவி-டர் நலத்துறை என்று மாற்-றப்பட்டதுகூட நெடுஞ்-சாலைத் துறைக்குத் தெரிய-வில்லையே!

2. குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய-சாமிக்கு ஆராட்டு விழா-வாம். நடந்து தொலையட்-டும்! அதற்குப் பேரூராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து நாளேட்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் விளம்-பரமாம்.

இங்குதான் இடிக்கிறது. பேரூராட்சி என்பது மதச் சார்பற்றது. அப்படியி-ருக்-கும்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் விழாவுக்கு ஊராட்சி நிதியிலிருந்து எப்படி பணம் செலவு செய்யலாம் என்பது நியாய-மான வினாதானே?

3. நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பி-னர் நிதியிலிருந்து குறிப்பிட்ட கோயிலுக்கு ரூபாய் 5 லட்சம் தரப்பட்டதற்காக இந்து முன்னணி நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்-பி-னர் நிதி மக்கள் நல்-வாழ்வுக்குப் பயன்பட-வேண்டுமே தவிர, குட்டிச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்காக அல்லவே! இதுகுறித்தெல்லாம் தெளிவு-படுத்தி அரசு சுற்றறிக்கை-விட்டால் நல்லது.

விடுதலை 10-11-09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]