வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, November 11, 2009

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?



பொதுவாக யாருக்கு பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்தநாள் என்பது கொள்கையை பாராட்ட, பரப்ப என்கிற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது. நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம் தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கிறானே ஒழிய அதில் எந்த பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னதனாலேயே எவனும் வாழ்ந்துவிடமுடியாது. அதுபோல வசை கூறுவதால் எவரும் கேட்டுப் போய்விடபோவதும் இல்லை. என்னை வாழ்துகிரவர்களை விட வசை சொல்லுகிறவர்கள் தான் அதிகம். அதற்க்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடுடிருந்திருக்க முடியாது. எனவே வாழ்த்துவதற்கும் வசை கூருவதர்க்குமுள்ள பலன் ஒன்றே ஆகும். வாழ்த்துவது வாய்க்கும் காதுக்கும் இனிமையாக இருக்குமே தவிர பலனில் ஒன்றுமில்லை.

விடுதலையில்  (12.12.1968) அய்யா அவர்கள் வாழ்த்துவதன் பலன் பற்றி கூறியது. நம் வாழ்கையில் நிறைய பேருக்கு பொருந்தும். இதனை சொல்லுவதால் யாரையும் வாழ்த்தவேண்டம் என்ற அர்த்தம் இல்லை. ஒரு சிலர் அவர் எனக்கு வாழ்த்து கூறவே இல்லை என்று கூறி மிகவும் வேதனை படுவார்கள். எனவே யாரும் நமக்கு வாழ்த்துவதை எதிர்பார்கவும் தேவை இல்லை.நாமும் அதற்க்கா வேதனை படவும் தேவையும் இல்லை.

அன்றைக்கு அய்யா அவர்கள் சொன்னது என்றும் பொருந்த கூடிய ஒன்றுதான்.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஐயாவின் சிந்தனைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

வாழ்த்துதல் என்பதை நட்பின், அன்பின் பகிர்வாகக் கொள்வது நலம்...
என்று நான் கருதுகிறேன்

முனைவர் இரா.குணசீலன் said...

பெரியாரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எனக்குத் தங்கள் பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே...
தொடரட்டும் தங்கள் அரும்பணி..
என்றும் வாழ்த்துக்களுடன்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]