வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 16, 2009

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது

ரோஸ் நேரம்’ என்ற ஒரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு-தோறும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை அரங்-கேறுகிறது. அதனை நடத்-தும் தோழியர் மிகச் சிறப்-பாகவே அதனைக் கையா-ளுகிறார்.


“பேய்’’ உண்டா? உண்-மையா? நிரூபிக்க முடி-யுமா?’’ என்ற காரசார விவாத மேடை சுவைக்கத்தக்கது மட்டுமல்ல; சிந்திக்கத்தக்-கதும் ஆகும்.

பேராசையும், அச்சமும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைத் துன்புறுத்தும் நிலையில், மக்கள் மூட நம்பிக்கைக் குழிக்குள் வீழ்ந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கரை-யேற்றுவதுதான் கண்ணிய-மான மனிதத் தொண்டாக இருக்க முடியும். பாமர மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களின் மூடத்தனத்தினை மேலும் உற்சாகப்படுத்தும் போக்கில் அவர்களின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் காசு பறிக்கும் முதலாளிகள் பெரும்பாலும் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்-கிறார்கள்.

இராசி பலன் என்ற ‘பிள்ளையார் சுழிபோட்டு’ விடியற்காலைப் பொழு-தையே களங்கப்படுத்தப்-பட்ட குடிநீரில் மக்களைக் குளிப்பாட்டி, மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கை-யாகக் கொண்டு, வங்கிக் கணக்கை வளப்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகப் பிழைப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டுதானிருக்கிறது.

அதே நேரத்தில், கலை-ஞர் தொலைக்காட்சியின் ‘‘ரோஸ் நேரத்தில்’’ ஓர் அறிவிப்பு; பேய் இருப்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்த அறிவிப்பு _ பாராட்-டத்தக்க ஒன்றே! அதனை ஏற்றுக்கொண்டு, இதோ நாங்கள் நிரூபிக்கிறோம் என்று கூறி ஒரு அணியி-னர்; பேயாவது, வெங்காய-மாவது! எங்கே இருக்கிறது பேய்? நிரூபிக்க முடியுமா? ‘என்மீது பேயை ஏவி நிரூபிக்கட்டும்; அவர்களுக்-குப் பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று கூறி அதே இடத்தில் காசோலை-யைப் பூர்த்தி செய்து சவால் விட்டார் கருஞ்சட்டைத் தோழர் ம. திருநாவுக்கரசு. (தற்-போது தண்டையார்-பேட்டைவாசி _ சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம்).

எதிர்பாராத இந்தத் திருப்பத்தினை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பாளர் உள்பட எதிர்த்தரப்பினர் அனை-வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் நமது தோழர். அவர் சார்ந்த அணியி-னரோ உற்சாகப் பெருக்கில் திளைத்தனர்.

அதுதான் சந்தர்ப்பம் என்று கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயம், பேய், பிசாசு, பூதம் என்ற பித்தலாட்டங்-களை எல்லாம் ஒரு பிடி-பிடித்தார் பாருங்கள் _ ‘பலே பலே’ என்று பாராட்டும்படி-யாக இருந்தது.

கழகத் தோழர், ஒருவர் இருந்தாலும் போதும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகக் ‘‘கலகக் கொடி-யைத்’’ தூக்கிப் பிடிப்பார் என்பதற்கு தோழர் ம. திரு-நாவுக்கரசே ஓர் எடுத்துக்-காட்டு!

அவரைப் பாராட்டு-வோம்.

இதுபோன்ற களங்-களைத் தவறவிடவேண்டாம் என்று கழகத் தோழர்-களை-யும் கேட்டுக்கொள்கிறோம்.

“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது.

விடுதலை 17.11.09

3 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல பதிவு, அதே போல

'கழகம்' பிறந்ததால் குடும்பப் பிழைப்புக்கு வழியும் பிறந்தது என்றும் சொல்லலாம் !
:)

வனம் said...

வணக்கம் சங்கமித்திரன்

பெரியாரை கொள்கை தவைலராக கொண்டவர்கள் நடத்தும் தொ.கா -ல் தினமும் காலை இந்த ராசி பலன் ஏன் என அவர்கள் காரணம் கூறினால் நன்றாக இருக்கும்.

பிறகு தலைப்பு மிகவும் சரியாகவும், நன்றாகவும் இருக்கின்றது

இராஜராஜன்

பரணீதரன் said...

தோழர் கோவி கண்ணன் அவர்களின் வருகைக்கும் பின்நூடதிர்க்கும் நன்றி. நீங்கள் கூறுவதை பார்த்தல் LTTE இயக்கத்தால் பிரபாகரனின் குடும்பத்திற்கு பிழைக்க வழி கிடைத்தது போல என்ன தோன்றுகிறது. பார்த்து தோழரே எல்லா இயக்கமும் அப்படி அல்ல. அரசியல் இயக்கங்களுக்கு தான் அது பொருந்தும். இங்கே பொறுப்பு கொடுத்தால் துபக்கியயை கொடுத்து எதிரியை சுட சொல்லுவது போன்றது. சில நேரங்களில் உயிரே போய்விடும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]