Sunday, November 15, 2009
இலங்கையின் இருண்ட வரலாறு....
எனது நண்பரின் கவிதையை கொடுத்துள்ளேன். வாசித்து நீங்களும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!
தந்தையோ அகதியாய்
தமிழ்த்திருநாட்டில்...!!
கணவன் ஊனமாய்
கனடா நாட்டில் ..!
கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!
ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!
உறவை இழந்த மக்கள் ...!
ஊரை இழந்த மக்கள் ..!
உறுப்பை இழந்த மக்கள் ..!!
ஆனாலும் இவர்கள் இன
உணர்வை இழக்காத மக்கள் ..!!
தமிழன் கறி விற்கின்றது
கசாப்பு கடை .!
தமிழச்சி மானம் பறிக்கிறது
சிங்களப்படை ..!!
வீடுகளை இடிக்கின்றது
விமானப்படை ..!
வீதியில் நிற்பதுதான் இனி
தமிழனின் நிலை ..!!
உலகத்தின்
எல்லா தேசத்திலும்
சுடுகாடு உள்ளது
ஆனால்
இந்த தேசம் மட்டும்தான்
சுடுகாட்டில் உள்ளது .!
கைத்தொழில் தொடங்கி
கனரக தொழில் வரை
சிங்கள இராணுவம்
சீரழித்து விட்டது ..!!
இனி இந்த தேசத்தில்
சவப்பெட்டிகளுக்குதன்
சரியான தொழில் வளமும்
சந்தை வளமும் இருக்க போகிறது .!!
சவப்பெடிகள்
அதிகம் விற்பனையாகும்
ஆசிய நாடு என்னும் பெருமை
இலங்கை தேசத்துக்கு மட்டுமே
இருக்க முடியும் ..!!
பல்லாங்குழி ஆடும் வயதில்
பதுங்கு குழி தேடும்
பரிதாப நிலையில்
பாவப்பட்டவர்களாய்
பாவையர் கூட்டம்.!!!
மக்களுக்கு பகவனை விட
பதுங்கு குழிகள்தான்
பாதுகாப்புக்கு தருகிறது .!!
மரணத்தின் பிடியில் தவிக்கும்
மனிதாபிமானம் ..!
சிங்களச் சிப்பாய்களின்
தூப்பாக்கி கத்திகள்தான்
தமிழ் பெண்களுக்கு
கருவறை கிழித்து
பிரசவம் பார்க்கிறதாம்..!!
என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் தமிழச்சிகள் ?
நினைவு நாட்களும்
இழவு நாட்களும் மட்டுமே
தமிழர் வீடுகளில்
தினம் தினம் நிகழும் திருவிழா ..!
கணவன் கண் முன்னே
கற்பழிக்கும் கொடுமை .!
தந்தையை பார்க்க வைத்து
தகாத உறவு .!!
சிறுமிகளை துரத்தி
சிற்றின்பம் .!!!
இவற்றில் தான்
சிங்கள இராணுவம்
பெற்றுள்ளது
சிறப்பு பயிற்சி ..!!
அநேகமாய்
அடுத்த நூற்றாண்டில்
இலங்கை தமிழனின்
எலும்பு கூடுகள் தான்
எஞ்சி இருக்க கூடும் .!
நேற்று
புத்த பூமி ..!
இன்று
யுத்த பூமி ..!
நாளை
தமிழன் செத்த பூமி .!!!
இவைதான் இனி
இலங்கை தேசத்தின்
இருண்ட வரலாறு .!!!
கவிதை ஆக்கம்:
சுய. சரவணன்
44, மேலத்தெரு,
மேலவாசல் (அ)
மன்னார்குடி (வ)
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 614001
தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!
தந்தையோ அகதியாய்
தமிழ்த்திருநாட்டில்...!!
கணவன் ஊனமாய்
கனடா நாட்டில் ..!
கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!
ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!
உறவை இழந்த மக்கள் ...!
ஊரை இழந்த மக்கள் ..!
உறுப்பை இழந்த மக்கள் ..!!
ஆனாலும் இவர்கள் இன
உணர்வை இழக்காத மக்கள் ..!!
தமிழன் கறி விற்கின்றது
கசாப்பு கடை .!
தமிழச்சி மானம் பறிக்கிறது
சிங்களப்படை ..!!
வீடுகளை இடிக்கின்றது
விமானப்படை ..!
வீதியில் நிற்பதுதான் இனி
தமிழனின் நிலை ..!!
உலகத்தின்
எல்லா தேசத்திலும்
சுடுகாடு உள்ளது
ஆனால்
இந்த தேசம் மட்டும்தான்
சுடுகாட்டில் உள்ளது .!
கைத்தொழில் தொடங்கி
கனரக தொழில் வரை
சிங்கள இராணுவம்
சீரழித்து விட்டது ..!!
இனி இந்த தேசத்தில்
சவப்பெட்டிகளுக்குதன்
சரியான தொழில் வளமும்
சந்தை வளமும் இருக்க போகிறது .!!
சவப்பெடிகள்
அதிகம் விற்பனையாகும்
ஆசிய நாடு என்னும் பெருமை
இலங்கை தேசத்துக்கு மட்டுமே
இருக்க முடியும் ..!!
பல்லாங்குழி ஆடும் வயதில்
பதுங்கு குழி தேடும்
பரிதாப நிலையில்
பாவப்பட்டவர்களாய்
பாவையர் கூட்டம்.!!!
மக்களுக்கு பகவனை விட
பதுங்கு குழிகள்தான்
பாதுகாப்புக்கு தருகிறது .!!
மரணத்தின் பிடியில் தவிக்கும்
மனிதாபிமானம் ..!
சிங்களச் சிப்பாய்களின்
தூப்பாக்கி கத்திகள்தான்
தமிழ் பெண்களுக்கு
கருவறை கிழித்து
பிரசவம் பார்க்கிறதாம்..!!
என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் தமிழச்சிகள் ?
நினைவு நாட்களும்
இழவு நாட்களும் மட்டுமே
தமிழர் வீடுகளில்
தினம் தினம் நிகழும் திருவிழா ..!
கணவன் கண் முன்னே
கற்பழிக்கும் கொடுமை .!
தந்தையை பார்க்க வைத்து
தகாத உறவு .!!
சிறுமிகளை துரத்தி
சிற்றின்பம் .!!!
இவற்றில் தான்
சிங்கள இராணுவம்
பெற்றுள்ளது
சிறப்பு பயிற்சி ..!!
அநேகமாய்
அடுத்த நூற்றாண்டில்
இலங்கை தமிழனின்
எலும்பு கூடுகள் தான்
எஞ்சி இருக்க கூடும் .!
நேற்று
புத்த பூமி ..!
இன்று
யுத்த பூமி ..!
நாளை
தமிழன் செத்த பூமி .!!!
இவைதான் இனி
இலங்கை தேசத்தின்
இருண்ட வரலாறு .!!!
கவிதை ஆக்கம்:
சுய. சரவணன்
44, மேலத்தெரு,
மேலவாசல் (அ)
மன்னார்குடி (வ)
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 614001
Subscribe to:
Post Comments (Atom)








1 comment:
mikavum arumai tholare.....
Post a Comment